|
||||||||
ஆறாம் திருமுறை-58 |
||||||||
6.058.திருவலம்புரம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வலம்புரநாதர்.
தேவியார் - வடுவகிர்க்கணம்மை.
2666 மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை
மறையவனும் வானவருஞ் சூழ நின்று
கண்மலிந்த திருநெற்றி யுடையார் ஒற்றை
கதநாகங் கையுடையார் காணீ ரன்றே
பண்மலிந்த மொழியவரும் யானு மெல்லாம்
பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.058.1
உலகத்தை அளந்த நீலமணி நிறத்தவரான திருமாலும் பிரமனும் தேவர்களும் தம்மைச் சூழ, நெற்றிக்கண்ணராய், ஒற்றைப் பாம்பினைக் கையில் உடையவராய், இனியமொழிகளையுடைய மற்றப் பெண்களும் யானும் பணிந்து வணங்கித் தம்பின்னே செல்லவும், மண்வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளையுடைய வலம்புர நகரில் புகுந்து, பெருமான் அங்கேயே தங்கிவிட்டார்.
2667 சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த
தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக்
கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக்
கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்
கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல்
மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம்
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.058.2
வில்லில் பழகிய அம்பு ஒன்றால் முப்புரமும் அழித்த, தீயைப் போன்ற செந்நிறமுடைய பெருமானாய், இமையவர்கள் வழிபட்டுப்புகழக் கொலைத் தொழிலில் பழகிய மத யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கூத்தாடிக்கொண்டு எங்கும் செல்லும் அக்கூத்தர், கலைகளில் பழகிய அந்தணர்கள் காணவும், பூதகணங்கள் சூழவும், விரைவாகச் செல்லும் காளை மீது பார்வதியும் கங்கையும் தாமுமாக இவர்ந்து, வலம்புரம் சென்று அங்கே தங்கி விட்டார்.
2668 தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை
யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல
வருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்
நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந்
துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.058.3
திருமேனியின் ஒரு பகுதி தீயின் நிறமாகவும், மற்றைப்பகுதி திருமாலின் நிறமாகவும் விளங்கித்தோன்ற, ஆக்கூரிலுள்ள தான்தோன்றி மாடத்திற்குச் செல்பவரைப்போல யான் அப்பக்கம் சென்ற அளவில் ஓரிடத்தையும் நோக்காமல், பூணூலும் மான் தோலும் பொருந்திய தம் மேனியில் வெள்ளிய நீறு பூசி, வேதக் கருத்துக்களை விரித்து, மாயமாகச் சில பேசிய வண்ணம், வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே.
2669 மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி
மூவர் உருவாய முதல்வ ரிந்நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த
குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே
போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப்
புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ
வாவா வெனவுரைத்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.058.4
மூப்படையாத கொடிய பாம்பை அரையில் கட்டி, மும்மூர்த்திகளின் உருவமாக உள்ள முதற்கடவுளாம் சிவபெருமான், வேறுயாரும் இணைக்க முடியாத அக்கினியாகிய அம்பினை வில்லில் கோத்த இளையராய்க், குளிர்ந்த கொன்றைப் பூவைச்சூடி, இன்று இங்கே போகின்றவரைக் கண்டு அடியேன் பின்னே செல்ல, என்னைப் புறக்கணித்து, என்னை வாவா என்று பொய்யாக அழைத்துவிட்டுத் தம்முடைய பூதகணம் தம்மைச் சூழ, வலம்புரமேபுக்கு அங்கே மன்னினாரே.
