|
||||||||
ஏழாம் திருமுறை-9 |
||||||||
7.009.திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசுவைத்தவீசுவரர்.
தேவியார் - அழகம்மை.
83 மலைக்கும்மக ளஞ்ச மதகரியை
உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள்
சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர்
சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக்
கலவம்மயிற் பீலியுங் காரகிலும்
அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.
7.009.1
மான்களின் கொம்புகளையும், யானையின் தந்தங்களையும் எடுத்தெறிந்து, தோகையையுடைய மயிலினது இறகுகளையும், கரிய அகிற்கட்டைகளையும் அலையப்பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே! நீர் இமயமலைக்கு மகளாகிய உம் தேவி அச்சங்கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை உரித்தீர்; பெயர்ந்து வந்து எதிர்த்த மூன்று நகரங்களை எரித்தீர்; முழங்குகின்ற, கொல்லுந் தொழிலையுடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர்; சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர்.
84 அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர்
செறுத்தீர் அழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பலநாள்
சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறைவா
நிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
7.009.2
சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், அரிதாகிய தாமரைமலரின்கண் இருக்கும் பிரமதேவனது தலையொன்றை அறுத்தீர்; நெருப்பை வீசும் சூலத்தினால் அந்தகாசுரனை அழித்தீர்; திருமட்குத் தலைவனாகிய நீண்ட வடிவினைக் கொண்ட திருமால் உமக்குப் பலநாள் சிறப்பாய் உள்ள வழிபாட்டினைச் செய்து வரும் நாள்களில் ஒருநாள், அவன் சாத்துகின்ற ஆயிரந் தாமரை மலர்களுள் ஒன்று குறைவாகி மறைய, அது நிறைவாகும்படி, தனது கண்ணாகிய மலரைப்பறித்துச் சாத்த மகிழ்ந்து, போரின்கண் வெற்றியைத் தருகின்ற சக்கரப் படையை அருளினீர்.
85 தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ்
சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால
முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.
7.009.3
கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும், ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து, கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே, நீர், 'எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், சந்திரன், சூரியன், ஆன்மா' ஆகிய எல்லாப் பொருள்களுமானீர். ஆதலின், ஒன்றும் இல்லாதார் திரிந்து எடுக்கின்ற பிச்சையின் பொருட்டுத் தலை ஓட்டினை அங்கையில் ஏந்திச் சென்று பெண்டிர் சில பொருள்களை இட, அவற்றை ஏற்பது உமக்குத் தகுவதன்று.
86 கொடியுடை மும்மதில் வெந்தழியக
குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபட எய்தெரித் தீர்இமைக்கும்
மளவில்லுமக் காரெதிர் எம்பெருமான்
கடிபடு பூங்கணை யான்கருப்புச்
சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால்
பொடிபட நோக்கிய தென்னைகொல்லோ
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
7.009.4
எம்பெருமானிரே, சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், கொடிகளையுடைய மூன்று அரண்கள் வெந்து அழியும்படி, மலை வளைந்து வில்லாகுமாறு கட்டிய நாணியில் தொடுத்த ஓர் அம்பினாலே ஓசையுண்டாக எய்து, இமைக்கும் அளவில் எரித்தீர்; ஆதலின், உமக்கு நிகராவார் யாவர்? ஒருவரும் இல்லை; அங்ஙனமாக, மணம் பொருந்திய மலர்களையே அம்பாகவும், கரும்பையே வில்லாகவும் கொண்ட காம வேளை வெந்து சாம்பராய் அழிய கடைக்கண்ணால் சிவந்து நோக்கியது என் கருதியோ?
87 வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன்
மற்றும்வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கற்றலை யிற்பலி கொண்டலென்னே
உலகங்களெல் லாமுடையீர் உரையீர்
இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய
இனக்கெண்டைதுள் ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக்குணங் கொள்ளரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.
7.009.5
கயலும், சேலும் இளைய வாளையுமாகிய மீன்கள், ஒன்றோடு ஒன்று பொருந்தி மேலெழுந்து பாயவும், கூட்டமாகிய கெண்டை மீன்கள் துள்ளவும் அவற்றைக்கண்டு, முன்பு வாளாவிருந்த அன்னப்பறவைகள் அவைகளைத் துன்புறுத்தித் தம் இயல்பினை மேற்கொள்கின்ற (உண்கின்ற) அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே, உலகம் எல்லாவற்றையும் உடையவரே, உம்மை அடிபணிந்து, கை கூப்பித்தொழுகின்ற அடியவராவார், திருமாலும், பிரமனும், மற்றைய தேவரும், அசுரரும், பெரிய முனிவருமாவர்; அங்ஙனமாக. நீர் உலர்ந்த தலையோட்டில் பிச்சை ஏற்பது என்னோ? சொல்லியருளீர்.
