LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலிடுதல்

 

பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என் 
மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா 
செந்நாவலர் பசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய் 
எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே. 506 
நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு 
ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான் 
தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் 
வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே. 507 
எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன் 
மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்தனாக்கிச் 
சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும் 
பனவன் னெனைச் செய்தபடி றறியேன் பரஞ் சுடரே. 508 
வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில் 
எனைத்தான்புகுந் தாண்டான்என் தென்பின்புரை யுருக்கிப் 
பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறைபெம்மான் 
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே. 509 
பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி 
நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் 
தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர் 
கூற்றாங்கவன் கழல்பேணின ரோடுகூடுமின் கலந்தே. 510 
கடலின்திரையதுபோல் வரு கலக்கம்மலம் அறுத்தென் 
உடலும்என துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான் 
சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும் 
படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே. 511 
வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம் 
வேண்டேன் மண்ணும் விண்ணும் 
வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும் 
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் 
பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகலொட் டேனே. 512 
கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ 
ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே 
சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும் 
நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே. 513 
எச்சம் அறிவேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன் 
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதே 
செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான் 
நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே. 514 
வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே 
ஊன்பாவிய உடலைச் சுமந்தடவிமர மானேன் 
தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய் 
நான்பாவியன் ஆனால் உனை நல்காயென லாமே. 515 

பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என் 

மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா 

செந்நாவலர் பசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய் 

எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே. 506 

 

நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு 

ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான் 

தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் 

வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே. 507 

 

எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன் 

மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்தனாக்கிச் 

சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும் 

பனவன் னெனைச் செய்தபடி றறியேன் பரஞ் சுடரே. 508 

 

வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில் 

எனைத்தான்புகுந் தாண்டான்என் தென்பின்புரை யுருக்கிப் 

பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறைபெம்மான் 

மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே. 509 

 

பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி 

நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் 

தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர் 

கூற்றாங்கவன் கழல்பேணின ரோடுகூடுமின் கலந்தே. 510 

 

கடலின்திரையதுபோல் வரு கலக்கம்மலம் அறுத்தென் 

உடலும்என துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான் 

சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும் 

படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே. 511 

 

வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம் 

வேண்டேன் மண்ணும் விண்ணும் 

வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும் 

தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் 

பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகலொட் டேனே. 512 

 

கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ 

ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே 

சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும் 

நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே. 513 

 

எச்சம் அறிவேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன் 

அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதே 

செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான் 

நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே. 514 

 

வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே 

ஊன்பாவிய உடலைச் சுமந்தடவிமர மானேன் 

தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய் 

நான்பாவியன் ஆனால் உனை நல்காயென லாமே. 515 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.