LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-51

 

6.051.திருவீழிமிழலை 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீழியழகர். 
தேவியார் - சுந்தரகுசாம்பிகை. 
2594 கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார்
கந்தமா தனத்துளார் காளத்தி யார்
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்
வக்கரையார் சக்கரம்மாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபா லமும்
அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழி மிழலையே மேவி னாரே.
6.051.1
திருமாலுக்குச் சக்கரம் ஈந்த பெருமானார், கூரிய நுனியினை உடைய சூலமும் மண்டையோடும் விளங்கும் திருக் கைகளை உடையவராய், காளையை இவர்ந்து வெயில்போல ஒளி வீசும் நீற்றினைப் பூசிக் கயிலை மலை, நாகை குடந்தைக் காரோணங்கள், கந்தமாதனம், காளத்தி, மயிலாடுதுறை, உஞ்சைனி இரும்பை அம்பர் மாகாளங்கள், வக்கரை இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2595 யூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்
பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
கேதிசரம் மேவினார் கேதா ரத்தார்
கெடில வடஅதிகை வீரட் டத்தார்
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
மழபாடி மேய மழுவா ளனார்
வேதிகுடி யுள்ளார் மீயச் சூரார்
வீழி மிழலையே மேவி னாரே.
6.051.2
கெடிலக்கரையிலுள்ள அதிகை வீரத்தானப் பெருமான் பெருமான் பெருந்துயரைத் தீர்த்து என்னை வாழச் செய்தவராய்ப் பொன்னார் மேனியில் நீறு பூசி, பூணூல் தரித்து, கோபம் மிக்க பாம்பினை அணிந்து, காதில் வெண்குழையை இட்டு, எல்லோருக்கும் நன்மை செய்பவராய், கேதீச்சரம், கேதாரம், மழு ஏந்தும் மழபாடி, வேதிகுடி, மீயச்சூர், இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2596 அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்
அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்
உண்ணா ழிகையார் உமையா ளோடும்
இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்
பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை
மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்
விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே.
6.051.3
இமையோர் பெருமானார் உமையாளோடும் தேவர்கள் எல்லோரும் விரும்பித் துதிக்க அண்ணாமலை, ஆரூர், அளப்பூர், அந்தணர்கள் மிக்க வைகல், மாடக் கோயிலின் மூலத்தானம், ஒற்றியூர், பெண்ணாகடத்துத் தூங்கானை மாடம், ஏமகூடம், பேராவூர் இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்து அடைந்தார்.
2597 வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி
நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்
பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்
பராய்த்துறையார்சிராப்பள்ளி யுள்ளார் பண்டோர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
யுரித்துரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி அஞ்சக் காட்டி
வீழி மிழலையே மேவி னாரே.
6.051.4
வேதம் ஓதும் நாவினராய், முன்பு வெண்கோட்டுக் கருங்களிறு ஒன்றை அது பேரொலி செய்யுமாறு பற்றி அதன் தோலை உரித்துப் போர்த்திய கோபமுற்ற வடிவினைப் பிறை போன்ற நெற்றியை உடைய உமாதேவி அஞ்சுமாறு காட்டி, வெண்காடு, செங் காட்டங்குடி, வெண்ணி, வேட்களம், வண்டுகள் பண்பாடும் பழனம், பராய்த்துறை, சிராப்பள்ளி இவற்றில் தங்கிய பெருமான் திருவீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2598 புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்
புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச்சிமேற்
றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்
கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்
கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்
விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ
வீழி மிழலையே மேவி னாரே.
6.051.5
தம்மைச் சுற்றிப் பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே கூத்து நிகழ்த்தும் பெருமான், புலித்தோலை உடுத்துக் கச்சிமேற்றளி, குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஏகம்பம், கழுமலம் இவற்றில் வீடுகள் தோறும் பிச்சைக்கு உலவும், முழு எலும்புக் கூட்டைத் தோளில் அணிந்த, வடிவத்தாராய், மலர் மாலையை அணிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் காளை வடிவம் எழுதப்பட்ட கொடியோடும் செல்வம் மிகும் வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2599 பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழிய்யார்
பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளார் ஏரார்
இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்
கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே.
6.051.6
கரும்பு போன்று இனிய உமாதேவியோடு பெரும்புலியூரை விரும்பிய பெருமான், அவ்வூர் மூலத்தானம், அரதைப்பெரும்பாழி, இரும்புதல், இரும்பூளை, இன்னம்பர், ஈங் கோய்மலை, கருகாவூர், கருப்பறியலூர், கரவீரம் என்ற இடங்களில் தங்கித் தம்மை விரும்பும் தேவர்கள் இரவும் பகலும் முன்னின்று புகழ்ந்து துதிக்குமாறு வீழிமிழலையையே விரும்பி அடைந்தார்.
2600 மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லிய்யார்
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகண் பல்பேய் சூழப்
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழி மிழலையே மேவி னாரே.
6.051.7
பழையனூர் ஆலங்காட்டுப் பெருமானார் மண்டை ஓட்டினை ஏந்திப் பறையைப்போல குழிந்த விழிகளை உடைய பேய்கள் பல சூழ, நீலகண்டராய், மார்க்கண்டேயனுக்குத் துன்பம் தரவந்த காலன் அழியுமாறு அவனை ஒறுத்து, மறைக்காடு, வலிவலம், வாய்மூர், வாழ்கொளிபுத்தூர், உஞ்சேனி இரும்பை அம்பர் மாகாளங்கள், கற்குடி, விற்குடி, கானப்பேர் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2601 அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர்
நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்
வீழி மிழலையே மேவி னாரே.
6.051.8
பெருமானார் விடத்தைத் தமக்கு அமுதமாக உண்டு நம்மைப் பாதுகாத்தமையால் நம்மால் விரும்பப்படுபவராய்க் கொடிய சொற்களை உடைய சமணசமயச் சிறையிலிருந்து என்னை மீட்டவராய், அஞ்சைக்களம், ஐயாறு, ஆரூர், பேரூர், அழுந்தூர், தஞ்சைத் தளிக்குளம், தக்களூர், சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலாகிய அயவந்தி, நாகேச்சரம், நாரையூர் இவற்றில் தங்கி, வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2602 கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்
கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்
தண்டலையார் தலையாலங் காட்டி லுள்ளார்
தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்
வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர்
வலஞ்சுழியார் வைகலின்மேல் மாடத் துள்ளார்
வெண்டலைகைக் கொண்ட விகிர்த வேடர்
வீழி மிழலையே மேவி னாரே.
6.051.9
வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திய, உலகத்தார் கொள்ளும் வேடங்களிலிருந்து வேறுபட்ட வேடத்தை உடைய பெருமானார், கொண்டல், கொண்டீச்சரம், கோவலூர் வீரட்டம், சோலைகள் சூழ்ந்த தலையாலங்காடு, தலைச்சங்காடு, காவிரி வண்டலொடு மணலைக் கரையில் சேர்க்கும் திருவலஞ்சுழி, வைகல் மாடக்கோயில் ஆகிய தலங்களில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2603 அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்
அரிபிரமர் இந்திரர்க்கும் அரிய ரானார்
புரிச்சந்தி ரத்துள்ளார் போகத் துள்ளார்
பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி
எரிச்சந்தி வேட்கு மிடத்தார் ஏம
கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்
விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்
வீழி மிழலையே மேவி னாரே.
6.051.10
திருமால் பிரமன், இந்திரன் என்பவர்களுக்குக் காண்டற்கு அரியராய் உள்ளாராய், உலகவர் நுகரும் எல்லா இன்பங்களிலும் கலந்திருப்பாராய், இமவான் மகளாகிய பார்வதியிடத்து விருப்பமுடையவராய், மூன்று சந்திகளிலும் தீயை ஓம்பும் வேள்விச் சாலைகளில் உகந்திருப்பவராய், தாம் சூடிய மாலைகளில் வண்டுகள் பாட ஏழிசையும் பொருந்திய பண்களைப் பாடுபவராய், உள்ளங்கையை விரித்து அதன்கண் அனலைஏந்தி ஆடும் வேடம் உடையவராய்ச் சிவபெருமான், அரிச்சந்திரம், அம்பர்மாகாளம், புரிச்சந்திரம், ஏமகூடம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.
2604 புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்
பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்
தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும்
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்
பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்
வீழி மிழலையே மேவி னாரே.
6.051.11
ஒளிவீசும் சடைமுடி உடையவராய், காளையை வாகனமாக உடையவராய், வலிமை மிக்க தன் ஆற்றலை நினைத்துக் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய மலைகளை ஒத்த தலைகளையும் தோள்களையும் தாள்களையும் பொற்கழலணிந்த தம் திருவடியின் ஒரு விரலை ஊன்றி மலையின் கீழ் நொறுங்குமாறு செய்து பின் அவனுக்கு அருள் செய்த உலக நாயகர், புன்கூர், புறம் பயம், புத்தூர், பூவணம், புலிவலம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விருப்புற்று வந்தடைந்தார்.
திருச்சிற்றம்பலம்

