|
||||||||
ஏ.டி.எம் மையங்களில் அரங்கேறும் புது வகையான திருட்டு : விழிப்புடன் இருக்க சில டிப்ஸ் !! |
||||||||
ஏ.டி.எம் மையங்களில் திருடர்கள் தற்போது ஒரு புது விதமாக திருட ஆரம்பித்திருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி சொன்னபடி கேரளாவில் இது போன்ற நூதன திருட்டு 300 முறைக்கும்மேல் வெவ்வேறு இடங்களில் நடந்துள்ளதாம்…! ஏ.டி.எம் மையங்களுக்குள் நாம் நுழையும் முன் ஒருவர் இருப்பார் MINI Stmt / Balance பார்த்துகொண்டு அல்லது வேறு எதையோ செய்து கொண்டிருப்பார்… நம்மை பார்த்ததும் எதோ பிரச்சினை போல நீங்க எடுங்க என்று அவர் வெளிலே போகாமல் உள்ளேயே தான் இருப்பார் (காரணம் அவர் முன்னே வந்தவர்) – பின்னவர் பணம் மெசினை விட்டு வெளியே வந்ததும் எடுத்து கொண்டு ஓடி விடுகிறார்… நீங்கள் உஷாராக இருக்க சில டிப்ஸ் : 1. தயவு செய்து காவலர் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு செல்லுங்கள். 2. உள்ளே மற்ற ஆள் இருக்கும்போது உள்ளே நுழைய வேண்டாம் – அவர் வெளியே அனுப்பி விட்டு பணம் எடுங்கள். 3. தனிதாக , ஊருக்கு ஒதுக்கு புற ஏ.டி.எம் மையத்திற்கு செல்ல வேண்டாம். 4. அதிக பணம் எடுக்கும்போது துணைக்கு ஒருவருடன் செல்லவும். 5. பணம் எடுத்ததும் வெளியே வந்து எண்ணி பார்க்க வேண்டாம். 6. ஏ.டி.எம் வாசலில் உங்கள் கவனத்தை திசை திருப்ப தெரியாதவர் பேசினாலோ / எதையாவது வீசினாலோ கவனம் சிதறாமல் இருக்கவும். 7. பெண்கள் காவனமாக இருக்கவும் – கழுத்தில் கத்தி போன்றவை வைத்து மிரட்டினால் கொடுத்துவிடுங்கள்.. பிறகு எப்படியும் மாட்டி கொள்வார்கள். 8. தனியாக உள்ள இடத்தில இரவு / அதிகாலை நேரத்தில் பணம் எடுக்க செல்ல வேண்டாம். 9. சிறு பிள்ளைகளை வண்டியில் தனியாக உட்காரவைத்திவிட்டு ஏ.டி.எம் மினுள் போகவேண்டாம். 10. ஏதேனும் பிரச்சனை / சந்தேகம் என்றால் உடனே வங்கியை தொடர்புகொள்ளவும்.. |
||||||||
by Swathi on 26 Jun 2014 0 Comments | ||||||||
Tags: ATM Users Safety Tips | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|