|
||||||||
ஆறாம் திருமுறை-41 |
||||||||
6.041.திருநெய்த்தானம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.
2493 வகையெலா முடையாயும் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
பாசூ ரமர்ந்தாயும் நீயே யென்றும்
திகையெலாந் தொழச் செல்வாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.1
திருநெய்த்தானத்தில் உகந்தருளி உறையும் பெருமானே! செல்வர்க்கு உரிய கூறுபாடுகள் யாவும் உடைய நீ, உயர்ந்த கயிலை மலையை விரும்பி உறைவாய். உயர்வற உயர்நலம் யாவும் உடையாய், வெண்காடு, பாசூர் இவற்றை உறைவிடமாக விரும்புகிறாய். பகைகளை எல்லாம் போக்கி எமை ஆண்டாய். எண்திசையிலுள்ளாரும் உன்னை வழிபடுமாறு ஆங்கெல்லாம் செல்வாய் என்று உன்பண்பு நலன்களை நாங்கள் எடுத்துத் துதிக்கிறோம்.
2494 ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
கூர்த்த நடமாடி நீயே யென்றுங்
கோடிகா மேய குழகா என்றும்
பார்த்தற் கருள் செய்தாய் நீயே யென்றும்
பழையனூர் மேவிய பண்பா என்றும்
தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.2
நின்ற நெய்த்தானா! உனக்கு அடிமையாகப் பிணிக்கப்பட்ட அடியேனிடம் அன்பு உடையாய், பழைய கயிலாயம், கோடிகா பழையனூர் இவற்றில் உறைகின்றாய். நடனக்கலையின் நுட்பங்களெல்லாம் அமையக் கூத்தாடுகின்றாய். அருச்சுனனுக்கு அருள் செய்தாய். தூயவனும் சிவலோகநாதனுமாக உள்ளாய் என்று அடியோங்கள்நின்னை துதிக்கின்றோம்.
2495 அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும்
ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங்
காளத்திக் கற்பகமும் நீயே யென்றும்
சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுந்
சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றும்
செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.3
நின்ற நெய்த்தானா! நீ இரவாகவும் பகலாகவும் உள்ளாய். பழைய கயிலாயம், காளத்தி, சோற்றுத்துறை இவற்றை விரும்பி உறைவாய். கல்லாலின் கீழ் அமர்ந்தவனும், சொல்லும் பொருளுமாய் இருப்பவனும், நீயே. உலகில் எல்லா நிகழ்ச்சிகளும் நடப்பதற்கு உதவும் செல்வமாகவும் நீ உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2496 மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும்
வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும்
பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும்
பூத கணநாதன் நீயே யென்றும்
என்னா விரதத்தாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.4
நின்ற நெய்த்தானா! நீ வெள்ளிய கயிலை மலை, ஏகம்பம் தென்னூர் இவற்றில் விரும்பி உறைகின்றாய். மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதிபாகனாய், பொன்னை ஒத்து ஒளி வீசும் சடை முடியனாய்ப் பூதகணத் தலைவனாய் எம் நாவினில் இனிக்கின்ற சுவைப் பொருளாய் உள்ளாய் என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம்.
2497 முந்தி யிருந்தாயும் நீயே யென்றும்
முன்கயிலை மேவினாய் நீயே யென்றும்
நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும்
நடமாடி நள்ளாறன் நீயே யென்றும்
பந்திப் பரியாயும் நீயே யென்றும்
பைஞ்ஞீலீ மேவினாய் நீயே யென்றும்
சிந்திப் பரியாயும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.5
நின்ற நெய்த்தானா! கயிலை, நள்ளாறு பைஞ்ஞீலி என்ற தலங்களைக் கூத்தனாயநீ விரும்பி உறைகின்றாய். எல்லாப் பொருளுக்கும் முற்பட்டவனாய் நந்திதேவருக்கு அருள் செய்தவனாய், பாசத்தால் பிணிக்க ஒண்ணாதவனாய்ச் சிந்தையால் அணுக ஒண்ணாதவனாய் உள்ளாய் என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம்.
