|
||||||||
ஏழாம் திருமுறை-27 |
||||||||
7.027.திருக்கற்குடி
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உச்சிவரதநாயகர்.
தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
269 விடையா ருங்கொடியாய் வெறி
யார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பர
மாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அடிகே ளெம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.1
இடபம் எழுதப்பெற்ற கொடியை உடையவனே, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, படைக்கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே, மேலார்க்கும் மேலானவனே, மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக் கொண்டருள்.
270 மறையோர் வானவருந் தொழு
தேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான் எனக்
கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.2
அந்தணரும், அமரரும் கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே, எம்பெருமானே. எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே, இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, அழகிய கண்களையுடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக்கொண்டருள்.
271 சிலையால் முப்புரங்கள் பொடி
யாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மட
மாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்
கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.3
வில்லால், திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே, மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே, இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பாகத்திற் கொண்டவனே, மான் பொருந்திய கையை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள்.
272 செய்யார் மேனியனே திரு
நீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மத
யானை யுரித்தவனே
கையார் சூலத்தினாய் திருக்
கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.4
செம்மை நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே, அழகிய நீல நிறமான கண்டத்தை உடையவனே, மை பொருந்திய கண்களை உடைய மங்கையது ஒருபாகத்தை விரும்பிக் கொண்டவனே, மதம் பொருந்திய யானையை உரித்தவனே, கையில் பொருந்திய சூலத்தை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள்.
273 சந்தார் வெண்குழையாய் சரி
கோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள்ஒரு
பாக மமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடி
யேனையும் ஏன்றுகொள்ளே. 7.027.5
அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந்தவனே, சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே, பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமையை ஒருபாகத்தில் விரும்பிக் கொண்டவனே, நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, எங்கள் கடவுளே, அடியேனையும் ஏன்று உய்யக்கொண்டருள்.
274 அரையார் கீளொடுகோ வண
மும்மர வும்மசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்
கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.6
அரை வெறுவிதாகாது நிரம்புதற்குரிய கீளையுங் கோவணத்தையும் அரையின்கண் கட்டி, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு, ஒளி விளங்குகின்ற பிறையையும் சடையிடத்து உடையவனே, வரம்புகள் நீரால் நிறையும் வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அரசனே, எங்கள் இறைவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள்.
275 பாரார் விண்ணவரும் பர
விப்பணிந் தேத்தநின்ற
சீரார் மேனியனே திகழ்
நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.7
மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் பணிந்து முன்னிலையாகப் பரவவும், படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற, அழகு பொருந்திய உருவத் திருமேனியை உடையவனே, விளங்குகின்ற நீல நிறத்தையுடைய கண்டத்தையுடையவனே, மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தெவிட்டாத அமுதமாய் உள்ளவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள்.
276
நிலனே நீர்வளிதீ நெடு
வானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்
மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக்
கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.8
நிலமே, நீரே, தீயே, காற்றே, நீண்டவானமே என்னும் ஐந்துமாகிநிற்கும் பெரும்பொருளாய் உள்ளவனே, தாமரை மலரில் உள்ள பிரமன், மாயோன் இருவரும் போற்றிநின்ற நெருப்பாகிய தோற்றத்தை உடையவனே, கற்பகத் தருப்போல்பவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தீ யேந்திய கையை உடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள்.
277 வருங்கா லன்னுயிரை மடி
யத்திரு மெல்விரலால்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரி
வித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடி
யேனையும் வேண்டுதியே.
7.027.9
பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி, அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி, அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகையாளனே, கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே, எங்கள் இறைவனே, அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக விரும்பிக் கொள்.
278 அலையார் தண்புனல்சூழ்ந் தழ
காகி விழவமரும்
கலையார் மாதவர்சேர் திருக்
கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்ல
சிங்கடி யப்பனுரை
விலையார் மாலைவல்லார் வியன்
மூவுல காள்பவரே.
7.027.10
அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி விழாக்கள் நீங்காதிருக்கின்ற, கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கின்ற கற்பகம் போல்பவனை, விற்போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய நல்ல, 'சிங்கடி' என்பாளுக்குத் தந்தையாகிய நம்பியாரூரன் பாடிய, விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள், அகன்ற மூன்றுலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர்.
திருச்சிற்றம்பலம்
7.027.திருக்கற்குடி பண் - நட்டராகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - உச்சிவரதநாயகர். தேவியார் - அஞ்சனாட்சியம்மை.
269 விடையா ருங்கொடியாய் வெறி யார்மலர்க் கொன்றையினாய் படையார் வெண்மழுவா பர மாய பரம்பரனே கடியார் பூம்பொழில்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற அடிகே ளெம்பெருமான் அடி யேனையும் அஞ்சலென்னே. 7.027.1
இடபம் எழுதப்பெற்ற கொடியை உடையவனே, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, படைக்கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே, மேலார்க்கும் மேலானவனே, மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக் கொண்டருள்.
270 மறையோர் வானவருந் தொழு தேத்தி வணங்கநின்ற இறைவா எம்பெருமான் எனக் கின்னமு தாயவனே கறையார் சோலைகள்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற அறவா அங்கணனே அடி யேனையும் அஞ்சலென்னே. 7.027.2
அந்தணரும், அமரரும் கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே, எம்பெருமானே. எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே, இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, அழகிய கண்களையுடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக்கொண்டருள்.
