LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-33

 

6.033.திருவாரூர் 
அரநெறிதிருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 
தேவியார் - கரும்பனையாளம்மை. 
2415 பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப்
பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்
கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்
காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
இருங்கனக மதிலாரூர் மூலத் தானத் 
தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்
அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
6.033.1
போரிடும் துதிக்கையை உடைய மத யானையின் தோலைப் போர்த்தியவனாய்ப் பூவணமும் வலஞ்சுழியும் உறைவிட மாகக் கொண்டவனாய்க் கருப்பங்கட்டியையும் அமுதையும் தேனையும் போன்ற இனியவனாய், காட்சிக்கு செஞ்சுடராய்ப் பொற்குன்றாய்ப் பெரிய பொன்மயமான மதில்களை உடைய ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளியவனாய், தேவர்கள் துதிக்கும் பெருந்தவத்தோனாய் உள்ள திருவாரூர் அரநெறியப்பனை அடைந்து அடியேன் நீக்கற்கரிய வினையாகிய நோயினைப் போக்கிக் கொண்ட திறம் நன்று.
2416 கற்பகமும் இருசுடரு மாயி னானைக்
காளத்தி கயிலாய மலையு ளானை
விற்பயிலும் மதனழிய விழித்தான் தன்னை
விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னைப்
பொற்பமரும் பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியஎம் பெருமானைப் பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
6.033.2
கற்பகமும், சோம சூரியருமாய் ஆகிக் காளத்தி மலையிலும் கயிலாயத்திலும் உறைந்து, விற்றொழிலில் பழகிய மன்மதன் நீறாகுமாறு நெற்றிக்கண்ணைவிழித்து, அருச்சுனன் முன்வேடனாய்க் காட்சியளித்து, அழகிய சோலைகள் சூழ்ந்த ஆரூர் மூலட்டானத்திலே பொருந்திய எம்பெருமானாய்ப் பகைவர்கள் உள்ளத்தே சூனியமாய் உள்ளவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2417 பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்
பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை
வேதியனைத் தன்னடியார்க் கௌயான் தன்னை
மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போதியலும் பொழிலாரூர் மூலட் டானம்
புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்
ஆதியனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
6.033.3
பார்வதி பாகனாய்க் கங்கையை இருத்திய முடியினனாய்ப் பாசூரிலும் பரங்குன்றிலும் விரும்பி உறைபவனாய், வேதியனாய்த் தன் அடியார்களுக்கு எளியவனாய், மெய்ஞ்ஞான விளக்காய், நறுமணம் கமழும் மலர்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உள்ள புற்றிடங்கொண்ட பெருமானாய்த் தன்னைத் துதிப்பவர்கள் தலைவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே.
2418 நந்திபணி கொண்டருளும் நம்பன் தன்னை
நாகேச் சரமிடமா நண்ணி னானைச்
சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்
தத்துவனைச் சக்கரம்மாற் கீந்தான் தன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூலட் டானம்
இடங்கொண்ட பெருமானை யிமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
6.033.4
நந்திதேவருடைய முதற்பெருங்காவலை ஏற்றுக்கொண்ட தலைவனாய், நாகேச்சுரத்தில் உறைபவனாய், காலை நண்பகல் மாலை என்ற முப்போதும் வானவர்கள் பூக்களால் அலங்கரித்துத் துதிக்கும் மெய்ப் பொருளாய், திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய், சந்திரன் நுழைந்து செல்லுமாறு வானளாவி உயர்ந்த சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உறையும் பெருமானாய், தேவர்கள் போற்றும் அந்தணனாய் உள்ள ஆரூரில் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2419 சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற்றானைச்
சோதிலிங்கத் தூங்கானை மாடத்தானை
விடக்கிடுகா டிடமாக வுடையான் தன்னை
மிக்கரண மெரியூட்ட வல்லான்தன்னை
மடற்குலவு பொழிலாரூர் மூலட் டானம்
மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
6.033.5
பவளம் போல ஒளி வீசும் செம்மேனியில் வெண்ணீறு அணிந்தவனைச் சோதிலிங்கமாக உள்ளவனைப் பெண்ணாகடத்துத் தூங்கானைமாடத்து உறைபவனைப் பிணங்கள் இடும் சுடுகாட்டை உறைவிடமாக உடையவனை, தீமை மிக்க முப்புரங்களை எரித்தவனை, பூக்களின் இதழ்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் நிலைபெற்ற எம்பெருமானை, தன்னை மதியாதவர்களுடைய வேள்வியை. அழித்தவனை, அரநெறியில் உறையும் தலைவனை இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய பெருமானை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2420 தாயவனை யெவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்
