LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-2

 

6.002.கோயில் 
புக்கதிருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர். 
தேவியார் - சிவகாமியம்மை. 
2096 மங்குல் மதிதவழும் மாட வீதி
மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்கு மிடமறியார் சால நாளார்
தரும புரத்துள்ளார் தக்க ளூரார்
பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.002.1
பொலிவு தரும் வெண்ணீறு அணிந்து, பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வர, நம்பெருமானார் வானத்தில் உள்ள சந்திரன் தவழ்ந்து செல்லும் உயர்ச்சியை உடைய பெருந்தெருக்களை உடைய மயிலாப்பூர், மருகல்,கொங்குநாட்டுக் கொடுமுடி, குற்றாலம், குடமூக்கு, கொள்ளம்பூதூர், தருமபுரம்,தக்களூர் என்ற திருத்தலங்களில் பல நாள் தங்கி, தாம் உறுதியாகத் தங்கும் இடமாகப் பிறவற்றை அறியாராய், தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கி விட்டார்.
2097 நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்
நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப்
பாகப் பொழுதெலாம் பாசூர்த் தங்கிப்
பரிதி நியமத்தார் பன்னி ருநாள்
வேதமும் வேள்விப் புகையும் ஓவா
விரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்
போகமும் பொய்யாப் பொருளு மானார்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
6.002.2
ஐம்புல இன்பப் பொருள்களும் மெய்ப்பொருளும் ஆகிய, பாம்பினை இடையிலே கட்டிய, நம்மால் விரும்பப்படும் இறைவர் நனிபள்ளி, நல்லூர் இவற்றில் தங்கி ஓர் இராப்பொழுது முழுதும் பாசூரில் தங்கிப் பன்னிருநாள் பரிதிநியமத்திலும் ஏழு நாள் வேதமும் வேள்விப் புகையும் நீங்காத நீர்வளம் மிக்க திருவீழிமிழலையிலும் உகந்திருந்து, இந்நாளில் தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கிவிட்டார்.
2098 துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலும்
தூமதியும் பாம்பு முடையார் போலும்
மறங்காட்டி மும்மதிலும் எய்தார் போலும்
மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும்
அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
அறமருளிச் செய்த அரனா ரிந்நாள்
புறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
6.002.3
உலகவருக்கு ஒழுக்கத்தை அறிவித்து, ஒரு காலத்தில் சனகர் முதலிய அந்தணர் நால்வருக்கு வேதத்தின் விழுமிய பொருளை அருளிச்செய்த சிவபெருமான் நிலையில்லாப் பொருள்களில் பற்றறுத்தலாகிய ஞானத்தை அறிவித்து, மெய்ந்நூற் பொருள்கள் அனைத்தையும் அருளினார். களங்கமற்ற பிறைமதியையும் பாம்பினையும் அணிகலனாக உடையார், தம்வீரத்தை வெளிப்படுத்தி மூன்று மதில்களையும் அம்பு எய்து அழித்தார்.மந்திரங்களும் அவற்றை முறையாகப் பயன்படுத்தும் செயல்களும் தாமேயாக உள்ளார்.அப்பெருமான் இந்நாள் தாமே உகந்து தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.
2099 வாரேறு வனமுலையாள் பாக மாக
மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்
திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த
கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
போரேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
6.002.4
