|
||||||||
ஆறாம் திருமுறை-15 |
||||||||
6.015.திருக்கருகாவூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2233 2244.குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்;
கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்;
பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்;
பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்;
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்;
உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்;
கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும்
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
6.015.1
இடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இறைவர் சூலப்படை உடையவராய்,ஒளி வீசும் பிறையை முடிமாலையாக அணிந்தவராய்,விரும்பித் திருமாலை ஒருபாகமாகக் கொண்டவராய்,மந்திரமும் அம்மந்திரங்களைப் பயன்கொள்ளும் செயல்களுமாக அமைந்தவராய், கடலில் தோன்றிய விடத்தை உண்டவராய்,ஊழ்வினையை நுகரும்போதே உடன் ஈட்டிக் கொள்ளப்படும் மேல் வினைகளை நீக்கும் வேறுபட்ட இயல்பினராய்,நறுமணம்
2234 வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம்
பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம்
தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்
தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
6.015.2
வித்து, முளை, வேர் எனக் கருகாவூர் எந்தை வேண்டி நின்ற உருவத்தன். தன்னை விரும்பும் பக்தியை உடைய அடியார்க்குத் தோழன். செந்நிறமேயன்றிப் பால் நிறமும் உடையவன். தான் மேம்பட்ட ஒளி உருவனாயிருந்தும் தன்னைத் தேவர் குழாம் சுற்றி நின்று துதிக்கவும் அதற்குக் காட்சி வழங்காது அடியேனுடைய உள்ளத்திலே மறைந்திருந்து அடியேன் முன் அறியாதனவற்றை எல்லாம் தெரிவிக்கும் கண்ணாக உள்ளவன்.
2235 பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம்
ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
6.015.3
பூவும், பூவின் நிறமும் அதன் மணமுமாய் நிலைபெற்றிருக்கும் தலைவனாகிய கருகாவூர் எந்தைதிரண்ட வளைகளை அணிந்த பார்வதிபாகன். ஒவ்வொரு சமயத்தாரும் வழிபடும் தேவராக உள்ளவன்.தன்னை வழிபடாதவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் மனக்கவலைகளையும் போக்காதவனாய் அடியேன் நெஞ்சில் இருந்து காலனால் அச்சம் நிகழாவண்ணம் காத்து வழிகாட்டும் கண்ணாக உள்ளான்.
2236 இரவனாம் எல்லி நடமாடியாம்
எண்திசைக்குந் தேவனாம் என்னு ளானாம்
அரவனாம் அல்ல லறுப்பானுமாம்
ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறும்
குரவனாங் கூற்றை யுதைத்தான் தானாங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும்
கரவனாங் காட்சிக் கௌயா னுமாங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
6.015.4
கருகாவூர் எந்தை, இராப்பொழுதாகவும், இரவில் கூத்தாடுபவனாகவும் எண்திசைக்கும் உரிய தேவனாகவும், என் உள்ளத்தில் உறைபவனாகவும், பாம்பினை அணிபவனாகவும் அடியார்களுடைய துன்பங்களைத் துடைப்பவனாகவும், ஆகாயத்தையே வடிவாக உடையவனாகவும், இடபத்தை இவரும் தலைவனாகவும், கூற்றினை உதைத்தவனாகவும் தன் புகழ் கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர்களுக்கு என்றும் மறை பொருளாகவும், அடியார்களின் மனக்கண்களுக்கு எளியவனாகவும் அவர்களுக்குக் கண்ணாகவும் உள்ளான்.
2237 படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாமை நின்றான் தானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாக
மசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
6.015.5
உலகைப்படைத்த பிரமனும், அதனை ஊழி வெள்ளத்திலிருந்து பெயர்த்தெடுத்த திருமாலும் தன் தன்மையை அறிய இயலாதவாறு தீப் பிழம்பாய் நின்றகருகாவூர் எந்தை, பகைவருடைய மும் மதில்களையும் ஒருசேரத் தீயினால் அழித்தவன். சூலத்தையும் மழுவையும் ஏந்திப் பாம்பினை இடையில் இறுகக் கட்டிக்காளை மீது இவர்ந்தவன். வஞ்சனை உடையவர் நெஞ்சத்தைக் கலக்கித் தன்னை அறியும் அடியார் நெஞ்சில் வழிகாட்டுவோனாய் இருப்பவன்.
