LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-27

 

6.027.திருவாரூர் 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 
தேவியார் - கரும்பனையாளம்மை. 
2354 பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்
கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.
6.027.1
நிலையின்மையும் அழிதலுடைமையும் உடைய உலகப் பொருள்களாகிய பெரிய கடலிலே தடுமாறுகின்ற நல்வினை தீவினைகளாகிய இருவினைகளே! நீங்கள் எனக்கு நலம் செய்வீர் அல்லீர். இந்த நிலையின்மையை உடைய பெரிய உடலாகிய கடலைச்சிறிது, சிறிதாக அரித்துத் தின்னும் உங்களுக்குத் தின்றற்கு உரிய பொருள் எதுவும் என்னிடத்தில் இல்லை. ஏனெனில் யான் தேவர்கள் தலைவனாய், எனக்கும் தலைவனாய்க் குளிர்ந்த பெரிய ஆரூரில் உள்ள பெரியகடல் போல்வானாய்த் தன்னைத் தொடர்ந்த அடியார்களைத் தன் திருவடிப் பேரின்பத்தில் அடங்குமாறு செய்கின்ற எம்பெருமானுடைய திருவடிகளைத் தொடர்வதில் இடையீடு இல்லாமல் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். அழிந்து போகக் கூடியவர்களே! இடையில் நின்று என்னைத் தடுக்காதீர்கள்.
2355 ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமா யூழியுமா யுலகே ழாகி
ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோ
தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன்
தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.
6.027.2
ஐம்பெரும் பூதங்களே! உங்களிலே ஒருவர் விரும்பியதை மற்றவர் விரும்பாது இவ்வுலகம் முழுதையும் உம்மால் தாங்கப்படுவதாக்கி உம் வசப்படுத்துவதில் நீங்கள் ஆற்றலுடையீர். உங்களுக்கு என்பால் நுகரத்தக்க இன்பம் தரும் பொருள் ஒன்றுமில்லை. ஏனெனில் யான் தேவர்களும் தேவருலகமும் ஊழிகளும் ஏழு உலகங்களுமாகி, வள்ளலாய்த் தேவர் தலைவனாய், ஒளிபொருந்திய ஆரூரில் குளிர்ந்த அமுதமாக இருக்கும் அரனை இடையீடு இன்றித் தொடர்ந்து எப்பொழுதும் காண்பேன் ஆவேன். உங்களுடைய இடையூறுகளில் என்னை அகப்படுவேனாய்க் கருதிச் செருக்குக் கொள்ளாதீர்கள்.
2356 சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்
செழுங்கண்ணால் நோக்குமிது வூக்க மன்று
பல்லுருவில் தொழில்பூண்ட பஞ்ச பூதப்
பளகீரும் வசமன்றே பாரே லெல்லாம்
சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்
தூநயனம் மூன்றாகி ஆண்ட ஆரூர்
நல்லுருவிற் சிவனடியே யடைவேன் நும்மால்
நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.
6.027.3
பல வடிவங்களில் திரிந்து வேறுபடுகின்ற ஐம்பூதங்களாகிய பொய்ம்மையுடையீர்! அழிகின்ற சில உருவங்களைக் குறிக்கோளாகக் கொண்டு நாடோறும் அவற்றை விரும்பிப் புறத்தில் அழகாக உள்ள கண்களால் பார்க்கும் இச்செயல் நல்லொழுக்கம் ஆகாது. இவ்வுலகம் முழுதும் உம் வசப்பட்டிருப்பது போதாதா?யானோ ஐம்புலங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகின்ற உருவத்தினை உடைய ஞாயிறு திங்கள் தீ என்ற முச்சுடர்களாய், அயன் அரி அரன் என்ற உருவம் மூன்றாய், அச்சுடர்களாகிய கண்கள் மூன்றாய்க் கொண்டு, இவ்வுலகத்தை ஆளும் ஆரூரில் உள்ள நல்ல செந்நிறத்தவனாகிய சிவனடிகளையே அடைவேனாக உள்ளேன். உம்மால் தேய்க்கப்படுவேன் அல்லேன். உமக்கு நான் இணங்காததைப் பொறுத்துக்கொண்டு நுமக்கு வயப்படும் வேற்றுப் பொருள்களை நோக்கிச் செல்லுங்கள்.
2357 உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத்
தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.
6.027.4
விரும்பி நினைக்கப்படும் உடலிலே, வாய் கண் உடல் செவி மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாக நின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐவீர்களே! உங்களுடைய மயக்கம் பொருந்திய உருவங்களின் இயற்கைகளால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா? யானோ தேவர்களுக்கு அழகிய உருவினைத் தந்தவனாய், அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வானாய், இவ்வுலகுக்கு எல்லாம் அழகாகும் சிவக்கொழுந்தாய், என் சிந்தையுள்ளே புகுந்து அதன்கண் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன். ஆதலால் என்னை உம் அளவில் படுத்தற்குச் செருக்கிக்கொண்டு என்பக்கல் வாராதீர்கள்.
2358 துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பனையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யென்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.
6.027.5
நுகர்பொருள்களிடத்துப் பண்டுதொட்டுப் பற்றுக்கொள்ளுதல் நீங்காமைக்கு ஏதுவாகிய வெற்றி மிக்க பிறர் மயங்குதற்குக் காரணமான வஞ்சனைகளே! நீங்கள் செயற்கை அழகைப் பரப்பி நீங்கள் கருதிய செயலைச் சுகமாக முடிப்பதற்கு இவ்வுலகம் முழுதும் உழலும் செயல் உங்களுக்கு அரிதன்று. ஆனால் அடியேன் என்சேமநிதியாய் அழகிய மதில்களை உடைய ஆரூரில் மாணிக்கமாய், வைகல் என்ற தலத்தில் மணவாளனாய், எனக்கும் தேவர்களுக்கும் பெருமானாய் உள்ளவனை முறைப்படி அடைபவன். ஆதலின் உங்களால் நான் மற்றவர்போல ஆட்டுவிக்கப்பட மாட்டேன். ஓடிவந்து என்னை வருத்த முயலாதீர்கள்.
2359 பொங்குமத மானே ஆர்வச் செற்றக்
குரோதமே யுலோபமே பொறையே நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தி னெல்லை யெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்
அங்கமலத் தயனொடுமா லாகி மற்று
மதற்கப்பா லொன்றாகி யறிய வொண்ணாச்
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை யாரூர்ச்
செல்வனைச்சேர் வேன்நும்மாற் செலுத்து ணேனே.
6.027.6
பெருமிதம் கொண்ட செருக்கே! மாண்பு இழந்த மானமே! காமமே! பகையே! கோபமே! கஞ்சத்தனமே! துன்பச் சுமைகளே! நீங்கள் உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட இப்பேருலகத்தின் எல்லைகாறும் நீங்கள் கருதிய செயலை நிறைவேற்றுவதற்குச் சுற்றித்திரிவது உங்களுக்கு அரிது அன்று. ஆனால் யானோ செந்தாமரையில் தங்கிய பிரமனும் திருமாலும் ஆகி அவர்களையும் கடந்த ஒன்றே ஆகிய பரம்பொருளாகி, எவராலும் தம் முயற்சியால் அறிய முடியாத ஒப்பற்ற செம்பொற் குன்று போன்ற சிவபெருமானாகிய ஆரூர்ச் செல்வனைச் சேர்கின்றவன். உம்மால் செலுத்தப்படுவேன் அல்லேன்.
2360 இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்
குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்
குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
அமரர்கள்தம் பெருமானை யரனை ஆரூர்
உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா
லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.
6.027.7