88 அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான
அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
7.009.6
சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர், பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து, நீர்க்குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு, அப்பிழைக்காக நடுக்கமுற, நீர் அவரது கனவில் தோன்றி, 'அன்பனே, நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க', 'உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும், நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும்' என்று அருளிச் செய்து, நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும்படி செய்து, அவரை ஆட்கொண்டருளினீர்.
89 பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்மழியப்
பகலோன்முத லாப்பல தேவரையும்
தெழிந்திட்டவர் அங்கஞ் சிதைத்தருளுஞ்
செய்கையென்னைகொ லோமைகொள் செம்மிடற்றீர்
விழிக்குந்தழைப் பீலியொ டேலமுந்தி
விளங்கும்மணி முத்தோடு பொன்வரன்றி
அழிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.
7.009.7
சிறிதிடத்தில் கருமை நிறத்தைக் கொண்ட, முழுவதும் செம்மையாயுள்ள கண்டத்தையுடையவரே, கண் விழிப்பது போலத்தோன்றும் அழகிய வட்டங்களையுடைய தழையாகிய மயிற்றோகையோடு ஏலக்காய் மரங்களைத்தள்ளி, ஒளி வீசுகின்ற மாணிக்கம், முத்து, பொன் என்பவற்றையும் வாரிக்கொண்டு, கரைகளை அழித்து ஓடும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரே, நீர், உம்மை இகழ்ந்த பெரிய தேவனாகிய தக்கனது வேள்வி அழியும்படி, சூரியன் முதலாக நின்ற தேவர் பலரையும் அவர் நடுங்கும்படி அதட்டி, அவரது உறுப்புக்களில் ஒவ்வொன்றைச் சிதைத்தது என்னையோ?
90 பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக்
குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம்
பெருங்கா டரங்காகநின் றாடலென்னே
கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங்
கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும்
பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே.
7.009.8
நஞ்சைக்கொண்ட நீல கண்டத்தில் கண்டசரமாகவும், திண்ணிய தோள்களில் வாகு வலயமாகவும், முன் கைகளிற் கங்கணமாகவும், தலையில் தலைச் சூட்டாகவும், அரையில் கச்சாகவும் புள்ளிகளைக்கொண்ட பாம்புகள் பலவற்றையும் அணிந்தவரே, சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் புனிதரே, நீர், பறை போலும் பெரிய கண்களையுடைய பேய்க் கூட்டம் பாடு தலைச் செய்யவும், குறுகிய வடிவத்தையுடைய பூதங்கள் பறைகளை முழக்கவும், பிறையைக்கொண்ட சடை கீழே தாழ்ந்து அலைய, காலங்கடந்த காடே அரங்கமாக நின்று, அடிபெயர்த்து நடனமாடுதல் என்?
91 91 மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர்
புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள் அரவோ டென்பணி கலனா
முழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங்
கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட்
டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.009.9
'கழை' என்னும் தன்மையைக்கொண்ட கரும்புகளையும், வாழைப்பழங்களையும், கமுக மரத்தின் முற்றிய காய்களையும் வாரிக்கொண்டுவந்து கூப்பிடுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற புனிதரே, நீர், மேகம் போலும் பெரிய கண்களையுடைய உமாதேவியை ஒரு பங்கில் வைத்தீர்; அதன் மேலும், வளர்கின்ற புல்லிய சடையின்மேல், 'கங்கை' என்பவளை விரும்பி வைத்தீர். அங்ஙனமாக, செல்வ வாழ்க்கை வாழ நினையாது, புற்றினை இடமாகக் கொள்ளும் பாம்பும், எலும்புமே அணிகலங்களாக, மேனி முழுவதும் சாம்பலைப் பூசி வாழ்தல் என்னோ?
92 92 கடிக்கும் அரவால் மலையால் அமரர்
கடலைக் கடையவெழு காளகூடம்
ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை
உமக்கேயமு தாகவுண் டீருமிழீர்
இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி
இருபாலுமோடி இரைக்குந் திரைக்கை
அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
7.009.10
இடிக்கின்ற மேகத்தைக் கீழே தள்ளி இழுத்துக் கொண்டு, முன்பு அருவியாய் ஓடி, பின்பு, ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் இருபக்கத்தும் உள்ள கரைகளை மோதும் வெள்ளமாய்ப் பெருகி ஒலிக்கின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே, நீர், கடிக்கும் பாம்பாகிய கயிற்றைக் கொண்டு, மலையாகிய மத்தினால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய பெருநஞ்சு எல்லாவுலகத்தையும் அழித்துவிடும் என்று இரங்கி, அதனையே உமக்கு உரிய பங்காகிய அமுதமாக ஏற்று உண்டீர்; பின்பு இதுகாறும் அதனை உமிழவும் இல்லை.
