|
||||||||
ஆறாம் திருமுறை-31 |
||||||||
6.031.திருவாரூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2395 இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ்
சுடரொளியா யுள்விளங்கு சோதி யென்றுந்
தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங்
கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்
கலைமான் மறியேந்து கையா வென்றும்
அடல்விடையாய் ஆரமுதே ஆதி யென்றும்
ஆரூரா வென்றென்றே அலறா நில்லே.
6.031.1
நெஞ்சே! நீ துன்பங்கள் ஒழியும் பகையை ஆராய்வாயாயின் இங்கே வந்து நான் சொல்வதனைக் கேள். செந்நிறம் பொருந்திய சடையில் கங்கையை அணிந்தவனே! ஞானஒளியாய் உள்ளத்தில் விளங்குபவனே! திருநீறணிந்த தோளனே! கடல்விடம் உண்டு கறுத்த கழுத்தினனே! மான் குட்டியை ஏந்திய கையனே! ஆற்றலுடைய காளை வாகனனே! கிட்டுதற்கரிய அமுதே! எல்லோருக்கும் முற்பட்டவனே! ஆரூரனே! எனப்பலகாலும் அழைப்பாயாக.
2396 செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்
சிந்தித்தே னெஞ்சமே திண்ண மாகப்
பொடியேறு திருமேனி யுடையா யென்றும்
புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும்
அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்
அம்மானே ஆருரெம் மரசே யென்றும்
கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.
6.031.2
நெஞ்சமே! துன்பம்மிக்க தீவினைகள் நீங்கும் வழியை எண்ணுவாயானால் உறுதியாகத் திருநீறணிந்த திருமேனி உடையவனே! இந்திரனுடைய தோள்களை நீக்கிய தூயனே! அடியேனை அடிமையாகக் கொண்டவனே! தலைவனே! ஆரூரில் உள்ள எம் அரசனே! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சியில் உள்ள ஏகம்பனே! கற்பகமே! என்று பலகாலும் அழைப்பாயாக.
2397 நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
6.031.3
நெஞ்சே! நீ தடுமாற்றம் நீங்கி நிலையாக வாழ நினைப்பாயானால் நாள்தோறும் எம்பெருமானுடைய கோயிலுக்குச் சென்று பொழுது விடிவதன் முன் கோயிலைப் பெருக்கி மெழுகிப் பூ மாலையைக் கட்டி எம் பெருமானுக்குச் சாத்தி அவனைத் துதித்துப் புகழ்ந்து பாடித் தலையால் முழுமையாக வணங்கி மகிழ்ச்சியாய்க் கூத்தாடிச் 'சங்கரா நீ வெல்க வாழ்க!' என்றும் 'கங்கையைச் சிவந்த சடையில் வைத்த ஆதிப்பொருளே!' என்றும் 'ஆரூரா!' என்றும் பலகாலும் அலறி அழைப்பாயாக.
2398 புண்ணியமும் நன்னெறியும் ஆவ தெல்லாம்
நெஞ்சமே யிதுகண்டாய் பொருந்தக் கேள்நீ
நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா என்றும்
நுந்தாத வொண்சுடரே யென்றும் நாளும்
விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்
விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி
எண்ணரிய திருநாம முடையா யென்றும்
எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே.
6.031.4
நெஞ்சமே! புண்ணியமும் அதற்கு வாயிலாகிய நல்ல வழிகளும் ஆகியவற்றை எல்லாம் நான் கூறக்கூர்ந்து கேள். பூணூல் அணிந்த மார்பனே! தூண்ட வேண்டாத விளக்கே! தேவர்களும் நால்தேவங்களும் தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் ஒன்று சேர்ந்தாலும் கணக்கிடமுடியாத திருநாமங்களை உடையவனே! அழகிய ஆரூரனே! என்று பலகாலும் துதிப்பாயாக.
2399 இழைத்தநா ளெல்லை கடப்ப தென்றால்
இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப்
பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும்
பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்
அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்
அணியாரூர் இடங்கொண்ட அழகா என்றும்
குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே
குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே.