துன்பங்களே! பாவங்களே! மிக்க துயரம் தரும் வேட்கையே! வெறுப்பே! எல்லீரும் உலகுகளைச் சுற்றிச் சுழன்று அவற்றை வசப்படுத்த அவை தடுமாறி உங்கள் இட்ட வழக்காக இருத்தல் போதாதா? யானோ தேவர்களின் பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துத் தேவர்கள் பெருமானாய்த் தீங்குகளைப் போக்குபவனாயுள்ள ஆரூர்ப் பெருமானை விரையச் சென்று அடையப் போகிறேன். உம்மால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன். என்பக்கல் ஓடி வந்து என்னைத் துன்புறுத்திநும் வசப்படுத்த முயலாதீர்கள்.
2361 விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரைந்தோடி மாநிலத்தை யரித்துத் தின்பீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை யமுது செய்த
கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்நும் பண்பிற்
பரிந்தோடி யோட்டந்து பகட்டன் மின்னே.
6.027.8
விரைந்து வந்து ஏவல் கொள்ளும் வறுமையே! செல்வமே! கொடிய கோபமே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள் வரிசையாகச் சென்று இவ்வுலகத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து உண்ணுவீர்கள். உங்களுக்கு நுகரத்தக்க இன்பம் கிட்டவில்லையா? யானோ தேவர்கள் ஓலமிட்டு ஓடுமாறு வெளிப்பட்ட விடத்தை உண்ட கற்பகமாய், உயிருக்கு மேற்பட்ட பொருளாய்த் திருவாரூரில் உள்ள மேம்பட்ட சோதி வடிவினனைக் காண்கின்றவன். உங்களுடைய பண்புகளில் அகப்படமாட்டேன். விரைந்து ஓடிவந்து என்னை அச்சுறுத்த முயலாதீர்கள்.
2362 மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச
முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி
நாள்வாயு நும்முடைய மம்ம ராணை
நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர்
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
நெடுந்தூணைப் பாதாளக் கருவை யாரூர்
ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா
லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.
6.027.9
தத்தம் தொழில்களிலேயே ஈடுபட்ட ஐம்பொறிகளாகிய காக்கைகளே! இவ்வுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஒவ்வொரு நாளும் மயக்கமாகிய ஆட்சியை நடத்துகின்ற உமக்கு இன்னும் மனநிறைவு ஏற்படவில்லையா? யானோ தேவருலகின் உச்சியைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாய்ப் பாதாளத்துக்கும் அடிநிலையாய் ஆரூரை ஆளும் பெருமானை விரைந்து சென்று அடைவேன். உங்களால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன். ஓடி வந்து என்னை வருத்த முயலாதீர்கள்.
2363 சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித்
துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்
செருக்கிமிகை செலுத்தியும செய்கை வைகல்
செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகந்
தளரவடி யெடுத்தவன்றன் பாடல் கேட்டு
இரக்கமெழுந் தருளியஎம் பெருமான் பாதத்
திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.
6.027.10
சுருக்கமே! பெருக்கமே! காலநிலையே! செல்வமே! வறுமையே! இவ்வுலகைச் சுற்றிப் பெருமிதம் கொண்டு உங்கள் ஆட்சியைச் செலுத்தி நாடோறும் உங்கள் செயலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் செயல் போதாதோ? யானோ மிகவும் செருக்குற்றுக் கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் தளருமாறு அவனை அழுத்திப்பின் அவன் பாடலைக் கேட்டு இரங்கி அவனுக்கு அருளிய எம்பெருமானுடைய திருவடிகளிலே இடையீடு இன்றிச் சேர்ந்துள்ளேன். அழிந்து போகக் கூடிய நீங்கள் என்னைத் துன்புறுத்த முயலாதீர்கள்.
திருச்சிற்றம்பலம்