2498 தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்
ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும்
புக்காய ஏழுலகும் நீயே யென்றும்
புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும்
தெக்காரு மாகோணத் தானே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.6
நின்ற நெய்த்தானா! நீ மேம்பட்ட கயிலாயனாகவும் ஆக்கூரில் தான்தோன்றி ஈசனாகவும் புள்ளிருக்குவேளூர், தெற்கே உள்ள மாகோணம் இவற்றில் உறைபவனாகவும் உள்ளாய். தகுதியுடையவரான அடியாருக்கு நீயே துணையாகவும் எலும்பு மாலை அணிபவனாகவும் உயிர்கள் புகுந்து வாழும் ஏழுலகங்களாகவும் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2499 புகழும் பெருமையாய் நீயே யென்றும்
பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும்
இகழுந் தலையேந்தி நீயே யென்றும்
இராமேச் சுரத்தின்பன் நீயே யென்றும்
அகழும் மதிலுடையாய் நீயே யென்றும்
ஆலவாய் மேவினாய் நீயே யென்றும்
திகழும் மதிசூடி நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.7
நின்ற நெய்த்தானா! அழகிய கயிலை, இராமேச்சுரம் ஆலவாய் இவற்றில் உகந்து உறைபவனே! எல்லோரும் புகழும் பெருமையை உடையையாய், யாவரும் இகழும் மண்டையோட்டை உண்கலமாக ஏந்தியையாய், ஆலவாயில் அகழும் மதிலும் உடையையாய், விளங்கும் பிறை சூடியாய் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2500 வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும்
வானக் கயிலாயன் நீயே யென்றும்
கான நடமாடி நீயே யென்றுங்
கடவூரில் வீரட்டன் நீயே யென்றும்
ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும்
ஒற்றியூ ராரூராய் நீயே யென்றும்
தேனாய் அமுதானாய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.8
நின்ற நெய்த்தானா! நீ வானளாவிய கயிலாய னாய்க் கடவூர் வீரட்டனாய், ஒற்றியூரிலும் ஆரூரிலும் உறைபவனாய்த் தேனும் அமுதும் போல இனியனாய் உள்ளாய். தேவர்களுக்கும் முற்பட்ட வனாய், சுடுகாட்டில் கூத்தாடுபவனாய்த் தக்க யாகத்தில் ஈடுபட்ட தேவர்களின் தலைகளைப் போக்கினாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2501 தந்தைதா யில்லாதாய் நீயே யென்றுந்
தலையார் கயிலாயன் நீயே யென்றும்
எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்
ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
முந்திய முக்கணாய் நீயே யென்றும்
மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.9
நின்ற நெய்த்தானா! நீ எங்கள் உள்ளத்திலும் மேம்பட்ட கயிலாயம், ஏகம்பம், மூவலூர், தேனூர் என்ற திருத்தலங்களிலும் உறைகின்றாய். தந்தைதாய் இல்லாத பிறவாயாக்கைப் பெரியோனாய், யாவருக்கும் முற்பட்ட முக்கண்ணனாய், எங்களுக்குத் தாய் தந்தையாகவும் தலைவனாகவும் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2502 மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும்
வான்கயிலை மேவினாய் நீயே என்றும்
வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும்
வீழி மிழலையாய் நீயே யென்றும்
அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும்
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும்
நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே.
6.041.10
நின்ற நெய்த்தானா! நீ உயரிய கயிலை, வீழிமிழலை இவற்றில் உறைபவன். தன்விமானத்தை நிறுத்திக் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து, உலகப் பற்றைத் துறந்த அடியார்களுடைய பிறவிப் பிணியைப் போக்கி, அறவடிவினனாய், வானோர்க்கு அமுதம் வழங்கி, ஒருவராலும் பொறுக்க முடியாத விடத்தை உண்டு, பொறிவாயில் ஐந்து அவித்துள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
திருச்சிற்றம்பலம்
6.041.திருநெய்த்தானம் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நெய்யாடியப்பர். தேவியார் - வாலாம்பிகையம்மை.