6.031.5
நெஞ்சே! இவ்வுடம்போடு கூடி வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட நாள்களின் அளவைப் பிறவிக்கு வித்தாகாத வகையில் தாண்ட வேண்டுமென்றால இரவும் நடுப்பகலும் எம் பெருமானைத் துதித்துவாழ்த்தித் தவறு செய்தனவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு அருள் செய்யும் பெரியோனே! தலைக்கோலம் உடையவனே! நீலகண்டனே! எனப் பலகாலும் கூப்பிட வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள் நான் உனக்குப் பாதுகாவலாக இருக்கிறேன். ஆரூர் உறையும் அழகா! என்றும் சுருண்ட சடையை உடைய இளையோனே! என்றும் கூப்பிடு. உனக்கு இவ்வாறு உபதேசித்துவிட்டதனால் இனி என்மேல் உனக்கு உய்யும் வழியைக் காட்டவில்லை என்ற குற்றம் ஏற்படாது. செயற்படாமல் வாளா இருந்தால் குற்றம் உன்மேலதே.
2400 நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்
நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச்
சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றும்
சிவலோக நெறிதந்த சிவனே யென்றும்
பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்
புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத்
தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்
திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே.
6.031.6
நெஞ்சே! அழிக்கமுடியாத பல பிறவிகளையும் போக்கும் வழியை ஆராய்ந்து பார்த்து இவ்வழியைக் கண்டுள்ளேன். நாடோறும் காளை எழுதிய கொடியை உடையவனே! சிவலோகம் அடையும் வழியைக் காட்டிய சிவனே! தாமரையை உறைவிடமாக விரும்பும் பிரமனும் கருடனை இவரும் தாமரைக் கண்ணனாகிய திருமாலும் வழிபட்டு வாழ்த்துமாறு தீப்பிழம்பாய்க் காட்சி வழங்குபவனே! செல்வம் நிறையும் திருவாரூரா என்று பலகாலும் 'நெஞ்சே நீ நினை'.
2401 பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்
பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்
சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்
சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்
உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும்
புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்
பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே.
6.031.7
நெஞ்சே! நான் சொல்வதனைக் கேட்பாயாக. நம்மைப் பற்றி நிற்கும் பாவங்களை அழிக்க வேண்டினால், மேம்பட்ட வழிக்குச் செல்ல வேண்டும் தன்மையை விரும்பினால், உன்னைச் சுற்றி நிற்கும் வினைகளைப் போக்க நீ விரும்பினால், செயலற்று இராமல் நான்சொல்வதைக் கேள், எனக்கு உறவினரும் துணையும் நீயே, உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் பரம்பொருளாக நினையேன். புற்றில் வாழத்தக்கபாம்பினைக் கச்சாக அணிந்த தூயோனே! சோலைகள் சூழ்ந்த ஆரூரனே! என்று எம் பெருமானைப் பலகாலும் துதிப்பாயாக.
2402 மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக
வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதீ யென்றும்
அம்மானே ஆரூரெம் ஐயா வென்றும்
துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்
சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக்
கதிர்மதிசேர் சென்னியனே கால காலா
கற்பகமே யென்றென்றே கதறா நில்லே.
6.031.8
நெஞ்சமே! உனக்குநான் நல்ல புத்தியைக் கொடுக்கிறேன். பிழைத்துப் போவதற்கு உரிய வழி இதுவே. தேவர்கள் தலைவனே! அரிய அமுதமே! ஆதியே! என்றும், தலைவனே! ஆரூரில் உள்ள எம் குரிசிலே என்றும், அவனைப் போற்றிக் கிட்டிய மலர்களை அவன் திருமேனி மீது தூவி, அவன் கோயிலை வலம் செய்து, தொண்டர்களையும் துதித்து, ஒளிவீசும் பிறை சேர்ந்த தலைவனே! காலனுக்கும் காலனே! கற்பகமே! என்றும் பலகாலும் கதறுவாயாக.
2403 பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே
பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா
தேசத் தொளிவிளக்கே தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட் டானா வென்றும்
நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி
நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்றிமையோ ரேறே யென்றும்
எம்பெருமா னென்றென்றே யேத்தா நில்லே.