கச்சணிந்த அழகிய திருத்தனங்களை உடைய பார்வதி தம் உடம்பில் ஒரு பகுதியாக அமைய, மழுப்படையைக் கையில் தாங்கிச் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தி, விடக்கறை தங்கிய கழுத்தினராய், மன்மதனை வெகுண்ட கண் விளங்கும் நெற்றியினராய்க் கடலில் தோன்றிய விடத்தைத்தாம் உண்டு, உலகைப் பாதுகாத்த பெருமானார், சிறப்புமிக்க குளிர்ந்த வயல்களால் சூழப்பட்டதும், நீர் வெள்ளத்தை எல்லையாக உடையதுமாகிய திருவாஞ்சியம், திருநள்ளாறு இவற்றை உகந்தருளின திருத்தலங்களாக உடையவராய், பகைவரோடு போரிடும் காளையை வாகனமாகக் கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவரத் தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.
2100 காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்
கபாலங்கை யேந்திக் கணங்கள் பாட
ஊரா ரிடுபிச்சை கொண்டு ழல்லும்
உத்தமராய் நின்ற ஒருவ னார்தாம்
சீரார் கழல்வணங்குந் தேவ தேவர்
திருவாரூர்த் திருமூலட் டான மேயார்
போரார் விடையேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
6.002.5
தம் சிறப்பு நிறைந்த திருவடிகளை வணங்கும் தேவர்களுக்கும் தலைவராகிய சிவபெருமானார் கார்காலத்தில் மணம் வீசும் கொன்றைப் பூவாலாகிய முடிமாலையைச் சூடி, மண்டையோட்டைக் கையில் ஏந்தி, பூதகணங்கள் தம் பெருமையைப் பாட, ஊரிலுள்ளார் வழங்கும் பிச்சையை உணவாகக் கொண்டு திரிகின்ற மேம்பட்டவராய்க் காட்சி வழங்கும் ஒப்பற்றவராய், திருவாரூர்த் திருமூலத்தானத்தில் விரும்பித் தங்கிப் பின் போர் செய்யும் காளை மீது இவர்ந்து பூதங்கள் தம்மைச் சுற்றிவரத் தில்லைச்சிற்றம்பலத்தில் புகுந்தார்.
2101 காதார் குழையினர் கட்டங் கத்தர்
கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
முதலும் இறுதியுந் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ அன்று
வன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாள்
போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
6.002.6
ஆண்டில் மூத்த ஆட்டுவாள், ஊட்டுவாள், ஒல் உறுத்துவாள், நொடி பயிற்றுவாள்,கைத்தாய் என்ற ஐவகையராய செவிலித்தாயரும், நற்றாயும் தந்தையும் இல்லாதவராய், உலகிற்கு முதலாயும் முடிவாயும் உள்ளவர் தாமேயாய்க் காதில் குழை அணிந்து கட்டங்கம் என்ற படைக்கலத்தை ஏந்திக் கயிலாய மலையிலும், காரோணப்பதிகளிலும், உகந்தருளியிருக்கும் சிவபெருமான் அழகிய பெண் இனத்தார் மகிழுமாறு பார்வதியின் திருமணத்துக்கு முற்பட்ட காலத்திலே மன்மதனுடைய உடம்பினை அழித்தவராய், இந்நாளில் பூக்கள் நிறைந்த தம் சடைகள் தொங்கவும், பூதங்கள் சூழவும், தில்லைச் சிற்றம்பலத்தில் புகுந்தார்.
2102 இறந்தார்க்கும் என்றும் இறவா தார்க்கும்
இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவா தார்க்கும்
பெரியார்தம் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்
புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
6.002.7
தம்மை மறந்தவர் மனத்தில் என்றும் விரும்பித் தங்காதவராய்த் திருமறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மழுப்படையை உடைய பெருமான் உலகியலில் நின்று வாழ்நாள் இறுதி வந்துழி இறந்தவர்.யோகம் முதலியவற்றால் நீண்ட நாள் இறவாது இருந்தவர். தேவர்கள் ஆகிய எல்லோருக்கும் தாமே துணையாய், உலகில் பிறப்பெடுப்பவருக்கும் என்றும் பிறப்பெடுக்கும் நிலையைக் கடந்து வீடுபெற்றவருக்கும் தலைவராய்த் தம் பெருமையையே அவர்கள் என்றும் பேசுமாறு அவர் மனத்துள் என்றும் நிலைபெற்று, பின்புறமாக நீண்டு தொங்கும் சடையை உடையவராய்ப் பூதம் சூழத் தில்லைச்சிற்றம்பலமே புகுந்தார்.
2103 குலாவெண் தலைமாலை யென்பு பூண்டு
குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்
கலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கையோ டனலேந்திக் காடு றைவார்
நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