தகுதில்லை நடம்பயிலும் தலைவன் தன்னை
மாயவனும் மலரவனும் வானோ ரேத்த
மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் தன்னை
மேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம்
விரும்பியவெம் பெருமானை யெல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
6.033.6
எல்லா உயிர்களுக்கும் தாயாய், தனக்கு ஒப்பு இல்லாத திருத்தலமாகிய தில்லையில் கூத்தனாய், திருமாலும், பிரமனும் ஏனைய வானவரும் துதிக்குமாறு அலைகள் மோதி மீளும் கடலின் நஞ்சினை உண்டு மகிழ்ந்த வலியவனாய், எல்லா உயிர்களையும் விரும்பியவனாய், சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை விரும்பிய எம்பெருமானாய், எல்லாப் பொருள்களிலும் தொடக்கத்தி லேயே பரவி அவற்றைச் செயற்படுத்துபவனாய் உள்ள ஆரூரில் அர நெறியில் உறையும் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2421 பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப்
புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை
மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை
மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை
இருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத்
தினிதமரும் பெருமானை யிமையோ ரேத்த
அருளியனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
6.033.7
பொருள்களை உடைய சொற்களாக அமைந்தவனாய், புகலூரிலும் புறம்பயத்திலும் விரும்பி உறைபவனாய், மயக்கம் பொருந்திய மனத்தவருக்கு மயக்கம் போக்கும் அமுதமாய், மறைக்காட்டிலும், சாய்க்காட்டிலும் உறைபவனாய், மரச்செறிவால் இருண்ட பெரிய பொழில்களை உடைய ஆரூர் மூலட்டானத்தில் மகிழ்வாக அமர்ந்திருக்கும் பெருமானாய்த் தேவர்கள் துதிக்க அவர்களுக்கு அருளியவனாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2422 காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக்
காரோணங் கழிப்பாலை மேயான் தன்னைப்
பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் தன்னைப்
பணியுகந்த அடியார்கட் கினியான் தன்னைச்
சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ்
சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற
ஆலவனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
6.033.8
காலனைக் காலால் வெகுண்ட கடவுளாய், குடந்தை நாகைக் காரோணங்களையும் கழிப்பாலையையும் விரும்பி உறைபவனாய், உபமன்னியுவாகிய பாலனுக்காகப் பாற்கடலையே அளித்தவனாய், தன் திருத்தொண்டில் மகிழ்ந்து ஈடுபட்ட அடியவர்களுக்கு இனியனாய், சேல்மீன்கள் தாவித் திரியும் வயல்களை உடைய திருவாரூர் மூலட்டானத்தில் சேர்ந்திருக்கும் பெருமானாய், பவளத்தின் ஒளியைத் தருகின்ற ஆலம்விழுது போன்ற சடையை உடையவனாய் உள்ள ஆரூரின் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.
2423 ஒப்பொருவ ரில்லாத ஒருவன் தன்னை
ஓத்தூரும் உறையூரும் மேவி னானை
வைப்பவனை மாணிக்கச் சோதி யானை
மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானைப்
மெய்ப் பொருள் ஆய் அடியேனது உள்ளே நின்ற
வினை இலியை, திரு மூலட்டானம் மேய
அப் பொன்னை, அரநெறியில் அப்பன் தன்னை,
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே!.
6.033.9
தன்னை ஒப்பவர் வேறு யாவரும் இல்லாத ஒப்பற்றவனாய், ஓத்தூரையும், உறையூரையும் விரும்பி உறைபவனாய், நமக்குச் சேமநிதிபோல்வானாய். மாணிக்கத்தின் ஒளியை உடைய வனாய், காற்றும் தீயும், ஆகாயமும் நீரும் மண்ணும் ஆகிய ஐம்பூதங்களாகவும் உள்ளவனாய், ......
2424 பகலவன்தன் பல்லுகுத்த படிறன் தன்னைப்
பராய்த் துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை
இகலவனை இராவணனை யிடர்செய் தானை
யேத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்
புகழ்நிலவு பொழிலாரூர் மூலட் டானம்
பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியி லப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
6.033.10
சூரியன் ஒருவனுடைய பற்களைத் தகர்த்த வஞ்சகனாய், பராய்த்துறையையும் பைஞ்ஞீலியையும் உறைவிடங்களாகக் கருதியவனாய், மாறுபட்ட இராவணனைத் துன்புறுத்தியவனாய்த் தன்னைத் துதியாதவர் மனத்தினில் இருளாக இருப்பவனாய்ப் புகழ் பொருந்திய சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை உறைவிடமாகக் கொண்ட எம்பெருமானாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே.
திருச்சிற்றம்பலம்

