குன்றின் மீது அமைந்த இக்கோயிலில், வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும்
திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவரும் 32 கரங்களுடன்
காட்சி தருகிறார். அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் இருக்கின்றனர்.ஆவணி மாத திங்கள்கிழமைகளில் விழா எடுக்கப்படுகிறது.
ஆவணி கடைசி ஞாயிறன்று இரவில் சுவாமி, முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். தை மாதத்தில் ரத சப்தமி விழா மூன்று நாட்கள் நடக்கிறது.
சப்தமிக்கு முதல்நாள் கோயிலுக்கு எதிரே அக்னி குண்டம் வளர்க்கின்றனர். அப்போது வீரபத்திரருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள் 2 பேர் மற்றும்
வீரபத்திரர் வேடமணிந்த பக்தர் என மொத்தம் மூன்று பேர், குண்டத்தில் இருந்து நெருப்பை கையில் அள்ளி தட்டில் வைக்கின்றனர். அதில் தூபம்
போட்டு வீரபத்திரருக்கு காட்டி, பூஜை செய்கின்றனர். அதன்பின் அம்மூவரும் பூக்குழி இறங்குகின்றனர். ரதசப்தமியன்று வீரபத்திரருக்கு விசேஷ
ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு, தேரில் உலா வருகிறார்.
குன்றின் மீது அமைந்த இக்கோயிலில், வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும் திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவரும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார். அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் இருக்கின்றனர்.ஆவணி மாத திங்கள்கிழமைகளில் விழா எடுக்கப்படுகிறது.
ஆவணி கடைசி ஞாயிறன்று இரவில் சுவாமி, முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். தை மாதத்தில் ரத சப்தமி விழா மூன்று நாட்கள் நடக்கிறது. சப்தமிக்கு முதல்நாள் கோயிலுக்கு எதிரே அக்னி குண்டம் வளர்க்கின்றனர். அப்போது வீரபத்திரருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள் 2 பேர் மற்றும் வீரபத்திரர் வேடமணிந்த பக்தர் என மொத்தம் மூன்று பேர், குண்டத்தில் இருந்து நெருப்பை கையில் அள்ளி தட்டில் வைக்கின்றனர்.
அதில் தூபம் போட்டு வீரபத்திரருக்கு காட்டி, பூஜை செய்கின்றனர். அதன்பின் அம்மூவரும் பூக்குழி இறங்குகின்றனர். ரதசப்தமியன்று வீரபத்திரருக்கு விசேஷ ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு, தேரில் உலா வருகிறார். |