6.031.9
நெஞ்சே! மேம்பட்ட சோதியே! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே! பாவத்தைப் போக்குபவனே! உலகுக்கே ஒளிதரும் விளக்கே! தேவதேவனே! திருவாரூர்த் திருமூலட்டானத்து உறையும் பெருமானே! தேவர்கள் தலைவனே! எம்பெருமானே! என்று அன்பைப் பெருக்கி அவன் முன் நின்று தியானம் செய்து நாளும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூசி நின்று அவன் பெருமையைப் பாடுவாயாக. இவ்வாறு செய்தால் உலகப் பற்றினை அடியோடு நீக்கிவிடலாம்.
2404 புலன்கள்ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலங்கொள்சடை முடியுடைய தலைவா என்றும்
தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும்
இலங்கையர்கோன் சிரம்நெரித்த இறைவா என்றும்
எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும்
நலங்கொளடி யென்தலைமேல் வைத்தா யென்றும்
நாடோறும் நவின்றேத்தாய் நன்மை யாமே.
6.031.10
நெஞ்சே! ஐம்புலன்களால் செயற்படுத்தப்பட்டுக் காலத்தைக் கழித்து, மிகக் தொலைவான இடங்களுக்கு அலையாமல், என்பக்கம் வந்துயான் சொல்வதனைக் கேள். கங்கையைச் சடையில் சூடியதலைவா! தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே! இராவணன் தலைகளை நெரித்த தலைவனே! அழகிய ஆரூரில் உறையும் எம் தந்தையே! உன் பல நலன்களும் கொண்ட திருவடிகளை என் தலைமேல் வைத்தவனே! என்று நாள் தோறும் கூறி அவனைத் துதிப்பாயாக. அச்செயலே நமக்கு நன்மை தருவதாகும்.
திருச்சிற்றம்பலம்
6.031.திருவாரூர் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். தேவியார் - கரும்பனையாளம்மை.
2395 இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ் சுடரொளியா யுள்விளங்கு சோதி யென்றுந் தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றுங் கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங் கலைமான் மறியேந்து கையா வென்றும் அடல்விடையாய் ஆரமுதே ஆதி யென்றும் ஆரூரா வென்றென்றே அலறா நில்லே. 6.031.1
நெஞ்சே! நீ துன்பங்கள் ஒழியும் பகையை ஆராய்வாயாயின் இங்கே வந்து நான் சொல்வதனைக் கேள். செந்நிறம் பொருந்திய சடையில் கங்கையை அணிந்தவனே! ஞானஒளியாய் உள்ளத்தில் விளங்குபவனே! திருநீறணிந்த தோளனே! கடல்விடம் உண்டு கறுத்த கழுத்தினனே! மான் குட்டியை ஏந்திய கையனே! ஆற்றலுடைய காளை வாகனனே! கிட்டுதற்கரிய அமுதே! எல்லோருக்கும் முற்பட்டவனே! ஆரூரனே! எனப்பலகாலும் அழைப்பாயாக.
2396 செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ் சிந்தித்தே னெஞ்சமே திண்ண மாகப் பொடியேறு திருமேனி யுடையா யென்றும் புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும் அடியேனை யாளாகக் கொண்டா யென்றும் அம்மானே ஆருரெம் மரசே யென்றும் கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங் கற்பகமே யென்றென்றே கதறா நில்லே. 6.031.2
நெஞ்சமே! துன்பம்மிக்க தீவினைகள் நீங்கும் வழியை எண்ணுவாயானால் உறுதியாகத் திருநீறணிந்த திருமேனி உடையவனே! இந்திரனுடைய தோள்களை நீக்கிய தூயனே! அடியேனை அடிமையாகக் கொண்டவனே! தலைவனே! ஆரூரில் உள்ள எம் அரசனே! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சியில் உள்ள ஏகம்பனே! கற்பகமே! என்று பலகாலும் அழைப்பாயாக.