நிறைவயல்சூழ் நெய்த்தானம் மேய செல்வர்
புலால்வெண் தலையேந்திப் பூதஞ் சூழப் 
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
6.002.8
ஒளி விளங்கும் வெண் மதியம் தீண்டுமாறு உயர்ந்த மாடங்களை உடையதாய் மற்ற இடம் எங்கும் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திரு நெய்த்தானத்தை உகந்தருளிய பெருமான் வளைந்த வெண்தலைமாலை. எலும்புகள் இவற்றை அணிந்து குளிர்ந்த கொன்றைப் பூ மாலையை மார்பில் சூடி, கொல்லுதலில் வல்ல காளையை இவர்ந்து, உடம்பை ஒட்டிக் கொடிய யானைத் தோலைப் போர்வையாக அணிந்து உடம்பை மறைத்துக் கொண்டு, கைகளில் மண்டை ஓட்டினையும் தீயையும் ஏந்திச் சுடுகாட்டில் தங்கும் இயல்பினர். அவர், புலால் நாற்றம் கமழும் வெள்ளிய மண்டை ஓட்டினைக் கையில் ஏந்திப் பூதங்கள் சூழத்தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்தார்.
2104 சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
சங்கரரைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்
படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு
வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லா
மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
பொன்றீ மணிவிளக்குப் பூதம் பற்றப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
6.002.9
கோவணம் அணிந்து வெள்ளிய பூணூல் தரித்தவராய் எல்லோருக்கும் இன்பம் செய்யும் பெருமானைக் கண்டீரோ என்று முக்கணான் முயக்கம் வேட்ட தலைவிதன்பால் அன்புடைய அயலாரை வினவினாள். கட்டியிருந்த வெண்ணிறக் காளையைக் கட்டவிழ்த்து அது விரைந்து செல்லுமாறு அதன் மீது தாவி ஏறி, மண்டை ஓட்டில் எதனையோ ஏந்திக்கொண்டு அழகிய ஆரூரிலே அந்தி நேரத்தில் எங்கள் வெள்வளைகளைத் தாம் முழுமையாய்க் கைக்கொள்வதற்காக நின்று, இந்நாளில்அழகிய தீப்போன்ற ஒளி விளக்குக்களைப் பூதங்கள் ஏந்தி வரத் தில்லைச்சிற்றம்பலத்தில் தாம் விரும்பியவாறு புகுந்தார்.
2105 பாதங்கள் நல்லார் பரவி யேத்தப்
பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்
எழுபிறப்பும் ஆளுடைய ஈசனார் தாம்
வேதங்க ளோதிஓர் வீணை யேந்தி
விடையொன்று தாமேறி வேத கீதர்
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
6.002.10
வினைப்பயன் தொடர்தற்குரிய ஏழு பிறப்புக்களிலும் நம்மை அடியவராகக் கொள்ளும் சிவபெருமான் தம் திருவடிகளைச் சான்றோர்கள் முன்னின்று வழிபட்டுத் துதிக்கப் பக்தியால் அவருடைய உகப்பிற்காகவே தொண்டு செய்யும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்குமாறு திருத்தலங்களில் உகந்தருளியுள்ளார். வீணையைக் கையில் ஏந்தி வேதங்களை ஓதிக் கொண்டு காளை மீது இவர்ந்து புலித்தோலை இடையில் கட்டிய அவ்வேத கீதர் பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வரத் தில்லைச் சிற்றம்பலத்தைத் தாமே விரும்பிச் சேர்ந்தார்.
2106 பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செய்வார் தம்மைத்
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.
6.002.11
இடையில் பட்டை உடுத்தி அதனைப் பாம்பு ஒன்றினால் இறுக்கிக் கொண்டு மேலேயானைத் தோலைப் போர்த்துப் பெருமான் பூதங்கள் தம்மைச் சூழத் தீயைக்கையில் ஏந்தி ஆடற் கலையில் வல்லவராய் உள்ளார். அவர் இந்நாள் தில்லைச் சிற்றம்பலத்திலேயே ஒளிவீசும் சூலப்படை ஏந்தி, பூணூல் அணிந்து, வீணையை எழீஇ வேதம் ஓதி, ஒருகையில் கட்டங்கம் என்ற படையை ஏந்திவிடக்கறை பொருந்திய கழுத்தினராய் மண்டை ஓட்டினை ஏந்தியவராய் உள்ள காட்சியை எல்லீரும் சென்று காண்மின்கள்.
திருச்சிற்றம்பலம்

