|
||||||||
ஆறாம் திருமுறை-30 |
||||||||
6.030.திருவாரூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2385 எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்
ஏழ்கடலும் ஏழுலகும் ஆயி னான்காண்
வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்
வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட
அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்
அனலாடி யானஞ்சு மாடி னான்காண்
செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
6.030.1
செம்பொன்னால் செய்த மணிகள் இழைக்கப்பட்ட மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்திலுள்ள எம் செல்வன் எம்மைத் தளையிடும் ஊழ்வினையால் ஏற்படும் நோயைத் தீர்த்தவன். ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயவன். நறுமணம் கமழும் கொன்றை மாலையன். பிறையோடு சூடிய முடிமாலையை உடையவன். தேவர்கள் வேண்ட ஓரம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவன். தீயில் கூத்தாடுபவன். பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவன்.
2386 அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்
ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை
குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித்
தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் செல்லுந்
தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்தும்
திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
6.030.2
இடையில் எலும்புகளை அணிந்தவன். அடியார்களுக்கு எப்பொழுதும் கிட்டுதற்கு அரிய அமுதமாய் இனிக்கும் திருவையாற்றில் உறையும் இறைவன். கொக்கிறகு, கொன்றை மாலை, குளிர்ந்தபிறை, கொடுமை மிக்க பாம்பு என்பன ஒருசேரத் தங்கியிருக்கும் சடையினன். தொண்டர்கள் செல்லும் தூயவழியைக் காட்டுபவன் ஆகிய சிவபெருமான் தேவர்கள் துதித்துப் புகழுமாறு எல்லாத்திக்கிலும் நிறைந்த புகழை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்து உறையும் எம் செல்வனாகக் காட்சி வழங்குகிறான்.
2387 நீரேறு சடைமுடியெம் நிமலன் தான்காண்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தான்காண்
வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண்
வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண்
காரேறு முகிலனைய கண்டத் தான்காண்
கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண்
சீரேறு மணிமாடத் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
6.030.3
சடைமுடியில் கங்கையைத் தரித்த தூயவன். நெற்றிக்கண்ணன். கச்சணிந்த முலைகளை உடைய பார்வதி பாகன். பிறைசேர் சடையன். பொருந்தேவன். கார்முகில் போன்ற நீலகண்டன். கல்லாலின் கீழ் இருந்து அறங்களைச் சனகர் முதலிய நால்வருக்கு மோன நிலையில் உபதேசித்தவன். சிறப்பு மிக்க அழகிய மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்தில் எம் செல்வனாக அப்பெருமான் உறைகின்றான்.
2388 கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண்
கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண்
ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்
உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண்
ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்
ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண்
தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
6.030.4
தேன்மிக்க மலர்கள் நிறைந்த சோலைகளை உடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் காட்டில் திரிகின்ற யானைத் தோலைப் போர்த்தியவன். கற்பகம் போன்ற கொடையாளி. கூற்றுவனை ஒருகாலத்து உதைத்தவன். புலால் நாற்றம் கமழும் தலையோட்டில் பிச்சை எடுப்பவன். உத்தமன். ஒற்றியூரில் விரும்பி உறைபவன். காளையை இவரும் தலைவன். சூரியன் ஒருவனுடைய பற்களை உதிர்த்த முதற்பொருள் ஆவான்.
2389 பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண்
மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்
வானவரு மறியாத நெறிதந் தான்காண்
நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல
நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
6.030.5
தேன் பொருந்திய பூக்கும் நிலையிலுள்ள மலர்கள், தூபம், தீபம், நல்ல சந்தனம் இவற்றைக் கொண்டு துதித்து நாள்தோறும் தேவர்கள் சிறப்போடு பூசனை செய்யும் திருவாரூரில் திருமூலத்தானத்தில் உறையும் செல்வன் பெண்ணும் ஆணுமாகிய உருவுடையவனாய்ப் பிறப்பு இறப்பு இல்லாதவனாய்ப் பாவத்தில் அகப்பட்ட என்மனத்தின் மயக்கத்தை நீக்கியவனாய்த் தேவர்களும் அறியாத வீடுபேற்றிற்கு உரிய வழியை எனக்கு அருள்பவன்.
