LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-16

 

7.016.திருக்கலையநல்லூர் 
பண் - தக்கராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அமிர்தகலைநாதர். 
தேவியார் - அமிர்தவல்லியம்மை. 
156 குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த 
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட 
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் 
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.
7.016.1
'தென்னங் குரும்பை போலும் தனங்களையும், பூவை யணிந்த கூந்தலையும் உடையவளாகிய உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து, அவளை மணக்குங் குறிப்போடும் அங்குச் சென்று அவளது அன்பினை ஆய்ந்தறிந்து, அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து, அவளை மணஞ்செய்தருளிய தேவர் தலைவனும், கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது?' என்று வினவின், பேரரும்புகளின் அருகே சென்று, 'சுரும்பு' என்னும் ஆண் வண்டுகள் இசை கூட்ட, ஏனைய பெண் வண்டுகள் பண்களைப்பாட, அழகிய மயில்கள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலையைச் சூழ்ந்த அயலிடத்தில், கரும்பின் அருகே கரிய குவளை மலர் கண்ணுறங்குகின்ற வயல்களில் தாமரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே; அறிக. 
157 செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி 
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி 
இந்திரனைத் தோள்முரித்த இறையவன்ஊர் வினவில்
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும் 
பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக்
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங் 
களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர் காணே.
7.016.2
'போரை விரும்பிய சலந்தராசுரனை அழித்த ஒளியையுடைய சக்கரத்தை, தன் சிவந்த கண்ணாகிய மலரையே தாமரை மலராகச் சாத்தி, வழிபாட்டிற் சிறந்து நின்றவனாகிய திருமாலுக்கு அளித்து, இருள் போலும் அந்தகாசுரன் மேல் கூர்மையான சூலத்தைப் பாய்ச்சி அழித்து, இந்திரனைத் தோள் முரித்த கடவுளது ஊர் யாது?' என்று வினவின், மிக்க பேரறிவைத்தரும் வேதத்தினது ஓசையும், முரசு, மத்தளம் ஆகிய வாச்சியங்களது ஓசையும், சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் ஓசையும் மிக்கெழுதலினால், கரிய எருமை நீரிற் புக, அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள், தாமரை மலரின்மேல் நெருங்கி விழ, தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக. 
158 இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி
இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
தொடர்ந்தவனைப்பணிகொண்ட விடங்கனதூர்வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
மறைஒலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.
7.016.3
'இண்டை மாலையும் விடுபூவும் திரட்டிக்கொண்டு சென்று மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து, கூட்டமான பசுக்களின் பாலைக் கொணர்ந்து சொரிய, அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி, அவரை விடாது சென்று ஆட்கொண்ட அழகனது ஊர் யாது?' என்று வினவின், மண்டபங்களிலும், கோபுரங்களிலும், மாளிகைகளிலும், சூளிகைகளிலும் வேதங்களின் ஓசையும், மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்புதல் பொருந்திக் கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற, தாமரைப் பொய்கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக. 
159 மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி
ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்
அலைஅடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி
அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்தென் கரைமேல்
கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையால்
கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே.
7.016.4