2493 வகையெலா முடையாயும் நீயே யென்றும் வான்கயிலை மேவினாய் நீயே யென்றும் மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும் வெண்காடு மேவினாய் நீயே யென்றும் பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும் பாசூ ரமர்ந்தாயும் நீயே யென்றும் திகையெலாந் தொழச் செல்வாய் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.041.1
திருநெய்த்தானத்தில் உகந்தருளி உறையும் பெருமானே! செல்வர்க்கு உரிய கூறுபாடுகள் யாவும் உடைய நீ, உயர்ந்த கயிலை மலையை விரும்பி உறைவாய். உயர்வற உயர்நலம் யாவும் உடையாய், வெண்காடு, பாசூர் இவற்றை உறைவிடமாக விரும்புகிறாய். பகைகளை எல்லாம் போக்கி எமை ஆண்டாய். எண்திசையிலுள்ளாரும் உன்னை வழிபடுமாறு ஆங்கெல்லாம் செல்வாய் என்று உன்பண்பு நலன்களை நாங்கள் எடுத்துத் துதிக்கிறோம்.
2494 ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும் ஆதிக் கயிலாயன் நீயே யென்றும் கூர்த்த நடமாடி நீயே யென்றுங் கோடிகா மேய குழகா என்றும் பார்த்தற் கருள் செய்தாய் நீயே யென்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும் தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.041.2
நின்ற நெய்த்தானா! உனக்கு அடிமையாகப் பிணிக்கப்பட்ட அடியேனிடம் அன்பு உடையாய், பழைய கயிலாயம், கோடிகா பழையனூர் இவற்றில் உறைகின்றாய். நடனக்கலையின் நுட்பங்களெல்லாம் அமையக் கூத்தாடுகின்றாய். அருச்சுனனுக்கு அருள் செய்தாய். தூயவனும் சிவலோகநாதனுமாக உள்ளாய் என்று அடியோங்கள்நின்னை துதிக்கின்றோம்.
2495 அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும் ஆதிக் கயிலாயன் நீயே யென்றும் கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங் காளத்திக் கற்பகமும் நீயே யென்றும் சொல்லாய்ப் பொருளானாய் நீயே யென்றுந் சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றும் செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.041.3
நின்ற நெய்த்தானா! நீ இரவாகவும் பகலாகவும் உள்ளாய். பழைய கயிலாயம், காளத்தி, சோற்றுத்துறை இவற்றை விரும்பி உறைவாய். கல்லாலின் கீழ் அமர்ந்தவனும், சொல்லும் பொருளுமாய் இருப்பவனும், நீயே. உலகில் எல்லா நிகழ்ச்சிகளும் நடப்பதற்கு உதவும் செல்வமாகவும் நீ உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2496 மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும் வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும் பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும் பூத கணநாதன் நீயே யென்றும் என்னா விரதத்தாய் நீயே யென்றும் ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும் தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.041.4
நின்ற நெய்த்தானா! நீ வெள்ளிய கயிலை மலை, ஏகம்பம் தென்னூர் இவற்றில் விரும்பி உறைகின்றாய். மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதிபாகனாய், பொன்னை ஒத்து ஒளி வீசும் சடை முடியனாய்ப் பூதகணத் தலைவனாய் எம் நாவினில் இனிக்கின்ற சுவைப் பொருளாய் உள்ளாய் என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம்.
2497 முந்தி யிருந்தாயும் நீயே யென்றும் முன்கயிலை மேவினாய் நீயே யென்றும் நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும் நடமாடி நள்ளாறன் நீயே யென்றும் பந்திப் பரியாயும் நீயே யென்றும் பைஞ்ஞீலீ மேவினாய் நீயே யென்றும் சிந்திப் பரியாயும் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.041.5
நின்ற நெய்த்தானா! கயிலை, நள்ளாறு பைஞ்ஞீலி என்ற தலங்களைக் கூத்தனாயநீ விரும்பி உறைகின்றாய். எல்லாப் பொருளுக்கும் முற்பட்டவனாய் நந்திதேவருக்கு அருள் செய்தவனாய், பாசத்தால் பிணிக்க ஒண்ணாதவனாய்ச் சிந்தையால் அணுக ஒண்ணாதவனாய் உள்ளாய் என்று அடியோங்கள் நினைத்துத் துதிக்கின்றோம்.