 

6.027.திருவாரூர் 

திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 

தேவியார் - கரும்பனையாளம்மை. 

 

 

2354 பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற

புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்

இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்

கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்

தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்

தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்

எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்

இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

6.027.1

 

  நிலையின்மையும் அழிதலுடைமையும் உடைய உலகப் பொருள்களாகிய பெரிய கடலிலே தடுமாறுகின்ற நல்வினை தீவினைகளாகிய இருவினைகளே! நீங்கள் எனக்கு நலம் செய்வீர் அல்லீர். இந்த நிலையின்மையை உடைய பெரிய உடலாகிய கடலைச்சிறிது, சிறிதாக அரித்துத் தின்னும் உங்களுக்குத் தின்றற்கு உரிய பொருள் எதுவும் என்னிடத்தில் இல்லை. ஏனெனில் யான் தேவர்கள் தலைவனாய், எனக்கும் தலைவனாய்க் குளிர்ந்த பெரிய ஆரூரில் உள்ள பெரியகடல் போல்வானாய்த் தன்னைத் தொடர்ந்த அடியார்களைத் தன் திருவடிப் பேரின்பத்தில் அடங்குமாறு செய்கின்ற எம்பெருமானுடைய திருவடிகளைத் தொடர்வதில் இடையீடு இல்லாமல் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். அழிந்து போகக் கூடியவர்களே! இடையில் நின்று என்னைத் தடுக்காதீர்கள்.

 

 

2355 ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்

றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்

உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க்

கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்

உம்பருமா யூழியுமா யுலகே ழாகி

ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோ

தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன்

தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.

6.027.2

 

  ஐம்பெரும் பூதங்களே! உங்களிலே ஒருவர் விரும்பியதை மற்றவர் விரும்பாது இவ்வுலகம் முழுதையும் உம்மால் தாங்கப்படுவதாக்கி உம் வசப்படுத்துவதில் நீங்கள் ஆற்றலுடையீர். உங்களுக்கு என்பால் நுகரத்தக்க இன்பம் தரும் பொருள் ஒன்றுமில்லை. ஏனெனில் யான் தேவர்களும் தேவருலகமும் ஊழிகளும் ஏழு உலகங்களுமாகி, வள்ளலாய்த் தேவர் தலைவனாய், ஒளிபொருந்திய ஆரூரில் குளிர்ந்த அமுதமாக இருக்கும் அரனை இடையீடு இன்றித் தொடர்ந்து எப்பொழுதும் காண்பேன் ஆவேன். உங்களுடைய இடையூறுகளில் என்னை அகப்படுவேனாய்க் கருதிச் செருக்குக் கொள்ளாதீர்கள்.

 

 

2356 சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்

செழுங்கண்ணால் நோக்குமிது வூக்க மன்று

பல்லுருவில் தொழில்பூண்ட பஞ்ச பூதப்

பளகீரும் வசமன்றே பாரே லெல்லாம்

சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்

தூநயனம் மூன்றாகி ஆண்ட ஆரூர்

நல்லுருவிற் சிவனடியே யடைவேன் நும்மால்

நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.

6.027.3

 

  பல வடிவங்களில் திரிந்து வேறுபடுகின்ற ஐம்பூதங்களாகிய பொய்ம்மையுடையீர்! அழிகின்ற சில உருவங்களைக் குறிக்கோளாகக் கொண்டு நாடோறும் அவற்றை விரும்பிப் புறத்தில் அழகாக உள்ள கண்களால் பார்க்கும் இச்செயல் நல்லொழுக்கம் ஆகாது. இவ்வுலகம் முழுதும் உம் வசப்பட்டிருப்பது போதாதா?யானோ ஐம்புலங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகின்ற உருவத்தினை உடைய ஞாயிறு திங்கள் தீ என்ற முச்சுடர்களாய், அயன் அரி அரன் என்ற உருவம் மூன்றாய், அச்சுடர்களாகிய கண்கள் மூன்றாய்க் கொண்டு, இவ்வுலகத்தை ஆளும் ஆரூரில் உள்ள நல்ல செந்நிறத்தவனாகிய சிவனடிகளையே அடைவேனாக உள்ளேன். உம்மால் தேய்க்கப்படுவேன் அல்லேன். உமக்கு நான் இணங்காததைப் பொறுத்துக்கொண்டு நுமக்கு வயப்படும் வேற்றுப் பொருள்களை நோக்கிச் செல்லுங்கள்.