2670 அனலொருகை யதுவேந்தி யதளி னோடே
ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப்
புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல்மேனிப்
புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச்
சினவிடையை மேல்கொண்டு திருவா ரூருஞ்
சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல
மனமுருக வளைகழல மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.058.5
ஒருகையில் தீயை ஏந்தி, இடையில் அணிந்த தோலாடை மீது ஐந்தலையை உடைய பெரிய பாம்பினை இறுகக் கட்டிக் கங்கை தங்கிய சடைமுடியும் பொன் போன்ற திருமேனியும் உடைய புனிதர், விரும்பித் தேவர்கள் வழிபட்டுத்துதிக்கக் கோபம் உடைய காளையை இவர்ந்து, திருவாரூரும் சிரபுரமும், இடைமருதும் அடைபவரைப்போல, என்மனம் உருகுமாறும் வளைகள் கழலுமாறும் என்னிடத்துப் பொய்யாகச் சிலவற்றைப் பேசி வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார்.
2671 கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்
காலினாற் காய்ந்துகந்த காபா லியார்
முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி
முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்
தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வெளவ
மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.058.6
நீலகண்டராய்க் கூற்றுவன் அழியுமாறு காலினால் உதைத்து மகிழ்ந்த காபாலக்கூத்தாடும் பெருமானார் தாம் உரித்த தோலை ஆடையாக உடுத்து, திருநீறு பூசி முனிவர்கள் தம் இருபுடையும் சூழ்ந்துவர, வீடுகளில் முன்னிடம் தோறும் வீணையை இசைத்துக் கொண்டு சென்றாராக, அவருடைய புன்சிரிப்பு என் சிந்தையைக் கவர, மீண்டும் ஒருமுறை என்னை நோக்காமல் பொய்யாக ஏதோ பேசி, வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார்.
2672 பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம்
பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம் நோவ
இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க்
கெவ்வூரீர் எம்பெருமா னென்றே னாவி
விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி
வேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைகள் படநடந்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.058.7
பட்டினை உடுத்துப் பவளம் போன்ற தம் மேனியில் பசிய சந்தனம் பூசித் தம் திருவடிகளை ஊன்றியும் தூக்கியும் கூத்தாடிக் கொண்டு என்னிடம் வந்தாராக. யான் 'எம்பெருமான் நீர் எவ்வூரைச் சேர்ந்தவர்' என்று வினவ என் உயிர்போகுமாறு என்னை விரைந்து பார்த்து, எனக்கு காமமீதூர்வினை வழங்கி, வேறோர் ஊருக்குச் செல்பவரைப்போலப் பொய் பேசிச் சுழன்று நடந்து, வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே.
2673 பல்லார் பயில்பழனம் பாசூ ரென்று
பழனம் பதிபழமை சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி யின்று வைகி
நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார்
சொல்லா ரொருவிடமாத் தோள்கை வீசிச்
சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கு
மல்லார் வயல்புடை சூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.058.8
பலரும் தங்கியிருக்கும் திருப்பழனம், பாசூர் என்று தம் ஊர்களைக் குறிப்பிட்டு, அவற்றுள் பழனப்பதியில் தமக்கு உள்ள பழந்தொடர்பைக்கூறி, நல்லவர்கள் மிக்க நனிபள்ளியில் இன்று தங்கி, மறுநாள் நள்ளாறு போய்ச் சேர எண்ணியுள்ளதாகக்கூறினார். இன்ன இடத்துக்குப் போகப்போவதாக உறுதியாய்க் கூறாமல், திருநீறு பூசிய அழகியராய்த் தம் கைகளை வீசிக் கொண்டு, வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளை உடைய வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார்.
2674 பொங்கா டரவொன்று கையிற் கொண்டு
போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர்
தங்கா ரொருவிடத்துந் தம்மே லார்வந்
தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர்
எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா
என்கண்ணின் நின்றகலா வேடங் காட்டி
மங்குல் மதிதவழும் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.058.9
படமெடுத்து ஆடும் பாம்பு ஒன்றனைக் கையில் கொண்டு, மறுகையில் போரிடும் மழுப்படையை ஏந்தி, ஓரிடத்தும் தங்காராய்ப் போய்க்கொண்டே, தம்மிடத்து மற்றவர் கொள்ளும் விருப்பத்தை நீக்காராய் மெய்ப்பொருளிடத்தே நிற்பவராகத் தம்மைக் கூறிக்கொண்டே ஒன்றோடொன்று பொருந்தாத செயல்களை உடையவராய், என்கண்களை விட்டு நீங்காத தம் இனிய வேடத்தைக் காட்டி, வானத்திலுள்ள சந்திரன் தவழும்படியான உயர்ந்த மாட வீடுகளைக் கொண்ட வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார்.
