மும்பை நகரத்தின் காவல் தெய்வமாக ரிஷப வாகனத்தில் இவள் காட்சி தருகிறாள். அம்பிகையின் முன்பு இரண்டு விளக்குத் தூண்கள் உள்ளன. ஒன்று செங்கலாலும், மற்றொன்று கல்லாலும் ஆனது. கருவறை வெள்ளை மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டது. அம்பிகை ரிஷபவாகனத்தில் அமர்ந்திருக்கிறாள். மும்பாதேவிக்கு மராத்திய பெண்கள் அணியும் ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது.மும்பை மாநகர் முன்னர் ஏழு சிறு தீவுகளாக திகழ்ந்தது.
தற்போது அப்படியல்ல ஒரு தீபகற்பமாக உள்ளது. மீனவர்கள் தெய்வீகமான மும்பாதேவியின் பெயராலே மும்பை என வழங்கப்படுகிறது. இடையில் ஆங்கிலேயரால் பம்பாய் என வழங்கப்பட்டு இப்போது மீண்டும் மும்பை என வழங்கப்படுகிறது.மும்பாதேவி சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.மும்பை நகரின் மத்தியப்பகுதியில் உள்ள முக்கிய கோயில்.இந்தக் கோயிலில் அன்னபூரணிக்கு தனி சன்னதி இருக்கிறது. செவ்வாய்க் கிழமைகளில் அதிகக்கூட்டம் வரும். |