2390 சங்கரன்காண் சக்கரம்மாற் கருள்செய் தான்காண்
தருணேந்து சேகரன்காண் தலைவன் தான்காண்
அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை
அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண்
எங்கள்பெரு மான்காண்என் னிடர்கள் போக
அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ்
செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
6.030.6
தாமரை களையாக முளைக்கும் வயல்களால் சூழப்பட்டதாய்த் தேவர்களும் போற்றும் திருவாரூரில் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் எல்லோருக்கும் இன்பத்தைச் செய்பவன். திருமாலுக்குச் சக்கரப்படையை அருளியவன். பிறைசூடிய தலைவன். தாமரையிலுள்ள பிரமன் தலைகளுள் ஒன்றனை அறுத்தவன். அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருவையாற்றில் உறைபவன். எங்கள் தலைவன். எங்கள் துன்பங்கள நீங்குமாறு அருள் செய்யும் இறைவன்.
2391 நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண்
நான்மறையோ டாறங்க மாயி னான்காண்
மின்திகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்
வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண்
துன்றுபொழிற் கச்சியே கம்பன் தான்காண்
சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த
தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
6.030.7
தென்றல் ஊரைச் சேர்ந்த சோலைகளால் மணங்கமழும் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் நன்மையை அருளித் தீமையைப் போக்கும் நம் தலைவன். நான்மறையோடு ஆறங்கம் ஆயினவன். மின்னல் போன்ற ஒளியை உடைய முற்பட்டவன். காளை எழுதிய கொடியை உடையவன். பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பன். சோற்றுத்துறையிலும் உறைபவன்.
2392 பொன்நலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்
புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்
மின்நலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்
வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்
கோலமா நீறணிந்த மேனி யான்காண்
செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
6.030.8
சிறந்த வளத்தை உடைய வயல்களால் சூழப்பட்ட திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் பொன் நிறக்கொன்றை சூடிய சடையினன். புகலூரிலும் பூவணத்திலும் உறைபவன். மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதிபாகன். வேதியன், பூணூல் அணிந்த மார்பினன். பகைவருக்கு அச்சமும் அடியாருக்கு நன்மையும் தருகின்ற, முத்தலைச் சூலத்தை ஏந்தியவன். திருநீற்றை அழகாக அணிந்த திருமேனியினன்.
2393 விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண்
மண்டலத்தில் ஒளிவளர விளங்கி னான்காண்
வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண்
புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்
புத்தேளுங் காண்பரிய புராணன் தான்காண்
தெண்டிரைநீர் வயல்புடைசூழ் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
6.030.9
தௌந்த அலைகளை உடைய நீர்வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட திருவாரூரில் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் பகைவர் முப்புரங்களையும் எரித்தவன். கடலில் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த கழுத்தினன். வான மண்டலத்தில் சூரியனும் சந்திரனும் ஒளிவீசுமாறு அருளியவன். வாய்மூரிலும் மறைக்காட்டிலும் உறைபவன். செந்தாமரைக் கண்ணானாகிய திருமாலும் தாமரையில் தங்கும் பிரமனும் காண முடியாத பழையவன்.
2394 செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்
தென்னானைக் காவன்காண் தீயில் வீழ
மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்
வஞ்சகர்பா லணுகாத மைந்தன் தான்காண்
அருவரையை யெடுத்தவன்தன் சிரங்கள் பத்தும்
ஐந்நான்கு தோளுநெரிந் தலற அன்று
திருவிரலால் அடர்த்தவன்காண் திருவா ரூரில்
திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே.
6.030.10
திருவாரூர் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் போரில் மேம்பட்ட திருமாலாகிய காளையை உடையவன். அழகிய திருவானைக்காவில் உறைபவன். பகைவர் முப்புரத்தை எரித்தவன். வஞ்சகர் உள்ளத்தில் நெருங்காத வலிமை உடையவன். கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரிக்கப்பட அவன் அலறுமாறு முன்னொருகால் திருவிரலால் வருத்தியவன்.