93 காரூர்மழை பெய்து பொழிஅருவிக்
கழையோடகில் உந்திட் டிருகரையும்
போரூர்புனல் சேர்அரி சிற்றென்கரைப்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந்
தழகால்உரைப் பார்களுங் கேட்பவரும்
சீரூர்தரு தேவர்க ணங்களொடும்
இணங்கிச்சிவ லோகமே தெய்துவரே.
7.009.11
மேகங்கள் மிக்க மழையைப் பெய்ய, அதனாலே வீழ்ந்த அருவியிடத்துள்ள மூங்கிலையும், அகிற்கட்டையையும் தள்ளிக்கொண்டு, இருகரைகளின்மீதும் போரினை மேற்கொள்ளும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, சோலைகள் நிறைந்த திருப்புத்தூர்ப் புனிதரை, நம்பியாரூரனது அரிய தமிழ்ப்பாடல்கள் பத்தினாலும், மொழிக்குற்றம், இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும், அத்துதியைக் கேட்பவர்களும், சிறப்பு மிக்க தேவர் கூட்டத்துட்கூடி வாழ்ந்து, பின் சிவலோகத்தை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
7.009.திருஅரிசிற்கரைப்புத்தூர் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - படிக்காசுவைத்தவீசுவரர். தேவியார் - அழகம்மை.
83 மலைக்கும்மக ளஞ்ச மதகரியை உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள் சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர் சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர் கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக் கலவம்மயிற் பீலியுங் காரகிலும் அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை அழகார்திருப் புத்தூர் அழகனீரே. 7.009.1
மான்களின் கொம்புகளையும், யானையின் தந்தங்களையும் எடுத்தெறிந்து, தோகையையுடைய மயிலினது இறகுகளையும், கரிய அகிற்கட்டைகளையும் அலையப்பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே! நீர் இமயமலைக்கு மகளாகிய உம் தேவி அச்சங்கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை உரித்தீர்; பெயர்ந்து வந்து எதிர்த்த மூன்று நகரங்களை எரித்தீர்; முழங்குகின்ற, கொல்லுந் தொழிலையுடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர்; சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர்.
84 அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர் செறுத்தீர் அழற் சூலத்தில் அந்தகனைத் திருமகள் கோனெடு மால்பலநாள் சிறப்பாகிய பூசனை செய்பொழுதில் ஒருமலர் ஆயிரத் திற்குறைவா நிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர் பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. 7.009.2
சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், அரிதாகிய தாமரைமலரின்கண் இருக்கும் பிரமதேவனது தலையொன்றை அறுத்தீர்; நெருப்பை வீசும் சூலத்தினால் அந்தகாசுரனை அழித்தீர்; திருமட்குத் தலைவனாகிய நீண்ட வடிவினைக் கொண்ட திருமால் உமக்குப் பலநாள் சிறப்பாய் உள்ள வழிபாட்டினைச் செய்து வரும் நாள்களில் ஒருநாள், அவன் சாத்துகின்ற ஆயிரந் தாமரை மலர்களுள் ஒன்று குறைவாகி மறைய, அது நிறைவாகும்படி, தனது கண்ணாகிய மலரைப்பறித்துச் சாத்த மகிழ்ந்து, போரின்கண் வெற்றியைத் தருகின்ற சக்கரப் படையை அருளினீர்.
85 தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ் சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர் சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித் தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும் முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை அழகார்திருப் புத்தூர் அழகனீரே. 7.009.3
கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும், ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து, கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே, நீர், 'எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், சந்திரன், சூரியன், ஆன்மா' ஆகிய எல்லாப் பொருள்களுமானீர். ஆதலின், ஒன்றும் இல்லாதார் திரிந்து எடுக்கின்ற பிச்சையின் பொருட்டுத் தலை ஓட்டினை அங்கையில் ஏந்திச் சென்று பெண்டிர் சில பொருள்களை இட, அவற்றை ஏற்பது உமக்குத் தகுவதன்று.
