LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

வெல்லும் சொல்

‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’

 

ஆசைக்கு அணை போட்ட

 

அன்பான புத்தர் வாக்கு

 

அர்த்தம் உள்ள சொல்வாக்கு !

 

 

 

‘ஒரு கன்னத்தில் அறைந்தால்

 

மறு கன்னத்தை திருப்பிக் காட்டு ‘

 

ஏசுநாதரின் சொல்வாக்கு

 

மாசுபட சினம் கொள்பவரை

 

பசுபோல் பணியச் செய்துவிடும் !

 

 

 

சத்திய வாக்கை தவறாமல்

 

கடைபிடித்து வாழ்ந்த

 

அரிச்சந்திரன் வரலாறு

 

அன்று கண்ட காந்தியை

 

இன்று சத்தியசோதனை

 

எழுத வைத்து

 

வாழ்வில் மகாத்மாவாக்கியது !

 

 

 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

 

வாடிய வள்ளலார்

 

வடித்த சொற்கள் – இன்று

 

உலக மக்களிடையே 

 

உயிர் இரக்கம் வளர்த்தது !

 

 

 

அடித்தாலும் உதைத்தாலும்

 

பள்ளிக்குச் செல்லாத பிள்ளை

 

‘படித்தால் வாழ்வில்

 

கொடிபோல் உயரலாம் ‘

 

அன்னையின் சொற்கள்

 

பள்ளிக்கு செல்ல வைத்தது !

 

 

 

எமனிடம்

 

‘என் கணவன் இல்லாமல்

 

குழந்தை வரம் பலிக்குமா?!’

 

கேட்ட சத்யவான்சாவித்திரி

 

கேள்விக் கணையே

 

சத்யவான் உயிரை மீட்கும்

 

வெல்லும் சொல்லானது !

 

 

 

கல்லும் கசிந்துருக

 

கள்ளமில்லாப் பிள்ளைபோல்

 

சொல்லும் செயலுமிருந்தால்

 

வாழ்வில் உனக்கு

 

வெல்லும் இனிய சொல் !

 

 

 

பூ.சுப்ரமணியன்   

 

வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்

by Subramanian   on 07 Jun 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.