'மலைமகள், விளையாட்டை மேற்கொண்டு மகிழ்ச்சி மேலிட்டவளாய், அவளது வளைபொருந்திய கைகளால் தனது கண்களை மூடினமையால், எல்லா உலகங்களையும் ஒருங்கே வலிய இருள் பரந்து மூடிக்கொள்ள, அவ்விருள் நீங்கும்படி நெற்றியிடத்து ஒரு கண்ணைத் தோற்றுவித்து அருள் புரிந்த மேலானவனது ஊர் யாது?' என்று வினவின், அலை பொருந்திய நீர் பெருக்கெடுத்து, யானைத் தந்தத்தைப் புரட்டி அகில் மரத்தையும், சந்தன மரத்தையும் தள்ளிக்கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென்கரைமேல் உள்ள, நூல்களை யுணர்ந்து அந்நெறியானே வறுமையை ஓட்டுகின்ற அந்தணர்களது வேள்விப்புகையால், கூட்டமாகிய மேகத்தின் தோற்றம் போன்ற அழகு மிகுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக. 
160 நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் திறத்தே
கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்
கலைபயில்அந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.
7.016.5
'தன்னை வழிபடுவோர்க்கு நின்ற கோலமாய்த் தோன்றுபவனாகிய திருமாலும், தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனும் முதல்வராகத் தேவர் பலரும் குறையுடையராய் நிறைந்து வந்து இரக்க, அவரது துன்பத்தைத் திருவுள்ளத்தடைத்து அவர் பொருட்டாக, மலையாகிய வில்லும், பாம்பாகிய நாணியும், தீயாகிய அம்பும் என்னும் இவற்றால் பகைவரது முப்புரங்களையும் எரித்தொழியச் செய்த, உலகியலுக்கு வேறுபட்டவனது ஊர் யாது?' என்று வினவின், சொல்வகைகள் பலவற்றையும், பொருள் வகைகள் பலவற்றையும் உடைய வேதங்கள் நான்கையும், தோத்திரங்கள் பலவற்றையும் சொல்லித் துதிக்குமாற்றால் இறைவனது நெறிக்கண் கற்பாரும் கேட்பாருமாய் நின்று, எவ்விடத்திலும் நன்மை யமைந்த நூல்களைப் பயில்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கலயநல்லூரே காண். 
161 பெற்றிமைஒன் றறியாத தக்கனது வேள்விப் 
பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள்பீ டழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித்
தருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் 
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமும்
திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல் 
கற்றினம்நல் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.
7.016.6
'தக்கது சிறிதும் அறியாத தக்கனது வேள்வியில் பெரிய தேவர்கள், தங்கள் தலை, தோள், பல், கை, கண் என்னும் உறுப்புக்கள் வலிமையழிந் தொழியுமாறு ஒறுத்து, சந்திரனது கலைகள் சிதையும்படி கால் திருவிரலால் தேய்த்து, பின்பு அவர் எல்லாரிடத்தும் கருணையை மிக வழங்கிய சிவபெருமான் சேர்ந்திருக்கும் ஊர் யாது?' என்று வினவினால், பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு, 'மல்லிகைக் கொடி, சண்பகமரம்' என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில், கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக, பசுக் கூட்டம், மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல்களையுடைய திருக்கலயநல்லூரே ; அறிக. 
162 இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் தோளும் 
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மேல் ஊன்றி
நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாசம் ஆகி
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன்ஊர் வினவில்
பலங்கள்பல திரைஉந்திப் பருமணிபொன் கொழித்துப் 
பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்தென் கரைமேல் 
கயல்உகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே.
7.016.7
'இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தனது பத்துத் தலைகளும், இருபது தோள்களும் சிதைந்து அரற்றுமாறு ஒரு விரலைக் கயிலை மலையின்மேல் ஊன்றி, 'நிலம், மிக்க நீர், நெருப்பு, காற்று, வானம், என்னும் பெரும் பொருள்களாகியும், நிற்பனவும் நடப்பனவுமாகிய உயிர்களாகியும் நிற்கின்ற தூயவனுடைய ஊர் யாது?' என்று வினவினால், அலைகளால் பல பழங்களைத் தள்ளி, பெரிய மாணிக்கங்களையும் பொன்னையும் கொழித்து, 'பாதிரி, சந்தனம், அகில்' என்ற மரங்களையும், தாழம் புதர்களையும் உள்வாங்கி. இவற்றால் எல்லாம் கலங்கல் பொருந்திய நீர், ஆரவாரித்து வருகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள கயல் மீன்கள் பிறழும் வயல்கள் புடை சூழ்ந்த திருக்கலயநல்லூரே; அறிக. 
163 மாலயனுங் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன்
வன்னிமதி சென்னிமிசைவைத்தவன்மொய்த்தெழுந்த
வேலைவிடம் உண்டமணி கண்டன் விடை ஊரும்
விமலன்உமை யவளோடு மேவிய ஊர் வினவில்
சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச்
சுரும்பொடுவண்டிசை முரலப்பசுங்கிளி சொல்துதிக்கக்
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து
