LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-99

 

6.099.திருப்புகலூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - அக்கினீசுவரர். 
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை. 
3057 எண்ணுகேன் என் சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.1
புண்ணியா, அழகிய புகலூர் மேவிய புண்ணியனே, நினையுந்தன்மை உடையேனாகிய நான் எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினையின் அல்லது வேறு எதனை விரும்பி நினைவேன்? நினது கழலடியையே கைதொழுது காணின் அல்லது வேறு காட்சியில்லேன்; மற்றொரு பற்றுக்கோடும் இல்லேன். யான் வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாகிய இவ்வுடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய். அவையாவும் ஒரு சேர அடைக்கப்படும் காலத்து மேற்குறித்தவாறு உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன். ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3058 அங்கமே பூண்டாய் அனலா டினாய்
ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்சடை யினாய்
பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்
திருப்புகலூர் மேவிய தேவ தேவே.
6.099.2
திருப்புகலூர் மேவியதேவ தேவே! எலும்புகளை அணியாகப் பூண்டவனே, அனலாடீ, ஆதிரை நாண்மீனை உடையவனே, கல்லால மர நிழலமர்ந்தோனே. ஆனேற்றை ஊர்ந்தவனே, குறைஒன்றுமில்லாத பரவியசடையினனே, பாம்பொடு திங்களை வைத்து வற்றின் பகை தீர்த்தாண்டவனே, தேவர் வேண்டப் பிறிது எண்ணம் ஒன்று இன்றியே சமுத்திரத்தில் தோன்றியநஞ் சினையுண்டு சாதலும் மூத்தலும் இல்லாத வலிய சிங்கமே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3059 பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்
பளிக்குக் குழையினாய் பண்ணா ரின்சொல்
மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்
மான்மறிகை ஏந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேல் தரவ றுத்தாய்
அவர்வேண்டும் காரியமிங் காவ தில்லை
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.3
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! பட நாகத்தைக் கச்சையாகக் கொண்டவனே, பால்போலும் வெள்ளிய திருநீற்றினாய், பளிக்குக் குழையினனே, பண்போலும் இன் சொல்லும் மை பூசிய கண்ணுமுடைய பார்வதியைப் பாகங்கொண்டவனே, மான் கன்றை ஏந்திய கையினனே, வஞ்சமிக்க கள்வரைப் போன்ற ஐம்புலன்களும் வஞ்சம் செய்தலை என்னினின்றும் நீக்கினை. அவை விரும்பும் காரியம் எனக்கு நன்மை பயக்குமாறு இல்லை. என்னுரை பொய்யுரையன்று: உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக.
3060 தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்
சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்
மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்
அருளாகி ஆதியாய் வேத மாகி
அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.4
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! தாங்கள் செய்து வந்த சிவ வழிபாட்டினை இடையிலேயே விட்டொழிந்த மயக்கத்தினராகிய திரிபுரத்தசுரரின் மூன்று மதிலும் தீயில் வேகுமாறு வில்லை வளைத்துச் செங்கணையால் அவற்றை அழித்த தேவனே! மயக்கமின்றி நின்னையே வழிபடுவார் மனத்தில் ஏற்படும் மெலிவைத் தீர்ப்பவனே! தேவர்களுக்கு மருந்தாய் என்றும் அவருற்ற பிணி தீர்ப்பவனே! அருளே உருவமாகி எப்பொருட்கும் முதலாகிய வேதமானவனே! பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாத பொருளானவனே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3061 நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்துகந்த நீதி யானே
பாரேறு படுதலையிற் பலிகொள் வானே
பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத் தானே
கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.5