 

6.002.கோயில் 

புக்கதிருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர். 

தேவியார் - சிவகாமியம்மை. 

 

 

2096 மங்குல் மதிதவழும் மாட வீதி

மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்

கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்

குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்

தங்கு மிடமறியார் சால நாளார்

தரும புரத்துள்ளார் தக்க ளூரார்

பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.002.1

 

  பொலிவு தரும் வெண்ணீறு அணிந்து, பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வர, நம்பெருமானார் வானத்தில் உள்ள சந்திரன் தவழ்ந்து செல்லும் உயர்ச்சியை உடைய பெருந்தெருக்களை உடைய மயிலாப்பூர், மருகல்,கொங்குநாட்டுக் கொடுமுடி, குற்றாலம், குடமூக்கு, கொள்ளம்பூதூர், தருமபுரம்,தக்களூர் என்ற திருத்தலங்களில் பல நாள் தங்கி, தாம் உறுதியாகத் தங்கும் இடமாகப் பிறவற்றை அறியாராய், தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கி விட்டார்.

 

 

2097 நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்

நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப்

பாகப் பொழுதெலாம் பாசூர்த் தங்கிப்

பரிதி நியமத்தார் பன்னி ருநாள்

வேதமும் வேள்விப் புகையும் ஓவா

விரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்

போகமும் பொய்யாப் பொருளு மானார்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.002.2

 

  ஐம்புல இன்பப் பொருள்களும் மெய்ப்பொருளும் ஆகிய, பாம்பினை இடையிலே கட்டிய, நம்மால் விரும்பப்படும் இறைவர் நனிபள்ளி, நல்லூர் இவற்றில் தங்கி ஓர் இராப்பொழுது முழுதும் பாசூரில் தங்கிப் பன்னிருநாள் பரிதிநியமத்திலும் ஏழு நாள் வேதமும் வேள்விப் புகையும் நீங்காத நீர்வளம் மிக்க திருவீழிமிழலையிலும் உகந்திருந்து, இந்நாளில் தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கிவிட்டார்.

 

 

2098 துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலும்

தூமதியும் பாம்பு முடையார் போலும்

மறங்காட்டி மும்மதிலும் எய்தார் போலும்

மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும்

அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்

அறமருளிச் செய்த அரனா ரிந்நாள்

புறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.002.3

 

  உலகவருக்கு ஒழுக்கத்தை அறிவித்து, ஒரு காலத்தில் சனகர் முதலிய அந்தணர் நால்வருக்கு வேதத்தின் விழுமிய பொருளை அருளிச்செய்த சிவபெருமான் நிலையில்லாப் பொருள்களில் பற்றறுத்தலாகிய ஞானத்தை அறிவித்து, மெய்ந்நூற் பொருள்கள் அனைத்தையும் அருளினார். களங்கமற்ற பிறைமதியையும் பாம்பினையும் அணிகலனாக உடையார், தம்வீரத்தை வெளிப்படுத்தி மூன்று மதில்களையும் அம்பு எய்து அழித்தார்.மந்திரங்களும் அவற்றை முறையாகப் பயன்படுத்தும் செயல்களும் தாமேயாக உள்ளார்.அப்பெருமான் இந்நாள் தாமே உகந்து தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.

 

 

2099 வாரேறு வனமுலையாள் பாக மாக

மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்

சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்

திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்

காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த

கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்

போரேறு தாமேறிப் பூதஞ் சூழப்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.002.4

 

  கச்சணிந்த அழகிய திருத்தனங்களை உடைய பார்வதி தம் உடம்பில் ஒரு பகுதியாக அமைய, மழுப்படையைக் கையில் தாங்கிச் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தி, விடக்கறை தங்கிய கழுத்தினராய், மன்மதனை வெகுண்ட கண் விளங்கும் நெற்றியினராய்க் கடலில் தோன்றிய விடத்தைத்தாம் உண்டு, உலகைப் பாதுகாத்த பெருமானார், சிறப்புமிக்க குளிர்ந்த வயல்களால் சூழப்பட்டதும், நீர் வெள்ளத்தை எல்லையாக உடையதுமாகிய திருவாஞ்சியம், திருநள்ளாறு இவற்றை உகந்தருளின திருத்தலங்களாக உடையவராய், பகைவரோடு போரிடும் காளையை வாகனமாகக் கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவரத் தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.