 

6.051.திருவீழிமிழலை 

திருத்தாண்டகம் 

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - வீழியழகர். 

தேவியார் - சுந்தரகுசாம்பிகை. 

 

 

2594 கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார்

கந்தமா தனத்துளார் காளத்தி யார்

மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்

வக்கரையார் சக்கரம்மாற் கீந்தார் வாய்ந்த

அயில்வாய சூலமுங் காபா லமும்

அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி

வெயிலாய சோதி விளங்கு நீற்றார்

வீழி மிழலையே மேவி னாரே.

6.051.1

 

  திருமாலுக்குச் சக்கரம் ஈந்த பெருமானார், கூரிய நுனியினை உடைய சூலமும் மண்டையோடும் விளங்கும் திருக் கைகளை உடையவராய், காளையை இவர்ந்து வெயில்போல ஒளி வீசும் நீற்றினைப் பூசிக் கயிலை மலை, நாகை குடந்தைக் காரோணங்கள், கந்தமாதனம், காளத்தி, மயிலாடுதுறை, உஞ்சைனி இரும்பை அம்பர் மாகாளங்கள், வக்கரை இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.

 

 

2595 யூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்

பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்

கேதிசரம் மேவினார் கேதா ரத்தார்

கெடில வடஅதிகை வீரட் டத்தார்

மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்

மழபாடி மேய மழுவா ளனார்

வேதிகுடி யுள்ளார் மீயச் சூரார்

வீழி மிழலையே மேவி னாரே.

6.051.2

 

  கெடிலக்கரையிலுள்ள அதிகை வீரத்தானப் பெருமான் பெருமான் பெருந்துயரைத் தீர்த்து என்னை வாழச் செய்தவராய்ப் பொன்னார் மேனியில் நீறு பூசி, பூணூல் தரித்து, கோபம் மிக்க பாம்பினை அணிந்து, காதில் வெண்குழையை இட்டு, எல்லோருக்கும் நன்மை செய்பவராய், கேதீச்சரம், கேதாரம், மழு ஏந்தும் மழபாடி, வேதிகுடி, மீயச்சூர், இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.

 

 

2596 அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்

அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்

உண்ணா ழிகையார் உமையா ளோடும்

இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்

பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை

மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்

விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த

வீழி மிழலையே மேவி னாரே.

