“மெல்லத் தமிழினிச் சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும் என்றந்தப் பேதையுரைத்தான்”
என்று தனது ஆற்றாமையை அன்றே உரைத்தார் பாரதி.
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று ஆணையிட்டார்.
கலைச் செல்வங்கள் யாவும் வந்தது, தமிழ் வளர்ந்தது.
“தமிழ்நாட்டின் தமிழ்த் தெருக்களில் தமிழ்தான் இல்லை” என்ற பாவேந்தா¢ன் ஆவேசமும் தீர்ந்தது. அரசாங்கத்தின் முயற்சியால் கடைவீதிகளில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் மிளிர்கின்றன. தற்போது பேருந்து நிலையம், சிற்றுந்து, தேநீர், உணவகம், விமான நிலையம், கடைவீதி, பூங்கா, வழித்தடம், மாணவர் விடுதி, காவல் நிலையம் இன்ன பிற தமிழ்ச் சொற்கள் வெளி மாநிலத்தவர்களுக்கும் தொ¢ந்த சொற்களாகி வருகின்றன என்பது உண்மையே. இப்படி அரசாங்கத்தின் பல முயற்சிகளால், தமிழ்நாட்டில் பல தமிழ்ச் சொற்கள் வழக்கிற்கு வந்து விட்டது. இன்று தமிழ்த் திரைப்படங்கள் இந்திய அளவில் ஏன் இநதிய அளவில் பேசப்படும் படங்களாகி வருவதும் உண்மையே. தமிழ்ப் பாடல்கள் மிகுந்த பிரபலமாகி வருவதும் உண்மையே.
இருப்பினும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்ன? தமிழில் பேசுவது இழிவு என்ற நிலை மாறி, இன்று பல பிரபலங்களும் தமிழில் நேர்காணலில் பங்கு கொண்டு பேசும் அளவிற்கு பேச்சுத் தமிழ் வளர்ந்த அளவிற்கு எழுத்துத் தமிழ் வளர்ந்துள்ளதா?
இது ஒரு கேள்விக்குறியே! இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி என்பது மிகக் குறைந்த விழுக்காடாகவே உள்ளது. இதை நாம் குறை கூற முடியாது. உலகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஆங்கிலம் உலக மொழியான நிலையில், வாழ்க்கையில் உயர ஆங்கிலம் வேண்டும் என்ற நிலை அனைவர் மனதிலும் வேரூன்றி விட்டது.
இருப்பினும், பள்ளி அளவில் மொழிப்பாடம் எடுக்கும் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் பயிலும், தமிழ் மக்கள் தன் பிள்ளைகளை சிறு வயதிலிருந்தே இந்தி அல்லது நமது நாட்டிற்குச் சிறிதும் சம்பந்தமில்லாத அயல்நாட்டு மொழிகளான, பிரென்சு, ஜெர்மன் போன்ற மொழிப் பாடங்களை எடுத்துப் படிக்க வலியுறுத்துவதும், அதனை மாணவர்கள் விரும்புகின்றார்களோ இல்லையோ அதனைப் படிப்பதை ஒரு பெருமையாக நினைக்கும் நிலை இன்றைய தமிழ் நாட்டின் நாகா¢கமாகி விட்டது. இதில் ஒரு உண்மை என்னவென்றால், இப்படிப் படிக்கும் வேற்று மொழிகளைப் பயின்று முடித்த பின்னர், அம்மொழியில் பேசவோ, அல்லது சுயமாக ஒரு பத்தி எழுதவோ பலருக்கும் முடியாத நிலை என்பது ஒரு அப்பட்டமான உண்மை!. இந்நிலை வளரக் காரணமென்ன? ஒரு புறம் பள்ளிகள், மறுபுறம் மக்களின் தவறான வழிகாட்டுதல்கள்; பல பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தங்களுக்குத் தமிழ் வராது என்று சொல்லிக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகின்றனர். இப்படிப் பட்ட மனநிலை மாணவர்களுக்கு உருவாகக் காரணம் யார்?
ஆசி¡¢யர்கள் எதைக் கற்றுக் கொடுத்தாலும், அதைக் கற்றுக் கொள்ளும் குழந்தைப் பருவத்தில், மழலைப் பள்ளிகளில் ஏன் மொழிப் பாடங்களை சிறந்த முறையில் கற்றுக் கொடுத்து விருப்பத்தை உண்டாக்கக் கூடாது. சிறு வயதில் மனதில் விழும் விதைதான் பொ¢ய லட்சியமாக மாறும். ஆசி¡¢யர்கள் மாணவர்களின் மனதில் ஒரு புரட்சியை உண்டாக்கலாமே!
அரசாங்கம், தமிழ் மொழியை எடுத்துப் பயிலும் மேல்நிலை மாணவர்களுக்கு மட்டுமே முதல் மதிப்பெண் எடுத்தால் பா¢சு என்று ஊக்குவிக்கும் அதே நேரத்தில், பெயர்ப் பலகைகளில் புரட்சியை உண்டாக்கியது போல், பள்ளிகளிலும் பல கூட்டங்கள் நடத்தி, ஆசி¡¢யர்களுக்குத் தமிழ் மொழியின் உயர்வைக் கற்றுத் தர வலியுறுத்தினால் இந்நிலை மாறும்.
இல்லையெனில், நம் மொழியும் பேச்சு மொழியாகப் பிற்காலத்தில் மாறி விடும் வாய்ப்புண்டு! விழித்தெழுவோம்! நாம் மட்டுமல்ல! அனைவரையும் விழித் தெழச் செய்வோம்!
-ஆர்.ராஜராஜன்
|