2498 தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந் தலையார் கயிலாயன் நீயே யென்றும் அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும் ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும் புக்காய ஏழுலகும் நீயே யென்றும் புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும் தெக்காரு மாகோணத் தானே யென்றும் நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.041.6
நின்ற நெய்த்தானா! நீ மேம்பட்ட கயிலாயனாகவும் ஆக்கூரில் தான்தோன்றி ஈசனாகவும் புள்ளிருக்குவேளூர், தெற்கே உள்ள மாகோணம் இவற்றில் உறைபவனாகவும் உள்ளாய். தகுதியுடையவரான அடியாருக்கு நீயே துணையாகவும் எலும்பு மாலை அணிபவனாகவும் உயிர்கள் புகுந்து வாழும் ஏழுலகங்களாகவும் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2499 புகழும் பெருமையாய் நீயே யென்றும் பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும் இகழுந் தலையேந்தி நீயே யென்றும் இராமேச் சுரத்தின்பன் நீயே யென்றும் அகழும் மதிலுடையாய் நீயே யென்றும் ஆலவாய் மேவினாய் நீயே யென்றும் திகழும் மதிசூடி நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.041.7
நின்ற நெய்த்தானா! அழகிய கயிலை, இராமேச்சுரம் ஆலவாய் இவற்றில் உகந்து உறைபவனே! எல்லோரும் புகழும் பெருமையை உடையையாய், யாவரும் இகழும் மண்டையோட்டை உண்கலமாக ஏந்தியையாய், ஆலவாயில் அகழும் மதிலும் உடையையாய், விளங்கும் பிறை சூடியாய் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2500 வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும் வானக் கயிலாயன் நீயே யென்றும் கான நடமாடி நீயே யென்றுங் கடவூரில் வீரட்டன் நீயே யென்றும் ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும் ஒற்றியூ ராரூராய் நீயே யென்றும் தேனாய் அமுதானாய் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.041.8
நின்ற நெய்த்தானா! நீ வானளாவிய கயிலாய னாய்க் கடவூர் வீரட்டனாய், ஒற்றியூரிலும் ஆரூரிலும் உறைபவனாய்த் தேனும் அமுதும் போல இனியனாய் உள்ளாய். தேவர்களுக்கும் முற்பட்ட வனாய், சுடுகாட்டில் கூத்தாடுபவனாய்த் தக்க யாகத்தில் ஈடுபட்ட தேவர்களின் தலைகளைப் போக்கினாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2501 தந்தைதா யில்லாதாய் நீயே யென்றுந் தலையார் கயிலாயன் நீயே யென்றும் எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும் ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும் முந்திய முக்கணாய் நீயே யென்றும் மூவலூர் மேவினாய் நீயே யென்றும் சிந்தையாய்த் தேனூராய் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.041.9
நின்ற நெய்த்தானா! நீ எங்கள் உள்ளத்திலும் மேம்பட்ட கயிலாயம், ஏகம்பம், மூவலூர், தேனூர் என்ற திருத்தலங்களிலும் உறைகின்றாய். தந்தைதாய் இல்லாத பிறவாயாக்கைப் பெரியோனாய், யாவருக்கும் முற்பட்ட முக்கண்ணனாய், எங்களுக்குத் தாய் தந்தையாகவும் தலைவனாகவும் உள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
2502 மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும் வான்கயிலை மேவினாய் நீயே என்றும் வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும் வீழி மிழலையாய் நீயே யென்றும் அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும் யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும் நின்றநெய்த் தானாவென் நெஞ்சு ளாயே. 6.041.10
நின்ற நெய்த்தானா! நீ உயரிய கயிலை, வீழிமிழலை இவற்றில் உறைபவன். தன்விமானத்தை நிறுத்திக் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து, உலகப் பற்றைத் துறந்த அடியார்களுடைய பிறவிப் பிணியைப் போக்கி, அறவடிவினனாய், வானோர்க்கு அமுதம் வழங்கி, ஒருவராலும் பொறுக்க முடியாத விடத்தை உண்டு, பொறிவாயில் ஐந்து அவித்துள்ளாய் என்று அடியோங்கள் நின்னைத் துதிக்கின்றோம்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|