2397 நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே. 6.031.3
நெஞ்சே! நீ தடுமாற்றம் நீங்கி நிலையாக வாழ நினைப்பாயானால் நாள்தோறும் எம்பெருமானுடைய கோயிலுக்குச் சென்று பொழுது விடிவதன் முன் கோயிலைப் பெருக்கி மெழுகிப் பூ மாலையைக் கட்டி எம் பெருமானுக்குச் சாத்தி அவனைத் துதித்துப் புகழ்ந்து பாடித் தலையால் முழுமையாக வணங்கி மகிழ்ச்சியாய்க் கூத்தாடிச் 'சங்கரா நீ வெல்க வாழ்க!' என்றும் 'கங்கையைச் சிவந்த சடையில் வைத்த ஆதிப்பொருளே!' என்றும் 'ஆரூரா!' என்றும் பலகாலும் அலறி அழைப்பாயாக.
2398 புண்ணியமும் நன்னெறியும் ஆவ தெல்லாம் நெஞ்சமே யிதுகண்டாய் பொருந்தக் கேள்நீ நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா என்றும் நுந்தாத வொண்சுடரே யென்றும் நாளும் விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி எண்ணரிய திருநாம முடையா யென்றும் எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே. 6.031.4
நெஞ்சமே! புண்ணியமும் அதற்கு வாயிலாகிய நல்ல வழிகளும் ஆகியவற்றை எல்லாம் நான் கூறக்கூர்ந்து கேள். பூணூல் அணிந்த மார்பனே! தூண்ட வேண்டாத விளக்கே! தேவர்களும் நால்தேவங்களும் தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் ஒன்று சேர்ந்தாலும் கணக்கிடமுடியாத திருநாமங்களை உடையவனே! அழகிய ஆரூரனே! என்று பலகாலும் துதிப்பாயாக.
2399 இழைத்தநா ளெல்லை கடப்ப தென்றால் இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப் பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும் அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய் அணியாரூர் இடங்கொண்ட அழகா என்றும் குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சே குற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே. 6.031.5
நெஞ்சே! இவ்வுடம்போடு கூடி வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட நாள்களின் அளவைப் பிறவிக்கு வித்தாகாத வகையில் தாண்ட வேண்டுமென்றால இரவும் நடுப்பகலும் எம் பெருமானைத் துதித்துவாழ்த்தித் தவறு செய்தனவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு அருள் செய்யும் பெரியோனே! தலைக்கோலம் உடையவனே! நீலகண்டனே! எனப் பலகாலும் கூப்பிட வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள் நான் உனக்குப் பாதுகாவலாக இருக்கிறேன். ஆரூர் உறையும் அழகா! என்றும் சுருண்ட சடையை உடைய இளையோனே! என்றும் கூப்பிடு. உனக்கு இவ்வாறு உபதேசித்துவிட்டதனால் இனி என்மேல் உனக்கு உய்யும் வழியைக் காட்டவில்லை என்ற குற்றம் ஏற்படாது. செயற்படாமல் வாளா இருந்தால் குற்றம் உன்மேலதே.
2400 நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச் சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றும் சிவலோக நெறிதந்த சிவனே யென்றும் பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப் புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத் தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந் திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே. 6.031.6
நெஞ்சே! அழிக்கமுடியாத பல பிறவிகளையும் போக்கும் வழியை ஆராய்ந்து பார்த்து இவ்வழியைக் கண்டுள்ளேன். நாடோறும் காளை எழுதிய கொடியை உடையவனே! சிவலோகம் அடையும் வழியைக் காட்டிய சிவனே! தாமரையை உறைவிடமாக விரும்பும் பிரமனும் கருடனை இவரும் தாமரைக் கண்ணனாகிய திருமாலும் வழிபட்டு வாழ்த்துமாறு தீப்பிழம்பாய்க் காட்சி வழங்குபவனே! செல்வம் நிறையும் திருவாரூரா என்று பலகாலும் 'நெஞ்சே நீ நினை'.
