LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-39

 

6.039.திருமழபாடி 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர். 
தேவியார் - அழகாம்பிகையம்மை. 
2476 நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
6.039.1
மழபாடியில் உறையும் அழகன் திருநீறணிந்த அழகிய திருமேனியன். நெற்றிக்கண்ணன். பார்வதி பாகன். விடமுண்ட நீலகண்டன். காளையை இவர்ந்து எங்கும் திரிபவன். ஏழுலகமும் ஏழ்மலையும் ஆயவன். பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவன்
2477 கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
6.039.2
மழபாடி மன்னும் மணாளன் சென்னியில் கொக்கு இறகை அணிந்தவன். முல்லை நிலக்கடவுளாகிய திருமாலாகிய காளையை இவர்பவன். கூத்தாடுபவன். தான்கூத்தாடும்போது இடையில் கட்டிய சங்குமணி ஆடுதலை உடையவன். தீயினைஉள்ளங்கையில் ஏந்திய முதற்கடவுள். எலும்பையும், பாம்பையும் அணிந்தவன். அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவன். கங்கை அடங்கியிருக்கும் சடையை உடையவன்.
2478 நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
6.039.3
மழபாடி மன்னும் மணாளன், நெற்றிமேல் ஒற்றைக்கண்ணை உடையவன். பார்வதிபாகன். பாம்பைப் பிடித்து ஆட்டும் வஞ்சகன். பல ஊர்களிலும் பிச்சைஎடுக்கும் மேம்பட்டவன். பகைவர் மும்மதில்களையும் அழித்தவன். பிறையைச்சடையில் அணிந்தவன். எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாகிய அவன்குற்றமே இல்லாதவன்.
2479 அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
கொல்வேங்கைத் தோலொன்றுடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
6.039.4
மழபாடி மன்னும் மணாளன், அலைமிக்க கங்கையைச் சடையில் ஏற்றவன். உலகங்களுக்கு எல்லாம் புறத்தவனாக நிற்பவன். கொலைத் தொழிலைச் செய்யும் கூற்றுவனைத் தண்டித்தவன். தன்னால் கொல்லப்பட்ட வேங்கைத்தோலை ஆடையாக உடுத்தவன். வில்லால் முப்புரங்களை அழித்தவன். பிறையைச் சடையில் வைத்தவன். பார்வதியின் தலைவன்.
2480 உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய்
உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
நால்வேதம் ஆறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
மழபாடி மன்னு மணாளன் றானே.
6.039.5
மழபாடி மன்னும் மணாளன் இறந்தவர்களுடைய எலும்புகளை அணிந்தவன். மகிழ்வோடுபிறருக்கு அருள் செய்பவன். அழகு விளங்கும் சடையில் கொன்றையை அணிந்தவன். நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவன். இறந்தவர்களின் தலைகளை அணிகலனாக உடையவன். தேவர்களுக்குத் தலைவன். எங்கும் நிறைந்த தன் திருவடிகளை என் தலைமேல்வைத்தவன்.
2481 தாமரையான் தன்தலையைச் சாய்த்தான் கண்டாய்
தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்
புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
6.039.6
மழபாடி மன்னும் மணாளன், பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கிநற்பண்புடையவர்கள் நெஞ்சினைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பூத்தமலர்களால் எல்லோராலும் வழிபடப்படும் தூயவனாய், எல்லோரும் சார்தற்குரிய பொருளாய் இருப்பவனாய், அம்புகள் பொருந்தக் கொடிய வில்லை ஏந்தியவனாய், நீலகண்டத் தெய்வமாய் விலங்குத் தன்மை பொருந்தியமானைக் கையில் ஏந்தியவனாய் உள்ளான்.
2482 நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
6.039.7
மழபாடி மன்னும் மணாளன். நீராகவும் பெரிய மலைகளாகவும் ஆகி, ஒளியாகி, ஆகாயமும் ஆகி, நிலமாகி, ஏழ் கடலும் ஆகிச் சூரியனும் மேகமும் ஆகித் தன் அடியவர் எவரிடத்தும் அன்பனாய், நுட்பமான சக்தியாகி உலகுக்கு எல்லாம் காரணமாய்க் கச்சணிந்த அழகிய முலையை உடைய பார்வதி பாகனாய் உள்ளான்.
2483 பொன்னியலுந் திருமேனி உடையான் கண்டாய்
பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
6.039.8
மழபாடி மன்னும் மணாளன், பொன்னார் மேனியனாய்க் கொன்றைப் பூ மாலை அணிந்தவனாய், ஒளிவீசும் நீண்ட சடை உடையவனாய், யானைத் தோலைவிரும்பிப் போர்த்த வனாய்த் தன் தகுதியை உடையார் மற்றொருவர் இல்லாதானாய்ப் பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருளாய்த்தன்னோடு கூடிய பார்வதி பாகனாய் உள்ளான்.
2484 ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
6.039.9
மழபாடி மன்னும் மணாளன் ஆலகால விடத்தை உண்டு மகிழ்ந்த முதற்பொருளாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவனாய்த் தன் திருவடியால் கூற்றுவனை ஒறுத்தவனாய், கண்ணப்பருக்கு அருள் செய்த தலைமகனாய், பால்போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய், காளை மீது இவர்ந்து பிச்சைக்கு அலையும் பண்பினனாய்த் திருமாலும் அறிவதற்கரிய வலியவனாய் உள்ளான்.
2485 ஒருசுடராய் உலகேழு மானான் கண்டாய்
ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
இருசுடர்மீ தோடா இலங்கைக் கோனை
யீடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
6.039.10
மழபாடி மன்னும் மணாளன் ஒப்பற்ற பேரொளியாய், உலகு ஏழும் பரவி ஓங்காரத்தின் உட்பொருளாய் நின்று, ஞாயிறு முதலிய ஒளிப் பொருள்களாகவும், அவற்றிலிருந்து வெளிப்படும் ஒளியாகவும் அமைந்து, திரு விழாக்களிலும் வேள்விகளிலும் செவிமடுக்கப்படும் ஒலிவடிவினனாய், தன் மீது ஞாயிறும் திங்களும் வானில் ஊர்ந்து செல்வது இராவணனுடைய ஆணையால் தடுக்கப்பட்ட இலங்கையில் மன்னனாகிய அவனுடைய வலிமை அழியுமாறு அவன் இருபது தோள்களையும் நசுங்கச் செய்து ஒளிவிளங்கும் மாணிக்கக்குன்றாய் விளங்குகின்றான்.
திருச்சிற்றம்பலம்

