|
||||||||
வானமெல்லாம் திரிதல் |
||||||||
சரி, கட்டிலில் பறப்போமா
நீ என் நினைவுகளுக்குள் வா!
என் உச்சியில் இப்போது கொம்பு முளைக்கிறது.
சந்தோசம் மிகுந்த இரவில்
நிலாவைவிட என் கண்கள் பிரகாசமாய் இருக்கின்றன.
வா!
என் நினைவுகளுக்குள்
விரைந்து.
காற்றைவிடக் கட்டில் பாரம் குறைகிறது.
எங்கிருந்து வந்து இரவுப் பறவைகள்
கட்டிலை மொய்த்தன!
அவைகளின் இறகுகளில் என் கட்டில் மிதக்கிறது!
உன் நீண்ட கருங்கூந்தல்
பின்னி முடியாது.
அவசரமாய்
ஒரு கொண்டை போடு.
முக்கியமாய்
உன் விரல்களின் நகங்களைக் கழற்றி வைத்துவிட்டு
வரவேண்டும்.
நட்சத்திரங்கள் ஒளிமங்கும்
வேறொன்றுமில்லை.
என் கட்டில் அசைவதனால்
மரங்கள்
திடீரெனத் துளிர்விட்டு வியர்க்கின்றன.
வா!
வானமெல்லாம் திரிவோம்.
ஐயோ
இன்னும் வரவில்லை ஏன்?
ஓ....
உன் நினைவுகளுக்குள் நானா,
இன்னொரு கட்டில் பறக்கிறதே!
பூக்களால் சோடித்து...
பறவைகள் தாங்க...
சரி, கட்டிலில் பறப்போமா நீ என் நினைவுகளுக்குள் வா!
என் உச்சியில் இப்போது கொம்பு முளைக்கிறது. சந்தோசம் மிகுந்த இரவில் நிலாவைவிட என் கண்கள் பிரகாசமாய் இருக்கின்றன.
வா! என் நினைவுகளுக்குள் விரைந்து.
காற்றைவிடக் கட்டில் பாரம் குறைகிறது. எங்கிருந்து வந்து இரவுப் பறவைகள் கட்டிலை மொய்த்தன! அவைகளின் இறகுகளில் என் கட்டில் மிதக்கிறது!
உன் நீண்ட கருங்கூந்தல் பின்னி முடியாது. அவசரமாய் ஒரு கொண்டை போடு.
முக்கியமாய் உன் விரல்களின் நகங்களைக் கழற்றி வைத்துவிட்டு வரவேண்டும். நட்சத்திரங்கள் ஒளிமங்கும் வேறொன்றுமில்லை.
என் கட்டில் அசைவதனால் மரங்கள் திடீரெனத் துளிர்விட்டு வியர்க்கின்றன.
வா! வானமெல்லாம் திரிவோம்.
ஐயோ இன்னும் வரவில்லை ஏன்? ஓ.... உன் நினைவுகளுக்குள் நானா, இன்னொரு கட்டில் பறக்கிறதே! பூக்களால் சோடித்து... பறவைகள் தாங்க...
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|