திருச்சிற்றம்பலம்
6.030.திருவாரூர் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். தேவியார் - கரும்பனையாளம்மை.
2385 எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண் ஏழ்கடலும் ஏழுலகும் ஆயி னான்காண் வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண் வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண் அனலாடி யானஞ்சு மாடி னான்காண் செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. 6.030.1
செம்பொன்னால் செய்த மணிகள் இழைக்கப்பட்ட மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்திலுள்ள எம் செல்வன் எம்மைத் தளையிடும் ஊழ்வினையால் ஏற்படும் நோயைத் தீர்த்தவன். ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயவன். நறுமணம் கமழும் கொன்றை மாலையன். பிறையோடு சூடிய முடிமாலையை உடையவன். தேவர்கள் வேண்ட ஓரம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவன். தீயில் கூத்தாடுபவன். பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவன்.
2386 அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண் கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித் தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் செல்லுந் தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்தும் திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. 6.030.2
இடையில் எலும்புகளை அணிந்தவன். அடியார்களுக்கு எப்பொழுதும் கிட்டுதற்கு அரிய அமுதமாய் இனிக்கும் திருவையாற்றில் உறையும் இறைவன். கொக்கிறகு, கொன்றை மாலை, குளிர்ந்தபிறை, கொடுமை மிக்க பாம்பு என்பன ஒருசேரத் தங்கியிருக்கும் சடையினன். தொண்டர்கள் செல்லும் தூயவழியைக் காட்டுபவன் ஆகிய சிவபெருமான் தேவர்கள் துதித்துப் புகழுமாறு எல்லாத்திக்கிலும் நிறைந்த புகழை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்து உறையும் எம் செல்வனாகக் காட்சி வழங்குகிறான்.
2387 நீரேறு சடைமுடியெம் நிமலன் தான்காண் நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தான்காண் வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண் வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண் காரேறு முகிலனைய கண்டத் தான்காண் கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண் சீரேறு மணிமாடத் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. 6.030.3
சடைமுடியில் கங்கையைத் தரித்த தூயவன். நெற்றிக்கண்ணன். கச்சணிந்த முலைகளை உடைய பார்வதி பாகன். பிறைசேர் சடையன். பொருந்தேவன். கார்முகில் போன்ற நீலகண்டன். கல்லாலின் கீழ் இருந்து அறங்களைச் சனகர் முதலிய நால்வருக்கு மோன நிலையில் உபதேசித்தவன். சிறப்பு மிக்க அழகிய மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்தில் எம் செல்வனாக அப்பெருமான் உறைகின்றான்.
2388 கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண் கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண் ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண் உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண் ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண் ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண் தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. 6.030.4
தேன்மிக்க மலர்கள் நிறைந்த சோலைகளை உடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் காட்டில் திரிகின்ற யானைத் தோலைப் போர்த்தியவன். கற்பகம் போன்ற கொடையாளி. கூற்றுவனை ஒருகாலத்து உதைத்தவன். புலால் நாற்றம் கமழும் தலையோட்டில் பிச்சை எடுப்பவன். உத்தமன். ஒற்றியூரில் விரும்பி உறைபவன். காளையை இவரும் தலைவன். சூரியன் ஒருவனுடைய பற்களை உதிர்த்த முதற்பொருள் ஆவான்.
2389 பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண் பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண் மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண் வானவரு மறியாத நெறிதந் தான்காண் நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. 6.030.5
தேன் பொருந்திய பூக்கும் நிலையிலுள்ள மலர்கள், தூபம், தீபம், நல்ல சந்தனம் இவற்றைக் கொண்டு துதித்து நாள்தோறும் தேவர்கள் சிறப்போடு பூசனை செய்யும் திருவாரூரில் திருமூலத்தானத்தில் உறையும் செல்வன் பெண்ணும் ஆணுமாகிய உருவுடையவனாய்ப் பிறப்பு இறப்பு இல்லாதவனாய்ப் பாவத்தில் அகப்பட்ட என்மனத்தின் மயக்கத்தை நீக்கியவனாய்த் தேவர்களும் அறியாத வீடுபேற்றிற்கு உரிய வழியை எனக்கு அருள்பவன்.
