LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-24

 

7.024.திருமழபாடி 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பநாதர். 
தேவியார் - அழகம்மை. 
239 பொன்னார் மேனியனே புலித் 
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் 
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ 
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி 
யாரை நினைக்கேனே.
7.024.1
பொன்போலும் திருமேனியை உடையவனே, அரையின்கண் புலித்தோலை உடுத்து, மின்னல்போலும் சடையின் கண், விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, தலைவனே, விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, எனக்குத் தாய்போல்பவனே, இப்பொழுது உன்னை யன்றி யான் வேறு யாரை நினைப்பேன்? 
240 கீளார் கோவணமுந் திரு
நீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலை
வாஎனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழ
பாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
7.024.2
கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து, திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே, யாவர்க்கும் தலைவனே, வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே, திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, அடியேன், உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன்; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன்? என்னை நீ ஏற்றுக்கொள். 
241 எம்மான் எம்மனையென் றனக்
கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி பிறந்
தேஇறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
7.024.3
மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, எங்கள் தலைவனே, 'என் தந்தை என் தாய்' என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார்; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன்; ஆதலின், இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன்? 
242 பண்டே நின்னடியேன் அடி
யாரடி யார்கட்கெல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன் தொட
ராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
7.024.4
வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே, வானுலகில் வாழ்பவனே, உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார், அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டு விட்டேன்; உன்னோடாயினும், உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன்; ஆதலின் இனி, யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன்? 
243
கண்ணாய் ஏழுலகுங் கருத்
தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப் பர
மாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
7.024.5
ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும், அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும், பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும், எல்லாப் பொருட்கும் மேலாயும் உள்ள மேலான ஒளியே, நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, தலைவனே, இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன்? 
244
நாளார் வந்தணுகி நலி
யாமுனம் நின்றனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடி
யேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழ
பாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
7.024.6
அடியவர்கட்கு, முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற, திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே, உனக்கு நான் ஆளாயினபின், உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன்? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின், அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள். 
245 சந்தா ருங்குழையாய் சடை
மேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடை
யேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
7.024.7
பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே, சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே, வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே, இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே, அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே, என் தந்தையே, நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்? 
246 வெய்ய விரிசுடரோன் மிகு தேவர்
கணங்களெல்லாம்
செய்ய மலர்களிட மிகு
செம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூல் மழ
பாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
7.024.8
வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம், நல்ல மலர்களை இட்டு வழிபட, அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே, இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே, என் தலைவனே, அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்? 
247 நெறியே நின்மலனே நெடு
மாலயன் போற்றிசெய்யும்
குறியே நீர்மையனே கொடி
யேரிடை யாள்தலைவா
மறிசேர் அங்கையனே மழ
பாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
7.024.9
உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே, மலத்தாற் பற்றப்படாதவனே, நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே, நற்பண்புடையவனே, கொடிபோலும் இடையினையுடைய உமாதேவிக்குக் கணவனே, மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, அறிவு வடிவானவனே, அடியேன், இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்? 
248 ஏரார் முப்புரமும் மெரி
யச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழ
பாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.
7.024.10
அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந் தொழியுமாறு வில்லை வளைத்தவனும், கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை, புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள், சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள். 
திருச்சிற்றம்பலம்

 

7.024.திருமழபாடி 

பண் - நட்டராகம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - வச்சிரத்தம்பநாதர். 

தேவியார் - அழகம்மை. 

 

 

239 பொன்னார் மேனியனே புலித் 

தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர் 

கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே மழ 

பாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி 

யாரை நினைக்கேனே.

7.024.1

 

  பொன்போலும் திருமேனியை உடையவனே, அரையின்கண் புலித்தோலை உடுத்து, மின்னல்போலும் சடையின் கண், விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, தலைவனே, விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, எனக்குத் தாய்போல்பவனே, இப்பொழுது உன்னை யன்றி யான் வேறு யாரை நினைப்பேன்? 

 

 

240 கீளார் கோவணமுந் திரு

நீறுமெய் பூசியுன்றன்

தாளே வந்தடைந்தேன் தலை

வாஎனை ஏன்றுகொள்நீ

வாளார் கண்ணிபங்கா மழ

பாடியுள் மாணிக்கமே

கேளா நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

7.024.2

 

  கீளின்கண் பொருந்திய கோவணத்தையும் உடுத்து, திருநீற்றையும் திருமேனியிற் பூசினவனே, யாவர்க்கும் தலைவனே, வாள்போலும் கண்களையுடைய உமாதேவியை உடைய ஒரு பங்கினனே, திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, அடியேன், உனது திருவடியையே புகலிடமாக வந்து அடைந்தேன்; இனி உன்னையல்லாது வேறு யாரை எனக்கு உறவாக நினைப்பேன்? என்னை நீ ஏற்றுக்கொள். 

 

 

241 எம்மான் எம்மனையென் றனக்

கெட்டனைச் சார்வாகார்

இம்மா யப்பிறவி பிறந்

தேஇறந் தெய்த்தொழிந்தேன்

மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ

பாடியுள் மாணிக்கமே

அம்மான் நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

7.024.3

 

  மேகம் தவழும் அழகிய மாஞ்சோலை சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம் போல்பவனே, எங்கள் தலைவனே, 'என் தந்தை என் தாய்' என்று இவர்கள் எனக்கு எள்ளளவும் துணையாக மாட்டார்; அவர்களைத் துணையாக நினைத்துத்தான் இந்த நிலையில்லாத பிறவியை எடுத்துப் பின் பிறந்து இளைத்துப் போனேன்; ஆதலின், இப்பொழுது உன்னையல்லாது வேறு யாரை நினைப்பேன்? 