 

 

2100 காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்

கபாலங்கை யேந்திக் கணங்கள் பாட

ஊரா ரிடுபிச்சை கொண்டு ழல்லும்

உத்தமராய் நின்ற ஒருவ னார்தாம்

சீரார் கழல்வணங்குந் தேவ தேவர்

திருவாரூர்த் திருமூலட் டான மேயார்

போரார் விடையேறிப் பூதஞ் சூழப்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.002.5

 

  தம் சிறப்பு நிறைந்த திருவடிகளை வணங்கும் தேவர்களுக்கும் தலைவராகிய சிவபெருமானார் கார்காலத்தில் மணம் வீசும் கொன்றைப் பூவாலாகிய முடிமாலையைச் சூடி, மண்டையோட்டைக் கையில் ஏந்தி, பூதகணங்கள் தம் பெருமையைப் பாட, ஊரிலுள்ளார் வழங்கும் பிச்சையை உணவாகக் கொண்டு திரிகின்ற மேம்பட்டவராய்க் காட்சி வழங்கும் ஒப்பற்றவராய், திருவாரூர்த் திருமூலத்தானத்தில் விரும்பித் தங்கிப் பின் போர் செய்யும் காளை மீது இவர்ந்து பூதங்கள் தம்மைச் சுற்றிவரத் தில்லைச்சிற்றம்பலத்தில் புகுந்தார்.

 

 

2101 காதார் குழையினர் கட்டங் கத்தர்

கயிலாய மாமலையார் காரோ ணத்தார்

மூதாயர் மூதாதை யில்லார் போலும்

முதலும் இறுதியுந் தாமே போலும்

மாதாய மாதர் மகிழ அன்று

வன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாள்

போதார் சடைதாழப் பூதஞ் சூழப்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.002.6

 

  ஆண்டில் மூத்த ஆட்டுவாள், ஊட்டுவாள், ஒல் உறுத்துவாள், நொடி பயிற்றுவாள்,கைத்தாய் என்ற ஐவகையராய செவிலித்தாயரும், நற்றாயும் தந்தையும் இல்லாதவராய், உலகிற்கு முதலாயும் முடிவாயும் உள்ளவர் தாமேயாய்க் காதில் குழை அணிந்து கட்டங்கம் என்ற படைக்கலத்தை ஏந்திக் கயிலாய மலையிலும், காரோணப்பதிகளிலும், உகந்தருளியிருக்கும் சிவபெருமான் அழகிய பெண் இனத்தார் மகிழுமாறு பார்வதியின் திருமணத்துக்கு முற்பட்ட காலத்திலே மன்மதனுடைய உடம்பினை அழித்தவராய், இந்நாளில் பூக்கள் நிறைந்த தம் சடைகள் தொங்கவும், பூதங்கள் சூழவும், தில்லைச் சிற்றம்பலத்தில் புகுந்தார்.

 

 

2102 இறந்தார்க்கும் என்றும் இறவா தார்க்கும்

இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று

பிறந்தார்க்கும் என்றும் பிறவா தார்க்கும்

பெரியார்தம் பெருமையே பேச நின்று

மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்

மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்

புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.002.7

 

  தம்மை மறந்தவர் மனத்தில் என்றும் விரும்பித் தங்காதவராய்த் திருமறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மழுப்படையை உடைய பெருமான் உலகியலில் நின்று வாழ்நாள் இறுதி வந்துழி இறந்தவர்.யோகம் முதலியவற்றால் நீண்ட நாள் இறவாது இருந்தவர். தேவர்கள் ஆகிய எல்லோருக்கும் தாமே துணையாய், உலகில் பிறப்பெடுப்பவருக்கும் என்றும் பிறப்பெடுக்கும் நிலையைக் கடந்து வீடுபெற்றவருக்கும் தலைவராய்த் தம் பெருமையையே அவர்கள் என்றும் பேசுமாறு அவர் மனத்துள் என்றும் நிலைபெற்று, பின்புறமாக நீண்டு தொங்கும் சடையை உடையவராய்ப் பூதம் சூழத் தில்லைச்சிற்றம்பலமே புகுந்தார்.

