|
|||||
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - கடக லக்னம் |
|||||
எப்பொழுதும் வெற்றியையும் தங்கள் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கும் உங்கள் கடக லக்னத்திற்கு 2ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதும் கேது 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதும் ஒரு பக்கம் உச்சபலத்தையும் மறுபக்கம் சற்று சுமாரன பலனையும் அளிக்கவல்லதாகும். 2ம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்யும் காலத்தில் ராகுவும் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் கௌரவம் அந்தஸ்து கூடும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் அமையும். அதே சமயம் கேது 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. கொடுத்த கடனை கேட்டால் தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் தான் மிஞ்சும். எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமாக வந்து சேரும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் மனவருத்தங்களும் வேதனைகளும் மிகும். உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடன்பிறந்தோர்களுக்கு சுபகாரியம் நடக்க வாய்ப்புகள் அமையும். இருக்கும் பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாத்தல் வேண்டும். இல்லையேல் அவை கையை விட்டுப் போய்விடும். பழைய பொருட்களைக் கொடுத்துப் புதிய பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். சுறுசுறுப்பும் உற்சாகமும் தொற்றிக் கொள்ளும். உழைப்புக்கேற்ற வருமானமோ ஊதியமோ வருவதில் தடையேற்படும். கேது 8ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தந்தையாரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. அரசாங்கத்தால் தேவையற்ற தொந்தரவுகளும் மனநிம்மதியற்ற சூழ்நிலையும் உருவாகும். கடன் வாங்கி வட்டி கட்ட வாய்ப்புகள் கூடும். கடன் அடைபடுவதில் தடைகள் இருந்து கொண்டேயிருக்கும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் நன்கு அமையும். வேலையின் காரணமாக இடமாற்றம் அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இருந்து கொண்டேயிருக்கும். குழந்தைகள், பேரன், பேத்திகள் போன்ற புது உறவுகள் வந்து சேரும். வழக்குகளால் தேவையற்ற பயமும் மனநிம்மதியற்ற சூழ்நிலையும் உருவாகும். தாயரால் நன்மையேற்படும். நண்பர்களால் மகிழ்ச்சியும் ஆதரவும் கிட்டும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற நிம்மதியிழப்பு ஏற்படும். பேச்சில் அதிகக் கவனம் தேவை. காதல் வாழ்க்கை ஆரம்பத்தில் இனித்தாலும் முடிவில் சுவையாக இராது. காதல் நிறைவேறுவதில் நிறையத் தடைகள் ஏற்படும். காதலால் தேவையற்ற மனக்குழப்பமும் விரக்தியும் அமையும். உத்யோகம் (JOB) அரசு வேலை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களையும் வேலை என்ற பொருளில் இங்கு குறிப்பிடப்படுகிறது. இதுவரை வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல வேலை அமையும். வேலையில் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும். ஒரு சிலருக்கு அரசால் தேவையற்ற தொல்லைகளும் வரவேண்டிய பணங்கள் முடக்கப்படும் நிலையும் உருவாகும். தனியார் துறையில் இருப்பவர்கள் வேலையில் ஏற்றம் பெறுவர். எதிர்பார்த்த “ஆன்சைட்” மூலம் நல்ல கம்பெனிக்கு விரும்பிய நாட்டிற்கு செல்ல ஒரு சிலருக்கு சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். வேலையை விட்டு அடுத்த கம்பெனி வேலைக்குச் செல்வதற்குள் நன்கு யோசித்து செய்ல்படுதல் வேண்டும். தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE) உங்கள் லக்னத்திற்கு 7ம் இடத்து அதிபதி சனி 5ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சுயதொழில் சற்று சுமாராகவே இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சுணக்கம் ஏற்படும். பணம் பொருள் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக் கொள்ளும். கொடுக்கல் வாங்கலில் அதிகக் கவனம் தேவை. பொருட்களை தேவையில்லாமல் கொள்முதல் செய்தல் கூடாது. லாபம் குறைவாக இருந்தாலும் உடனே விற்று விடுதல் ஓரளவு நன்மை உண்டாகும். சிறுதொழில் சுயதொழில் கூட்டுத் தொழில் உற்பத்தி சார்ந்த தொழில் அனைத்தும் சற்று சுமாரகவே இருக்கும். அதே சமயம் பங்குச்சந்தை சற்று