2238 மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
மூவாத மேனிமுக் கண்ணி னானாம்
சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்
செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாம்
காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
6.015.6
முதற்பொருளாய் வடிவு கொள்வோனாய், எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டவனாய், என்றும் மூப்படையாத மேனியனாய், முக்கண்ணினனாய், நற்பண்புகளுக்கு இருப்பிடமாய்த் தன்னை அடைந்தவர்களின் துயர்தீர்க்கும் செல்வனாய், கருகாவூர் எந்தை, சூரியனுக்கும் ஒளி வழங்குபவனாய்த்தன் திருமேனியில் ஒருபாகத்தைத் திருமாலுக்கும் மற்றொருபாகத்தை உமாதேவிக்கும் வழங்குபவனாய், மன்றங்களில் கூத்தாடுபவனாய், தேவர்களுக்கு எல்லாம் இறுதிக்காலத்தை வரையறுக்கும் கூற்றுவனையும் கோபித்தவனாய், அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன்.
2239 அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
6.015.7
கருகாவூர் எந்தை பாம்பை இடையில் அணிந்து விடத்தை உண்டு (ஆல நிழலில்தங்கி) ஆதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டு, ஆகாய கங்கை அலைவீசும் தன் அழகிய சடையில் பிறைசூடி, தீவினையைப் போக்கி என் உள்ளத்திலுள்ளான். அவனே புகழ்சேரும் இவ்வுலகத்து மக்கள் உள்ளத்தில் இருப்பவனாய், பார்வதிபாகனாய், உலகுக்கு எல்லையாய்க் கரையமைந்த கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு, அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன்.
2240 துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்
சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்
படிதானாம் பாவ மறுப்பா னாகும்
பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாம்
கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும்
கடியானாங் காட்சிக் கரியா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
6.015.8
கருகாவூர் எந்தை உடுக்கையாகவும் உடுக்கையின் முழக்கமாகிய ஒலிகளாகவும், அவ்வொலியிலிருந்து தோன்றிய மொழிகளைப் பேசுவாருடைய சொற்களின் வாய்மை பொய்ம்மைகளைச் சோதிப்பவனாகவும், நன்னெறியாகவும், பாவத்தைப் போக்குபவனாகவும், வெள்ளிய நீறணிந்த பரஞ்சோதியாகவும் கொடிய கூற்றுவனை உதைத்தவனாகவும்,உண்மை கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர் கிட்டுதற்கு அரியனாய், அவர்களை ஒறுப்பவனாகவும், அடியார்க்கு வழிகாட்டும் கண்ணாகவும் உள்ளான்.
2241 விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
6.015.9
கருகாவூர் எந்தை செந்நிற ஒளிவீசும் சோதியனாய், தேவர்களும் அறியாத நிலையினனாய், தன்னால் கொல்லப்பட்ட யானைத் தோலை உரித்துப் போர்த்தவனாய், பலபலதாளத்திற்கு ஏற்பக் கூத்தாடுபவனாய், அட்டமூர்த்தியாய், எண்தோளனாய், என் தலையின் உச்சி மேலானாம் எம் தலைவனாய், இளைய வடிவினை உடைய மன்மதனைக் கோபித்தவனாய், அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான்.
2242 பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகி
உள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம்
அறுத்திருந்த கையானா மந்தா ரல்லி
யிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
6.015.10
தன்னை இடபமாய்த்தாங்கிய கருட வாகனனாகிய திருமாலுடைய உள்ளத்தே பொருந்தி அவன் உள்ளக் கவலையைப் போக்கிய கருகாவூர் எந்தை, தன்னைப் பகைத் தோருடைய மும்மதில்களும் ஒன்றும் எஞ்சாமல் வில்லை வளைத்துத் தீ மூட்டி அழித்தவன். தாமரையில் இருந்த பிரமனுடைய ஐந்தாந் தலையை அவன் செருக்கினை நோக்கி அறுத்த கையனாவான். நீல கண்டனாகிய அப்பெருமான் அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான்.
2243 ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
ஆகாய மந்திரமு மானா னாகும்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
6.015.11
கருகாவூர் எந்தை பகைவருடைய மும்மதில்களையும் தீ மூட்டி அழித்தவன்.தன்னை மதியாத இராவணனுடைய தலைகள் பத்தினையும் நசுக்கி அவன் இசையைக் கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன். பொறிவாயில் ஐந்தவித்த அப்பெருமான், பரமாகாயத்திலுள்ள வீட்டுலகை இருப்பிடமாக உடையவன். கூற்றுவனைக் கீழே விழுமாறு தன் காலால் கோபித்து உதைத்தவன். அவன் அடியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான்.
திருச்சிற்றம்பலம்
6.015.திருக்கருகாவூர் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். தேவியார் - கரும்பனையாளம்மை.