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! கங்கை தங்கிய செஞ்சடைமேல் நிலவையுடைய வெள்ளிய திங்களை நீங்காமல் உறையும்படி விரும்பிவைத்த நீதியனே! பருமை பொருந்திய படுதலையில் பிச்சை கொள்வானே! பண்டு மன்மதனைச் சுட்டு எரித்தவனே! பாவங்களை நாசம் செய்பவனே! கருமை பொருந்திய மேகம் போன்ற கண்டத்தை உடையவனே! கரியதும் கையுடையதுமாகிய களிறுகதற அதனை உரித்து அதன் தோலைப் போர்த்த போர்த்தொழில் வல்ல சிங்கமே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3062 விரிசடையாய் வேதியனே வேத கீதா
விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட் டானம் மேயாய்
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்
வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.6
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! விரி சடையாய்! வேதத்தாற் புகழப்படுவோனே! வேதத்தைப் பாடுபவனே! விரிந்த பொழிலால் சூழப்பட்ட வெண்காட்டினனே! மீயச்சூரை உடையவனே! திரிபுரங்களை எரித்தழித்த தேவதேவனே! திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறைவோனே! இனிய பண்பு உடையாரின் மனத்துள்ளவனே! மாகாளத்து வாழ்பவனே! வலஞ்சுழி வள்ளலே! மாமறைக்காட்டெந்தையே! என்றும் முறுக்குண்டு திகழும் சடையானே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.
3063 தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.7
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! கடவுட்டன்மை மிக்க கடவுளே, எல்லாத் தேவரும் நான்முகனும், இந்திரனும், மாலும் தேடிக் கண்டு நின்று திருவடிமேல் பூக்களை இட்டு நாவிற்பொருந்திய மறையைப்பாடி நட்டம் ஆடிப் போற்ற இள மரக்காவுடன் பொருந்திய பொழிலாகிய சோலையையுடைய கானப் பேரூர் என்ற திருத்தலத்தில் விளங்குபவனே! கழுக்குன்றின் உச்சியில் உள்ளவனே! மனம் வாக்கு மெய்களைக் கடந்தவனே! நின் பூவைப் போலப் பொருந்திய அழகிய திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்றுகொண்டருள்வாயாக.
3064 நெய்யாடி நின்மலனே நீல கண்டா
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானே
மான்தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை
கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.8
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! நெய்யாடுபவனே, நின்மலனே, நீல கண்டனே, நிறைவுடையவனே, வேதம் வல்லானே, நீதியனே, மைவிரவு கண் மடவாள் பார்வதி திகழ் பாகத்தானே, மான்தோலை உடையாகக் கொண்டு மகிழ்ந்தவனே, இப்பொழுது பறித்தல் பொருந்திய, வில்வம் கொன்றை இவற்றால் ஆகிய மாலையைக் கொணர்ந்து இட்டு அடியேன் பொய்யில்லாத நின்புகழ்விரிக்கும் தோத்திரங்களைக் கூறி வழிபட்டு நின்று நின் சேவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.
3065 துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்
துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானே
யக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.9
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! தைத்தல் பொருந்திய கோவணத்தை உடையவனே! தூய நீற்றினனே! ஒளி மிகுந்து விளங்கும் வெள்ளிய மழுவாயுதத்தைக் கையிற் கொண்டு, தன்னைச் சார்ந்த குளிர்ந்த பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடைமுடிமேல் வைத்து மகிழ்ந்த அருள்தன்மையனே! அன்னநடை மடவாள் பார்வதி திகழும் பாகத்தை உடையவனே! எலும்பு மாலை அணிந்தவனே! முதற்கடவுளே! நான் நின் பொன்னால் ஆகிய கழல் அணிந்த திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டு அருள்வாயாக.
3066 ஒருவனையும் அல்லா துணரா துள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி
இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.10
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! ஒருவை ஆகிய நின்னையல்லது என் உள்ளம் வேறு உணராது. உணர்வு கலங்குமாறு புலனாகாது அருவாய் நின்ற இருவினைகளையும் முக்குணங்களையும் என்மேல் விடுத்துப் பொய்யான யான் எனது என்னும் செருக்கினை அறுத்தாய்க்குச் செய்யும் கைம்மாறு இல்லேன். ஏலம் நிறைந்த கரிய மலைகளைச் சூழ்ந்து கடற்கரை விளங்கும் இலங்கைக்கு அரசனது விரைந்து செல்லும் தேர், மேலே ஓடாமல் காலால் ஊன்றிய போர் செய்யும் திருக்கயிலாய மலையானே! நான் நின் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.
திருச்சிற்றம்பலம்
ஆறாம் திருமுறை முற்றும்.

