|
||||||||
வகர ஆகார வருக்கம் |
||||||||
வார மென்பெயர் மலைச்சார்பும் பகுத்தலும்
கடலு நீர்க்கரை யுங்கரு ஏழ்கிழமையும்
புரிவுறு மன்பையும் புகலுவர் புலவர். ....1353
வானெனும் பெயரே வானமும் பெருமையும்
மேகமும் மழையும் விளம்பப் பெறுமே. ....1354
வாருண மெனும்பெயர் நீருங் கடலும்
மேற்கு மெனவே விளம்புவர் புலவர். ....1355
வாடை யென்பெயர் வடகாற்றும் வீதியும்
சிற்றூர்ப் பெயரையுஞ் செப்பப் பெறுமே. ....1356
வாரி யெனும்பெயர் கடலு நீர் மிகுதியும்
நீரும் விளைவுங் கதவின் விகற்பமும்
மதிலின் சுற்றும் வருபுனல் மடையும்
வாய்தலுஞ் செல்வ வரத்தும் வழியும்
ஆனை படுக்கு மிடமு மாமே. ....1357
வாமன மெனும்பெயர் குறளுமோர் சமயமும்
திசைநிலைக் குஞ்சரத் தொன்றும் செப்புவர். ....1358
வான மெனும்பெயர் மழையு மாகாயமும்
உலர்மரப் பெயரதன் கனியையு முணர்த்துவர். ....1359
வாணி யெனும்பெயர் வார்த்தையின் பெயரும்
பாரதி பெயரும் பகழியு நடமுமாம். ....1360
வாச மெனும்பெயர் புள்ளின் சிறகும்
பூவின் மணமும் புடைவையின் பெயரும்
இருப்பிட முமென வியம்புவர் புலவர். ....1361
வாயி லென்பெயர் ஐம்புலனு மேதுவும்
கதவின் விகற்பமும் இடமும் கருதுவர். ....1362
வானி யெனும்பெயர் சேனையும் துவசமும்
மேற்கட்டி யுமென விளம்பப் பெறுமே. ....1363
வாளெனும் பெயரே வாளா யுதமும்
ஒளியு மெனவே யுரைத்தனர் புலவர். ....1364
வாலெனும் பெயரே பெருமையுஞ் சுத்தமும்
விலங்கின் வாலும் வெண்மை நிறமுமாம். ....1365
வாரணம் எனும்பெயர் மதகரிப் பெயரும்
சங்கும் கவசமும் தடுத்தலும் கோழியும்
கடலு மெனவே கருதப் பெறுமே. ....1366
வாங்கல் லெனும்பெயர் வளைத்தலுங்
கொளலுமாம். ....1367
வாசி யெனும்பெயர் குழலிசை விகற்பமும்
குதிரையின் பெயரும் கூறப் பெறுமே. ....1368
வாலி யெனும்பெய ரலாயுதன் பெயரும்
கிட்கிந்தை யரசன் பெயரும் கிளத்துவர். ....1369
வாத மெனும்பெயர் தர்க்கமும் காற்றுமாம். ....1370
வாம மென்பெய ரிடப்பாலு மழகும்
குறளு மோர்சமையப் பெயருங் கூறுவர். ....1371
வாரெனும் பெயர்முலைக் கச்சு நெடுமையு
நீரு நேர்மையும் வகிர்தலும் நிகழ்த்துவர். ....1372
வாயெனும் பெயர்வரு வாயும் வாய்மையும்
வாய்தலும் வாயின் பெயரு மிடமுமாம். ....1373
வாகை யெனும்பெய ரொழுக்கமும் தவமும்
தருமக் கருமமுஞ் சால்பு மிகுதியும்
ஆள்வினை முதலாஞ் செய்கை நலமும்
கைவல முதலாங் கல்வி ஆண்மையும்
ஒருவரி லொருவர் வென்றியுமோர் மரமும்
பண்பு மிகையும் பகரப் பெறுமே. ....1374
வாழி யெனும்பெயர் வாழ்கவென் சொல்லும்
இடைச்சொலின் பெயரும் இயம்புவர் புலவர். ....1375