2675 செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி
யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே.
6.058.10
திருமால் வில்லை ஏந்திக் குரக்குச்சேனையோடு, கடலில் அணைகட்டி, இலங்கயைச் சென்று அடைந்து, மேம்பட்ட பலபோர்கள் செய்து, தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்கிரீவன், வீடணன் முதலியோர் உதவியதால் அரிதில் வென்றழித்த இராவணனுடைய நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழுமாறு, தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி, அவனை வருத்திப் பின் அவனுக்கே அருளையும் செய்தவர் சிவபெருமான். அப்பெருமானார், இன்று கப்பல்கள் நிறைந்த கடலால் ஒருபுறம் சூழப்பட்டதாய், மாடவீதிகளை உடைய வலம்புரம் என்ற ஊரை அடைந்து அங்கேயே நிலையாகத் தங்கிவிட்டார்.
திருச்சிற்றம்பலம்
6.058.திருவலம்புரம் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வலம்புரநாதர். தேவியார் - வடுவகிர்க்கணம்மை.
2666 மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும் வானவருஞ் சூழ நின்று கண்மலிந்த திருநெற்றி யுடையார் ஒற்றை கதநாகங் கையுடையார் காணீ ரன்றே பண்மலிந்த மொழியவரும் யானு மெல்லாம் பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல மண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.058.1
உலகத்தை அளந்த நீலமணி நிறத்தவரான திருமாலும் பிரமனும் தேவர்களும் தம்மைச் சூழ, நெற்றிக்கண்ணராய், ஒற்றைப் பாம்பினைக் கையில் உடையவராய், இனியமொழிகளையுடைய மற்றப் பெண்களும் யானும் பணிந்து வணங்கித் தம்பின்னே செல்லவும், மண்வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளையுடைய வலம்புர நகரில் புகுந்து, பெருமான் அங்கேயே தங்கிவிட்டார்.
2667 சிலைநவின்ற தொருகணையாற் புரமூன் றெய்த தீவண்ணர் சிறந்திமையோர் இறைஞ்சி யேத்தக் கொலைநவின்ற களியானை யுரிவை போர்த்துக் கூத்தாடித் திரிதருமக் கூத்தர் நல்ல கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக் கடுவிடைமேற் பாரிடங்கள் சூழக் காதல் மலைமகளுங் கங்கையுந் தாமு மெல்லாம் வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.058.2
வில்லில் பழகிய அம்பு ஒன்றால் முப்புரமும் அழித்த, தீயைப் போன்ற செந்நிறமுடைய பெருமானாய், இமையவர்கள் வழிபட்டுப்புகழக் கொலைத் தொழிலில் பழகிய மத யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கூத்தாடிக்கொண்டு எங்கும் செல்லும் அக்கூத்தர், கலைகளில் பழகிய அந்தணர்கள் காணவும், பூதகணங்கள் சூழவும், விரைவாகச் செல்லும் காளை மீது பார்வதியும் கங்கையும் தாமுமாக இவர்ந்து, வலம்புரம் சென்று அங்கே தங்கி விட்டார்.
2668 தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர் ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல வருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும் நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந் துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.058.3
திருமேனியின் ஒரு பகுதி தீயின் நிறமாகவும், மற்றைப்பகுதி திருமாலின் நிறமாகவும் விளங்கித்தோன்ற, ஆக்கூரிலுள்ள தான்தோன்றி மாடத்திற்குச் செல்பவரைப்போல யான் அப்பக்கம் சென்ற அளவில் ஓரிடத்தையும் நோக்காமல், பூணூலும் மான் தோலும் பொருந்திய தம் மேனியில் வெள்ளிய நீறு பூசி, வேதக் கருத்துக்களை விரித்து, மாயமாகச் சில பேசிய வண்ணம், வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே.