2401 பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில் சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம் உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும் உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும் புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும் பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே. 6.031.7
நெஞ்சே! நான் சொல்வதனைக் கேட்பாயாக. நம்மைப் பற்றி நிற்கும் பாவங்களை அழிக்க வேண்டினால், மேம்பட்ட வழிக்குச் செல்ல வேண்டும் தன்மையை விரும்பினால், உன்னைச் சுற்றி நிற்கும் வினைகளைப் போக்க நீ விரும்பினால், செயலற்று இராமல் நான்சொல்வதைக் கேள், எனக்கு உறவினரும் துணையும் நீயே, உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் பரம்பொருளாக நினையேன். புற்றில் வாழத்தக்கபாம்பினைக் கச்சாக அணிந்த தூயோனே! சோலைகள் சூழ்ந்த ஆரூரனே! என்று எம் பெருமானைப் பலகாலும் துதிப்பாயாக.
2402 மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போக வழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம் அதிபதியே ஆரமுதே ஆதீ யென்றும் அம்மானே ஆரூரெம் ஐயா வென்றும் துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச் சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக் கதிர்மதிசேர் சென்னியனே கால காலா கற்பகமே யென்றென்றே கதறா நில்லே. 6.031.8
நெஞ்சமே! உனக்குநான் நல்ல புத்தியைக் கொடுக்கிறேன். பிழைத்துப் போவதற்கு உரிய வழி இதுவே. தேவர்கள் தலைவனே! அரிய அமுதமே! ஆதியே! என்றும், தலைவனே! ஆரூரில் உள்ள எம் குரிசிலே என்றும், அவனைப் போற்றிக் கிட்டிய மலர்களை அவன் திருமேனி மீது தூவி, அவன் கோயிலை வலம் செய்து, தொண்டர்களையும் துதித்து, ஒளிவீசும் பிறை சேர்ந்த தலைவனே! காலனுக்கும் காலனே! கற்பகமே! என்றும் பலகாலும் கதறுவாயாக.
2403 பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சே பரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா தேசத் தொளிவிளக்கே தேவ தேவே திருவாரூர்த் திருமூலட் டானா வென்றும் நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கி நித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று ஏசற்று நின்றிமையோ ரேறே யென்றும் எம்பெருமா னென்றென்றே யேத்தா நில்லே. 6.031.9
நெஞ்சே! மேம்பட்ட சோதியே! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே! பாவத்தைப் போக்குபவனே! உலகுக்கே ஒளிதரும் விளக்கே! தேவதேவனே! திருவாரூர்த் திருமூலட்டானத்து உறையும் பெருமானே! தேவர்கள் தலைவனே! எம்பெருமானே! என்று அன்பைப் பெருக்கி அவன் முன் நின்று தியானம் செய்து நாளும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூசி நின்று அவன் பெருமையைப் பாடுவாயாக. இவ்வாறு செய்தால் உலகப் பற்றினை அடியோடு நீக்கிவிடலாம்.
2404 புலன்கள்ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம்புறமே திரியாதே போது நெஞ்சே சலங்கொள்சடை முடியுடைய தலைவா என்றும் தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தா யென்றும் இலங்கையர்கோன் சிரம்நெரித்த இறைவா என்றும் எழிலாரூ ரிடங்கொண்ட எந்தா யென்றும் நலங்கொளடி யென்தலைமேல் வைத்தா யென்றும் நாடோறும் நவின்றேத்தாய் நன்மை யாமே. 6.031.10
நெஞ்சே! ஐம்புலன்களால் செயற்படுத்தப்பட்டுக் காலத்தைக் கழித்து, மிகக் தொலைவான இடங்களுக்கு அலையாமல், என்பக்கம் வந்துயான் சொல்வதனைக் கேள். கங்கையைச் சடையில் சூடியதலைவா! தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்தவனே! இராவணன் தலைகளை நெரித்த தலைவனே! அழகிய ஆரூரில் உறையும் எம் தந்தையே! உன் பல நலன்களும் கொண்ட திருவடிகளை என் தலைமேல் வைத்தவனே! என்று நாள் தோறும் கூறி அவனைத் துதிப்பாயாக. அச்செயலே நமக்கு நன்மை தருவதாகும்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|