LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

ஆடிப்பெருக்கும் ஆட்டனத்தியும்! - மேகலா இராமமூர்த்தி, வட கரோலினா,அமெரிக்கா

- மேகலா இராமமூர்த்தி, வட கரோலினா, அமெரிக்கா

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாளை 'ஆடிப் பெருக்கு' என்று கொண்டாடுவது நம் மக்களின் வழக்கம். இந்நாளில் கலவைச் சோறுகளைத் (சித்திரான்னங்கள்) தயாரித்து, காவிரியாற்றங்கரையில் அமர்ந்து உண்டுமகிழ்வர். அத்தோடு, பல மங்கலப் பொருட்களையும் காவிரியன்னைக்குப் படைத்தின்புறுவர். அவ்வினிய வேளையில் காவிரியின் புதுவெள்ளத்தோடு மக்களின் மகிழ்ச்சி வெள்ளமும் சேர்ந்தே பாயும்!

முற்காலத்தில் ஆடிப்பெருக்கானது ’புனல் விழா’ என்ற பெயரில் காவிரியாற்றின் துறைமுகப் பகுதிகளில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. 
அப்போது நடந்த சுவையான நிகழ்வொன்று!

புதுப்புனல் பாய்ந்துவரும் ஆடி மாதத்தின் ஒரு நன்னாள்! கழார் எனும் காவிரியாற்றின் துறையில் நீர்விழாக் கொண்டாடிக்கொண்டிருந்தான் பீடும் பெருமையும் கொண்ட கரிகாற் பெருவளத்தான்!

ஆட்டத்தில் வல்லவனும் (அன்றைய பிரபுதேவா!)😎கரிகாலனின் மருமகனுமான சேரமான் ’ஆட்டனத்தி’ (ஆட்டத்தில் சிறந்திருந்ததால் அத்தி எனும் பெயர்கொண்ட அவன் ஆட்டனத்தி என்றே அழைக்கப்பட்டிருக்கிறான்) அவ்விழாவில் நீர் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அப்போது காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் எதிர்பாராதவிதமாய் அவன் அடித்துச் செல்லப்பட்டுவிட்டான்!

அவன் நடனத்தைக் கண்டுகளித்துக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் எதிர்பாராத இந்த நிகழ்வுகண்டு திகைத்தனர். இதனால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த கரிகாலன் மகளும், அத்தியின் மனைவியுமான ஆதிமந்தி, “என் கணவரைக் காப்பாற்றுங்கள்!” என்று அலறிக்கொண்டே காவிரியின் கரையோரமாய் ஓடினாள். காவிரி கடலில் கலக்கும் இடத்தருகே வந்து நின்றாள் மூச்சிரைக்க!

அப்போது ஆங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது! கடலிலிருந்து தோன்றிய ஓர் இளம்பெண் சுயநினைவற்ற நிலையில் இருந்த அத்தியைத் தன் கையில் பிடித்து இழுத்துக்கொண்டு கரையோரமாய் வந்தாள். ஆதிமந்தியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. விரைந்தோடிச்சென்று தன் கணவனைப் பற்றினாள். நல்லவேளை! அவன் உயிரோடுதான் இருந்தான். ஆதிமந்தி அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் ஏது?

எல்லாம் சரி….கடல்நடுவே திடீரென்று தோன்றி அத்தியைக் காத்த அந்த அதிசயக் கன்னி யார்? அவள் பெயர் ‘மருதி.’ அவள் அத்தியின் முன்னாள் காதலி என்கின்றனர் சிலர். கடலே அத்தியைக் கரையொதுக்கியது; ’மருதி’ பாத்திரம் கற்பனையாகப் புனையப்பட்டது என்று சொல்வாரும் உளர். நான் அருகிலிருந்து பார்க்காததால் எது உண்மை என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ;-)

இந்த வரலாற்று நிகழ்வால் ஈர்க்கப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன், ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாற்றை, ’சேர தாண்டவம்’ எனும் பெயரில் நாடகமாகவும், கவியரசு கண்ணதாசன் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ எனும் பெயரில் சுவையான குறுங்காவியமாகவும் படைத்தனர். இந்தக் கதையே மக்கள் திலகம் எம்ஜிஆர், அஞ்சலி தேவி, பத்மினி ஆகியோர் நடிக்க மன்னாதி மன்னன் திரைப்படமாகவும் பின்னர் எடுக்கப்பட்டது.

சோழன் கரிகாலனின் அருமை மகளான இந்த ஆதிமந்தியே தமிழிலக்கியத்தில் பெண்பாற் புலவர்களில் ஒருவராகப் போற்றப்படும் ’ஆதிமந்தியார்.’