2669 மூவாத மூக்கப்பாம் பரையிற் சாத்தி மூவர் உருவாய முதல்வ ரிந்நாள் கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த குழகனார் குளிர்கொன்றை சூடி யிங்கே போவாரைக் கண்டடியேன் பின்பின் செல்லப் புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ வாவா வெனவுரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.058.4
மூப்படையாத கொடிய பாம்பை அரையில் கட்டி, மும்மூர்த்திகளின் உருவமாக உள்ள முதற்கடவுளாம் சிவபெருமான், வேறுயாரும் இணைக்க முடியாத அக்கினியாகிய அம்பினை வில்லில் கோத்த இளையராய்க், குளிர்ந்த கொன்றைப் பூவைச்சூடி, இன்று இங்கே போகின்றவரைக் கண்டு அடியேன் பின்னே செல்ல, என்னைப் புறக்கணித்து, என்னை வாவா என்று பொய்யாக அழைத்துவிட்டுத் தம்முடைய பூதகணம் தம்மைச் சூழ, வலம்புரமேபுக்கு அங்கே மன்னினாரே.
2670 அனலொருகை யதுவேந்தி யதளி னோடே ஐந்தலைய மாநாகம் அரையிற் சாத்திப் புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல்மேனிப் புனிதனார் புரிந்தமரர் இறைஞ்சி யேத்தச் சினவிடையை மேல்கொண்டு திருவா ரூருஞ் சிரபுரமும் இடைமருதுஞ் சேர்வார் போல மனமுருக வளைகழல மாயம் பேசி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.058.5
ஒருகையில் தீயை ஏந்தி, இடையில் அணிந்த தோலாடை மீது ஐந்தலையை உடைய பெரிய பாம்பினை இறுகக் கட்டிக் கங்கை தங்கிய சடைமுடியும் பொன் போன்ற திருமேனியும் உடைய புனிதர், விரும்பித் தேவர்கள் வழிபட்டுத்துதிக்கக் கோபம் உடைய காளையை இவர்ந்து, திருவாரூரும் சிரபுரமும், இடைமருதும் அடைபவரைப்போல, என்மனம் உருகுமாறும் வளைகள் கழலுமாறும் என்னிடத்துப் பொய்யாகச் சிலவற்றைப் பேசி வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார்.
2671 கறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக் காலினாற் காய்ந்துகந்த காபா லியார் முறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி முனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந் தெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச் சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வெளவ மறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.058.6
நீலகண்டராய்க் கூற்றுவன் அழியுமாறு காலினால் உதைத்து மகிழ்ந்த காபாலக்கூத்தாடும் பெருமானார் தாம் உரித்த தோலை ஆடையாக உடுத்து, திருநீறு பூசி முனிவர்கள் தம் இருபுடையும் சூழ்ந்துவர, வீடுகளில் முன்னிடம் தோறும் வீணையை இசைத்துக் கொண்டு சென்றாராக, அவருடைய புன்சிரிப்பு என் சிந்தையைக் கவர, மீண்டும் ஒருமுறை என்னை நோக்காமல் பொய்யாக ஏதோ பேசி, வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார்.
2672 பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம் பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம் நோவ இட்டெடுத்து நடமாடி யிங்கே வந்தார்க் கெவ்வூரீர் எம்பெருமா னென்றே னாவி விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி வேறோர் பதிபுகப் போவார் போல வட்டணைகள் படநடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.058.7
பட்டினை உடுத்துப் பவளம் போன்ற தம் மேனியில் பசிய சந்தனம் பூசித் தம் திருவடிகளை ஊன்றியும் தூக்கியும் கூத்தாடிக் கொண்டு என்னிடம் வந்தாராக. யான் 'எம்பெருமான் நீர் எவ்வூரைச் சேர்ந்தவர்' என்று வினவ என் உயிர்போகுமாறு என்னை விரைந்து பார்த்து, எனக்கு காமமீதூர்வினை வழங்கி, வேறோர் ஊருக்குச் செல்பவரைப்போலப் பொய் பேசிச் சுழன்று நடந்து, வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே.