6.051.3

 

  இமையோர் பெருமானார் உமையாளோடும் தேவர்கள் எல்லோரும் விரும்பித் துதிக்க அண்ணாமலை, ஆரூர், அளப்பூர், அந்தணர்கள் மிக்க வைகல், மாடக் கோயிலின் மூலத்தானம், ஒற்றியூர், பெண்ணாகடத்துத் தூங்கானை மாடம், ஏமகூடம், பேராவூர் இவற்றில் தங்கித் திருவீழிமிழலையை விரும்பி வந்து அடைந்தார்.

 

 

2597 வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி

நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்

பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்

பராய்த்துறையார்சிராப்பள்ளி யுள்ளார் பண்டோர்

வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி

யுரித்துரிவை போர்த்த விடலை வேடம்

விண்காட்டும் பிறைநுதலி அஞ்சக் காட்டி

வீழி மிழலையே மேவி னாரே.

6.051.4

 

  வேதம் ஓதும் நாவினராய், முன்பு வெண்கோட்டுக் கருங்களிறு ஒன்றை அது பேரொலி செய்யுமாறு பற்றி அதன் தோலை உரித்துப் போர்த்திய கோபமுற்ற வடிவினைப் பிறை போன்ற நெற்றியை உடைய உமாதேவி அஞ்சுமாறு காட்டி, வெண்காடு, செங் காட்டங்குடி, வெண்ணி, வேட்களம், வண்டுகள் பண்பாடும் பழனம், பராய்த்துறை, சிராப்பள்ளி இவற்றில் தங்கிய பெருமான் திருவீழி மிழலையை விரும்பி வந்தடைந்தார்.

 

 

2598 புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்

புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்

உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச்சிமேற்

றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்

கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்

கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்

விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ

வீழி மிழலையே மேவி னாரே.

6.051.5

 

  தம்மைச் சுற்றிப் பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே கூத்து நிகழ்த்தும் பெருமான், புலித்தோலை உடுத்துக் கச்சிமேற்றளி, குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த ஏகம்பம், கழுமலம் இவற்றில் வீடுகள் தோறும் பிச்சைக்கு உலவும், முழு எலும்புக் கூட்டைத் தோளில் அணிந்த, வடிவத்தாராய், மலர் மாலையை அணிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் காளை வடிவம் எழுதப்பட்ட கொடியோடும் செல்வம் மிகும் வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.

 

 

2599 பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழிய்யார்

பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்

இரும்புதலார் இரும்பூளை யுள்ளார் ஏரார்

இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்

கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்

கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்

விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த

வீழி மிழலையே மேவி னாரே.

6.051.6

 

  கரும்பு போன்று இனிய உமாதேவியோடு பெரும்புலியூரை விரும்பிய பெருமான், அவ்வூர் மூலத்தானம், அரதைப்பெரும்பாழி, இரும்புதல், இரும்பூளை, இன்னம்பர், ஈங் கோய்மலை, கருகாவூர், கருப்பறியலூர், கரவீரம் என்ற இடங்களில் தங்கித் தம்மை விரும்பும் தேவர்கள் இரவும் பகலும் முன்னின்று புகழ்ந்து துதிக்குமாறு வீழிமிழலையையே விரும்பி அடைந்தார்.

 

 

2600 மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்

வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்

கறைக்காட்டுங் கண்டனார் காபா லிய்யார்

கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்

பறைக்காட்டுங் குழிவிழிகண் பல்பேய் சூழப்

பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர்

மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்

வீழி மிழலையே மேவி னாரே.

6.051.7

 

  பழையனூர் ஆலங்காட்டுப் பெருமானார் மண்டை ஓட்டினை ஏந்திப் பறையைப்போல குழிந்த விழிகளை உடைய பேய்கள் பல சூழ, நீலகண்டராய், மார்க்கண்டேயனுக்குத் துன்பம் தரவந்த காலன் அழியுமாறு அவனை ஒறுத்து, மறைக்காடு, வலிவலம், வாய்மூர், வாழ்கொளிபுத்தூர், உஞ்சேனி இரும்பை அம்பர் மாகாளங்கள், கற்குடி, விற்குடி, கானப்பேர் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.