 

6.099.திருப்புகலூர்

திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம் 

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - அக்கினீசுவரர். 

தேவியார் - கருந்தார்க்குழலியம்மை. 

 

 

3057 எண்ணுகேன் என் சொல்லி எண்ணு கேனோ

எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்

கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்

கழலடியே கைதொழுது காணின் அல்லால்

ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்

புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.099.1

 

  புண்ணியா, அழகிய புகலூர் மேவிய புண்ணியனே, நினையுந்தன்மை உடையேனாகிய நான் எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினையின் அல்லது வேறு எதனை விரும்பி நினைவேன்? நினது கழலடியையே கைதொழுது காணின் அல்லது வேறு காட்சியில்லேன்; மற்றொரு பற்றுக்கோடும் இல்லேன். யான் வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாகிய இவ்வுடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய். அவையாவும் ஒரு சேர அடைக்கப்படும் காலத்து மேற்குறித்தவாறு உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன். ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.

 

 

3058 அங்கமே பூண்டாய் அனலா டினாய்

ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்

பங்கமொன் றில்லாத படர்சடை யினாய்

பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்

சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்

சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்

சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்

திருப்புகலூர் மேவிய தேவ தேவே.

6.099.2

 

  திருப்புகலூர் மேவியதேவ தேவே! எலும்புகளை அணியாகப் பூண்டவனே, அனலாடீ, ஆதிரை நாண்மீனை உடையவனே, கல்லால மர நிழலமர்ந்தோனே. ஆனேற்றை ஊர்ந்தவனே, குறைஒன்றுமில்லாத பரவியசடையினனே, பாம்பொடு திங்களை வைத்து வற்றின் பகை தீர்த்தாண்டவனே, தேவர் வேண்டப் பிறிது எண்ணம் ஒன்று இன்றியே சமுத்திரத்தில் தோன்றியநஞ் சினையுண்டு சாதலும் மூத்தலும் இல்லாத வலிய சிங்கமே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.

 

 

3059 பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்

பளிக்குக் குழையினாய் பண்ணா ரின்சொல்

மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்

மான்மறிகை ஏந்தினாய் வஞ்சக் கள்வர்

ஐவரையும் என்மேல் தரவ றுத்தாய்

அவர்வேண்டும் காரியமிங் காவ தில்லை

பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.099.3

 

  அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! பட நாகத்தைக் கச்சையாகக் கொண்டவனே, பால்போலும் வெள்ளிய திருநீற்றினாய், பளிக்குக் குழையினனே, பண்போலும் இன் சொல்லும் மை பூசிய கண்ணுமுடைய பார்வதியைப் பாகங்கொண்டவனே, மான் கன்றை ஏந்திய கையினனே, வஞ்சமிக்க கள்வரைப் போன்ற ஐம்புலன்களும் வஞ்சம் செய்தலை என்னினின்றும் நீக்கினை. அவை விரும்பும் காரியம் எனக்கு நன்மை பயக்குமாறு இல்லை. என்னுரை பொய்யுரையன்று: உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக.

 

 

3060 தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்

சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே

மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்

மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்

அருளாகி ஆதியாய் வேத மாகி

அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்

பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.099.4

 

  அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! தாங்கள் செய்து வந்த சிவ வழிபாட்டினை இடையிலேயே விட்டொழிந்த மயக்கத்தினராகிய திரிபுரத்தசுரரின் மூன்று மதிலும் தீயில் வேகுமாறு வில்லை வளைத்துச் செங்கணையால் அவற்றை அழித்த தேவனே! மயக்கமின்றி நின்னையே வழிபடுவார் மனத்தில் ஏற்படும் மெலிவைத் தீர்ப்பவனே! தேவர்களுக்கு மருந்தாய் என்றும் அவருற்ற பிணி தீர்ப்பவனே! அருளே உருவமாகி எப்பொருட்கும் முதலாகிய வேதமானவனே! பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாத பொருளானவனே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.

 

 

3061 நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்

நீங்காமை வைத்துகந்த நீதி யானே

பாரேறு படுதலையிற் பலிகொள் வானே

பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா

காரேறு முகிலனைய கண்டத் தானே

கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த

போரேறே உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.099.5

 

  அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! கங்கை தங்கிய செஞ்சடைமேல் நிலவையுடைய வெள்ளிய திங்களை நீங்காமல் உறையும்படி விரும்பிவைத்த நீதியனே! பருமை பொருந்திய படுதலையில் பிச்சை கொள்வானே! பண்டு மன்மதனைச் சுட்டு எரித்தவனே! பாவங்களை நாசம் செய்பவனே! கருமை பொருந்திய மேகம் போன்ற கண்டத்தை உடையவனே! கரியதும் கையுடையதுமாகிய களிறுகதற அதனை உரித்து அதன் தோலைப் போர்த்த போர்த்தொழில் வல்ல சிங்கமே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.

