LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

வை . நடராஜன்

எங்கள் தாய் தந்தை கூடலில்
தரணியில் வந்தோம் _
எந்ததலைமுறையின் புண்ணியமோ
தமிழனாய் வந்தோம்

வற்றாத நதி முன்னே மழை

வந்தது _ அந்த மழை
வர மூலமாய் முன்
கடல் வந்தது

பற்றாத ஒளி முன்னே
இருள் வந்தது _ உலக
நாகரிகம் வரும் முன்னே
தமிழ் வந்தது

அங்கே காட்டினில் மொழி இன்றி
கையால் பேச _ இங்கே
கன்னித்தமிழ் புலவர்கள்
கவிதை படைத்தார்

அங்கே மலைக்குகை இருளிலே
இரவை கழித்தான் _ இங்கே
மலை குடைந்து பாறையில்
இறையை வடித்தான்

வற்றாத வளமையினால்
அள்ளி தந்தால் _ மானிட
வாழ்வியல் தர்மத்தை
சொல்லிதந்தால்

வள்ளுவன் வாயிலால்
நீதி வளர்த்தாள் _ பல
வள்ளர்கள் தனை தந்து
தர்மம் வளர்த்தாள்

மெய்ஞான வளர்வதில்
வழி காட்டினாள்
பல மெய்ஞான சித்தர்களுக்கு
வலுவேறினால்

அஞ்ஞான இருள் நீக்கி
ஒளி ஏற்றினால் இந்த
விஞ்ஞானம் வளர வளர
தன்னை மெறுகேற்றினால்

தங்கத்தின் இணைக்கு
நிகர் தகரமில்லை எங்கள்
தமிழ் மொழியின் இனிமைக்கு
நிகருமில்லை

அவள் அங்கத்தின் அணிகளாய்
காப்பியம் கொண்டால் _
சங்கத்தின் காலத்தில் பெரும்
மேன்மையை கண்டால்

மலர் எல்லாம் மாலையாக
மாறுவதில்லை _ மற்ற
மொழியெல்லாம் தமிழ்
தேனாய் ஊருவதில்லை

சோதனை பல தாண்டி
தீரம் காட்டினாள் பல
சோழனை பெற்றேடுத்து
வீரம் காட்டினாள்

கடவுளின் மொழிதான்
சமஸ்க்ரிதம் என ஒரு
கூட்டத்தின் கூச்சலை
கேட்டதுண்டா ??

அவர் எம்மொழி பேசினாலும்
கவலை இல்லை _ எங்கள்
செம்மொழி இல்லையனில்
கடவுளே இல்லை

காமத்தில் பிறந்தது
மனிதர் இனம் _ பூமி
கடைமனிதன் இருக்கும்
வரை தமிழரினம்


இப்பிறப்பு முடியும்
வரை மெய் பேச வேண்டும் _இனி
எப்பிறப்பு எடுத்தாலும் தமிழ்
பேச வேண்டும்

_ வை . நடராஜன்
by Swathi   on 05 Nov 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.