 

6.033.திருவாரூர் 

அரநெறிதிருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 

தேவியார் - கரும்பனையாளம்மை. 

 

 

2415 பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப்

பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்

கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்

காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை

இருங்கனக மதிலாரூர் மூலத் தானத் 

தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும்

அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.033.1

 

  போரிடும் துதிக்கையை உடைய மத யானையின் தோலைப் போர்த்தியவனாய்ப் பூவணமும் வலஞ்சுழியும் உறைவிட மாகக் கொண்டவனாய்க் கருப்பங்கட்டியையும் அமுதையும் தேனையும் போன்ற இனியவனாய், காட்சிக்கு செஞ்சுடராய்ப் பொற்குன்றாய்ப் பெரிய பொன்மயமான மதில்களை உடைய ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளியவனாய், தேவர்கள் துதிக்கும் பெருந்தவத்தோனாய் உள்ள திருவாரூர் அரநெறியப்பனை அடைந்து அடியேன் நீக்கற்கரிய வினையாகிய நோயினைப் போக்கிக் கொண்ட திறம் நன்று.

 

 

2416 கற்பகமும் இருசுடரு மாயி னானைக்

காளத்தி கயிலாய மலையு ளானை

விற்பயிலும் மதனழிய விழித்தான் தன்னை

விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னைப்

பொற்பமரும் பொழிலாரூர் மூலட் டானம்

பொருந்தியஎம் பெருமானைப் பொருந்தார் சிந்தை

அற்புதனை அரநெறியி லப்பன் தன்னை

யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.033.2

 

  கற்பகமும், சோம சூரியருமாய் ஆகிக் காளத்தி மலையிலும் கயிலாயத்திலும் உறைந்து, விற்றொழிலில் பழகிய மன்மதன் நீறாகுமாறு நெற்றிக்கண்ணைவிழித்து, அருச்சுனன் முன்வேடனாய்க் காட்சியளித்து, அழகிய சோலைகள் சூழ்ந்த ஆரூர் மூலட்டானத்திலே பொருந்திய எம்பெருமானாய்ப் பகைவர்கள் உள்ளத்தே சூனியமாய் உள்ளவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.

 

 

2417 பாதியொரு பெண்முடிமேற் கங்கை யானைப்

பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை

வேதியனைத் தன்னடியார்க் கௌயான் தன்னை

மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்

போதியலும் பொழிலாரூர் மூலட் டானம்

புற்றிடங்கொண் டிருந்தானைப் போற்றுவார்கள்

ஆதியனை அரநெறியில் அப்பன் தன்னை

யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.033.3

 

  பார்வதி பாகனாய்க் கங்கையை இருத்திய முடியினனாய்ப் பாசூரிலும் பரங்குன்றிலும் விரும்பி உறைபவனாய், வேதியனாய்த் தன் அடியார்களுக்கு எளியவனாய், மெய்ஞ்ஞான விளக்காய், நறுமணம் கமழும் மலர்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உள்ள புற்றிடங்கொண்ட பெருமானாய்த் தன்னைத் துதிப்பவர்கள் தலைவனாய் உள்ள அரநெறியில் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே.