86 கொடியுடை மும்மதில் வெந்தழியக குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால் இடிபட எய்தெரித் தீர்இமைக்கும் மளவில்லுமக் காரெதிர் எம்பெருமான் கடிபடு பூங்கணை யான்கருப்புச் சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால் பொடிபட நோக்கிய தென்னைகொல்லோ பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. 7.009.4
எம்பெருமானிரே, சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், கொடிகளையுடைய மூன்று அரண்கள் வெந்து அழியும்படி, மலை வளைந்து வில்லாகுமாறு கட்டிய நாணியில் தொடுத்த ஓர் அம்பினாலே ஓசையுண்டாக எய்து, இமைக்கும் அளவில் எரித்தீர்; ஆதலின், உமக்கு நிகராவார் யாவர்? ஒருவரும் இல்லை; அங்ஙனமாக, மணம் பொருந்திய மலர்களையே அம்பாகவும், கரும்பையே வில்லாகவும் கொண்ட காம வேளை வெந்து சாம்பராய் அழிய கடைக்கண்ணால் சிவந்து நோக்கியது என் கருதியோ?
87 வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன் மற்றும்வானவர் தானவர் மாமுனிவர் உணங்கற்றலை யிற்பலி கொண்டலென்னே உலகங்களெல் லாமுடையீர் உரையீர் இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய இனக்கெண்டைதுள் ளக்கண் டிருந்தஅன்னம் அணங்கிக்குணங் கொள்ளரி சிற்றென்கரை அழகார்திருப் புத்தூர் அழகனீரே. 7.009.5
கயலும், சேலும் இளைய வாளையுமாகிய மீன்கள், ஒன்றோடு ஒன்று பொருந்தி மேலெழுந்து பாயவும், கூட்டமாகிய கெண்டை மீன்கள் துள்ளவும் அவற்றைக்கண்டு, முன்பு வாளாவிருந்த அன்னப்பறவைகள் அவைகளைத் துன்புறுத்தித் தம் இயல்பினை மேற்கொள்கின்ற (உண்கின்ற) அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே, உலகம் எல்லாவற்றையும் உடையவரே, உம்மை அடிபணிந்து, கை கூப்பித்தொழுகின்ற அடியவராவார், திருமாலும், பிரமனும், மற்றைய தேவரும், அசுரரும், பெரிய முனிவருமாவர்; அங்ஙனமாக. நீர் உலர்ந்த தலையோட்டில் பிச்சை ஏற்பது என்னோ? சொல்லியருளீர்.
88 அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான் மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும் முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும் வகுத்தவ னுக்குநித் தற்படியும் வரும்என்றொரு காசினை நின்றநன்றிப் புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர் பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே. 7.009.6
சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர், பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து, நீர்க்குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு, அப்பிழைக்காக நடுக்கமுற, நீர் அவரது கனவில் தோன்றி, 'அன்பனே, நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க', 'உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும், நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும்' என்று அருளிச் செய்து, நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும்படி செய்து, அவரை ஆட்கொண்டருளினீர்.
89 பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்மழியப் பகலோன்முத லாப்பல தேவரையும் தெழிந்திட்டவர் அங்கஞ் சிதைத்தருளுஞ் செய்கையென்னைகொ லோமைகொள் செம்மிடற்றீர் விழிக்குந்தழைப் பீலியொ டேலமுந்தி விளங்கும்மணி முத்தோடு பொன்வரன்றி அழிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை அழகார்திருப் புத்தூர் அழகனீரே. 7.009.7
சிறிதிடத்தில் கருமை நிறத்தைக் கொண்ட, முழுவதும் செம்மையாயுள்ள கண்டத்தையுடையவரே, கண் விழிப்பது போலத்தோன்றும் அழகிய வட்டங்களையுடைய தழையாகிய மயிற்றோகையோடு ஏலக்காய் மரங்களைத்தள்ளி, ஒளி வீசுகின்ற மாணிக்கம், முத்து, பொன் என்பவற்றையும் வாரிக்கொண்டு, கரைகளை அழித்து ஓடும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரே, நீர், உம்மை இகழ்ந்த பெரிய தேவனாகிய தக்கனது வேள்வி அழியும்படி, சூரியன் முதலாக நின்ற தேவர் பலரையும் அவர் நடுங்கும்படி அதட்டி, அவரது உறுப்புக்களில் ஒவ்வொன்றைச் சிதைத்தது என்னையோ?
