LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- சார்லஸ் டார்வின் (Charles Darwin )

சார்லஸ் டார்வின்-பகுதி 4

சார்லஸ் டார்வின்-பகுதி 4  

-சூர்யா சரவணன்

 

 

 ஜீவ மரணப் போராட்டம்

 

   கடவுள் நம்பிக்கையானது மனித அறிவின் மகத்தான வளர்ச்சி மட்டுமல்ல, மனிதனையும் கீழ்த்தரப் பிராணிகளையும் பிரித்துக்காட்டும் அதிபூரணமான வேறுபாடாகவும் இருக்கிறது. 

 

 

 

          1857ஆ-ம் ஆண்டு சார்லஸ் டார்வின், ஜீவராசிகளின் மூலம் என்ற புத்தகத்தை எழுதினார். மத நம்பிக்கைகளை வைத்து பிழைப்பு நடத்தும் மதவாதிகளின் கண்டனத்திற்கும், மாபெரும் எதிர்ப்புக்களும் ஆளாகினார். உலகின் அறிவுப் பொக்கிஷங்களில் ஒன்றாக இன்றும் உள்ளது. இயற்கைப் பிரிநிலை வழியாக அல்லது ஜீவப்போரட்டத்தில் அபிமான இனங்களின் தற்காப்பு நியமத்தின் வழியாகவும் இது எழுதப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் உலகிலுள்ள அனைத்து பிராணிகளும் ஒன்றோடொன்று உருவ ஒற்றுமை கொண்டிருப்பதைப் பொறுத்துத் தொகுப்பு வரிகளாக பிரிக்கப்பட்டன. இந்த தொகுப்புகளின் அடிப்படையானது, குறிப்பிட்ட இனப்பிராணிகள் தங்கள் இனத்தை குட்டி குஞ்சுகளை ஈன்று விருத்தி செய்யுமே இல்லாமல், இன்னொரு வர்க்கத்தை சேர்ந்த பிராணிகளுடன் கலந்து சந்ததி விருத்தி செய்யாது.

 

          உலகில் உள்ள பிராணிகளின் வர்க்கங்கள் எண்ணிக்கை ஏராளம். பிராணி தினுசுகளின் பலவித வேறுபாடுகளினால் விளைந்தவையும் ஆகும். இந்த வேறுபாடுகள் எவ்வாறு உருவாயின? ஒரே வர்க்கத்தில் பல வேறுபாடுகளுடன் இந்த வர்க்கங்கள் எவ்வாறு ஒவ்வொரு இனமாகத் தங்கள் வம்சத்தை நிலைநாட்டி வந்திருக்கின்றன? வர்க்க பேதங்கள் எவ்வாறு உண்டாகின? பலவிதமான ஜீவப்பிராணிகளுக்கு மூலம் எது? ஜீவராசிகள் அனைத்திற்கும் மூலம் என்ன?           பிராணிகளிலும் தாவரங்களிலும் உள்ள அமைப்பு வேறுபாடுகள், காட்டிலுள்ளவைகளைவிட நாம் வீட்டில் வளர்ப்பவைகளிடம் இன்னும் அதிகமாகப் புலப்படுவதைக் காணலாம். வீட்டிலே வைத்து வளர்த்துச் சாதுவாகப் பழக்கப்படுத்தப்பட்ட பிராணிகளிடமும் செடி, கொடிகளிடமும் அந்தந்தச் சூழ்நிலைகளைப் பொறுத்து வேறுபாடுகள் அதிகமாக இருக்கின்றன. ஆகவே, அத்தகைய சூழ்நிலைகளால் ஏற்பட்ட வேறுபாடுகளின் காரணங்களை அறிவது மிகவும் அவசியம். இ’காரணங்கள் முக்கியமாக இரண்டு ரகங்களாகும். குளிர், உஷ்ணம் போன்ற சீதோஷ்ண நிலைமைகள், உணவு, ஊட்டம் முதலான வெளிப்புற மூல அம்சங்கள், இவை பிராணிகளின் வேறுபாடுகளுக்கு வெளிப்புறமிருந்து வரும் காரணிகளாகும்.

 

பிராணிகளின் உட்புறமுள்ள காரணங்கள்: முக்கியமாகப் பிராணிகளின் இனவிருத்தி உறுப்புக்களை உருக்கும்படியாகப் பிராணிகளின் உடல்வாசியில் பிதுரார்ஜிதமாக வளர்ந்து வரும் தன்மையின் மூலாம்சங்கள்.