 

 

2418 நந்திபணி கொண்டருளும் நம்பன் தன்னை

நாகேச் சரமிடமா நண்ணி னானைச்

சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்

தத்துவனைச் சக்கரம்மாற் கீந்தான் தன்னை

இந்துநுழை பொழிலாரூர் மூலட் டானம்

இடங்கொண்ட பெருமானை யிமையோர் போற்றும்

அந்தணனை அரநெறியில் அப்பன் தன்னை

யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.033.4

 

  நந்திதேவருடைய முதற்பெருங்காவலை ஏற்றுக்கொண்ட தலைவனாய், நாகேச்சுரத்தில் உறைபவனாய், காலை நண்பகல் மாலை என்ற முப்போதும் வானவர்கள் பூக்களால் அலங்கரித்துத் துதிக்கும் மெய்ப் பொருளாய், திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய், சந்திரன் நுழைந்து செல்லுமாறு வானளாவி உயர்ந்த சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் உறையும் பெருமானாய், தேவர்கள் போற்றும் அந்தணனாய் உள்ள ஆரூரில் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.

 

 

2419 சுடர்ப்பவளத் திருமேனி வெண்ணீற்றானைச்

சோதிலிங்கத் தூங்கானை மாடத்தானை

விடக்கிடுகா டிடமாக வுடையான் தன்னை

மிக்கரண மெரியூட்ட வல்லான்தன்னை

மடற்குலவு பொழிலாரூர் மூலட் டானம்

மன்னியவெம் பெருமானை மதியார் வேள்வி

அடர்த்தவனை அரநெறியில் அப்பன் தன்னை

யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.033.5

 

  பவளம் போல ஒளி வீசும் செம்மேனியில் வெண்ணீறு அணிந்தவனைச் சோதிலிங்கமாக உள்ளவனைப் பெண்ணாகடத்துத் தூங்கானைமாடத்து உறைபவனைப் பிணங்கள் இடும் சுடுகாட்டை உறைவிடமாக உடையவனை, தீமை மிக்க முப்புரங்களை எரித்தவனை, பூக்களின் இதழ்கள் மிக்க சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தில் நிலைபெற்ற எம்பெருமானை, தன்னை மதியாதவர்களுடைய வேள்வியை. அழித்தவனை, அரநெறியில் உறையும் தலைவனை இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய பெருமானை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.

 

 

2420 தாயவனை யெவ்வுயிர்க்குந் தன்னொப் பில்லாத்

தகுதில்லை நடம்பயிலும் தலைவன் தன்னை

மாயவனும் மலரவனும் வானோ ரேத்த

மறிகடல்நஞ் சுண்டுகந்த மைந்தன் தன்னை

மேயவனைப் பொழிலாரூர் மூலட் டானம்

விரும்பியவெம் பெருமானை யெல்லாம் முன்னே

ஆயவனை அரநெறியில் அப்பன் தன்னை

யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.033.6

 

  எல்லா உயிர்களுக்கும் தாயாய், தனக்கு ஒப்பு இல்லாத திருத்தலமாகிய தில்லையில் கூத்தனாய், திருமாலும், பிரமனும் ஏனைய வானவரும் துதிக்குமாறு அலைகள் மோதி மீளும் கடலின் நஞ்சினை உண்டு மகிழ்ந்த வலியவனாய், எல்லா உயிர்களையும் விரும்பியவனாய், சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை விரும்பிய எம்பெருமானாய், எல்லாப் பொருள்களிலும் தொடக்கத்தி லேயே பரவி அவற்றைச் செயற்படுத்துபவனாய் உள்ள ஆரூரில் அர நெறியில் உறையும் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.