90 பறைக்கண் நெடும்பேய்க் கணம்பாடல் செய்யக் குறட்பா ரிடங்கள்பறை தாம்முழக்கப் பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து நட்டம் பெருங்கா டரங்காகநின் றாடலென்னே கறைக்கொள் மணிகண் டமுந்திண் டோ ள்களுங் கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப் பொறிக்கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே. 7.009.8
நஞ்சைக்கொண்ட நீல கண்டத்தில் கண்டசரமாகவும், திண்ணிய தோள்களில் வாகு வலயமாகவும், முன் கைகளிற் கங்கணமாகவும், தலையில் தலைச் சூட்டாகவும், அரையில் கச்சாகவும் புள்ளிகளைக்கொண்ட பாம்புகள் பலவற்றையும் அணிந்தவரே, சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் புனிதரே, நீர், பறை போலும் பெரிய கண்களையுடைய பேய்க் கூட்டம் பாடு தலைச் செய்யவும், குறுகிய வடிவத்தையுடைய பூதங்கள் பறைகளை முழக்கவும், பிறையைக்கொண்ட சடை கீழே தாழ்ந்து அலைய, காலங்கடந்த காடே அரங்கமாக நின்று, அடிபெயர்த்து நடனமாடுதல் என்?
91 மழைக்கண்மட வாளையோர் பாகம்வைத் தீர்வளர் புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர் முழைக்கொள் அரவோ டென்பணி கலனா முழுநீறு மெய்பூசுதல் என்னைகொலோ கழைக்கொள் கரும்புங் கதலிக் கனியுங் கமுகின் பழுக்காயுங் கவர்ந்துகொண்டிட் டழைக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.009.9
'கழை' என்னும் தன்மையைக்கொண்ட கரும்புகளையும், வாழைப்பழங்களையும், கமுக மரத்தின் முற்றிய காய்களையும் வாரிக்கொண்டுவந்து கூப்பிடுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற புனிதரே, நீர், மேகம் போலும் பெரிய கண்களையுடைய உமாதேவியை ஒரு பங்கில் வைத்தீர்; அதன் மேலும், வளர்கின்ற புல்லிய சடையின்மேல், 'கங்கை' என்பவளை விரும்பி வைத்தீர். அங்ஙனமாக, செல்வ வாழ்க்கை வாழ நினையாது, புற்றினை இடமாகக் கொள்ளும் பாம்பும், எலும்புமே அணிகலங்களாக, மேனி முழுவதும் சாம்பலைப் பூசி வாழ்தல் என்னோ?
92 கடிக்கும் அரவால் மலையால் அமரர் கடலைக் கடையவெழு காளகூடம் ஒடிக்கும் உலகங் களைஎன் றதனை உமக்கேயமு தாகவுண் டீருமிழீர் இடிக்கும் மழைவீழ்த் திழித்திட் டருவி இருபாலுமோடி இரைக்குந் திரைக்கை அடிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே. 7.009.10
இடிக்கின்ற மேகத்தைக் கீழே தள்ளி இழுத்துக் கொண்டு, முன்பு அருவியாய் ஓடி, பின்பு, ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் இருபக்கத்தும் உள்ள கரைகளை மோதும் வெள்ளமாய்ப் பெருகி ஒலிக்கின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே, நீர், கடிக்கும் பாம்பாகிய கயிற்றைக் கொண்டு, மலையாகிய மத்தினால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய பெருநஞ்சு எல்லாவுலகத்தையும் அழித்துவிடும் என்று இரங்கி, அதனையே உமக்கு உரிய பங்காகிய அமுதமாக ஏற்று உண்டீர்; பின்பு இதுகாறும் அதனை உமிழவும் இல்லை.
93 காரூர்மழை பெய்து பொழிஅருவிக் கழையோடகில் உந்திட் டிருகரையும் போரூர்புனல் சேர்அரி சிற்றென்கரைப் பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந் தழகால்உரைப் பார்களுங் கேட்பவரும் சீரூர்தரு தேவர்க ணங்களொடும் இணங்கிச்சிவ லோகமே தெய்துவரே. 7.009.11
மேகங்கள் மிக்க மழையைப் பெய்ய, அதனாலே வீழ்ந்த அருவியிடத்துள்ள மூங்கிலையும், அகிற்கட்டையையும் தள்ளிக்கொண்டு, இருகரைகளின்மீதும் போரினை மேற்கொள்ளும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, சோலைகள் நிறைந்த திருப்புத்தூர்ப் புனிதரை, நம்பியாரூரனது அரிய தமிழ்ப்பாடல்கள் பத்தினாலும், மொழிக்குற்றம், இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும், அத்துதியைக் கேட்பவர்களும், சிறப்பு மிக்க தேவர் கூட்டத்துட்கூடி வாழ்ந்து, பின் சிவலோகத்தை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 23 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|