 

இந்த இரண்டாவது காரணம்தான் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், பிராணி அமைப்பில் உள்ள குரிப்பிட்ட வேறுபாடு கால ஓட்டத்தில் நிலைத்திருக்குமா? இல்லையா? என்பதை இந்த இரண்டாவது காரணம் தான் நிர்ணயிக்கிறது. சுருங்கச் சொன்னால், வழி வழியாக வரும் இன இயல்புகள்தாம் ஒரு புதுப்பண்பின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாகும். பெரும்பாலும், வேறுபாடுகள் தனியாக உண்டாவதில்லை. சில சமயங்களில் அவை பிற முறைகேடுகளுடன் விசித்திரமாக கலந்து வேறு உருக்கொள்கின்றன. உதாரணமாக, வெண்ணிறமான நீலக்கண் படைத்த மங்கிய ஆண் பூனைகள் பெரும்பாலும் செவிடுகளாகவே உள்ளன. இங்கே வர்ணக்குறைவு ஏதோ ஒரு விவரிக்க முடியாத காரணத்தால் செவிட்டுத்தனத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த “பரஸ்பர சம்பந்தமுள்ள வேறுபாட்டியல்” எவ்வாறு வீட்டில் வளர்க்கும் பிராணிகளைப் பாதிக்கிறது என்பதை நாம் சுலபமாகக் காணலாம். ஒன்றில் வளர்ச்சியையும் இன்னொன்றில் விரும்பாத பண்பையும் பின் சந்ததிகளில் அது உண்டாக்கலாம். உறுப்புகளை உபயோகப்படுத்துவது அல்லது உபயோகப்படுத்தாமல் இருப்பது கூடப் பல தலைமுறைகளின் தொடர்ச்சியில் அவை பிராணிகளின் தேக அமைப்பை மாற்றக்கூடும். உதாரணமாக பால் கறக்கப்படாத பசு மாடுகளைவிடப் பால் கறக்கப்படும் பசு மாடுகளின் பால் மடிகள் அளவில் பெரிதாக வளர்ச்சியுறுவதைக் காணலாம். வெவ்வேறான இரண்டு ரகப் பிராணிகளைக் கலப்பு மணம் பெறச் செய்வதானது இவற்றுக்குப் பிறக்கும் குட்டிகளில் பல வேறுபாடுகளையும் உண்டாக்குகின்றன.

 

   பிராணிகளுக்குக் கலப்பு மணம் செய்யும்போது மனிதன் மிகவும் கவனத்துடனும் செய்யவேண்டும். இல்லையெனில் எல்லாவிதமான வர்ணங்களும் அளவுகளும் உண்டாகக்கூடிய பலபட்டரை சங்கம ஜாதிகளும் உண்டாகும். ஆக, மனிதன் வீட்டில் வளர்க்கும் பிராணிகளிளும், தாவரங்களிளும் பல வேறுபாடுகளுடைய சந்ததிகளைக் கண்டோம். உதாரணமாக, வீட்டில் வளர்க்கும் புறாக்களில்தான் எத்தனை வகைகளிருக்கின்றன. சுமார் கி.மு.3000 வருடத்திற்கு பின்பிருந்து மனிதன் புறாக்களை வளர்த்து வந்திருக்கிறான். ஆங்கிலப்புறா, ஆடப்புறா, விசிரிப்புறா, நெஞ்சு தூக்கிப்புறா, மணிப்புறா, மாடப்புறா என்று புறாக்களில்தான் எத்தனைவிதமான அமைப்புகள் இருக்கின்றன. இதை முதலில் பார்க்கும்போது இவை தனித்தனியான பறவை வர்க்கங்கள் என்றுதான் தோன்றும். ஆனால் அவை ஒரே புறா இன மூலத்தில்தான் தோன்றி, மனிதன் வளர்த்த முறையினால் உருவப்பொலிவுகள் மாறி மாறி  வந்திருக்கின்றனவே தவிர வேறல்ல. மனிதனுக்கு உபயோகமாக உள்ள உருவப் பிராணிகளைத்தான் மனிதன் தேர்வு செய்து வளர்த்து அதன் இனத்தைப் பல காலங்களாக நிலைக்கவைத்து வந்திருக்கிறான். நாய், பூனை உள்ளிட்ட வீட்டு பிராணிகள் என்ற இந்தச் சின்ன உலகத்தில் மனிதன் தான் இயற்கையின் ஸ்தானத்தை வகிக்கிறான் என்று சொல்லலாம்.

 

 பிராணிகளும் தாவரங்களும் எவ்வாறு வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். இனங்களைப் பார்த்தால் அவை ஒரு தெளிவான வகுப்பைச் சேர்ந்தவை எனப் புலப்படும். எந்த வகுப்பென நிர்ணயிப்பது சிரமமாயிருந்தாலும் கூட. இனங்களைச் சேகரித்தால் அவை ஒரு வம்சாவளியை உண்டாக்கும். அந்த வம்சாவளிகள் ஒரு பொதுக் குடும்பத்தைச் சேர்ந்தவையென்றும், அந்தப் பொதுக் குடும்பங்களெல்லாம் ஒரு பொதுவர்க்க ரகத்தைச் சேர்ந்தவையென்றும், அந்த வர்க்க ரகங்களெல்லாம் ஒரு பொது ஜாதியை சேர்ந்தவை என்றும் தெரியும். இறுதியில் அவையெல்லாம் ஒரு மூல இனத்தை சேர்ந்தவையெனப் புலப்படும். ஒரு மூல இனம் என்பது இயற்கை படிப்படியாக வளர்ச்சியுறச்செய்த ஓர் அடிப்படை அமைப்பிற்கு மூல வேராகும். உதாரணமாக, முதுகெலும்புள்ள பிராணிகளும் அதற்கு நேர்மாறான முதுகெலும்பில்லாத் தசைநார்ப் பிராணிகளும்  நண்டுகள் போன்ற மேலோடுகள் உள்ள பிராணிகளும் வெவ்வேறான ரகங்களிலிருந்து வளர்ச்சியுற்று வந்திருக்கின்றன.

