LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

ராமனை மணக்க

அன்று சீதைகள் காத்திருந்தனர்
ராமனை மணக்க இன்றோ
சீதைகளை வேண்டி
எத்தனையெத்தனை ராமன்கள்
பெண் தேடி அலைகின்றனர்
அன்று வரதட்சிணைகள்
அவள் திருமணத்தை நிர்ணயித்தன இன்றோ
அவள் நிர்ணயிக்கிறாள்- மணமகனின்
உச்சபட்ச சம்பளத்தை வைத்து
அன்று சீதைகள் இருந்தனர்
கன்னிகளாய் முதிர்கன்னிகளாய்
இன்றோ ராமன்கள்
கல்யாண வரம் கிடைக்காமலேயே
தனியன்களாய் மொட்டை மரங்களாய்
பூக்கமுடியாமல் காய்த்து கனிய முடியாமல்
இறுதியை நோக்கி பயணிக்கும்
இவர்களின் தலை நரைத்து கூன் விழும் வரை
சீதைகள் வேண்டாம் -ஓர்
கூனி கூட கிடைக்கவில்லை
இளமையை கரைத்து வாலிபம் போன
இவர்கள் கடந்த தலைமுறை சாபத்தின் மிச்சங்கள்
சீதைகள் நடத்தும் சுயம்வரத்தில்
லட்சங்களில் சம்பளமும் சொந்த வீடுகளுமே
நுழைவு தகுதிகளாயின
ஆயிரங்களில் சம்பளமும்
வாடகை வீடுகளில் வசிப்போர்களும் சபிக்கப்பட்டனர்
ஆயுள் முழுமையும் தனிமரங்களாகவே தவிக்க
அடுத்த தகுதி என்ன தெரியுமா
மணமகனுக்கு தாய் தகப்பன் இருக்கவே கூடாது
இருந்தாலும் அவர்கள் வந்து போகவே கூடாது
அன்னான் தம்பிகள் கூடவே கூடாது
இப்படியெல்லாம் நிபந்தனைகளோடு
சீதைகள் சுயம்வரத்தில்
மணமகன்களோ செரிக்கமுடியாமல்
கண்ணீரின் விளிம்பில் நின்றபடி
வாலிபத்தை தொலைத்துவிட்டு
வயோதிகத்தை எதிர்நோக்கி இருக்கும் அவலத்தை
வரலாறுகள் எழுதப்போகின்றன
இது மிகைப்படுத்தப்பட்டவை அல்ல
இன்றைய இளைஞர்களின்
கையறு நிலை கவிஞரே !

கவிஞர் ச .ரவிச்சந்திரன்  

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.