விக்கிரமாதித்தன் வழிபட்ட மிகப்பழமையான தலம் இது. அம்மனின் மிகப்புகழ்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.காளியாக பகுளாதேவி வடிவில் தோன்றிய தேவி பமலை, விமலா, என்ற நாமங்களுடன் வெவ்வேறு காலப் பகுதிகளில் அழைக்கப்பட்டு இன்று பம்லேஷ்வரியாக பக்தர்களுக்கு அருள்புரிய குன்றில் காட்சி தருகிறாள். அனுமனுக்காக இரண்டு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒன்று அடிவாரத்தில் சோட்டி பம்லேஷ்வரி ஆலயம் அருகிலும் மற்றொன்று மலையில் ஏறிச் செல்லும் வழியிலும் உள்ளது. அதேபோல் படிகளில் ஏறிச் செல்லும்போது பம்லேஷ்வரி ஆலயத்தை அடையும் முன் சிவன் கோயிலையும் காணலாம். கோயிலில் அக்னிதேவனுக்கு என ஒரு யாகசாலையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தினம்தோறும் காலை பத்து முதல் பன்னிரண்டு மணிவரை இங்கு யாகம் நடத்தப்படுகிறது. புராதனம், காவியம், தேவியின் அருள் ஆகியவை இந்த ஆலயத்தையும் நகரையும் சத்திஸ்கர் மாவட்டத்தின் ஒரு பெரியதீர்த்தத் தலமாக மாற்றியிருக்கின்றன. |