கசிந்தமனத்தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.
7.016.8
'திருமாலும் பிரம்மனும் அடிமுடி தேடி அறியாதபடி நெருப்புருவமாய் நீண்டு நின்றவனும்,வன்னியும்,பிறையும் சடையிற் சூடியவனும்கடலிற் தோன்றியவிடத்தை உண்டு கறுத்த நீலமணி போலும் கண்டத்தை உடையவனும்,இடபவாகனத்தை ஊர்பவனும் ஆகிய இறைவன் உமாதேவியோடு விரும்பியிருக்கின்ற ஊர் யாது? 'என்று வினவினாள்,சோலைகளில் நிறைந்த குயில்கள் கூவவும்,அழகிய மயில்கள் ஆடவும்,சுரும்பும் வண்டும் இசை கூட்டவும்,பசிய கிளிகள்தாம் கேட்டவாறே சொல்லி இறைவனைத் துதிக்கும்படி,காலை,மாலை இரண்டு பொழுதிலும் இறைவனது திருவடிகளை வணங்கி,உருகிய மனத்தை உடைய அடியார்கள் மிக்கிருக்கின்ற திருகெகலயநல்லூரே;அறிக.
164 பொரும்பலம் துடையசுரன் தாரகனைப் பொருது
பொன்றுவித்தபொருளினை முன்படைத்து கந்தபுனிதன்
கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில்
இரும்புனலுவெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்
இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்தென்கரைமேல்
கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.
7.016.9
போர் செய்கின்ற வலிமையையுடைய அசுரனாகிய,'தாரகன்'என்பவனை போர் செய்து அழியச்செய்த முதல்வனாகிய முருகனை முன்பு படைத்து, அவனைத் தன் மகனாக ரும்பிக்கொண்ட தூயவனும்,கரும்பினால் இயன்ற வில்லையும்,மலர்களால் இயன்ற அம்புகளையுடையவனாகிய மன்மதன் உடம்பு வெந்தொழியுமாறு நெருப்பாக நோக்க கண்ணையுடைய நெற்றியையுடையவனும் ஆகிய சிவபெருமான் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளும் ஊர் யாது?' என்று வினவினால், மிக்க நீரினது அலைகள் மேல் எழுந்துசென்று,'ஏலம்,இலவங்கம்'என்னும் மரங்களோடே இருகரைகளையும் மோதியழிக்கின்ற அரிசிலாற்றின் தென்கரையில்,பசிய புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி,பொன்னை மலர்ந்து,பவளத்தினது அழகைக் காட்டுகின்ற நறுமனணச்சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூரே;அறிக. 
165 தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில் 
தடங்கொள்பெருங் கோயில்தனில் தக்கவகை யாலே
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய 
மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் 
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேல்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த 
கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லுர் காணே.
7.016.10
குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நாற்புரத்தும் சூழப்பெற்ற ஊரில், திரிக்குளத்தைக் கொண்ட பெருங்கோயிலின்கண் முறைப்படி,வளவிய தாமரை மலரில் இருக்கும் பிரமதேவன் முற்காலத்தில் வழிபாடு செய்ய, அதற்கு மகிழ்ச்சியுற்று இருந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர் யாது?'என்ளு வினவினாள்,வெண்மையான கவரி மயிரும்,நீலமான மயில் இறகும்,வேங்கமரம்,கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்கலும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில்,கணுக்களையுடைய கமுக மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்த்த தேனினது வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும தென்ற ற் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூரே;அறிக. 
166 தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண் டுழல்பரமன் உறையும்ஊர் நிறைநீர்
ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
பண்பயிலும் பத்தும் இவை பத்திசெய்து பாட
வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே.
7.016.11
குளிர்ந்த நீரையும், வெள்ளிய திங்களையும் தாங்கிய சடையை உடையவனும், பிரமதேவனது தலை ஓட்டினையே பாத்திரமாக ஏந்தி, முன்னதாக இசையைப் பாடிக்கொண்டு, உண்ணுகின்ற பிச்சைப் பொருள்களை ஏற்றுத் திரிகின்ற மேன்மையை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊராகிய, நிறைந்த நீர் ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள திருக்கலயநல்லூரை, யாவரிடத்தும் நண்பாந் தன்மையையுடைய நல்லோராகிய சடையன், இசைஞானி என்பவர்க்கு மகனும், திருநாவலூருக்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடிய, இசை பொருந்திய பத்துப் பாடல்களாகிய இவற்றை அத்தலப் பெருமானிடத்து அன்பு செய்து நாள்தோறும் பாடவல்லவர்கள், துன்பமும், பாவமும் இலராவர். 
திருச்சிற்றம்பலம்