 

   ஜீவ இனங்களெல்லாம் திருமறையில் சொல்லி இருப்பது போலக் கடவுளால் நேரில் படைக்கப்பட்டவை என்ற நம்பிக்கை நிலவிவந்தது. ஆகவே, இந்த இனங்கள் நிலையானவை, ஆனால் பல ரகங்களாக வளரக் கூடியவை என்று நம்பப்பட்டது. உதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு ஜீவ இனத்திற்கும் பின் சந்ததிகளுக்கு வழங்கக்கூடிய தனித்தனியான பண்பு, வேறுபாடுகள் உள்ளன. நம்மிடையே தனித்தனியான குடும்ப பண்புகளைப் பார்த்தால் இது விளங்கும். ஒரே ஜீவ இனத்திலுள்ள இந்தத் தனித்தனியான பண்பு வேறுபாடுகளைப் பார்த்தால் எந்தப் பிராணிகள் ஓர் இனத்தைச் சேர்ந்தவை, எவை இன வேறுபாடுகள் உடையவை என்ற குழப்பம் ஏற்படும். இரண்டு இன வேறுபாடுகள், வர்க்க பேதங்கள், இனப்பிரிவுகள் உட்பிரிவுகள் இவற்ரிற்கிடையே ஒரு நேரான வரிசைக் கிரமம் எளிதில் விளங்காது.

 

   நாம் குறிப்பிட்ட ஜீவ இனங்களின் தனித்தனியான பண்புகள் தாம் பல தலைமுறைகளில் பலவித வர்க்க பேதங்கள் அடைந்து மிகவும் புதிதான இனங்களை உற்பத்தி செய்து வளர்கின்றன. ஓர் இனத்தின் வம்சாவளியை எவ்வளவுக்கெவ்வளவு பெரிதாகப் பார்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதில்  வர்க்கபேதங்களும் இனங்களும் உள்ளன. “ஜீவ உருவங்களானவை ஒன்றிற்குள் ஒன்று உட்பட்ட பல உட்பிரிவுகளின் தொகுப்புகள் பல வகுப்புகளாக” பிரிக்கப்படுகின்றன.

ஜீவ உருவங்கள் எவ்வாறு பலவிதமானவை என்றும், இந்த வேறுபாடுகளை வகுப்புகளாகத் தொகுப்பதற்கு எவ்வாறு தனி இனப் பெயர்கள் சூட்டப்பட்டன. இந்த வேறுபாடுகளை ஒழுங்குபடுத்தி தனித்தனி இனங்களாக எப்படி வகுப்பது? ஜீவப் பிராணிகள் தங்கள் இனம் நிலை’க போராடும் தற்காப்பு நியமத்திலிருந்து நாம் இயற்கைப் பிரிநிலை முறையினால் அதை வரிசைப்படுத்தலாம். குறிப்பிட்ட பிராணியின் இனப்போராட்டத்துக்கு உபயோகப்படும் எந்த வேறுபாடும் கால வளர்ச்சியில் நிலைத்திருக்கும். அந்த ஜீவப் போராட்டத்திற்குத் தடையாக இருக்கும் எந்த வேறுபாடும் காலக்கிரமத்தில் மறைந்துபோகும்.

 

    காலக்கிரமமாக ஜீவித்து வரும் பிராணிகள் குட்டி குஞ்சுகளை உற்பத்தி செய்யும்போது, குறிப்பிட்ட இனவேறுபாடு வம்சாவளியாகப் பிறக்கின்றன. ஜீவப் போராட்டத்திற்குத் தடையான வேறுபாடுகளை உடைய பிராணிகள் கால சுழற்சியில் காணாமல் போகின்றன. ஆக உபயோகமான இன வேறுபாடுகளுடைய பிராணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கின்றன. அந்த இன வேறுபாடே பலவிதங்களாக மாரி வந்து பரிணாம வளர்ச்சியில் இன்னும் மிகவும் உபயோகமான இன உருவங்களாக ஆகின்றன. இவ்வாறு மூல இனங்களின் ஒரு புதுரக இனம் உருவானது.

 

    தற்காப்பு நியமத்தின் ஜீவப் போராட்ட முக்கியத்துவம் இவ்வாறு நிதர்சனமாகிறது. இரண்டு நாய்கள் ஓர் எலும்புத் துண்டுக்காகச் சண்டையிடுவதைத் தற்காப்பு நியமப் போராட்டத்திற்கு ஓர் உதாரணமாகக் எடுத்து’ கொள்ளலாம். ஏனெனில் அதற்கு உணவுதான் முக்கிய நோக்கம் அதைத் தவிர மற்றொன்றும் உண்டு. பாலைவனத்திலுள்ள ஒரு செடி, தன் இனத்தோடு மட்டுமல்லாமல் சீதோஷ்ண தாக்குதல்களிலிருந்தும் தன்னைத் காத்துக்கொள்ள போராட வேண்டி உள்ளது. அந்தப் பாலைவனச்செடிக்கு அத்தியாவசியமான தேவை தண்ணீர். தாவரங்கள், ஆயிரக்கணக்கான விதைகளை உற்பத்தி செய்கின்றன. ஆனால் அதில் எவ்வளவு நிலைத்து ஜீவிக்கின்றன? ஜீவப் போராட்டம் என்பது தனித்தனியாக பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல. தன் இனத்தை உற்பத்தி செய்து இனவிருத்தி செய்யும் சக்தியையும் பொறுத்ததாகும். ஒரு முரட்டு காட்டு மிருகமானது காட்டிலுள்ள தன் போட்டி மிருகங்களையெல்லாம் தோல்வியடையச் செய்து வெற்றியடைந்தாலும் அது மலடாக இருந்தால் ஜீவப் போராட்ட நியமத்தில் தவறி அதன் இனம் அழியும்.

