LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

தமிழ்மொழி இலக்கண ஆய்வு தொடரவேண்டும்!

''முன்'' என்ற சொல்பற்றி ஒரு ஐயத்தை இரண்டு நாள்களுக்குமுன் முகநூலில் பதிவுசெய்தேன்.
அந்தப் பதிவையொட்டி இதுவரை 90 கருத்துக்கள் தமிழாய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
பழந்தமிழ் இலக்கணங்களில் இதற்கு விடை இருக்கிறதா?
பழந்தமிழ் இலக்கிய வழக்குக்களில் எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றனவா?
இன்றைய எழுத்துத்தமிழ் வழக்கில் எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றனவா?
கருத்தாடல்கள் சிறப்பாகவே அமைந்துள்ளன!
தமிழ் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் ( செம்மொழி இராமசாமி, மொழியியல் பேராசிரியர்கள் திரு. நடனசபாபதி, திரு. இரவிசங்கர் கங்காதரன், திரு. வாசு இரங்கநாதன், திரு. முத்தையா சுப்பிரமணியன்) மட்டுமல்லாமல், மருத்துவர் திரு. இரவீந்திரன் வெங்கடாச்சலம், வேதிப்பொறியியல் துறையைச் சேர்ந்த திரு. இராமசாமி செல்வராசு அவர்கள், வேதியியல் துறையைச் சேர்ந்த திரு. ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்கள், கணினியியல் துறையைச் சேர்ந்த திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள் என்று பலதுறை அறிஞர்கள் இந்தக் கருத்தாடலில் பங்கேற்றுவருகின்றனர்!
இருப்பினும் இதுபற்றிய ஒரு முடிவான முடிவுக்கு ... தெளிவான முடிவுக்கு - வர இயலவில்லை! கருத்தாடல் தொடர்கிறது!
இது நமக்கு எடுத்துக்காட்டுவது ... தமிழ்மொழி அமைப்பின் நுட்பங்கள்பற்றிய ஆய்வு முற்றுப்பெறவில்லை! தொல்காப்பியம், நன்னூல் போன்ற பழந்தமிழ் இலக்கணங்கள்மட்டும் போதாது!
தமிழ்மொழி இலக்கணம் மேலும் மேலும் விரிவாக்கப்படவேண்டும்! இலக்கணக் கொள்கைகள் தொடர்ந்து வளப்படுத்தப்படவேண்டும்! பழந்தமிழ் இலக்கண அறிவும் தேவை! இலக்கிய அறிவும் தேவை! மொழியியலும் தேவை! தரவுகள் தேவை!
எல்லாவற்றையும்விட மொழி ஆய்வில் ஆர்வம் தேவை!
பெரும்பாலான தமிழ் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் இதுபோன்ற கருத்தாடல்களில் , பதிவுகளுக்கு ''விருப்பம்'' மட்டும் இடுகிறார்கள்! தங்கள் கருத்துக்களைப் பதிவிடுவது இல்லை! இந்நிலை மாறவேண்டும்!
 
-தெய்வ சுந்தரம் நயினார்
by Swathi   on 20 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.