LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

உயிர்களெல்லாம் தொழும் ! - மகுடேசுவரன்

வாசலில் தளத்தில்
தானியத்தைப் பரத்தி
உலர வைத்திருந்தால்
முற்றாக வழித்தள்ளாதீர்.
மணிகள் இறைந்திருக்கட்டும்
குருவிகளின் பங்குக்கு.


சீனிப்புளிபோல்
கனிமரம் உண்டெனில்
உச்சிப்பழுப்புகளைப்
பறிக்கத் துணியாதீர்.
பழங்கள் குடைவுறட்டும்
கிளிகளின் மூக்குக்கு.


வேப்பங் கனிகள்
காகங்களுக்கு விருந்து.
வேறிடம் சென்று
கழிக்கட்டும்
விழுங்கிச் செரித்து.
அவற்றால் தழைக்கும் சோலைகள்
மனிதருக்கு நிழலூற்று.


முருங்கை தீதென
வெட்டி முறிக்காதீர்.
முருங்கைப் பூவெனும்
வற்றா மதுச்சுனையில்
உறிஞ்சிக் குடிக்க
பட்டுகளும் சிட்டுகளும்
பறந்து வரட்டும்.


பப்பாளிக் குடைமரம்
தானாய் வளர்ந்து
தேனாய்ப் பழுப்பது.
கோடைக்கும் மழைக்கும்
ஈடுகொடுத்திருப்பது.
வௌவாலும் அணிலும்
வாயொழுகத் தின்னட்டும்.
ஈக்குவியல் போன்ற விதை
ஈர நிலம் வீழட்டும்.


ஓரத்தில் நிலமிருந்தால்
தென்னை ஊன்றுங்கள்.
இளநீரை நேரடியாய்
ரத்தத்தில் பாய்ச்சுவதால்
எத்தீங்கும் நேராதாம்.
வேறெதுவும் ஆகாதாம்.


பசுமை தழைப்பதற்கும்
பல்லுயிர்கள் பெருகுதற்கும்
இயன்றதனைத்தும் செய்க !
உம்மை எஞ்ஞான்றும்
உயிர்களெல்லாம் தொழும் !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 17 Dec 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
09-Apr-2021 06:09:34 Sriprasanna M said : Report Abuse
ஐயா வணக்கம், தாங்கள் இயற்றிய திருக்குறள் உரை திருச்சியில் எங்கு கிடைக்கும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.