|
|||||
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய இயக்குநருடன் வலைத்தமிழ் கல்விக்கழக நிறுவனர் சந்திப்பு.. |
|||||
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநராக பொறுப்பேற்றவுடன் கலைப் பண்பாட்டுத்துறை இயக்குநராக உள்ள மதிப்பிற்குரிய திரு.சே.ரா.காந்தி, IRPFS அவர்கள் வெளி நாடுகளில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிகள் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் முன்னெடுக்கவேண்டிய இணையவழி செயல்பாடுகள் குறித்து உரையாட அழைப்பு விடுத்தும் சில வாரங்களாக தள்ளிப்போனது. இரு நாட்களுக்கு முன் சந்தித்து பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துகளை உரையாடினோம்.
குறிப்பாக
1) பாடத்திட்டம்
2) தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களை தரப்படுத்த ஆசிரியர் பயிற்சி விரிவாக்கம்
3) தமிழில் வெவ்வேறு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை தரப்படுத்தும் தேர்வுகள்
ஆகிய தலைப்புகளில் உரையாடினோம்.
அயல்நாட்டுத் தமிழ்ப்பள்ளிகளை இணையவழியில் சந்தித்து , அவர்களுடைய தேவைகளை கேட்டறிய, உரையாட இயக்குநர் ஆர்வமாக உள்ளார்.
தமிழ்நாடு அரசில் கலைப்பண்பாட்டுத் துறையில் இவர் பொறுப்பேற்றபிறகு அந்தத் துறைக்கு பல்வேறு நிதி ஆதாரங்களைப் பெற்று அனைவரும் வியக்கும் வண்ணம் பல சாதனைகளை செய்துவருகிறார். அதுபோல் , புதிதாக பொறுப்பேற்றுள்ள இணையக் கல்விக்கழகமும் பல்வேறு வளர்ச்சியை பெரும் என்ற எதிர்ப்பார்ப்புடன் பள்ளிகளில் திரட்டிய கருத்துகளைப் பகிர்ந்து வாழ்த்தி விடைபெற்றேன்.
விரைவில் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கவிருக்கும் கணினித் தமிழ் மாநாடு குறித்தும் சில கருத்துகளை பகிர்ந்துகொண்டேன்.
ச.பார்த்தசாரதி, நிறுவனர்
வலைத்தமிழ் கல்விக்கழகம் |
|||||
by Swathi on 10 May 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|