டெல்லி மாநில மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டம் ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் குடும்பம் ஒன்றிற்கு, ஒரு நாளைக்கு 700 லிட்டர் இலவச குடிநீர் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்ததது. அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், நேற்று மாலை குடிநீர் வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் டெல்லியில் ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு 20 கிலோ லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்றும், தினமும் 700 லிட்டருக்கும் சற்று குறைவாக குடிநீர் டெல்லி மக்களுக்கு இலவசமாக தரப்படும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், வழங்கப்படும் தண்ணீர் அளவைக் கண்காணிக்க குழாய்களில் மீட்டர் பொருத்தப்படும் எனவும், நிர்ணயிக்கப் பட்டதை விட அதிகமாகப் பெறும் தண்ணீருக்கு கட்டணாம் வசூலிக்கப் படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
|