LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

உறவெனும் நெருப்பில்

உறவெனும் நெருப்பில் எரிந்து கருகி
பிறந்துஇறந்து  பெரும் பாடெய்தி
கருவரைதனிலே  கை கால்  முடக்கி
கவலைகள் சுமந்து  புவியில் பிறந்து
காசு பணமெனும்  மாயையை துரத்தி
அவலப்பட்டு அல்லல்கள் சூழ
கல்லறை நோக்கி பயணப்படுவோம்
இடையே காணும்  
இன்னல்களிடையே
மனிதம் பேணி  மகத்துவம் காப்போம்
மன்பதை உய்ய  தன்னலம் துறப்போம்
இத்தகு பிறவியில் வாழ்வின் நடுவில்
எத்தனை எத்தனை கோப தாபங்கள்
சித்தததை  ஓர் கணம் நிறுத்தியதுண்டா?
சிவமதை ஓர் கணம் நினைத்ததுண்டா ?
அத்தனும் அவனே ! அப்பனும் அவனே!
மொத்தமும் அவனே ! முழுமையும் அவனே !
நித்தியம் அருளும்  நிதியமும் அவனே
அத்தகு ஈசனை அடிபணிவோர்க்கு
நித்தமும் நலமே!  நிமித்தமும் நலமே!
சித்தமும் நலமே ! சகமெலாம் நலமே !

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.