 

    ஜீவப் போராட்டத்திற்கு காரணம், சகல தாவர பிராணிகளின் அளவு மீரிய உற்பத்திப் பெருக்கமாகும். போராட்டத்தில் பலவீனமானவை ஒரு புறம் அழிந்தும், வலிமையானவை இன்னொரு புறம் தங்கி நின்றும் வராதிருந்தல் இனப்பெருக்கங்கள் குவிந்து இந்த உலகம் அவற்றுக்குப் போதாததாகிவிடும். ஜீவ இனங்களின் அளவு மீரிய உற்பத்திப் பெருக்கத்தை தடு’க இயற்கை பலவித காரணங்களையும் ஏற்படுத்தி உள்ளது. பெரும் பகுதி முட்டைகளிலும், கருக்களிலும் அழிந்துபோகின்றன. பனி நத்தைகளே தாவர விதைகளில் பெரும் பகுதியை அழித்துவிடுகின்றன. உற்பத்திப் பெருக்கத்தின் போட்டிகளால் ஏற்படும் உணவு பற்றாக்குறையும் அழிவுக்கு ஒரு மு’கிய’ காரணமாகும்.

 

    வலிமையான ஜீவப் பிராணிகளின் எதிர்ப்பால் ஒரு ஜீவ இனம் அதிகமாக உற்பத்தி பெருக்கம் அடையாமலோ அல்லது அடியோடு மறைந்தேபோகிறது. யானைகளைப்போன்ற சில மிருகங்கள் எதிர்ப்பின்றி தங்கள் இனப்பெருக்கத்தை அளவு மீறி அதிகாரி’க முடியும். ஆனால் சீதோஷ்ண நிலைகள் அதன் வளர்ச்சியை அழிக்கின்றன. கொடூரமான கார் காலத்தில் பறவைகளின் உற்பத்திப் பெருக்கம் குன்றுகிறது. பெருவாரி நோயும், ஓர் இனத்தின் பெருக்கத்தை குறைக்க உதவுகிறது. பெருவாரி நோய்க்குக் காரணமான புல்லுருவிப் புழுக்களோ தாங்கள் அழிக்கும் பிராணி இனங்களின் அழிவில் தங்கள் இனத்தை விருத்திசெய்கின்றன. இந்த ஜீவப் போராட்டத்திலிருந்து மிகக்குறைவான ஜீவ உருவங்களின் எண்ணிக்கைதான் வெற்றி பெற்றுவிடுகின்றன.

 

   இந்த ஜீவ உருவங்கள்தாம், தாவர வர்க்கத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் பிராணி இனத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் இயற்கையின் தேர்வு சல்லடை வழியாக வெகு காலம் நீடித்து இரு’கின்றன. இயற்கையானது சில குறிப்பிட்ட ஜீவ வர்க்கங்களைக் காலோட்டத்தில் அழியாதபடி, சேமித்து நிலைநிற்கச் செய்து, மற்ற ஜீவ வர்க்கங்களை சிறிதும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அழித்து விடுகின்றது. ஆனால் மறைந்துபோன ஜீவவர்க்கம் நிலைத்து நின்ற ஜீவ வர்க்கம் என்ற இரண்டு ரகத்தைத்தவிர சம்பந்தமில்லா இனவேறுபாடுகளின் குழு எனும் 3வது ரகத்தை இயற்கையானது அங்கீகாரிக்கவோ நிராகாரிக்கவோ செய்யாமல் அதன் போக்கில் விட்டுவிடுகிறது.

 

    இயற்கைப் பிரிநிலை அல்லது இயற்கையின் தேர்வு என்பது எத்தகைய இனவேறுபாடு உற்பத்தி செய்யப்படடிருக்கிறது என்பதைப் பொறுத்தல்ல. இயற்கையானது இனவேறுபாடுள்ள சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து மற்றவற்றிலிருந்து அதை பிரித்தெடுத்து நிலைத்து நிற்கச் செய்கிறது. அதுதான் இயற்கைப் பிரிநிலை அல்லது இயற்கைத் தேர்வாகும். அடுத்தபடியாக, இயற்கை எத்தகைய வர்க்க பேதங்களைத் தேர்ந்தெடுக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

 