 

6.039.திருமழபாடி 

திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர். 

தேவியார் - அழகாம்பிகையம்மை. 

 

 

2476 நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்

நெற்றிமே லொற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்

கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்

கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்

ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்

ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்

மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்

மழபாடி மன்னு மணாளன் றானே.

6.039.1

 

  மழபாடியில் உறையும் அழகன் திருநீறணிந்த அழகிய திருமேனியன். நெற்றிக்கண்ணன். பார்வதி பாகன். விடமுண்ட நீலகண்டன். காளையை இவர்ந்து எங்கும் திரிபவன். ஏழுலகமும் ஏழ்மலையும் ஆயவன். பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவன்

 

 

2477 கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்

கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்

அக்கரைமே லாட லுடையான் கண்டாய்

அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்

அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்

அடியார்கட் காரமுத மானான் கண்டாய்

மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்

மழபாடி மன்னு மணாளன் றானே.

6.039.2

 

  மழபாடி மன்னும் மணாளன் சென்னியில் கொக்கு இறகை அணிந்தவன். முல்லை நிலக்கடவுளாகிய திருமாலாகிய காளையை இவர்பவன். கூத்தாடுபவன். தான்கூத்தாடும்போது இடையில் கட்டிய சங்குமணி ஆடுதலை உடையவன். தீயினைஉள்ளங்கையில் ஏந்திய முதற்கடவுள். எலும்பையும், பாம்பையும் அணிந்தவன். அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவன். கங்கை அடங்கியிருக்கும் சடையை உடையவன்.

 

 

2478 நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்

நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்

பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்

பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்

செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்

செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்

மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்

மழபாடி மன்னு மணாளன் றானே.

6.039.3

 

  மழபாடி மன்னும் மணாளன், நெற்றிமேல் ஒற்றைக்கண்ணை உடையவன். பார்வதிபாகன். பாம்பைப் பிடித்து ஆட்டும் வஞ்சகன். பல ஊர்களிலும் பிச்சைஎடுக்கும் மேம்பட்டவன். பகைவர் மும்மதில்களையும் அழித்தவன். பிறையைச்சடையில் அணிந்தவன். எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாகிய அவன்குற்றமே இல்லாதவன்.

 

 

2479 அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்

அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்

கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்

கொல்வேங்கைத் தோலொன்றுடுத்தான் கண்டாய்

சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்

செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்

மலையார் மடந்தை மணாளன் கண்டாய்

மழபாடி மன்னு மணாளன் றானே.

6.039.4

 

  மழபாடி மன்னும் மணாளன், அலைமிக்க கங்கையைச் சடையில் ஏற்றவன். உலகங்களுக்கு எல்லாம் புறத்தவனாக நிற்பவன். கொலைத் தொழிலைச் செய்யும் கூற்றுவனைத் தண்டித்தவன். தன்னால் கொல்லப்பட்ட வேங்கைத்தோலை ஆடையாக உடுத்தவன். வில்லால் முப்புரங்களை அழித்தவன். பிறையைச் சடையில் வைத்தவன். பார்வதியின் தலைவன்.

 

 

2480 உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய்

உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்

நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்

நால்வேதம் ஆறங்க மானான் கண்டாய்

உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்

உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்

மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த

மழபாடி மன்னு மணாளன் றானே.