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக் 
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

(குறுந்: 31) எனும் குறுந்தொகைப் பாடல் ஆதிமந்தியார் எழுதியதாகப் பதிவாகியிருக்கிறது.

”வீரர்கள் கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும், மகளிர் ஆடுகின்ற துணங்கைக் கூத்தின்

கண்ணும் பெருமைமிக்க என் தலைவனை நான் காணவில்லை. யானும் ஓர் ஆடுகள மகளே; என் கையிலுள்ள சங்கு வளையல்களை நெகிழச் செய்த என் தலைவனும் ஓர் ஆடுகள மகனே” என்பது இப்பாடலின் பொருள்.

தன் வாழ்க்கைச் சம்பவத்தையே சுவையான பாடலாய் வடித்துள்ளார் ஆதிமந்தியார் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது! 

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் 18-ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை இந்த ஆடிப்பெருக்கு விழா குறிக்கும். இதில் புதுமணத் தம்பதிகளுக்கு முதல் ஆடிப்பெருக்கில் தாலிப்பெறிக்கி  போடுவது வழக்கம். இதை "பதினெட்டாம் பேர்" என்று  வழக்கத்தில் அழைப்பதும் உண்டு. தமிழர்களின் முக்கிய விழாக்களில் பொங்கல், கார்த்திகை மற்றும் ஆடிப்பெருக்கு ஆகியவை சிறப்பானவை... 

by Swathi   on 03 Aug 2018  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
செம்மாந்து செயல்படும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மாந்து செயல்படும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்
நாவல்கள், சிறுகதைகளின் வளர்ச்சி- 19ம் நூற்றாண்டு இறுதி 20ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு நாவல்கள், சிறுகதைகளின் வளர்ச்சி- 19ம் நூற்றாண்டு இறுதி 20ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு
சுவாரசிய தகவல்கள் சுவாரசிய தகவல்கள்
சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள் சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா
கருத்துகள்
05-Aug-2018 15:06:46 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். இந்த ஆடிப் பெருக்கு கதையை பின்பற்றி கவிஞர் ஒருவர் கூறிய கருத்து சற்றே முரணாக உள்ளது.ஆதாவது நான் சொல்ல வருவது மஹாபாரத யுத்தம் பற்றியது. மஹாபாரத யுத்தம் 18 நாள் நடந்ததென்னவோ உண்மைதான்.ஆனால் அது ஆடி மாசம் நடைபெறவில்லை.மார்கழியில் நடைபெற்றது.
 
04-Aug-2018 16:43:02 கவிஞர் தணிகை said : Report Abuse
வணக்கம் மேகலா இராமமூர்த்தி வட கரோலினா அமெரிக்கா .ஆட்டனத்தி ஆதி மந்தி..கதைக்கு ...காவிரியின் ஆடி 18 ம் பெருக்கு பற்றி ...எழுதியமைக்கு .நன்றி. 18 ஆம் போர் மஹாபாரத யுத்தம் பற்றியதும்...கிராமிய கோயில்களில் இருந்து அன்றைய தினம் ஆயுதங்களை எல்லாம் கொண்டு வந்து கழுவும் நாளும் அதுவே. வருகை தருக :www . மறுபடியும்பூக்கும் .ப்லாக்ஸ்பாட்.காம்
 
04-Aug-2018 14:38:53 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம்.வரலாற்றில் அறியாத செய்திகளை தெரிவித்மைக்கு நன்றி.ஆட்டனத்தி ஆதிமந்தி சுவாரஸ்யம்.
 
04-Aug-2018 10:10:21 கே.வராகாகிரி said : Report Abuse
தங்களின் விழா குறிப்பு பயனுள்ளது நான் ஒரு விவசாயீ மற்றும் வாழ்வியல் ஆராச்சியாளன் ஒருமனிதனின் பிறந்த வருடம் .மாதம் ,தேதி .நேரம் கொடுத்தால் அவரின் உடல் நிலை பாதிப்புகள் பற்றி அறிந்துகொள்ளலாம் மேலும் இயற்கை முறை உணவுகள் முலம் நோயிகளை தீர்க்கலாம் ................................................................................................................. கைகுத்தல் அரிசி .சதா அரிசி .சாமை , தினை, கம்பு,அரிச்சிவகைகள் மற்றும் சிறுதானிய பிஸ்கெட் வகைகள் தேவையுள்ளவர்கள் மொத்தவியாபாரிகள் தொடர்புகொள்ளுங்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.