 

 

242 பண்டே நின்னடியேன் அடி

யாரடி யார்கட்கெல்லாம்

தொண்டே பூண்டொழிந்தேன் தொட

ராமைத் துரிசறுத்தேன்

வண்டார் பூம்பொழில்சூழ் மழ

பாடியுள் மாணிக்கமே

அண்டா நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

7.024.4

 

  வண்டுகள் ஆரவாரிக்கின்ற பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியில் திகழும் மாணிக்கம்போல்பவனே, வானுலகில் வாழ்பவனே, உனக்கு அடியவனாகிய யான் அப்பொழுதே உன் அடியார், அவர்க்கு அடியராயினார் ஆகிய எல்லார்க்கும் தொண்டு செய்தலை மேற்கொண்டு விட்டேன்; உன்னோடாயினும், உன் அடியாரோடாயினும் தொடர்புகொள்ளாத குற்றம் என்பால் இல்லாதவாறு அதனைக் களைந்தொழித்தேன்; ஆதலின் இனி, யான் உன்னை யன்றி வேறு யாரை நினைப்பேன்? 

 

 

243

கண்ணாய் ஏழுலகுங் கருத்

தாய அருத்தமுமாய்ப்

பண்ணார் இன்றமிழாய்ப் பர

மாய பரஞ்சுடரே

மண்ணார் பூம்பொழில்சூழ் மழ

பாடியுள் மாணிக்கமே

அண்ணா நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

7.024.5

 

  ஏழுலகங்களிலும் உள்ள எல்லா உயிர்கட்கும் அறிவாகியும், அவை விரும்பப்படுகின்ற பொருள்களாகியும், பண் அமைந்த இனிய தமிழ்ப்பாடலாகியும், எல்லாப் பொருட்கும் மேலாயும் உள்ள மேலான ஒளியே, நிலம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, தலைவனே, இப்பொழுது யான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன்? 

 

 

244

நாளார் வந்தணுகி நலி

யாமுனம் நின்றனக்கே

ஆளா வந்தடைந்தேன் அடி

யேனையும் ஏன்றுகொள்நீ

மாளா நாளருளும் மழ

பாடியுள் மாணிக்கமே

ஆளாய் நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

7.024.6

 

  அடியவர்கட்கு, முடிவில்லாத வாழ்நாளைக் கொடுக்கின்ற, திருமழபாடியில் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே, உனக்கு நான் ஆளாயினபின், உன்னை யல்லது வேறு யாரை நினைப்பேன்? எனக்கு இறுதிநாள் வந்து நெருங்கித் துன்புறுத்துவதற்கு முன்பே உனக்கு நான் ஆளாதற்பொருட்டு வந்து உன்னை அடைந்தேனாதலின், அடியேனையும் உனக்கு உரியவனாக நீ ஏற்றுக் கொண்டருள். 

 

 

245 சந்தா ருங்குழையாய் சடை

மேற்பிறை தாங்கிநல்ல

வெந்தார் வெண்பொடியாய் விடை

யேறிய வித்தகனே

மைந்தார் சோலைகள்சூழ் மழ

பாடியுள் மாணிக்கமே

எந்தாய் நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

7.024.7

 

  பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே, சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே, வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே, இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே, அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே, என் தந்தையே, நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்? 

 

 

246 வெய்ய விரிசுடரோன் மிகு தேவர்

கணங்களெல்லாம்

செய்ய மலர்களிட மிகு

செம்மையுள் நின்றவனே

மையார் பூம்பொழில்சூல் மழ

பாடியுள் மாணிக்கமே

ஐயா நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

7.024.8

 

  வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம், நல்ல மலர்களை இட்டு வழிபட, அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே, இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே, என் தலைவனே, அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்? 

 

 

247 நெறியே நின்மலனே நெடு

மாலயன் போற்றிசெய்யும்

குறியே நீர்மையனே கொடி

யேரிடை யாள்தலைவா

மறிசேர் அங்கையனே மழ

பாடியுள் மாணிக்கமே

அறிவே நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

7.024.9

 

  உயிர்களுக்கு நன்னெறியாய் நிற்பவனே, மலத்தாற் பற்றப்படாதவனே, நீண்ட திருமாலும் பிரமனும் ஏத்தெடுக்கும் தியானப் பொருளே, நற்பண்புடையவனே, கொடிபோலும் இடையினையுடைய உமாதேவிக்குக் கணவனே, மான் கன்று பொருந்திய அகங்கையை யுடையவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, அறிவு வடிவானவனே, அடியேன், இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்? 

 

 

248 ஏரார் முப்புரமும் மெரி

யச்சிலை தொட்டவனை

வாரார் கொங்கையுடன் மழ

பாடியுள் மேயவனைச்

சீரார் நாவலர்கோன் ஆ

ரூரன் உரைத்ததமிழ்

பாரோர் ஏத்தவல்லார் பர

லோகத் திருப்பாரே.

7.024.10

 

  அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந் தொழியுமாறு வில்லை வளைத்தவனும், கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை, புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள், சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 23 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.