 

7.016.திருக்கலையநல்லூர் 

பண் - தக்கராகம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - அமிர்தகலைநாதர். 

தேவியார் - அமிர்தவல்லியம்மை. 

 

 

156 குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு

குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து

விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த 

விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்

அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட 

அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்

கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் 

கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.

7.016.1

 

  'தென்னங் குரும்பை போலும் தனங்களையும், பூவை யணிந்த கூந்தலையும் உடையவளாகிய உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து, அவளை மணக்குங் குறிப்போடும் அங்குச் சென்று அவளது அன்பினை ஆய்ந்தறிந்து, அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து, அவளை மணஞ்செய்தருளிய தேவர் தலைவனும், கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது?' என்று வினவின், பேரரும்புகளின் அருகே சென்று, 'சுரும்பு' என்னும் ஆண் வண்டுகள் இசை கூட்ட, ஏனைய பெண் வண்டுகள் பண்களைப்பாட, அழகிய மயில்கள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலையைச் சூழ்ந்த அயலிடத்தில், கரும்பின் அருகே கரிய குவளை மலர் கண்ணுறங்குகின்ற வயல்களில் தாமரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே; அறிக. 

 

 

157 செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி 

செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி

இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி 

இந்திரனைத் தோள்முரித்த இறையவன்ஊர் வினவில்

பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும் 

பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக்

கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங் 

களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர் காணே.

7.016.2

 

  'போரை விரும்பிய சலந்தராசுரனை அழித்த ஒளியையுடைய சக்கரத்தை, தன் சிவந்த கண்ணாகிய மலரையே தாமரை மலராகச் சாத்தி, வழிபாட்டிற் சிறந்து நின்றவனாகிய திருமாலுக்கு அளித்து, இருள் போலும் அந்தகாசுரன் மேல் கூர்மையான சூலத்தைப் பாய்ச்சி அழித்து, இந்திரனைத் தோள் முரித்த கடவுளது ஊர் யாது?' என்று வினவின், மிக்க பேரறிவைத்தரும் வேதத்தினது ஓசையும், முரசு, மத்தளம் ஆகிய வாச்சியங்களது ஓசையும், சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் ஓசையும் மிக்கெழுதலினால், கரிய எருமை நீரிற் புக, அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள், தாமரை மலரின்மேல் நெருங்கி விழ, தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக. 

 

 

158 இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி

இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்

துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்

தொடர்ந்தவனைப்பணிகொண்ட விடங்கனதூர்வினவில்

மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்

மறைஒலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்

கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்

காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.

7.016.3

 

  'இண்டை மாலையும் விடுபூவும் திரட்டிக்கொண்டு சென்று மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து, கூட்டமான பசுக்களின் பாலைக் கொணர்ந்து சொரிய, அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி, அவரை விடாது சென்று ஆட்கொண்ட அழகனது ஊர் யாது?' என்று வினவின், மண்டபங்களிலும், கோபுரங்களிலும், மாளிகைகளிலும், சூளிகைகளிலும் வேதங்களின் ஓசையும், மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்புதல் பொருந்திக் கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற, தாமரைப் பொய்கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக. 

 

 

159 மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்

மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா

உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி

ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்

அலைஅடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி

அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்தென் கரைமேல்

கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையால்

கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே.

7.016.4

 

  'மலைமகள், விளையாட்டை மேற்கொண்டு மகிழ்ச்சி மேலிட்டவளாய், அவளது வளைபொருந்திய கைகளால் தனது கண்களை மூடினமையால், எல்லா உலகங்களையும் ஒருங்கே வலிய இருள் பரந்து மூடிக்கொள்ள, அவ்விருள் நீங்கும்படி நெற்றியிடத்து ஒரு கண்ணைத் தோற்றுவித்து அருள் புரிந்த மேலானவனது ஊர் யாது?' என்று வினவின், அலை பொருந்திய நீர் பெருக்கெடுத்து, யானைத் தந்தத்தைப் புரட்டி அகில் மரத்தையும், சந்தன மரத்தையும் தள்ளிக்கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென்கரைமேல் உள்ள, நூல்களை யுணர்ந்து அந்நெறியானே வறுமையை ஓட்டுகின்ற அந்தணர்களது வேள்விப்புகையால், கூட்டமாகிய மேகத்தின் தோற்றம் போன்ற அழகு மிகுகின்ற திருக்கலயநல்லூரே; அறிக. 

 

 

160 நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா

நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்

வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்

புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்

சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்

தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் திறத்தே

கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்

கலைபயில்அந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.