 

 

2103 குலாவெண் தலைமாலை யென்பு பூண்டு

குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்

கலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்

கையோ டனலேந்திக் காடு றைவார்

நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்

நிறைவயல்சூழ் நெய்த்தானம் மேய செல்வர்

புலால்வெண் தலையேந்திப் பூதஞ் சூழப் 

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.002.8

 

  ஒளி விளங்கும் வெண் மதியம் தீண்டுமாறு உயர்ந்த மாடங்களை உடையதாய் மற்ற இடம் எங்கும் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திரு நெய்த்தானத்தை உகந்தருளிய பெருமான் வளைந்த வெண்தலைமாலை. எலும்புகள் இவற்றை அணிந்து குளிர்ந்த கொன்றைப் பூ மாலையை மார்பில் சூடி, கொல்லுதலில் வல்ல காளையை இவர்ந்து, உடம்பை ஒட்டிக் கொடிய யானைத் தோலைப் போர்வையாக அணிந்து உடம்பை மறைத்துக் கொண்டு, கைகளில் மண்டை ஓட்டினையும் தீயையும் ஏந்திச் சுடுகாட்டில் தங்கும் இயல்பினர். அவர், புலால் நாற்றம் கமழும் வெள்ளிய மண்டை ஓட்டினைக் கையில் ஏந்திப் பூதங்கள் சூழத்தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்தார்.

 

 

2104 சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்

சங்கரரைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்

பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்

படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு

வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லா

மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்

பொன்றீ மணிவிளக்குப் பூதம் பற்றப்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.002.9

 

  கோவணம் அணிந்து வெள்ளிய பூணூல் தரித்தவராய் எல்லோருக்கும் இன்பம் செய்யும் பெருமானைக் கண்டீரோ என்று முக்கணான் முயக்கம் வேட்ட தலைவிதன்பால் அன்புடைய அயலாரை வினவினாள். கட்டியிருந்த வெண்ணிறக் காளையைக் கட்டவிழ்த்து அது விரைந்து செல்லுமாறு அதன் மீது தாவி ஏறி, மண்டை ஓட்டில் எதனையோ ஏந்திக்கொண்டு அழகிய ஆரூரிலே அந்தி நேரத்தில் எங்கள் வெள்வளைகளைத் தாம் முழுமையாய்க் கைக்கொள்வதற்காக நின்று, இந்நாளில்அழகிய தீப்போன்ற ஒளி விளக்குக்களைப் பூதங்கள் ஏந்தி வரத் தில்லைச்சிற்றம்பலத்தில் தாம் விரும்பியவாறு புகுந்தார்.

 

 

2105 பாதங்கள் நல்லார் பரவி யேத்தப்

பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்

ஏதங்கள் தீர இருந்தார் போலும்

எழுபிறப்பும் ஆளுடைய ஈசனார் தாம்

வேதங்க ளோதிஓர் வீணை யேந்தி

விடையொன்று தாமேறி வேத கீதர்

பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.002.10

 

  வினைப்பயன் தொடர்தற்குரிய ஏழு பிறப்புக்களிலும் நம்மை அடியவராகக் கொள்ளும் சிவபெருமான் தம் திருவடிகளைச் சான்றோர்கள் முன்னின்று வழிபட்டுத் துதிக்கப் பக்தியால் அவருடைய உகப்பிற்காகவே தொண்டு செய்யும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்குமாறு திருத்தலங்களில் உகந்தருளியுள்ளார். வீணையைக் கையில் ஏந்தி வேதங்களை ஓதிக் கொண்டு காளை மீது இவர்ந்து புலித்தோலை இடையில் கட்டிய அவ்வேத கீதர் பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வரத் தில்லைச் சிற்றம்பலத்தைத் தாமே விரும்பிச் சேர்ந்தார்.

 

 

2106 பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்

பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்

சிட்டராய்த் தீயேந்திச் செய்வார் தம்மைத்

தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்

விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே

ஓதுவதும் வேதமே வீணை யுண்டே

கட்டங்கங் கையதே சென்று காணீர்

கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.

6.002.11

 

  இடையில் பட்டை உடுத்தி அதனைப் பாம்பு ஒன்றினால் இறுக்கிக் கொண்டு மேலேயானைத் தோலைப் போர்த்துப் பெருமான் பூதங்கள் தம்மைச் சூழத் தீயைக்கையில் ஏந்தி ஆடற் கலையில் வல்லவராய் உள்ளார். அவர் இந்நாள் தில்லைச் சிற்றம்பலத்திலேயே ஒளிவீசும் சூலப்படை ஏந்தி, பூணூல் அணிந்து, வீணையை எழீஇ வேதம் ஓதி, ஒருகையில் கட்டங்கம் என்ற படையை ஏந்திவிடக்கறை பொருந்திய கழுத்தினராய் மண்டை ஓட்டினை ஏந்தியவராய் உள்ள காட்சியை எல்லீரும் சென்று காண்மின்கள்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 21 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.