|
||||||||
உனை காணும் நொடியில் |
||||||||
மழையில் நனையும் இலைகள் போல்
குளிர் காற்றோடு கலந்த வெண்பனி போல்
தள்ளாடி விளையாடும் சிறு குழந்தை போல்
மேகத்தொடு ஓட்டி நிற்கின்ற வானவில் போல்
ஆர்ப்பரிக்கும் கடலில் எழும் அலை போல்
இதழ் திறந்து வாசனை செய்யும் மலர் போல்
கடல் கடந்து காண்கின்ற சொந்தம் போல்
மடல் மேல் பயணிக்கும் பேனா போல்
அன்பில் நனைகின்றேன்.
சுகம் அடைகின்றேன்
துள்ளி குதிக்கின்றேன்.
மகிழ் வண்ணம் காண்கின்றேன்.
புன்னகை புரிகின்றேன்
வாசம் பெறுகின்றேன்.
இன்பம் கொள்கின்றேன்
தடம் பதிக்கின்றேன்.
|
||||||||
by E.RAJASEKAR on 17 May 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|