LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி?

கழிவநீர் கலப்பதால் ஆகாயத்தாமரை வளர்கிறது.இது ஒரு நாளைக்கு ஒரு செடி 1 லிட்டர் நீரை ஆவியாக்குகிறது எனில் நீர்நிலைகளிலிருந்து எவ்வளவு நீர் ஆவியாகும் என பாருங்கள்.
இதை கட்டுப்படுத்த இரண்டு மூன்று தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மனிதர்கள் மூலம் அல்லது இயந்திரங்கள் மூலம் தாமரையை நீரிலிருந்து அகற்றுவது வழக்கம். அதே நேரத்தில் AG11 எனும் அங்கக திரவத்தை தாமரையின் மீது தெளித்தால் 10-15 நாட்களில் செடிகள் காய்ந்துவிடும். அதன்பிறகு அதை எடுப்பது எளிது.
நீரிலிருந்து வெளியே எடுத்த தாமரைச்செடிகளின் தண்டு பகுதிகள் பச்சையாக இருக்கும். அதன்மீது மீண்டும் ஒருமுறை AG11. திரவம் தெளித்து காய வைக்க வேண்டும். பிறகு அவைகளை திட்டு திட்டாக அடுக்கி வைத்து மண்புழுக்களை விட்டு மண்புழு உரமாக மாற்ற வேண்டும். அது பேரூட்டச்சத்துக்கள் நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உரமாக மாறும்.
பிறகு அந்த நீர்நிலைகளில் நுவால்கி நுண்ணூட்ட திரவத்தை தெளித்தால் ஆகாயத்தாமரைச் செடிகள் வளராது. மாறாக டை ஆட்டம் (Diatom) எனும் கண்ணுக்கு தெரியா பாசிகளை வளர்க்கும். அது மீனுக்கு உணவாகும்.
நீர்நிலைகளில் எவ்வளவு கழிவுநீர் உள்ளே வந்தாலும் வருடத்திற்கு நான்கு முறை நுவால்கி திரவத்தை தெளித்தால் நீர்நிலைகளில் தாமரை வளராது. நீர்நிலைகளும் சுத்த மாக்கப்படும். இந்த முறையை உதகை ஏரியில் கடைப்பிடித்தோம். கரைந்துள்ள உயிர்காற்று 50 அடி ஆழத்தில் (Dissolved Oxygen ) லிட்டருக்கு 1-மிகி லிருந்து 5 மி கி என உயர்ந்தது. மிக எளிமையான செலவு குறைந்த தொழில் நுட்பம்.
தேவைப்படுவோர் தொடர்பு கொள்க. நன்றி..
முனைவர் இரா. இளங்கோவன்
9443330394 7904519849
. பசுமை வணக்கம்
by Swathi   on 03 Apr 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள் தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.