7.016.5

 

  'தன்னை வழிபடுவோர்க்கு நின்ற கோலமாய்த் தோன்றுபவனாகிய திருமாலும், தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனும் முதல்வராகத் தேவர் பலரும் குறையுடையராய் நிறைந்து வந்து இரக்க, அவரது துன்பத்தைத் திருவுள்ளத்தடைத்து அவர் பொருட்டாக, மலையாகிய வில்லும், பாம்பாகிய நாணியும், தீயாகிய அம்பும் என்னும் இவற்றால் பகைவரது முப்புரங்களையும் எரித்தொழியச் செய்த, உலகியலுக்கு வேறுபட்டவனது ஊர் யாது?' என்று வினவின், சொல்வகைகள் பலவற்றையும், பொருள் வகைகள் பலவற்றையும் உடைய வேதங்கள் நான்கையும், தோத்திரங்கள் பலவற்றையும் சொல்லித் துதிக்குமாற்றால் இறைவனது நெறிக்கண் கற்பாரும் கேட்பாருமாய் நின்று, எவ்விடத்திலும் நன்மை யமைந்த நூல்களைப் பயில்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கலயநல்லூரே காண். 

 

 

161 பெற்றிமைஒன் றறியாத தக்கனது வேள்விப் 

பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள்பீ டழியச்

செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித்

தருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் 

தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமும்

திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல் 

கற்றினம்நல் கரும்பின்முளை கறிகற்கக் கறவை

கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.

7.016.6

 

  'தக்கது சிறிதும் அறியாத தக்கனது வேள்வியில் பெரிய தேவர்கள், தங்கள் தலை, தோள், பல், கை, கண் என்னும் உறுப்புக்கள் வலிமையழிந் தொழியுமாறு ஒறுத்து, சந்திரனது கலைகள் சிதையும்படி கால் திருவிரலால் தேய்த்து, பின்பு அவர் எல்லாரிடத்தும் கருணையை மிக வழங்கிய சிவபெருமான் சேர்ந்திருக்கும் ஊர் யாது?' என்று வினவினால், பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு, 'மல்லிகைக் கொடி, சண்பகமரம்' என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில், கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக, பசுக் கூட்டம், மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல்களையுடைய திருக்கலயநல்லூரே ; அறிக. 

 

 

162 இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் தோளும் 

இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மேல் ஊன்றி

நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாசம் ஆகி

நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன்ஊர் வினவில்

பலங்கள்பல திரைஉந்திப் பருமணிபொன் கொழித்துப் 

பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்

கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்தென் கரைமேல் 

கயல்உகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே.

7.016.7

 

  'இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தனது பத்துத் தலைகளும், இருபது தோள்களும் சிதைந்து அரற்றுமாறு ஒரு விரலைக் கயிலை மலையின்மேல் ஊன்றி, 'நிலம், மிக்க நீர், நெருப்பு, காற்று, வானம், என்னும் பெரும் பொருள்களாகியும், நிற்பனவும் நடப்பனவுமாகிய உயிர்களாகியும் நிற்கின்ற தூயவனுடைய ஊர் யாது?' என்று வினவினால், அலைகளால் பல பழங்களைத் தள்ளி, பெரிய மாணிக்கங்களையும் பொன்னையும் கொழித்து, 'பாதிரி, சந்தனம், அகில்' என்ற மரங்களையும், தாழம் புதர்களையும் உள்வாங்கி. இவற்றால் எல்லாம் கலங்கல் பொருந்திய நீர், ஆரவாரித்து வருகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள கயல் மீன்கள் பிறழும் வயல்கள் புடை சூழ்ந்த திருக்கலயநல்லூரே; அறிக. 

 

 

163 மாலயனுங் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன்

வன்னிமதி சென்னிமிசைவைத்தவன்மொய்த்தெழுந்த

வேலைவிடம் உண்டமணி கண்டன் விடை ஊரும்

விமலன்உமை யவளோடு மேவிய ஊர் வினவில்

சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச்

சுரும்பொடுவண்டிசை முரலப்பசுங்கிளி சொல்துதிக்கக்

காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து

கசிந்தமனத்தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.