வார மென்பெயர் மலைச்சார்பும் பகுத்தலும் கடலு நீர்க்கரை யுங்கரு ஏழ்கிழமையும் புரிவுறு மன்பையும் புகலுவர் புலவர். ....1353
வானெனும் பெயரே வானமும் பெருமையும் மேகமும் மழையும் விளம்பப் பெறுமே. ....1354
வாருண மெனும்பெயர் நீருங் கடலும் மேற்கு மெனவே விளம்புவர் புலவர். ....1355
வாடை யென்பெயர் வடகாற்றும் வீதியும் சிற்றூர்ப் பெயரையுஞ் செப்பப் பெறுமே. ....1356
வாரி யெனும்பெயர் கடலு நீர் மிகுதியும் நீரும் விளைவுங் கதவின் விகற்பமும் மதிலின் சுற்றும் வருபுனல் மடையும் வாய்தலுஞ் செல்வ வரத்தும் வழியும் ஆனை படுக்கு மிடமு மாமே. ....1357
வாமன மெனும்பெயர் குறளுமோர் சமயமும் திசைநிலைக் குஞ்சரத் தொன்றும் செப்புவர். ....1358
வான மெனும்பெயர் மழையு மாகாயமும் உலர்மரப் பெயரதன் கனியையு முணர்த்துவர். ....1359
வாணி யெனும்பெயர் வார்த்தையின் பெயரும் பாரதி பெயரும் பகழியு நடமுமாம். ....1360
வாச மெனும்பெயர் புள்ளின் சிறகும் பூவின் மணமும் புடைவையின் பெயரும் இருப்பிட முமென வியம்புவர் புலவர். ....1361
வாயி லென்பெயர் ஐம்புலனு மேதுவும் கதவின் விகற்பமும் இடமும் கருதுவர். ....1362
வானி யெனும்பெயர் சேனையும் துவசமும் மேற்கட்டி யுமென விளம்பப் பெறுமே. ....1363
வாளெனும் பெயரே வாளா யுதமும் ஒளியு மெனவே யுரைத்தனர் புலவர். ....1364
வாலெனும் பெயரே பெருமையுஞ் சுத்தமும் விலங்கின் வாலும் வெண்மை நிறமுமாம். ....1365
வாரணம் எனும்பெயர் மதகரிப் பெயரும் சங்கும் கவசமும் தடுத்தலும் கோழியும் கடலு மெனவே கருதப் பெறுமே. ....1366
வாங்கல் லெனும்பெயர் வளைத்தலுங் கொளலுமாம். ....1367
வாசி யெனும்பெயர் குழலிசை விகற்பமும் குதிரையின் பெயரும் கூறப் பெறுமே. ....1368
வாலி யெனும்பெய ரலாயுதன் பெயரும் கிட்கிந்தை யரசன் பெயரும் கிளத்துவர். ....1369
வாத மெனும்பெயர் தர்க்கமும் காற்றுமாம். ....1370
வாம மென்பெய ரிடப்பாலு மழகும் குறளு மோர்சமையப் பெயருங் கூறுவர். ....1371
வாரெனும் பெயர்முலைக் கச்சு நெடுமையு நீரு நேர்மையும் வகிர்தலும் நிகழ்த்துவர். ....1372
வாயெனும் பெயர்வரு வாயும் வாய்மையும் வாய்தலும் வாயின் பெயரு மிடமுமாம். ....1373
வாகை யெனும்பெய ரொழுக்கமும் தவமும் தருமக் கருமமுஞ் சால்பு மிகுதியும் ஆள்வினை முதலாஞ் செய்கை நலமும் கைவல முதலாங் கல்வி ஆண்மையும் ஒருவரி லொருவர் வென்றியுமோர் மரமும் பண்பு மிகையும் பகரப் பெறுமே. ....1374
வாழி யெனும்பெயர் வாழ்கவென் சொல்லும் இடைச்சொலின் பெயரும் இயம்புவர் புலவர். ....1375
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|