271 சிலையால் முப்புரங்கள் பொடி யாகச் சிதைத்தவனே மலைமேல் மாமருந்தே மட மாதிடங் கொண்டவனே கலைசேர் கையினனே திருக் கற்குடி மன்னிநின்ற அலைசேர் செஞ்சடையாய் அடி யேனையும் அஞ்சலென்னே. 7.027.3
வில்லால், திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே, மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே, இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பாகத்திற் கொண்டவனே, மான் பொருந்திய கையை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள்.
272 செய்யார் மேனியனே திரு நீல மிடற்றினனே மையார் கண்ணிபங்கா மத யானை யுரித்தவனே கையார் சூலத்தினாய் திருக் கற்குடி மன்னிநின்ற ஐயா எம்பெருமான் அடி யேனையும் அஞ்சலென்னே. 7.027.4
செம்மை நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே, அழகிய நீல நிறமான கண்டத்தை உடையவனே, மை பொருந்திய கண்களை உடைய மங்கையது ஒருபாகத்தை விரும்பிக் கொண்டவனே, மதம் பொருந்திய யானையை உரித்தவனே, கையில் பொருந்திய சூலத்தை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள்.
273 சந்தார் வெண்குழையாய் சரி கோவண ஆடையனே பந்தா ரும்விரலாள்ஒரு பாக மமர்ந்தவனே கந்தார் சோலைகள்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற எந்தாய் எம்பெருமான் அடி யேனையும் ஏன்றுகொள்ளே. 7.027.5
அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந்தவனே, சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே, பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமையை ஒருபாகத்தில் விரும்பிக் கொண்டவனே, நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, எங்கள் கடவுளே, அடியேனையும் ஏன்று உய்யக்கொண்டருள்.
274 அரையார் கீளொடுகோ வண மும்மர வும்மசைத்து விரையார் கொன்றையுடன் விளங் கும்பிறை மேலுடையாய் கரையா ரும்வயல்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற அரையா எம்பெருமான் அடி யேனையும் அஞ்சலென்னே. 7.027.6
அரை வெறுவிதாகாது நிரம்புதற்குரிய கீளையுங் கோவணத்தையும் அரையின்கண் கட்டி, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு, ஒளி விளங்குகின்ற பிறையையும் சடையிடத்து உடையவனே, வரம்புகள் நீரால் நிறையும் வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அரசனே, எங்கள் இறைவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள்.
275 பாரார் விண்ணவரும் பர விப்பணிந் தேத்தநின்ற சீரார் மேனியனே திகழ் நீல மிடற்றினனே காரார் பூம்பொழில்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற ஆரா இன்னமுதே அடி யேனையும் அஞ்சலென்னே. 7.027.7
மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் பணிந்து முன்னிலையாகப் பரவவும், படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற, அழகு பொருந்திய உருவத் திருமேனியை உடையவனே, விளங்குகின்ற நீல நிறத்தையுடைய கண்டத்தையுடையவனே, மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தெவிட்டாத அமுதமாய் உள்ளவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள்.
276 நிலனே நீர்வளிதீ நெடு வானக மாகிநின்ற புலனே புண்டரிகத் தயன் மாலவன் போற்றிசெய்யும் கனலே கற்பகமே திருக் கற்குடி மன்னிநின்ற அனல்சேர் கையினனே அடி யேனையும் அஞ்சலென்னே. 7.027.8
நிலமே, நீரே, தீயே, காற்றே, நீண்டவானமே என்னும் ஐந்துமாகிநிற்கும் பெரும்பொருளாய் உள்ளவனே, தாமரை மலரில் உள்ள பிரமன், மாயோன் இருவரும் போற்றிநின்ற நெருப்பாகிய தோற்றத்தை உடையவனே, கற்பகத் தருப்போல்பவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தீ யேந்திய கையை உடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள்.
277 வருங்கா லன்னுயிரை மடி யத்திரு மெல்விரலால் பெரும்பா லன்றனக்காய்ப் பிரி வித்த பெருந்தகையே கரும்பா ரும்வயல்சூழ் திருக் கற்குடி மன்னிநின்ற விரும்பா எம்பெருமான் அடி யேனையும் வேண்டுதியே. 7.027.9
பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி, அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி, அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகையாளனே, கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே, எங்கள் இறைவனே, அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக விரும்பிக் கொள்.
278 அலையார் தண்புனல்சூழ்ந் தழ காகி விழவமரும் கலையார் மாதவர்சேர் திருக் கற்குடிக் கற்பகத்தைச் சிலையார் வாணுதலாள் நல்ல சிங்கடி யப்பனுரை விலையார் மாலைவல்லார் வியன் மூவுல காள்பவரே. 7.027.10
அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி விழாக்கள் நீங்காதிருக்கின்ற, கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கின்ற கற்பகம் போல்பவனை, விற்போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய நல்ல, 'சிங்கடி' என்பாளுக்குத் தந்தையாகிய நம்பியாரூரன் பாடிய, விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள், அகன்ற மூன்றுலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 23 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|