2673 பல்லார் பயில்பழனம் பாசூ ரென்று பழனம் பதிபழமை சொல்லி நின்றார் நல்லார் நனிபள்ளி யின்று வைகி நாளைப்போய் நள்ளாறு சேர்து மென்றார் சொல்லா ரொருவிடமாத் தோள்கை வீசிச் சுந்தரராய் வெந்தநீ றாடி யெங்கு மல்லார் வயல்புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.058.8
பலரும் தங்கியிருக்கும் திருப்பழனம், பாசூர் என்று தம் ஊர்களைக் குறிப்பிட்டு, அவற்றுள் பழனப்பதியில் தமக்கு உள்ள பழந்தொடர்பைக்கூறி, நல்லவர்கள் மிக்க நனிபள்ளியில் இன்று தங்கி, மறுநாள் நள்ளாறு போய்ச் சேர எண்ணியுள்ளதாகக்கூறினார். இன்ன இடத்துக்குப் போகப்போவதாக உறுதியாய்க் கூறாமல், திருநீறு பூசிய அழகியராய்த் தம் கைகளை வீசிக் கொண்டு, வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளை உடைய வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார்.
2674 பொங்கா டரவொன்று கையிற் கொண்டு போர்வெண் மழுவேந்திப் போகா நிற்பர் தங்கா ரொருவிடத்துந் தம்மே லார்வந் தவிர்த்தருளார் தத்துவத்தே நின்றே னென்பர் எங்கே யிவர்செய்கை யொன்றொன் றொவ்வா என்கண்ணின் நின்றகலா வேடங் காட்டி மங்குல் மதிதவழும் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.058.9
படமெடுத்து ஆடும் பாம்பு ஒன்றனைக் கையில் கொண்டு, மறுகையில் போரிடும் மழுப்படையை ஏந்தி, ஓரிடத்தும் தங்காராய்ப் போய்க்கொண்டே, தம்மிடத்து மற்றவர் கொள்ளும் விருப்பத்தை நீக்காராய் மெய்ப்பொருளிடத்தே நிற்பவராகத் தம்மைக் கூறிக்கொண்டே ஒன்றோடொன்று பொருந்தாத செயல்களை உடையவராய், என்கண்களை விட்டு நீங்காத தம் இனிய வேடத்தைக் காட்டி, வானத்திலுள்ள சந்திரன் தவழும்படியான உயர்ந்த மாட வீடுகளைக் கொண்ட வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார்.
2675 செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப் பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ அங்கொருதன் திருவிரலால் இறையே யூன்றி யடர்த்தவற்கே அருள்புரிந்த அடிக ளிந்நாள் வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.058.10
திருமால் வில்லை ஏந்திக் குரக்குச்சேனையோடு, கடலில் அணைகட்டி, இலங்கயைச் சென்று அடைந்து, மேம்பட்ட பலபோர்கள் செய்து, தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்கிரீவன், வீடணன் முதலியோர் உதவியதால் அரிதில் வென்றழித்த இராவணனுடைய நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழுமாறு, தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி, அவனை வருத்திப் பின் அவனுக்கே அருளையும் செய்தவர் சிவபெருமான். அப்பெருமானார், இன்று கப்பல்கள் நிறைந்த கடலால் ஒருபுறம் சூழப்பட்டதாய், மாடவீதிகளை உடைய வலம்புரம் என்ற ஊரை அடைந்து அங்கேயே நிலையாகத் தங்கிவிட்டார்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 23 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|