2233 2244.குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்; கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்; பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்; பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்; ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்; உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்; கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. 6.015.1
இடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இறைவர் சூலப்படை உடையவராய்,ஒளி வீசும் பிறையை முடிமாலையாக அணிந்தவராய்,விரும்பித் திருமாலை ஒருபாகமாகக் கொண்டவராய்,மந்திரமும் அம்மந்திரங்களைப் பயன்கொள்ளும் செயல்களுமாக அமைந்தவராய், கடலில் தோன்றிய விடத்தை உண்டவராய்,ஊழ்வினையை நுகரும்போதே உடன் ஈட்டிக் கொள்ளப்படும் மேல் வினைகளை நீக்கும் வேறுபட்ட இயல்பினராய்,நறுமணம்
2234 வித்தாம் முளையாகும் வேரே தானாம் வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம் பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம் தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத் தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.015.2
வித்து, முளை, வேர் எனக் கருகாவூர் எந்தை வேண்டி நின்ற உருவத்தன். தன்னை விரும்பும் பக்தியை உடைய அடியார்க்குத் தோழன். செந்நிறமேயன்றிப் பால் நிறமும் உடையவன். தான் மேம்பட்ட ஒளி உருவனாயிருந்தும் தன்னைத் தேவர் குழாம் சுற்றி நின்று துதிக்கவும் அதற்குக் காட்சி வழங்காது அடியேனுடைய உள்ளத்திலே மறைந்திருந்து அடியேன் முன் அறியாதனவற்றை எல்லாம் தெரிவிக்கும் கண்ணாக உள்ளவன்.
2235 பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங் கொண்ட சமயத்தார் தேவ னாகி ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று காத்தானாங் காலன் அடையா வண்ணங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.015.3
பூவும், பூவின் நிறமும் அதன் மணமுமாய் நிலைபெற்றிருக்கும் தலைவனாகிய கருகாவூர் எந்தைதிரண்ட வளைகளை அணிந்த பார்வதிபாகன். ஒவ்வொரு சமயத்தாரும் வழிபடும் தேவராக உள்ளவன்.தன்னை வழிபடாதவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் மனக்கவலைகளையும் போக்காதவனாய் அடியேன் நெஞ்சில் இருந்து காலனால் அச்சம் நிகழாவண்ணம் காத்து வழிகாட்டும் கண்ணாக உள்ளான்.
2236 இரவனாம் எல்லி நடமாடியாம் எண்திசைக்குந் தேவனாம் என்னு ளானாம் அரவனாம் அல்ல லறுப்பானுமாம் ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறும் குரவனாங் கூற்றை யுதைத்தான் தானாங் கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும் கரவனாங் காட்சிக் கௌயா னுமாங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.015.4
கருகாவூர் எந்தை, இராப்பொழுதாகவும், இரவில் கூத்தாடுபவனாகவும் எண்திசைக்கும் உரிய தேவனாகவும், என் உள்ளத்தில் உறைபவனாகவும், பாம்பினை அணிபவனாகவும் அடியார்களுடைய துன்பங்களைத் துடைப்பவனாகவும், ஆகாயத்தையே வடிவாக உடையவனாகவும், இடபத்தை இவரும் தலைவனாகவும், கூற்றினை உதைத்தவனாகவும் தன் புகழ் கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர்களுக்கு என்றும் மறை பொருளாகவும், அடியார்களின் மனக்கண்களுக்கு எளியவனாகவும் அவர்களுக்குக் கண்ணாகவும் உள்ளான்.
2237 படைத்தானாம் பாரை யிடந்தா னாகும் பரிசொன் றறியாமை நின்றான் தானாம் உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாக மசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும் கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.015.5
உலகைப்படைத்த பிரமனும், அதனை ஊழி வெள்ளத்திலிருந்து பெயர்த்தெடுத்த திருமாலும் தன் தன்மையை அறிய இயலாதவாறு தீப் பிழம்பாய் நின்றகருகாவூர் எந்தை, பகைவருடைய மும் மதில்களையும் ஒருசேரத் தீயினால் அழித்தவன். சூலத்தையும் மழுவையும் ஏந்திப் பாம்பினை இடையில் இறுகக் கட்டிக்காளை மீது இவர்ந்தவன். வஞ்சனை உடையவர் நெஞ்சத்தைக் கலக்கித் தன்னை அறியும் அடியார் நெஞ்சில் வழிகாட்டுவோனாய் இருப்பவன்.
2238 மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம் மூவாத மேனிமுக் கண்ணி னானாம் சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ் செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம் மாலனாம் மங்கையோர் பங்க னாகும் மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாம் காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.015.6
முதற்பொருளாய் வடிவு கொள்வோனாய், எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டவனாய், என்றும் மூப்படையாத மேனியனாய், முக்கண்ணினனாய், நற்பண்புகளுக்கு இருப்பிடமாய்த் தன்னை அடைந்தவர்களின் துயர்தீர்க்கும் செல்வனாய், கருகாவூர் எந்தை, சூரியனுக்கும் ஒளி வழங்குபவனாய்த்தன் திருமேனியில் ஒருபாகத்தைத் திருமாலுக்கும் மற்றொருபாகத்தை உமாதேவிக்கும் வழங்குபவனாய், மன்றங்களில் கூத்தாடுபவனாய், தேவர்களுக்கு எல்லாம் இறுதிக்காலத்தை வரையறுக்கும் கூற்றுவனையும் கோபித்தவனாய், அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன்.
