முக்கியப் பண்டிகை நாட்களில் மக்களை நேரில் கண்டு ஆசிர்வதிக்க ராம ராஜ சர்க்கார் என அழைக்கப்படும் ராமர் வெளியே வருகிறார். பகலில் ஓர்ச்சாவில் அருள்பாலிக்கும் ராமபிரான் இரவு சயனத்திற்கு அயோத்தியா செல்கிறார் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை தான் தலத்தின் முக்கிய சிறப்பு. ராமர் விக்ரகம் அவருக்கு நிர்மாணிக்கப்பட்ட சதுர்புஜ் என்ற கோயிலில் எழுந்தருளாமல் ராணி மஹல் எனப்படும் மதுகர்ஷா பட்டத்து ராணியின் மஹாலிலேயே தங்கிவிட்டது.
முக்கியப் பண்டிகை நாட்களில் மக்களை நேரில் கண்டு ஆசிர்வதிக்க ராம ராஜ சர்க்கார் என அழைக்கப்படும் ராமர் வெளியே வருகிறார். பகலில் ஓர்ச்சாவில் அருள்பாலிக்கும் ராமபிரான் இரவு சயனத்திற்கு அயோத்தியா செல்கிறார் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை ! கலியுகத்தில் அன்னையாகக் கண்ட ராணி கணேஷ் குன்வரியின் மஹலில் மகனாகத் தங்குவதே உசிதமாக ராமராஜருக்குத் தோன்றியிருக்கலாம். அன்றிலிருந்து ஓர்ச்சா, தாம் என்ற அந்தஸ்தைப் பெற்று ஒரு தீர்த்தத் தலமாகவும் ஆனது. |