ஏற்றமுடன் இருக்கும். இருப்பினும் ஷேர் மார்க்கெட்டில் முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. உணவு, ஆடை, ஆபரணத் தொழில்கள் ஏற்றம் பெறும். தகவல் தொடர்பு. போக்குவரத்து, வண்டிவாகனங்கள், ரியல் எஸ்டேட் ஏற்றம் மிகுந்து காணப்படும். சாலையோர வியாபாரம் கமிஷன், ஏஜென்ஸி சுமாராக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதியில் அதிகக் கவனம் தேவை. நிதி, நீதி, வங்கி, கல்வி ஏற்றமுடன் விளங்கும். விவசாயம் : விவசாயம் ஓரளவு சாதகமாக அமையும். விளைச்சலுக்கேற்ற எதிர்பார்த்த விலை ஓரளவு கிடைக்கும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் வாங்க வேண்டியது வரும். ஒரு சிலர் புதிய நிலங்கள் வாங்கவும் வாய்ப்புகள் அமையும். அரசியல் : அரசியல் வாழ்வு ஏற்றம் மிகுந்து காணப்படும். சமுதாயத்தில் பெயர், புகழ், கூடும். பொதுவாழ்வும் சமுதாய வாழ்வும் நன்மையேற்பட்டாலும் ஒரு சிலருக்கு அராங்கத்தால் பிரச்சனைகளும் வழக்குகளும் இருந்து கொண்டேயிருக்கும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் நன்கு கிட்டும். பொது வாழ்க்கையில் பலரால் பாராட்ட வாய்ப்பும் அமையும். தேர்தலில் வெற்றி பெறுவதில் நிறையத் தடைகள் ஏற்படும். கலைஞர்கள் : கலைத்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். நாடகம், சினிமா, ஓவியம், சிற்பம், ஜோதிடம், வளர்ச்சி அபரிதமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். ஆனால் பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும். ஒரு சிலருக்கு பட்டங்களும் விருதுகளும் கிட்டினாலும் பொருளாதார நிலையில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். சின்னத்திரை சிறப்பாக இருந்தாலும் அதில் இருப்பவர்களுக்கு சுமாராகவே இருக்கும். மாணவர்கள் : மாணவர்கள் கல்வியில் அதிக நாட்டம் கொள்வர், தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. ஏனெனில் கேது 8ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் அசிங்கம் அவமானங்களை உண்டுபண்ணிவிடுவார். எனவே எதிலும் கவனம் தேவை. உயர்கல்வி பயில்வதில் சற்று தடையேற்பட்டு பின் கல்வி தொடரும். படிப்பின் காரணமாக ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்வர். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் கூடும். உடற்பயிற்சி செய்தல் நன்மை பயக்கும். விளையாட்டில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் அதிகரிக்கும். பெண்கள் : எண்ணிய செயல் ஈடேறும் காலமிது. இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமண விஷயங்கள் இனிதே நடைபெறும். குழந்தை பாக்யத்தில் இருந்து வந்த தடை நீங்கி மழலைச் செல்வம் பிறக்க சந்தர்ப்பங்கள் அமையும். அடிக்கடி வெளியூர் செல்ல வாய்ப்பு அமையும். அலைச்சல்கள் கூடும். அதனால் உடல் சோர்வும் மனச்சோர்வும் அமையும். புதிய விஷயங்களைக் கற்பதிலும் அதை செயல்படுத்துவதிலும் ஆர்வமும் உற்சாகமும் கூடும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். வேலைக்குப் போகும் பெண்களுக்கு வேலையில் முன்னேற்றமும் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் அமையும். ஒரு சிலர் கம்பெனி அல்லது வேலை மாற வேண்டியது வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நட்பும் கிட்டும். உயரதிகாரிகள் விஷயத்தில் தேவையில்லாமல் வாய்விட்டு அவஸ்தைப் படுவைதக் குறைத்துக் கொள்ளல் வேண்டும். உடல் ஆரோக்யம் : சர்க்கரை நோய் இருப்பவர்கள் நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. சளித்தொல்லைகள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். கண், மூக்கு கால் போன்ற உடல் உறுப்புகளில் தேவையில்லாத வலி வேதனை வந்து போகும். அடிவயிற்றில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட எண் : 3, 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட நாள் : வியாழன், செவ்வாய்கிழமை அதிர்ஷ்ட இரத்னம் : மஞ்சள், புஷ்பராகம், பவழம் பரிகாரம் : “செவ்வாய்க்கிழமை” தோறும் “முருகனை” வழிபடுதல் நன்மையேற்படும். அத்துடன் “இஷ்டதெய்வம்” மற்றும் “குலதெய்வம்: வழிபாடும் நன்மைதரும். - ஜோதிட இமயம் அபிராமி சேகர் maduraiabiramisekar@gmail.com |
|||||
by Swathi on 21 Dec 2015 0 Comments | |||||
Tags: Ragu Kethu Peyarchi 2016 Ragu Kethu Peyarchi Ragu Kethu Peyarchi Palangal Meenam Rasi ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|