LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF

கஜா புயல் தாக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்!

கஜா புயல் தாக்கிய பகுதிகளில் ஒத்திவைக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள்  துவங்கிய போது,  மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்.

திருச்சி  பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் நவம்பர் 2ல் துவங்கி  டிசம்பர் 15ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. கடந்த  16ம் தேதி கஜா புயலின் தாக்குதலால்,  8 பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

பேரிடர் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ள பகுதிகளை தவிர அனைத்து பகுதி கல்லூரிகளிலும் ஏற்கனவே அறிவித்த பட்டியலில் உள்ள பாட வரிசைப்படி 27 ம் தேதி பருவ தேர்வு நடைபெறும், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழகம்  அறிவித்து இருந்தது.

ஆனால் நாகை, திருத்துறைப்பூண்டி உள்பட 5 கல்லூரிகள் மட்டும்   தேர்வு நடத்த முடியாது என தெரிவித்து விட்டன. அதன்படி திருத்துறைப்பூண்டி,  வேதாரண்யத்தில் தேர்வுகள் நடக்கவில்லை. மற்ற அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு  நடந்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு  கல்லூரியில் தேர்வு நடந்தது. கல்லூரியில் 3,200க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் படித்து வருகின்றனர். 90 சதவீதம் பேர் கிராம பகுதிகளில் இருந்து வருகின்றனர்.

கிராமங்களில் மின்சாரம், குடிநீர்  இல்லை.  பஸ் வசதி இல்லை. வீடு இடிந்து உள்ளதால் மாணவர்கள் படிக்க முடியவில்லை.  இதனால் பருவ தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை  விடுத்து

இருந்தனர்.இந்நிலையில் தேர்வு நடந்ததால் ஆத்திரமடைந்த  கிராமப்புற மாணவ, மாணவிகள் தேர்வை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

கல்லூரி முதல்வர் பணிக்கு வராததால்  மன்னார்குடி போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து  மாணவர்கள் தேர்வை புறக்கணித்து வீடுகளுக்கு சென்றனர். நகர்ப் புறத்தில் இருந்து  வந்த மாணவர்கள் மட்டும் தேர்வு எழுதினர்.

by Mani Bharathi   on 29 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.