LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-27

 

7.027.திருக்கற்குடி 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - உச்சிவரதநாயகர். 
தேவியார் - அஞ்சனாட்சியம்மை. 
269 விடையா ருங்கொடியாய் வெறி
யார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பர
மாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அடிகே ளெம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.1
இடபம் எழுதப்பெற்ற கொடியை உடையவனே, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, படைக்கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே, மேலார்க்கும் மேலானவனே, மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக் கொண்டருள். 
270 மறையோர் வானவருந் தொழு
தேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான் எனக்
கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.2
அந்தணரும், அமரரும் கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே, எம்பெருமானே. எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே, இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, அழகிய கண்களையுடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக்கொண்டருள். 
271 சிலையால் முப்புரங்கள் பொடி
யாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மட
மாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்
கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.3
வில்லால், திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே, மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே, இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பாகத்திற் கொண்டவனே, மான் பொருந்திய கையை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள். 
272 செய்யார் மேனியனே திரு
நீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மத
யானை யுரித்தவனே
கையார் சூலத்தினாய் திருக்
கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.4
செம்மை நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே, அழகிய நீல நிறமான கண்டத்தை உடையவனே, மை பொருந்திய கண்களை உடைய மங்கையது ஒருபாகத்தை விரும்பிக் கொண்டவனே, மதம் பொருந்திய யானையை உரித்தவனே, கையில் பொருந்திய சூலத்தை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள். 
273 சந்தார் வெண்குழையாய் சரி
கோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள்ஒரு
பாக மமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடி
யேனையும் ஏன்றுகொள்ளே. 7.027.5
அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந்தவனே, சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே, பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமையை ஒருபாகத்தில் விரும்பிக் கொண்டவனே, நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, எங்கள் கடவுளே, அடியேனையும் ஏன்று உய்யக்கொண்டருள். 
274 அரையார் கீளொடுகோ வண
மும்மர வும்மசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்
கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.6
அரை வெறுவிதாகாது நிரம்புதற்குரிய கீளையுங் கோவணத்தையும் அரையின்கண் கட்டி, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு, ஒளி விளங்குகின்ற பிறையையும் சடையிடத்து உடையவனே, வரம்புகள் நீரால் நிறையும் வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அரசனே, எங்கள் இறைவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள். 
275 பாரார் விண்ணவரும் பர
விப்பணிந் தேத்தநின்ற
சீரார் மேனியனே திகழ்
நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடி
யேனையும் அஞ்சலென்னே.
7.027.7
மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் பணிந்து முன்னிலையாகப் பரவவும், படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற, அழகு பொருந்திய உருவத் திருமேனியை உடையவனே, விளங்குகின்ற நீல நிறத்தையுடைய கண்டத்தையுடையவனே, மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தெவிட்டாத அமுதமாய் உள்ளவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள். 
276
நிலனே நீர்வளிதீ நெடு
வானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன் 
மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக் 
கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடி 
யேனையும் அஞ்சலென்னே.
7.027.8
நிலமே, நீரே, தீயே, காற்றே, நீண்டவானமே என்னும் ஐந்துமாகிநிற்கும் பெரும்பொருளாய் உள்ளவனே, தாமரை மலரில் உள்ள பிரமன், மாயோன் இருவரும் போற்றிநின்ற நெருப்பாகிய தோற்றத்தை உடையவனே, கற்பகத் தருப்போல்பவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தீ யேந்திய கையை உடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள். 
277 வருங்கா லன்னுயிரை மடி
யத்திரு மெல்விரலால்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரி
வித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடி
யேனையும் வேண்டுதியே.
7.027.9
பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி, அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி, அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகையாளனே, கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே, எங்கள் இறைவனே, அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக விரும்பிக் கொள். 
278 அலையார் தண்புனல்சூழ்ந் தழ
காகி விழவமரும்
கலையார் மாதவர்சேர் திருக்
கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்ல
சிங்கடி யப்பனுரை
விலையார் மாலைவல்லார் வியன்
மூவுல காள்பவரே.
7.027.10
அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி விழாக்கள் நீங்காதிருக்கின்ற, கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கின்ற கற்பகம் போல்பவனை, விற்போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய நல்ல, 'சிங்கடி' என்பாளுக்குத் தந்தையாகிய நம்பியாரூரன் பாடிய, விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள், அகன்ற மூன்றுலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர். 
திருச்சிற்றம்பலம்

 

7.027.திருக்கற்குடி 

பண் - நட்டராகம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - உச்சிவரதநாயகர். 

தேவியார் - அஞ்சனாட்சியம்மை. 

 

 

269 விடையா ருங்கொடியாய் வெறி

யார்மலர்க் கொன்றையினாய்

படையார் வெண்மழுவா பர

மாய பரம்பரனே

கடியார் பூம்பொழில்சூழ் திருக்

கற்குடி மன்னிநின்ற

அடிகே ளெம்பெருமான் அடி

யேனையும் அஞ்சலென்னே.

7.027.1

 

  இடபம் எழுதப்பெற்ற கொடியை உடையவனே, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே, படைக்கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே, மேலார்க்கும் மேலானவனே, மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக் கொண்டருள். 

 

 

270 மறையோர் வானவருந் தொழு

தேத்தி வணங்கநின்ற

இறைவா எம்பெருமான் எனக்

கின்னமு தாயவனே

கறையார் சோலைகள்சூழ் திருக்

கற்குடி மன்னிநின்ற

அறவா அங்கணனே அடி

யேனையும் அஞ்சலென்னே.

7.027.2

 

  அந்தணரும், அமரரும் கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே, எம்பெருமானே. எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே, இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே, அழகிய கண்களையுடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' எனச் சொல்லி உய்யக்கொண்டருள். 