2390 சங்கரன்காண் சக்கரம்மாற் கருள்செய் தான்காண் தருணேந்து சேகரன்காண் தலைவன் தான்காண் அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண் எங்கள்பெரு மான்காண்என் னிடர்கள் போக அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ் செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. 6.030.6
தாமரை களையாக முளைக்கும் வயல்களால் சூழப்பட்டதாய்த் தேவர்களும் போற்றும் திருவாரூரில் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் எல்லோருக்கும் இன்பத்தைச் செய்பவன். திருமாலுக்குச் சக்கரப்படையை அருளியவன். பிறைசூடிய தலைவன். தாமரையிலுள்ள பிரமன் தலைகளுள் ஒன்றனை அறுத்தவன். அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருவையாற்றில் உறைபவன். எங்கள் தலைவன். எங்கள் துன்பங்கள நீங்குமாறு அருள் செய்யும் இறைவன்.
2391 நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண் நான்மறையோ டாறங்க மாயி னான்காண் மின்திகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண் வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண் துன்றுபொழிற் கச்சியே கம்பன் தான்காண் சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. 6.030.7
தென்றல் ஊரைச் சேர்ந்த சோலைகளால் மணங்கமழும் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் நன்மையை அருளித் தீமையைப் போக்கும் நம் தலைவன். நான்மறையோடு ஆறங்கம் ஆயினவன். மின்னல் போன்ற ஒளியை உடைய முற்பட்டவன். காளை எழுதிய கொடியை உடையவன். பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பன். சோற்றுத்துறையிலும் உறைபவன்.
2392 பொன்நலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண் புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண் மின்நலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண் வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண் கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண் கோலமா நீறணிந்த மேனி யான்காண் செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. 6.030.8
சிறந்த வளத்தை உடைய வயல்களால் சூழப்பட்ட திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் பொன் நிறக்கொன்றை சூடிய சடையினன். புகலூரிலும் பூவணத்திலும் உறைபவன். மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதிபாகன். வேதியன், பூணூல் அணிந்த மார்பினன். பகைவருக்கு அச்சமும் அடியாருக்கு நன்மையும் தருகின்ற, முத்தலைச் சூலத்தை ஏந்தியவன். திருநீற்றை அழகாக அணிந்த திருமேனியினன்.
2393 விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண் மண்டலத்தில் ஒளிவளர விளங்கி னான்காண் வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண் புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் புத்தேளுங் காண்பரிய புராணன் தான்காண் தெண்டிரைநீர் வயல்புடைசூழ் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. 6.030.9
தௌந்த அலைகளை உடைய நீர்வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட திருவாரூரில் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் பகைவர் முப்புரங்களையும் எரித்தவன். கடலில் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த கழுத்தினன். வான மண்டலத்தில் சூரியனும் சந்திரனும் ஒளிவீசுமாறு அருளியவன். வாய்மூரிலும் மறைக்காட்டிலும் உறைபவன். செந்தாமரைக் கண்ணானாகிய திருமாலும் தாமரையில் தங்கும் பிரமனும் காண முடியாத பழையவன்.
2394 செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண் தென்னானைக் காவன்காண் தீயில் வீழ மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் வஞ்சகர்பா லணுகாத மைந்தன் தான்காண் அருவரையை யெடுத்தவன்தன் சிரங்கள் பத்தும் ஐந்நான்கு தோளுநெரிந் தலற அன்று திருவிரலால் அடர்த்தவன்காண் திருவா ரூரில் திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. 6.030.10
திருவாரூர் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் போரில் மேம்பட்ட திருமாலாகிய காளையை உடையவன். அழகிய திருவானைக்காவில் உறைபவன். பகைவர் முப்புரத்தை எரித்தவன். வஞ்சகர் உள்ளத்தில் நெருங்காத வலிமை உடையவன். கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரிக்கப்பட அவன் அலறுமாறு முன்னொருகால் திருவிரலால் வருத்தியவன்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|