LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

தோழி உனக்குத்தான்

"நம் இரவுகள்
உடையுமா?
நம் சூ¡¢யன்
நமக்கென ஒளிருமா?
நம் வாழ்க்கை
நம்முடையதாகவே
இருக்குமா?
நாங்களும்
சுதந்திரமாய் நடந்து செல்ல
வாய்க்குமா?
நானும் வருகிறேன்
தோழனே சொல்!"

கிடுகு வேலிக்குள்
கிளர்ந்த புயலே!
உன் கனவுகள்
பனைகளுக்கு மேலாக
பரவியது
உன் பாதங்கள்
பூமிக்கு மேலாக
முளைத்தது.
கைகளில் நகம் வளர்க்க
கடல் கடந்தாய்
எங்களுடன்.

தோழி!
நீ விரல்களுக்கு
சொந்தம் கொண்டாடு.
வளர்த்த
நகங்களுக்கும்
சொந்தம் கொண்டாடு.

பார்!
நம் கிடுகு வேலிக்குள்ளும்
கள்ளப் பூனைகள்.

உன் நகங்களுக்கு
அது
வண்ணந் தீட்டும்.
அதனை
வாழ்க்கையென்று
நினைக்காதே!

இன்றெமது போராட்டம்
இன விடுதலைக்கானது
மட்டுமல்ல.

தோழமை நிலவுகள்
மண்ணில் புதைவது
இங்கும் நிகழலாம்.

ஆடை கிழிவதும்
நகத் தீண்டலும்
அங்கே மட்டுமல்ல!
இங்கேயும்!

அடி!
முள் முளைத்த
வசந்தமாகு.
இடி சுமந்த
மேகமாகு.
கிடுகு வேலிகளை
கிழித் தெறியும்
மின்டினலாகு.

கள்ளப் பூனைகளை
கண்டுபிடி.
அப்புறமாய் வீசியெறி.

அடைகாத்த
புயல் முட்டை
உடையட்டும்.
நம்
கரங்கள் இருந்த
இடத்தில்
சிறகு முளைக்கட்டும்!

by Swathi   on 26 Dec 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
01-May-2018 10:48:10 ராஜலக்ஷ்மி said : Report Abuse
இனிய வலைதளம் இது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.