தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு மன்னன் ராசராசன் குடமுழுக்கு செய்த போது கோபுரத்தில் கும்பம் நிற்காமல் போனதால் அவரது குருவும், சித்தருக்கெல்லாம் சித்தராகிய கருவூர் சித்தரை அழைத்து ஆலோசனை கேட்டான்.
கருவூர் சித்தர் சிவனை நினைத்து தாம்பூலத்தை மென்று அதைக் கொண்டு கும்பத்தை நிறுத்தினார் என்பது வழி வழியாய் வரும் நம்பிக்கை.
இன்றைக்கும் தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் சன்னதிக்கு நேர் பின்புறம் கருவூர் சித்தருக்கு தனி சன்னதி உள்ளது. அவரது ஜீவ சமாதி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பெருமானுக்கு வலது புற மூலையில் உள்ளது.
தமிழ் பேசும் திருவாய் அருளிய தாம்பூலத்திற்கே இவ்வளவு மகிமை என்றால், அத்தமிழில் குடமுழுக்கு செய்தால் பெருவுடையார் குளிர்ந்து போக மாட்டாரோ.