 

 

2357 உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்

துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்

மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ

வையகமே போதாதே யானேல் வானோர்

பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்

புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை

தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத்

தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.

6.027.4

 

  விரும்பி நினைக்கப்படும் உடலிலே, வாய் கண் உடல் செவி மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாக நின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐவீர்களே! உங்களுடைய மயக்கம் பொருந்திய உருவங்களின் இயற்கைகளால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா? யானோ தேவர்களுக்கு அழகிய உருவினைத் தந்தவனாய், அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வானாய், இவ்வுலகுக்கு எல்லாம் அழகாகும் சிவக்கொழுந்தாய், என் சிந்தையுள்ளே புகுந்து அதன்கண் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன். ஆதலால் என்னை உம் அளவில் படுத்தற்குச் செருக்கிக்கொண்டு என்பக்கல் வாராதீர்கள்.

 

 

2358 துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க

சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்

ஒப்பனையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்

உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யென்றன்

வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்

மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்

அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்

ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

6.027.5

 

  நுகர்பொருள்களிடத்துப் பண்டுதொட்டுப் பற்றுக்கொள்ளுதல் நீங்காமைக்கு ஏதுவாகிய வெற்றி மிக்க பிறர் மயங்குதற்குக் காரணமான வஞ்சனைகளே! நீங்கள் செயற்கை அழகைப் பரப்பி நீங்கள் கருதிய செயலைச் சுகமாக முடிப்பதற்கு இவ்வுலகம் முழுதும் உழலும் செயல் உங்களுக்கு அரிதன்று. ஆனால் அடியேன் என்சேமநிதியாய் அழகிய மதில்களை உடைய ஆரூரில் மாணிக்கமாய், வைகல் என்ற தலத்தில் மணவாளனாய், எனக்கும் தேவர்களுக்கும் பெருமானாய் உள்ளவனை முறைப்படி அடைபவன். ஆதலின் உங்களால் நான் மற்றவர்போல ஆட்டுவிக்கப்பட மாட்டேன். ஓடிவந்து என்னை வருத்த முயலாதீர்கள்.

 

 

2359 பொங்குமத மானே ஆர்வச் செற்றக்

குரோதமே யுலோபமே பொறையே நீங்கள்

உங்கள்பெரு மாநிலத்தி னெல்லை யெல்லாம்

உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்

அங்கமலத் தயனொடுமா லாகி மற்று

மதற்கப்பா லொன்றாகி யறிய வொண்ணாச்

செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை யாரூர்ச்

செல்வனைச்சேர் வேன்நும்மாற் செலுத்து ணேனே.

6.027.6

 

  பெருமிதம் கொண்ட செருக்கே! மாண்பு இழந்த மானமே! காமமே! பகையே! கோபமே! கஞ்சத்தனமே! துன்பச் சுமைகளே! நீங்கள் உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட இப்பேருலகத்தின் எல்லைகாறும் நீங்கள் கருதிய செயலை நிறைவேற்றுவதற்குச் சுற்றித்திரிவது உங்களுக்கு அரிது அன்று. ஆனால் யானோ செந்தாமரையில் தங்கிய பிரமனும் திருமாலும் ஆகி அவர்களையும் கடந்த ஒன்றே ஆகிய பரம்பொருளாகி, எவராலும் தம் முயற்சியால் அறிய முடியாத ஒப்பற்ற செம்பொற் குன்று போன்ற சிவபெருமானாகிய ஆரூர்ச் செல்வனைச் சேர்கின்றவன். உம்மால் செலுத்தப்படுவேன் அல்லேன்.