    கண்ணுக்கு அழகான மிருகத்தை மனிதன் தேர்ந்தெடுப்பதைப்போல இயற்கை தேர்ந்தெடுப்பதில்லை தனக்கு உபயோகமான வர்க்க பேதத்தைத்தான் அது தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. பிராணியின் வெளிப்புறப் பண்பைக் கொண்டே மனிதன் தனக்குத் தேவையான பிராணியைத் தேர்வு செய்கிறான். ஆனால் இயற்கையோ பிராணியின் உட்புறப் பண்பையும் குணத்தையுமே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. ஜீவப்போராட்டத்தில் எதிர்த்து நின்று வெற்றியுடன் தங்கி நிற்கும் ஆற்றல்தான் உட்புறப் பண்பாகும். அடுத்தபடியாக இயற்கையின் தேர்வில் ஆண், பெண் உறவு பற்றிய கேள்வி வருகிறது. இனவிருத்தி செய்யத் தேவையான ஒரு தேர்வு முறைதான் தங்களுக்குத் தேவையான துணைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஆண், பெண் உறவாகும். இதில் தோல்வியுறும் பிராணி, தன் இனத்தை விருத்தி செய்யாமல் பின்தங்குகிறது. ஆண் இனத் தோற்றத்திற்கும் பெண் இனத் தோற்றத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசத்திற்கு முக்கிய காரணம் ஆண், பெண் உறவு தேர்வுதான். இப்போட்டியில் மிகவும் வலிமை வாய்ந்த ஆண் பிராணிகளே தேர்ந்தெடுக்கப்பட்டுத் தங்கள் இனத்தை நிலை நிறுத்துகின்றன.

 

   இயற்கைத்தேர்வு தனித்தனிப்பண்பு வேறுபாடுகளை வளர்க்கிறது. கபில நிறக் குதிரைகளின் கால்களில் பெரும்பாலும் வரிக்குதிரைகளைப்போல வரிக்கோடுகள் இருப்பதுண்டு. கழுதைக்கும் குதிரைக்கும் கலப்பினமாகப் பிறந்த கோவேறு கழுதையின் கால்களிலும் சாதாரணமாக வரிக்கோடுகள் இருப்பதுண்டு. குதிரை, கழுதை, வரிக்குதிரை, மூன்று இனத்திற்குள் பொதுவான ஒரு மூதாதை இனம் உண்டு என்பது தெளிவு. மனித கண்ணைப்போல அதிசயமான ஓர் உறுப்பை இயற்கைப் பிரிநிலை உண்டாக்க முடியுமா? ஆனால் ஜீவராசிகளின் மூல இனத்திற்கும் கண்கள் இருந்தன. இனங்களுக்கு ஆதிமூலமான உயிரணுக்கள் தோல்கள் மீது வர்ணப்புள்ளிகள் இருந்தன. சில நட்சத்திர மீன்களின் வர்ணப் புள்ளிகளிலுள்ள சிறு துவாரங்கள் ஒருவிதப் பசைக்களியால் நிறையப்பட்டு அங்கு பார்வை நரம்பு ஓடுகிறது. மனிதனின் கண்ணில் காணப்படுவதுபோல கண்ணிற்கு அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் நட்சத்திர மீனின் கண்களில் உள்ளன.

 

    மனிதக்கருவின் கண்ணைப் போலவே மீனின் கண் தோற்றம் அளிக்கிறது. அந்த ஆதிமூல இனத்திலிருந்து முதுகெலும்புப் பிராணிகளின் கண்கள் வழியாக படிப்படியாக பரிணாம வளர்ச்சியின் மனிதக் கண் உருப்பெற்றிருக்கிறது. இந்தக் கண்ணின் விஷயம் போலவேதான் மற்ற உறுப்புக்களின் விஷயமும். எல்லா மனித உறுப்புகளுமே ஆதி மூல இனத்திலிருந்து படிப்படியாக பலபல நாம ரூப பேதங்களடைந்து பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கின்றன. உதாரணமாக, மீன்களின் வாயுப்பை படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்து முதுகெலும்புப் பிராணிகளின் நுரையீரலாக மாற்றம் பெற்றது. மனிதனிடம் கூட, காற்றுக் குழலின் திறவை வழியாகத்தான் உணவு உள்ளே செல்கிறது. அந்த விசித்திரமான பரிணாம வளர்ச்சிக்கு ஒரு சின்னமாக இது விளங்குகிறது. இயற்கைத் தேர்வின் நியமங்கள் ஜீவப் பிராணிகளின் உடல் அமைப்பை உருவா’குவிப்பதைப் போலவே அதன் இயற்கை அறிவையும் உருவா’குகின்றன.

 