2239 அரைசே ரரவனாம் ஆலத் தானாம் ஆதிரை நாளானாம் அண்ட வானோர் திரைசேர் திருமுடித் திங்க ளானாந் தீவினை நாசனென் சிந்தை யானாம் உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம் உமையாளோர் பாகனாம் ஓத வேலிக் கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.015.7
கருகாவூர் எந்தை பாம்பை இடையில் அணிந்து விடத்தை உண்டு (ஆல நிழலில்தங்கி) ஆதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டு, ஆகாய கங்கை அலைவீசும் தன் அழகிய சடையில் பிறைசூடி, தீவினையைப் போக்கி என் உள்ளத்திலுள்ளான். அவனே புகழ்சேரும் இவ்வுலகத்து மக்கள் உள்ளத்தில் இருப்பவனாய், பார்வதிபாகனாய், உலகுக்கு எல்லையாய்க் கரையமைந்த கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு, அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன்.
2240 துடியாந் துடியின் முழக்கந் தானாஞ் சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம் படிதானாம் பாவ மறுப்பா னாகும் பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாம் கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங் கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும் கடியானாங் காட்சிக் கரியா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.015.8
கருகாவூர் எந்தை உடுக்கையாகவும் உடுக்கையின் முழக்கமாகிய ஒலிகளாகவும், அவ்வொலியிலிருந்து தோன்றிய மொழிகளைப் பேசுவாருடைய சொற்களின் வாய்மை பொய்ம்மைகளைச் சோதிப்பவனாகவும், நன்னெறியாகவும், பாவத்தைப் போக்குபவனாகவும், வெள்ளிய நீறணிந்த பரஞ்சோதியாகவும் கொடிய கூற்றுவனை உதைத்தவனாகவும்,உண்மை கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர் கிட்டுதற்கு அரியனாய், அவர்களை ஒறுப்பவனாகவும், அடியார்க்கு வழிகாட்டும் கண்ணாகவும் உள்ளான்.
2241 விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம் விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம் பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம் பலபலவும் பாணி பயின்றான் தானாம் எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம் என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம் கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.015.9
கருகாவூர் எந்தை செந்நிற ஒளிவீசும் சோதியனாய், தேவர்களும் அறியாத நிலையினனாய், தன்னால் கொல்லப்பட்ட யானைத் தோலை உரித்துப் போர்த்தவனாய், பலபலதாளத்திற்கு ஏற்பக் கூத்தாடுபவனாய், அட்டமூர்த்தியாய், எண்தோளனாய், என் தலையின் உச்சி மேலானாம் எம் தலைவனாய், இளைய வடிவினை உடைய மன்மதனைக் கோபித்தவனாய், அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான்.
2242 பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகி உள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய் செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச் சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம் அறுத்திருந்த கையானா மந்தா ரல்லி யிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக் கறுத்திருந்த கண்ட முடையான் போலுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.015.10
தன்னை இடபமாய்த்தாங்கிய கருட வாகனனாகிய திருமாலுடைய உள்ளத்தே பொருந்தி அவன் உள்ளக் கவலையைப் போக்கிய கருகாவூர் எந்தை, தன்னைப் பகைத் தோருடைய மும்மதில்களும் ஒன்றும் எஞ்சாமல் வில்லை வளைத்துத் தீ மூட்டி அழித்தவன். தாமரையில் இருந்த பிரமனுடைய ஐந்தாந் தலையை அவன் செருக்கினை நோக்கி அறுத்த கையனாவான். நீல கண்டனாகிய அப்பெருமான் அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான்.
2243 ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும் அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே ஆகாய மந்திரமு மானா னாகும் கறுத்தானாங் காலனைக் காலால் வீழக் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6.015.11
கருகாவூர் எந்தை பகைவருடைய மும்மதில்களையும் தீ மூட்டி அழித்தவன்.தன்னை மதியாத இராவணனுடைய தலைகள் பத்தினையும் நசுக்கி அவன் இசையைக் கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன். பொறிவாயில் ஐந்தவித்த அப்பெருமான், பரமாகாயத்திலுள்ள வீட்டுலகை இருப்பிடமாக உடையவன். கூற்றுவனைக் கீழே விழுமாறு தன் காலால் கோபித்து உதைத்தவன். அவன் அடியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|