 

 

2360 இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை

வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்

குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்

குறிநின்ற தமையாதே யானேல் வானோர்

அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை

அமரர்கள்தம் பெருமானை யரனை ஆரூர்

உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா

லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

6.027.7

 

  துன்பங்களே! பாவங்களே! மிக்க துயரம் தரும் வேட்கையே! வெறுப்பே! எல்லீரும் உலகுகளைச் சுற்றிச் சுழன்று அவற்றை வசப்படுத்த அவை தடுமாறி உங்கள் இட்ட வழக்காக இருத்தல் போதாதா? யானோ தேவர்களின் பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துத் தேவர்கள் பெருமானாய்த் தீங்குகளைப் போக்குபவனாயுள்ள ஆரூர்ப் பெருமானை விரையச் சென்று அடையப் போகிறேன். உம்மால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன். என்பக்கல் ஓடி வந்து என்னைத் துன்புறுத்திநும் வசப்படுத்த முயலாதீர்கள்.

 

 

2361 விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா

வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்

நிரைந்தோடி மாநிலத்தை யரித்துத் தின்பீர்க்

கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்

கரைந்தோட வருநஞ்சை யமுது செய்த

கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில்

பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்நும் பண்பிற்

பரிந்தோடி யோட்டந்து பகட்டன் மின்னே.

6.027.8

 

  விரைந்து வந்து ஏவல் கொள்ளும் வறுமையே! செல்வமே! கொடிய கோபமே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள் வரிசையாகச் சென்று இவ்வுலகத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து உண்ணுவீர்கள். உங்களுக்கு நுகரத்தக்க இன்பம் கிட்டவில்லையா? யானோ தேவர்கள் ஓலமிட்டு ஓடுமாறு வெளிப்பட்ட விடத்தை உண்ட கற்பகமாய், உயிருக்கு மேற்பட்ட பொருளாய்த் திருவாரூரில் உள்ள மேம்பட்ட சோதி வடிவினனைக் காண்கின்றவன். உங்களுடைய பண்புகளில் அகப்படமாட்டேன். விரைந்து ஓடிவந்து என்னை அச்சுறுத்த முயலாதீர்கள்.

 

 

2362 மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச

முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி

நாள்வாயு நும்முடைய மம்ம ராணை

நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர்

நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற

நெடுந்தூணைப் பாதாளக் கருவை யாரூர்

ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா

லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே.

6.027.9

 

  தத்தம் தொழில்களிலேயே ஈடுபட்ட ஐம்பொறிகளாகிய காக்கைகளே! இவ்வுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஒவ்வொரு நாளும் மயக்கமாகிய ஆட்சியை நடத்துகின்ற உமக்கு இன்னும் மனநிறைவு ஏற்படவில்லையா? யானோ தேவருலகின் உச்சியைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாய்ப் பாதாளத்துக்கும் அடிநிலையாய் ஆரூரை ஆளும் பெருமானை விரைந்து சென்று அடைவேன். உங்களால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன். ஓடி வந்து என்னை வருத்த முயலாதீர்கள்.

 

 

2363 சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித்

துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்

செருக்கிமிகை செலுத்தியும செய்கை வைகல்

செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க

தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகந்

தளரவடி யெடுத்தவன்றன் பாடல் கேட்டு

இரக்கமெழுந் தருளியஎம் பெருமான் பாதத்

திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

6.027.10

 

  சுருக்கமே! பெருக்கமே! காலநிலையே! செல்வமே! வறுமையே! இவ்வுலகைச் சுற்றிப் பெருமிதம் கொண்டு உங்கள் ஆட்சியைச் செலுத்தி நாடோறும் உங்கள் செயலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் செயல் போதாதோ? யானோ மிகவும் செருக்குற்றுக் கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் தளருமாறு அவனை அழுத்திப்பின் அவன் பாடலைக் கேட்டு இரங்கி அவனுக்கு அருளிய எம்பெருமானுடைய திருவடிகளிலே இடையீடு இன்றிச் சேர்ந்துள்ளேன். அழிந்து போகக் கூடிய நீங்கள் என்னைத் துன்புறுத்த முயலாதீர்கள்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 21 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.