 

 

2601 அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்

ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்

தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்

சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்

நஞ்சைத் தமக்கமுதா வுண்ட நம்பர்

நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்

வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்

வீழி மிழலையே மேவி னாரே.

6.051.8

 

  பெருமானார் விடத்தைத் தமக்கு அமுதமாக உண்டு நம்மைப் பாதுகாத்தமையால் நம்மால் விரும்பப்படுபவராய்க் கொடிய சொற்களை உடைய சமணசமயச் சிறையிலிருந்து என்னை மீட்டவராய், அஞ்சைக்களம், ஐயாறு, ஆரூர், பேரூர், அழுந்தூர், தஞ்சைத் தளிக்குளம், தக்களூர், சாத்தமங்கையிலுள்ள திருக்கோயிலாகிய அயவந்தி, நாகேச்சரம், நாரையூர் இவற்றில் தங்கி, வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.

 

 

2602 கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்

கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்

தண்டலையார் தலையாலங் காட்டி லுள்ளார்

தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்

வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர்

வலஞ்சுழியார் வைகலின்மேல் மாடத் துள்ளார்

வெண்டலைகைக் கொண்ட விகிர்த வேடர்

வீழி மிழலையே மேவி னாரே.

6.051.9

 

  வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திய, உலகத்தார் கொள்ளும் வேடங்களிலிருந்து வேறுபட்ட வேடத்தை உடைய பெருமானார், கொண்டல், கொண்டீச்சரம், கோவலூர் வீரட்டம், சோலைகள் சூழ்ந்த தலையாலங்காடு, தலைச்சங்காடு, காவிரி வண்டலொடு மணலைக் கரையில் சேர்க்கும் திருவலஞ்சுழி, வைகல் மாடக்கோயில் ஆகிய தலங்களில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.

 

 

2603 அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்

அரிபிரமர் இந்திரர்க்கும் அரிய ரானார்

புரிச்சந்தி ரத்துள்ளார் போகத் துள்ளார்

பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி

எரிச்சந்தி வேட்கு மிடத்தார் ஏம

கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்

விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்

வீழி மிழலையே மேவி னாரே.

6.051.10

 

  திருமால் பிரமன், இந்திரன் என்பவர்களுக்குக் காண்டற்கு அரியராய் உள்ளாராய், உலகவர் நுகரும் எல்லா இன்பங்களிலும் கலந்திருப்பாராய், இமவான் மகளாகிய பார்வதியிடத்து விருப்பமுடையவராய், மூன்று சந்திகளிலும் தீயை ஓம்பும் வேள்விச் சாலைகளில் உகந்திருப்பவராய், தாம் சூடிய மாலைகளில் வண்டுகள் பாட ஏழிசையும் பொருந்திய பண்களைப் பாடுபவராய், உள்ளங்கையை விரித்து அதன்கண் அனலைஏந்தி ஆடும் வேடம் உடையவராய்ச் சிவபெருமான், அரிச்சந்திரம், அம்பர்மாகாளம், புரிச்சந்திரம், ஏமகூடம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்.

 

 

2604 புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்

பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க

தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்

தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும்

பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்

பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்

மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்

வீழி மிழலையே மேவி னாரே.

6.051.11

 

  ஒளிவீசும் சடைமுடி உடையவராய், காளையை வாகனமாக உடையவராய், வலிமை மிக்க தன் ஆற்றலை நினைத்துக் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய மலைகளை ஒத்த தலைகளையும் தோள்களையும் தாள்களையும் பொற்கழலணிந்த தம் திருவடியின் ஒரு விரலை ஊன்றி மலையின் கீழ் நொறுங்குமாறு செய்து பின் அவனுக்கு அருள் செய்த உலக நாயகர், புன்கூர், புறம் பயம், புத்தூர், பூவணம், புலிவலம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விருப்புற்று வந்தடைந்தார்.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 23 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.