 தேனீ, தேன் கூடு கட்டுவதும், எறும்பு சமுதாய இயலாக இயங்கி புற்றுவைப்பதும் இயற்கை அறிவு எனக்கொள்ளப்படும். உபயோகத்தாலும் பழக்கத்தாலும் ஓர் உடலுறுப்புக்கு வளர்ச்சி ஏற்படுவது போலவே இயற்கை அறிவிற்கும் அதனால் வளர்ச்சி ஏற்படுகின்றது. உபயோகப்படுத்தப்படாத இயற்கை அறிவானது மங்கி மறைந்துபோகிறது. தென் அமெரிக்காவிலுள்ள இசைக்குருவி சகதி மண்டியிலிருந்து தன் வலையைப் பின்னுவது போலவே இங்கிலாந்திலுள்ள இசைக்குருவியும் வலைபின்னுகிறது. அதற்குப் பொதுவான ஒரு மூல இனத்திலிருந்து அந்த இயற்கை அறிவை வம்சாவழியாகப் பெற்றிருக்கின்றன.  வெவ்வேறு தேசத்திலுள்ள இரண்டு இசைக்குருவிகள் ஒரே மாதிரியான சுபாவத்தை பல யுகங்களாக அடைந்திருக்கின்றன என்பதற்குப் பொதுவான ஒரு மூல இனத்திலிருந்து பெற்று வந்த இயற்கை அறிவைத்தவிர வேறு எதைக்காரணமாகச் சொல்ல முடியும்? வெவ்வேறான இரண்டு இனங்களைச் சேர்ந்த பிராணிகள் ஒன்றோடொன்று இணைந்து கருக்கொள்வதில்லை என்று பொதுவாகச் சொன்னோம். ஆனால் இதையே அடிப்படை வாதமாக எடுத்து’கொண்டு, “எல்லா பிராணிகளும் தனித்தனி இனங்களாகக் கடவுளால் படைக்கப்பட்டவையேத் தவிற ஒன்றிலிருந்து ஒன்று உண்டாகவில்லை. ஒன்றோடொன்று இணைந்து கருக்கொள்ள முடியாது” என்று சிருஷ்டிவாதிகள் தங்கள் புராதன நம்பிக்கையை ஸ்தாபிக்க முயல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. வெவ்வேறான பிராணி வர்க்கங்கள் ஒன்றோடொன்று இணைந்து கலப்பினங்கள் உண்டாவது சாத்தியமே (கழுதை இனமும் குதிரை இனமும் சேர்ந்து கோவேறு கழுதை இனத்தை உருவானதைப்போல) வெவ்வேறான பிராணி வர்க்கங்கள் கலப்புறும்போது, புதுவகையான விருத்தி செய்வதும் சில சமயங்களில் அது நட’காமல் போவதும் இயற்கை. ஆனால் பிராணிகள் வர்க்க பேதங்களானவை, “இயற்கைப் பிரிநிலை முறையினால் பல தலைமுறைகளாகப் பல காலமாக ஒன்றோடொன்று சங்கமமாகிப் பல விகாரங்கள் அடைந்து கடைசியில் அதி தெளிவுடன் நிர்ணயமான புது இனங்களாக வந்திருக்கின்றன என்ற தத்துவம்தான் இங்கு முக்கியமாகும். வெவ்வேறான பிராணி வர்க்கங்களை கலப்பு உறவு கொள்ளச் செய்யும்போது பல வகையான கலப்பினங்களும் ஜாதிகளும் உற்பத்தியாகின்றன. அவை அதிவேறுபாடான தோற்றமும் சந்தான உற்பத்தி செய்யும் சக்தியும் பெற்றவையாக உள்ளன.

 

   ஜீவப் பிராணிகளின் வர்க்கங்கள் தங்கள் அமைப்பின் அடிப்படை மோஸ்தாரில் ஒரே மாதிரியான தோற்றங்கள் அமைந்திருப்பதும் உண்டு. மனிதனின் கை, குதிரையின் கால், வௌவாலின் இறக்கை இவைகள் ஒரே மாதிரி அடிப்படை மோஸ்தாரில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த உறுப்புகளின் உபயோகத்தைப் பொறுத்துச் சில மாறுபாடுகள் வேண்டுமானால் இருக்கலாம். இவ்வாறு உறுப்புகளின் எலும்புகள் பல்வேறு பிராணி வர்க்கங்களின் அடிப்படை அமைப்பில் ஒன்றுபோல் சம்பந்தப்பட்டிருக்கலாம். இதுபோன்ற அமைப்பு ஒற்றுமைகளையெல்லாம் ஊடுருவிப் பார்த்தால் ஜீவராசிகள் அனைத்தும் ஒரு பொது மூலத்திலிருந்து பரிணாம வளர்ச்சியின் வாயிலாக படிப்படியாகப் பக்குவமடைந்து உதயமாகி இருக்கின்றன என்பது புலப்படும்.

 

         பல்வேறு பிராணிகளின் கருக்களும் கூட ஒற்றுமையுடையனவாக இருக்கின்றன. பாலூட்டி மிருகங்கள் பல்லிகள், பறவைகள், பாம்புகள் ஆகியவற்றின் கருக்கள் ஆரம்ப தசையில் ஒன்றைப் போல ஒன்று ஒரே மாதிரித் தோற்றமுள்ளவைகளாக உள்ளன. மேல் ஓடுள்ள பல்வேறு பிராணிகளின் கருவுயிர்களும் ஒரே மாதிரியாக உள்ளன. பல்வேறு பிராணி வர்க்கங்களின் வெளித் தோற்றத்தைவிட அதன் கருக்கள் ஒன்றோடொன்று உறவு உள்ளனவாகத் தோன்றுகின்றன.