 

 

2421 பொருளியல்நற் சொற்பதங்க ளாயி னானைப்

புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை

மருளியலுஞ் சிந்தையர்க்கு மருந்து தன்னை

மறைக்காடுஞ் சாய்க்காடும் மன்னி னானை

இருளியல்நற் பொழிலாரூர் மூலட் டானத்

தினிதமரும் பெருமானை யிமையோ ரேத்த

அருளியனை அரநெறியி லப்பன் தன்னை

யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.033.7

 

  பொருள்களை உடைய சொற்களாக அமைந்தவனாய், புகலூரிலும் புறம்பயத்திலும் விரும்பி உறைபவனாய், மயக்கம் பொருந்திய மனத்தவருக்கு மயக்கம் போக்கும் அமுதமாய், மறைக்காட்டிலும், சாய்க்காட்டிலும் உறைபவனாய், மரச்செறிவால் இருண்ட பெரிய பொழில்களை உடைய ஆரூர் மூலட்டானத்தில் மகிழ்வாக அமர்ந்திருக்கும் பெருமானாய்த் தேவர்கள் துதிக்க அவர்களுக்கு அருளியவனாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.

 

 

2422 காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக்

காரோணங் கழிப்பாலை மேயான் தன்னைப்

பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் தன்னைப்

பணியுகந்த அடியார்கட் கினியான் தன்னைச்

சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ்

சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற

ஆலவனை அரநெறியி லப்பன் தன்னை

யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.033.8

 

  காலனைக் காலால் வெகுண்ட கடவுளாய், குடந்தை நாகைக் காரோணங்களையும் கழிப்பாலையையும் விரும்பி உறைபவனாய், உபமன்னியுவாகிய பாலனுக்காகப் பாற்கடலையே அளித்தவனாய், தன் திருத்தொண்டில் மகிழ்ந்து ஈடுபட்ட அடியவர்களுக்கு இனியனாய், சேல்மீன்கள் தாவித் திரியும் வயல்களை உடைய திருவாரூர் மூலட்டானத்தில் சேர்ந்திருக்கும் பெருமானாய், பவளத்தின் ஒளியைத் தருகின்ற ஆலம்விழுது போன்ற சடையை உடையவனாய் உள்ள ஆரூரின் அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே.

 

 

2423 ஒப்பொருவ ரில்லாத ஒருவன் தன்னை

ஓத்தூரும் உறையூரும் மேவி னானை

வைப்பவனை மாணிக்கச் சோதி யானை

மாருதமுந் தீவெளிநீர் மண்ணா னானைப்

மெய்ப் பொருள் ஆய் அடியேனது உள்ளே நின்ற

வினை இலியை, திரு மூலட்டானம் மேய

அப் பொன்னை, அரநெறியில் அப்பன் தன்னை,

யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே!.

6.033.9

 

  தன்னை ஒப்பவர் வேறு யாவரும் இல்லாத ஒப்பற்றவனாய், ஓத்தூரையும், உறையூரையும் விரும்பி உறைபவனாய், நமக்குச் சேமநிதிபோல்வானாய். மாணிக்கத்தின் ஒளியை உடைய வனாய், காற்றும் தீயும், ஆகாயமும் நீரும் மண்ணும் ஆகிய ஐம்பூதங்களாகவும் உள்ளவனாய், ......

 

 

2424 பகலவன்தன் பல்லுகுத்த படிறன் தன்னைப்

பராய்த் துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை

இகலவனை இராவணனை யிடர்செய் தானை

யேத்தாதார் மனத்தகத்துள் இருளா னானைப்

புகழ்நிலவு பொழிலாரூர் மூலட் டானம்

பொருந்தியவெம் பெருமானைப் போற்றார் சிந்தை

அகலவனை அரநெறியி லப்பன் தன்னை

யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.

6.033.10

 

  சூரியன் ஒருவனுடைய பற்களைத் தகர்த்த வஞ்சகனாய், பராய்த்துறையையும் பைஞ்ஞீலியையும் உறைவிடங்களாகக் கருதியவனாய், மாறுபட்ட இராவணனைத் துன்புறுத்தியவனாய்த் தன்னைத் துதியாதவர் மனத்தினில் இருளாக இருப்பவனாய்ப் புகழ் பொருந்திய சோலைகளை உடைய ஆரூர் மூலட்டானத்தை உறைவிடமாகக் கொண்ட எம்பெருமானாய் உள்ள அரநெறியின் அப்பனை அடைந்து அடியேன் அருவினைநோய் அறுத்தவாறே.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 21 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.