 

 

271 சிலையால் முப்புரங்கள் பொடி

யாகச் சிதைத்தவனே

மலைமேல் மாமருந்தே மட

மாதிடங் கொண்டவனே

கலைசேர் கையினனே திருக்

கற்குடி மன்னிநின்ற

அலைசேர் செஞ்சடையாய் அடி

யேனையும் அஞ்சலென்னே.

7.027.3

 

  வில்லால், திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே, மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே, இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பாகத்திற் கொண்டவனே, மான் பொருந்திய கையை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள். 

 

 

272 செய்யார் மேனியனே திரு

நீல மிடற்றினனே

மையார் கண்ணிபங்கா மத

யானை யுரித்தவனே

கையார் சூலத்தினாய் திருக்

கற்குடி மன்னிநின்ற

ஐயா எம்பெருமான் அடி

யேனையும் அஞ்சலென்னே.

7.027.4

 

  செம்மை நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே, அழகிய நீல நிறமான கண்டத்தை உடையவனே, மை பொருந்திய கண்களை உடைய மங்கையது ஒருபாகத்தை விரும்பிக் கொண்டவனே, மதம் பொருந்திய யானையை உரித்தவனே, கையில் பொருந்திய சூலத்தை உடையவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, எங்கள் கடவுளே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள். 

 

 

273 சந்தார் வெண்குழையாய் சரி

கோவண ஆடையனே

பந்தா ரும்விரலாள்ஒரு

பாக மமர்ந்தவனே

கந்தார் சோலைகள்சூழ் திருக்

கற்குடி மன்னிநின்ற

எந்தாய் எம்பெருமான் அடி

யேனையும் ஏன்றுகொள்ளே. 7.027.5

 

  அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந்தவனே, சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே, பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமையை ஒருபாகத்தில் விரும்பிக் கொண்டவனே, நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, எங்கள் கடவுளே, அடியேனையும் ஏன்று உய்யக்கொண்டருள். 

 

 

274 அரையார் கீளொடுகோ வண

மும்மர வும்மசைத்து

விரையார் கொன்றையுடன் விளங்

கும்பிறை மேலுடையாய்

கரையா ரும்வயல்சூழ் திருக்

கற்குடி மன்னிநின்ற

அரையா எம்பெருமான் அடி

யேனையும் அஞ்சலென்னே.

7.027.6

 

  அரை வெறுவிதாகாது நிரம்புதற்குரிய கீளையுங் கோவணத்தையும் அரையின்கண் கட்டி, நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு, ஒளி விளங்குகின்ற பிறையையும் சடையிடத்து உடையவனே, வரம்புகள் நீரால் நிறையும் வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அரசனே, எங்கள் இறைவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள். 

 

 

275 பாரார் விண்ணவரும் பர

விப்பணிந் தேத்தநின்ற

சீரார் மேனியனே திகழ்

நீல மிடற்றினனே

காரார் பூம்பொழில்சூழ் திருக்

கற்குடி மன்னிநின்ற

ஆரா இன்னமுதே அடி

யேனையும் அஞ்சலென்னே.

7.027.7

 

  மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் பணிந்து முன்னிலையாகப் பரவவும், படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற, அழகு பொருந்திய உருவத் திருமேனியை உடையவனே, விளங்குகின்ற நீல நிறத்தையுடைய கண்டத்தையுடையவனே, மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தெவிட்டாத அமுதமாய் உள்ளவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக்கொண்டருள். 

 

 

276

நிலனே நீர்வளிதீ நெடு

வானக மாகிநின்ற

புலனே புண்டரிகத் தயன் 

மாலவன் போற்றிசெய்யும்

கனலே கற்பகமே திருக் 

கற்குடி மன்னிநின்ற

அனல்சேர் கையினனே அடி 

யேனையும் அஞ்சலென்னே.

7.027.8

 

  நிலமே, நீரே, தீயே, காற்றே, நீண்டவானமே என்னும் ஐந்துமாகிநிற்கும் பெரும்பொருளாய் உள்ளவனே, தாமரை மலரில் உள்ள பிரமன், மாயோன் இருவரும் போற்றிநின்ற நெருப்பாகிய தோற்றத்தை உடையவனே, கற்பகத் தருப்போல்பவனே, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற, தீ யேந்திய கையை உடையவனே, அடியேனையும், 'அஞ்சாதி' என்று சொல்லி உய்யக் கொண்டருள். 

 

 

277 வருங்கா லன்னுயிரை மடி

யத்திரு மெல்விரலால்

பெரும்பா லன்றனக்காய்ப் பிரி

வித்த பெருந்தகையே

கரும்பா ரும்வயல்சூழ் திருக்

கற்குடி மன்னிநின்ற

விரும்பா எம்பெருமான் அடி

யேனையும் வேண்டுதியே.

7.027.9

 

  பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி, அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி, அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகையாளனே, கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே, எங்கள் இறைவனே, அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக விரும்பிக் கொள். 

 

 

278 அலையார் தண்புனல்சூழ்ந் தழ

காகி விழவமரும்

கலையார் மாதவர்சேர் திருக்

கற்குடிக் கற்பகத்தைச்

சிலையார் வாணுதலாள் நல்ல

சிங்கடி யப்பனுரை

விலையார் மாலைவல்லார் வியன்

மூவுல காள்பவரே.

7.027.10

 

  அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி விழாக்கள் நீங்காதிருக்கின்ற, கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற திருக்கற்குடியில் எழுந்தருளியிருக்கின்ற கற்பகம் போல்பவனை, விற்போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய நல்ல, 'சிங்கடி' என்பாளுக்குத் தந்தையாகிய நம்பியாரூரன் பாடிய, விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள், அகன்ற மூன்றுலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர். 

 

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 23 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.