 

 கருக்களின் ஒற்றுமை ஒரே மூதாதை இனத்திலிருந்து வந்தன என்பதைக் குறிக்கும். ஆனால் சில கருக்களிடையே ஒற்றுமையில்லாததைக் கொண்டு பொது ஜனன உறவு இல்லையெனச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் ஒரு ஜீவ வர்க்கத்தில் பல தலைமுறைகளுக்கு முன்பாகவே அதன் வளர்ச்சித் தன்மை அமுங்கியோ, பல காலத்திற்கு முன்பே தன்மை மாறிப்போய் வேறொரு பரிபக்குவத் தன்மை அடைந்திருக்கலாம். பல காலத்திற்கு முன்பே அழிந்து “கல்மாரி”களாக ஆகிவிட்ட பல ஜீவவர்க்கங்கள் தற்போது உயிர் வாழும் ஜீவ உருவங்களின் கருக்களோடு ஒற்றுமையுள்ளனவாகப் புலப்படுகின்றன. இயற்கை பிரிநிலைத் தத்துவம்தான் சகல ஜீவராசிகளின் பரிணாம வளர்ச்சிக்கும் அல்லது தோன்றும் முறைக்கும் அடிப்படை காரணம். பிராணி வாழ்க்கை மட்டுமல்ல, தாவர வாழ்க்கையும் கூட ஒரே மாதிரியான அடிப்படை உருவத்திலிருந்துதான் வந்திருக்கின்றது. விஷத்தின் விளைவுகள், இன விருத்தி, இணைதல் முதலானவை பிராணி வர்க்கத்திற்கும் தாவர வர்க்கத்திற்கும் பொதுவானவையாக இருக்கின்றன.

 

 

 

         டார்வீனிசம்

கடவுள் நம்பிக்கையானது மனித அறிவின் மகத்தான வளர்ச்சி மட்டுமல்ல மனிதனையும் கீழ்த்தரப் பிராணிகளையும் பிரித்துக் காட்டும் அதிபூரணமான வேறுபாடாகவும் இருக்கிறது.,

 

  மீபாவில் இருந்து மனிதன் வரை கொஞ்சம் கொஞ்சமாக எப்படி தோன்றியது? உயிரினங்ள் எப்படி பரிணாம வளர்ச்சிப் பெற்றது. உயிரினங்கள் எப்படி தோன்றின? என்ற கேள்விக்கு பூமியிலிருந்து ஓரளவு விடை கிடைத்திருக்கிறது. அதற்கு ஆதாரமாக கிடைத்துள்ள மிகப் பழங்காலப் புதைப்பொருள்களெல்லாம் பெரும்பாலும் வடதுருவப் பிரதேங்களிலிருந்து கண்டெடுத்தவைகளாக இருப்பதால், ஜீவபிராணிகளிலிருந்து திருந்திய மனித இனம், அந்தப் பிரதேசங்களிலேதான் முதன் முதலில் உருவாகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். அப்படி அங்குத் தோண்டி எடுக்கப்பட்ட சில பொருள்களில் முக்கியமானதாக, பூர்வகால மனிதர்களின் மண்டையோடுகளும், அவர்களின் தாடை எலும்புகளும், பற்களும் காணப்படுகின்றன. அந்த எலும்புகளை வைத்து ஆராயும்போது அதன் நான்குவித அமைப்புத் திருத்தம் புலனாகிறது. அதாவது ஒன்றுக்கொன்று மாறுபட்டு நான்கு வகையாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன அந்த மண்டையோடுகள். அந்நால்வகை வளர்ச்சி வேறுபாட்டை கொண்டு, அந்த மண்டை ஓட்டுக்குறிய மனிதர் வாழ்ந்த காலத்தை நிர்ணயிக்க முடியும்.

 

          முதல்வகை மண்டையோட்டிற்கான மனிதன், சுமார் இரண்டரை அல்லது மூன்று லட்ச வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்திருக்க வேண்டும். இந்த மண்டையோட்டின் வடிவம், ஏறத்தாழ, “ஓரங்குட்டன்” குரங்கினுடைய மண்டையோட்டை ஒத்திருக்கிறது என்றும் மூளை நரம்புகள் பதிவாகியிருக்கும் தடங்களைக் கொண்டு ஆராயும்போது, “ஓரங்குட்டன்” மண்டையோட்டிலிருந்து இது சிறிதே வேறுபடுகிறது. ஆக அந்தக் கால மனிதனே,  சமீப காலத்தில், (அதாவது ஐந்தாயிரம் வருடங்கள்) குரங்கிலிருந்து திருத்தமடைந்திருப்பான் என நம்பப்படுகிறது. இந்த மனிதனுக்கு “பிதிகாந்த்ரபஸ்” என்று பெயர்.

 

     இரண்டாவது வகை மண்டையோடு, முதல் வகை மண்டையோட்டிலிருந்து சிறிது மாறுபட்டு, வேறு வளர்ச்சி கொண்டிருக்கிறது. இஃது ஏறக்குறைய “சிம்பான்சி” குரங்கின் மண்டையோட்டை ஒத்தி இருக்கிறது. எனினும், இந்தக் குரங்கின் மூளைக்குழியளவை விடச் சிறிது விரிந்து காணப்படுகிறது, இவ்விரண்டாவது மண்டையோட்டின் மூளைப்பள்ளம். இந்த மண்டையோட்டுக்குறிய மனிதனுக்கு “சினாந்த்ரபஸ்” என்று பெயர். இந்த மனிதன்தான் முதன் முதலில் சிந்திக்கத் தெரிந்துக் கொண்டான் என்றும் கொள்ளலாம். உதாரணமாக நாம் எதைப் பற்றியாவது சிந்திக்கும்போது தலையை செரிந்து கொள்வதைப்போலச் சிம்பான்சி குரங்கும் சிந்திக்க முயலும்போது தலையைச் செரிந்துக் கொள்வதையும், நாம் இக்கட்டான சமயங்களில் கைகளைப் பிசைந்து கொள்வதைப்போல சிம்பான்சியும் தன் இக்கட்டான சமயங்களில் கைகளைப் பிசைந்து கொள்வதையும் இன்றும் நாம் காணலாம்.