 

 

3062 விரிசடையாய் வேதியனே வேத கீதா

விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்

திரிபுரங்கள் எரிசெய்த தேவ தேவே

திருவாரூர்த் திருமூலட் டானம் மேயாய்

மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்

வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்

புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.099.6

 

  அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! விரி சடையாய்! வேதத்தாற் புகழப்படுவோனே! வேதத்தைப் பாடுபவனே! விரிந்த பொழிலால் சூழப்பட்ட வெண்காட்டினனே! மீயச்சூரை உடையவனே! திரிபுரங்களை எரித்தழித்த தேவதேவனே! திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறைவோனே! இனிய பண்பு உடையாரின் மனத்துள்ளவனே! மாகாளத்து வாழ்பவனே! வலஞ்சுழி வள்ளலே! மாமறைக்காட்டெந்தையே! என்றும் முறுக்குண்டு திகழும் சடையானே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.

 

 

3063 தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்

திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று

நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி

நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்

காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்

கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்

பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.099.7

 

  அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! கடவுட்டன்மை மிக்க கடவுளே, எல்லாத் தேவரும் நான்முகனும், இந்திரனும், மாலும் தேடிக் கண்டு நின்று திருவடிமேல் பூக்களை இட்டு நாவிற்பொருந்திய மறையைப்பாடி நட்டம் ஆடிப் போற்ற இள மரக்காவுடன் பொருந்திய பொழிலாகிய சோலையையுடைய கானப் பேரூர் என்ற திருத்தலத்தில் விளங்குபவனே! கழுக்குன்றின் உச்சியில் உள்ளவனே! மனம் வாக்கு மெய்களைக் கடந்தவனே! நின் பூவைப் போலப் பொருந்திய அழகிய திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்றுகொண்டருள்வாயாக.

 

 

3064 நெய்யாடி நின்மலனே நீல கண்டா

நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே

மையாடு கண்மடவாள் பாகத் தானே

மான்தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்

கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை

கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று

பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.099.8

 

  அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! நெய்யாடுபவனே, நின்மலனே, நீல கண்டனே, நிறைவுடையவனே, வேதம் வல்லானே, நீதியனே, மைவிரவு கண் மடவாள் பார்வதி திகழ் பாகத்தானே, மான்தோலை உடையாகக் கொண்டு மகிழ்ந்தவனே, இப்பொழுது பறித்தல் பொருந்திய, வில்வம் கொன்றை இவற்றால் ஆகிய மாலையைக் கொணர்ந்து இட்டு அடியேன் பொய்யில்லாத நின்புகழ்விரிக்கும் தோத்திரங்களைக் கூறி வழிபட்டு நின்று நின் சேவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.

 

 

3065 துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்

துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்

தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்

சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே

அன்ன நடைமடவாள் பாகத் தானே

யக்காரம் பூண்டானே ஆதி யானே

பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.099.9

 

  அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! தைத்தல் பொருந்திய கோவணத்தை உடையவனே! தூய நீற்றினனே! ஒளி மிகுந்து விளங்கும் வெள்ளிய மழுவாயுதத்தைக் கையிற் கொண்டு, தன்னைச் சார்ந்த குளிர்ந்த பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடைமுடிமேல் வைத்து மகிழ்ந்த அருள்தன்மையனே! அன்னநடை மடவாள் பார்வதி திகழும் பாகத்தை உடையவனே! எலும்பு மாலை அணிந்தவனே! முதற்கடவுளே! நான் நின் பொன்னால் ஆகிய கழல் அணிந்த திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டு அருள்வாயாக.

 

 

3066 ஒருவனையும் அல்லா துணரா துள்ளம்

உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற

இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி

இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்

கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்

கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற

பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.

6.099.10

 

  அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! ஒருவை ஆகிய நின்னையல்லது என் உள்ளம் வேறு உணராது. உணர்வு கலங்குமாறு புலனாகாது அருவாய் நின்ற இருவினைகளையும் முக்குணங்களையும் என்மேல் விடுத்துப் பொய்யான யான் எனது என்னும் செருக்கினை அறுத்தாய்க்குச் செய்யும் கைம்மாறு இல்லேன். ஏலம் நிறைந்த கரிய மலைகளைச் சூழ்ந்து கடற்கரை விளங்கும் இலங்கைக்கு அரசனது விரைந்து செல்லும் தேர், மேலே ஓடாமல் காலால் ஊன்றிய போர் செய்யும் திருக்கயிலாய மலையானே! நான் நின் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

ஆறாம் திருமுறை முற்றும்.

by C.Malarvizhi   on 23 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.