7.016.8

 

  'திருமாலும் பிரம்மனும் அடிமுடி தேடி அறியாதபடி நெருப்புருவமாய் நீண்டு நின்றவனும்,வன்னியும்,பிறையும் சடையிற் சூடியவனும்கடலிற் தோன்றியவிடத்தை உண்டு கறுத்த நீலமணி போலும் கண்டத்தை உடையவனும்,இடபவாகனத்தை ஊர்பவனும் ஆகிய இறைவன் உமாதேவியோடு விரும்பியிருக்கின்ற ஊர் யாது? 'என்று வினவினாள்,சோலைகளில் நிறைந்த குயில்கள் கூவவும்,அழகிய மயில்கள் ஆடவும்,சுரும்பும் வண்டும் இசை கூட்டவும்,பசிய கிளிகள்தாம் கேட்டவாறே சொல்லி இறைவனைத் துதிக்கும்படி,காலை,மாலை இரண்டு பொழுதிலும் இறைவனது திருவடிகளை வணங்கி,உருகிய மனத்தை உடைய அடியார்கள் மிக்கிருக்கின்ற திருகெகலயநல்லூரே;அறிக.

 

 

164 பொரும்பலம் துடையசுரன் தாரகனைப் பொருது

பொன்றுவித்தபொருளினை முன்படைத்து கந்தபுனிதன்

கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக்

கனல்விழித்த கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில்

இரும்புனலுவெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்

இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்தென்கரைமேல்

கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்

கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.

7.016.9

 

  போர் செய்கின்ற வலிமையையுடைய அசுரனாகிய,'தாரகன்'என்பவனை போர் செய்து அழியச்செய்த முதல்வனாகிய முருகனை முன்பு படைத்து, அவனைத் தன் மகனாக ரும்பிக்கொண்ட தூயவனும்,கரும்பினால் இயன்ற வில்லையும்,மலர்களால் இயன்ற அம்புகளையுடையவனாகிய மன்மதன் உடம்பு வெந்தொழியுமாறு நெருப்பாக நோக்க கண்ணையுடைய நெற்றியையுடையவனும் ஆகிய சிவபெருமான் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளும் ஊர் யாது?' என்று வினவினால், மிக்க நீரினது அலைகள் மேல் எழுந்துசென்று,'ஏலம்,இலவங்கம்'என்னும் மரங்களோடே இருகரைகளையும் மோதியழிக்கின்ற அரிசிலாற்றின் தென்கரையில்,பசிய புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி,பொன்னை மலர்ந்து,பவளத்தினது அழகைக் காட்டுகின்ற நறுமனணச்சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூரே;அறிக. 

 

 

165 தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில் 

தடங்கொள்பெருங் கோயில்தனில் தக்கவகை யாலே

வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய 

மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்

வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் 

விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேல்

கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த 

கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லுர் காணே.

7.016.10

 

  குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நாற்புரத்தும் சூழப்பெற்ற ஊரில், திரிக்குளத்தைக் கொண்ட பெருங்கோயிலின்கண் முறைப்படி,வளவிய தாமரை மலரில் இருக்கும் பிரமதேவன் முற்காலத்தில் வழிபாடு செய்ய, அதற்கு மகிழ்ச்சியுற்று இருந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர் யாது?'என்ளு வினவினாள்,வெண்மையான கவரி மயிரும்,நீலமான மயில் இறகும்,வேங்கமரம்,கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்கலும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில்,கணுக்களையுடைய கமுக மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்த்த தேனினது வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும தென்ற ற் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூரே;அறிக. 

 

 

166 தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன்

தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி

உண்பலிகொண் டுழல்பரமன் உறையும்ஊர் நிறைநீர்

ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை

நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்

நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்

பண்பயிலும் பத்தும் இவை பத்திசெய்து பாட

வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே.

7.016.11

 

  குளிர்ந்த நீரையும், வெள்ளிய திங்களையும் தாங்கிய சடையை உடையவனும், பிரமதேவனது தலை ஓட்டினையே பாத்திரமாக ஏந்தி, முன்னதாக இசையைப் பாடிக்கொண்டு, உண்ணுகின்ற பிச்சைப் பொருள்களை ஏற்றுத் திரிகின்ற மேன்மையை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊராகிய, நிறைந்த நீர் ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள திருக்கலயநல்லூரை, யாவரிடத்தும் நண்பாந் தன்மையையுடைய நல்லோராகிய சடையன், இசைஞானி என்பவர்க்கு மகனும், திருநாவலூருக்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடிய, இசை பொருந்திய பத்துப் பாடல்களாகிய இவற்றை அத்தலப் பெருமானிடத்து அன்பு செய்து நாள்தோறும் பாடவல்லவர்கள், துன்பமும், பாவமும் இலராவர். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 23 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.