6.039.5

 

  மழபாடி மன்னும் மணாளன் இறந்தவர்களுடைய எலும்புகளை அணிந்தவன். மகிழ்வோடுபிறருக்கு அருள் செய்பவன். அழகு விளங்கும் சடையில் கொன்றையை அணிந்தவன். நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவன். இறந்தவர்களின் தலைகளை அணிகலனாக உடையவன். தேவர்களுக்குத் தலைவன். எங்கும் நிறைந்த தன் திருவடிகளை என் தலைமேல்வைத்தவன்.

 

 

2481 தாமரையான் தன்தலையைச் சாய்த்தான் கண்டாய்

தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்

பூமலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்

புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்

ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்

இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்

மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்

மழபாடி மன்னு மணாளன் றானே.

6.039.6

 

  மழபாடி மன்னும் மணாளன், பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கிநற்பண்புடையவர்கள் நெஞ்சினைத் தன் இருப்பிடமாகக் கொண்டு பூத்தமலர்களால் எல்லோராலும் வழிபடப்படும் தூயவனாய், எல்லோரும் சார்தற்குரிய பொருளாய் இருப்பவனாய், அம்புகள் பொருந்தக் கொடிய வில்லை ஏந்தியவனாய், நீலகண்டத் தெய்வமாய் விலங்குத் தன்மை பொருந்தியமானைக் கையில் ஏந்தியவனாய் உள்ளான்.

 

 

2482 நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்

நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்

பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்

பகலாகி வானாகி நின்றான் கண்டாய்

ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்

அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்

வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்

மழபாடி மன்னு மணாளன் றானே.

6.039.7

 

  மழபாடி மன்னும் மணாளன். நீராகவும் பெரிய மலைகளாகவும் ஆகி, ஒளியாகி, ஆகாயமும் ஆகி, நிலமாகி, ஏழ் கடலும் ஆகிச் சூரியனும் மேகமும் ஆகித் தன் அடியவர் எவரிடத்தும் அன்பனாய், நுட்பமான சக்தியாகி உலகுக்கு எல்லாம் காரணமாய்க் கச்சணிந்த அழகிய முலையை உடைய பார்வதி பாகனாய் உள்ளான்.

 

 

2483 பொன்னியலுந் திருமேனி உடையான் கண்டாய்

பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்

மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்

வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்

தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்

தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்

மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்

மழபாடி மன்னு மணாளன் றானே.

6.039.8

 

  மழபாடி மன்னும் மணாளன், பொன்னார் மேனியனாய்க் கொன்றைப் பூ மாலை அணிந்தவனாய், ஒளிவீசும் நீண்ட சடை உடையவனாய், யானைத் தோலைவிரும்பிப் போர்த்த வனாய்த் தன் தகுதியை உடையார் மற்றொருவர் இல்லாதானாய்ப் பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருளாய்த்தன்னோடு கூடிய பார்வதி பாகனாய் உள்ளான்.

 

 

2484 ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்

அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்

காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்

கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்

பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்

பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்

மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்

மழபாடி மன்னு மணாளன் றானே.

6.039.9

 

  மழபாடி மன்னும் மணாளன் ஆலகால விடத்தை உண்டு மகிழ்ந்த முதற்பொருளாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவனாய்த் தன் திருவடியால் கூற்றுவனை ஒறுத்தவனாய், கண்ணப்பருக்கு அருள் செய்த தலைமகனாய், பால்போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய், காளை மீது இவர்ந்து பிச்சைக்கு அலையும் பண்பினனாய்த் திருமாலும் அறிவதற்கரிய வலியவனாய் உள்ளான்.

 

 

2485 ஒருசுடராய் உலகேழு மானான் கண்டாய்

ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்

விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்

விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்

இருசுடர்மீ தோடா இலங்கைக் கோனை

யீடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்

மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்

மழபாடி மன்னு மணாளன் றானே.

6.039.10

 

  மழபாடி மன்னும் மணாளன் ஒப்பற்ற பேரொளியாய், உலகு ஏழும் பரவி ஓங்காரத்தின் உட்பொருளாய் நின்று, ஞாயிறு முதலிய ஒளிப் பொருள்களாகவும், அவற்றிலிருந்து வெளிப்படும் ஒளியாகவும் அமைந்து, திரு விழாக்களிலும் வேள்விகளிலும் செவிமடுக்கப்படும் ஒலிவடிவினனாய், தன் மீது ஞாயிறும் திங்களும் வானில் ஊர்ந்து செல்வது இராவணனுடைய ஆணையால் தடுக்கப்பட்ட இலங்கையில் மன்னனாகிய அவனுடைய வலிமை அழியுமாறு அவன் இருபது தோள்களையும் நசுங்கச் செய்து ஒளிவிளங்கும் மாணிக்கக்குன்றாய் விளங்குகின்றான்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 21 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.