 

   மூன்றாவது வகை மண்டையோடு, பூரணத் திருத்தமடைந்த மனிதம். இந்த மனித இனம், சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்திருக்க வேண்டும். இந்த மண்டையோட்டின் வடிவம் ஏறத்தாழ “கொரில்லா” குரங்கின் மண்டையோட்டை ஒத்திருக்கிறது. ஆயினும், இந்த மனித மண்டையோட்டின் தாடை, மூக்கு, நெற்றி ஆகிய பாகங்களின் எலும்புகள், கொரில்லாவினுடையது போல் மேற்புறம் நிமிர்ந்திராமல் சிறிதே சரிந்து காணப்படுகிறது. இந்த மனிதனுக்கு “நீந்தர்த்தால் மனிதன்” என்று பெயர்.

 

   நான்காவது வகை மண்டையோடு தற்போதுள்ள மனிதனின் மண்டையோட்டை ஒத்ததாகும். இதில் சின்னஞ்சிறு வேறுபாடுகளைத்தவிர, வேறு எதுவும் காணப்படவில்லை. மனிதர் தம் மனத்திலுண்டாகும் பல்வேறு விதமான உணர்ச்சிகளை- அஃதாவது கோபம், பயம், துக்கம், வெட்கம், சந்தோஷம் முதலியவற்றை -முகத்தின் மூலம் பிரதிபலித்துக் காட்டுவதைப் போல, பிராணிகளோ பறவைகளோ காட்ட முடிவதில்லை. இந்தவிதமான உணர்ச்சிகள், பிராணி வகைகளிலிருந்து மூன்றாவது திருத்தமாகத் திருத்தமுற்றுத் தோன்றிய “நீந்தர்த்தால் மனிதனின் முகத்திலே தான் முதன் முதலாகத் தோன்றியிருக்க வேண்டுமென நம்பப்படுகிறது. மிருகத்திலிருந்து திருத்தமுற்றுத் தோன்றிய இந்த இன மனிதர், ஏறக்குறைய, மிருகங்களைப் போலவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது, அவர்கள் வாழ்ந்த காலத்தை கணா’கிட பட்டிருக்கும் சில பொருட்களை ஆராய்ந்தால் புலப்படும். அந்த முதல் திருத்த மனிதர், வெட்கம், மானம், உயர்வு, தாழ்வு, ஜாதி, மதம் ஆகிய வேறுபாடுகளை அறியாதவர்களாக குழந்தைகள், மிருகங்களைப்போல் வேறுபாடின்றி சுதந்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள்.      பின்னர் இந்த மனிதர்கள் ஐம்பதாயிரம் வருடங்களுக்குப் பின் -அஃதாவது எண்பதாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இடைக்காலத்தில், தங்கள் அங்கங்களை மரவுரிகளால் மறைக்கவும், நெருப்பை உண்டு பண்ணி உணவுகளை வேகவைத்து உண்ணவும், பயிர் செய்யவும் உலோகங்களைக் கண்டுபிடித்துத் தங்கள் தொழில்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் தெரிந்துக்கொண்டனர். அதற்குப் பின் எழுபதாயிரம் வருடங்களில், இன்றைக்குச் சுமார் ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்நத மக்களின் வாழ்க்கை, நிரம்பவும் துரித முன்னேற்றமடைந்தது. இக் கால மனிதர் தான், சூரியனை, நெருப்பு என்று கொஞ்சம் கொஞ்சமாக கடவுள் நம்பிக்கையும் வளர்த்துக் கொண்டனர். இன்றைக்குப் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் காலத்தில் வாழ்ந்த மக்கள், சமுதாயச் சட்டதிட்டங்களையும் அவ்வம் மனிதக் கூட்டத்தின் கடவுள் நம்பிக்கைக்கேற்ப பல மதங்களையும், உறவு முறைகளையும், தொழில் நுணுக்கங்களையும் அரசியல் கொள்கைகளையும் ஆக்கிக் கொண்டார்கள். இந்தக் காலத்தில்தான், உலகின் பல பாகங்களிலும் தோன்றிய மனித இனம், கூட்டம் கூட்டமாகச் சென்று ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். அந்தப் பரம்பரைகளின் வழித்தோன்றல்களே, உலகம் முழுவதிலும் வியாபித்து வழிந்து கொண்டிருக்கும் இன்றைய நாகரீக மனிதர்கள்.

 

          பலகோடி வருடங்களுக்கு முன், ஏதோ ஓர் அசம்பாவித சம்பவத்தால் பிண்ட வடிவான இப்பூலகம் எத்தனையெத்தனையோ அற்புதங்களையெல்லாம் நிகழ்த்திக் கொண்டது. இந்த அற்புதங்களையெல்லாம் அது தன்னுள்ளிருந்த “இயற்கை சக்தி” யின் மூலம் நிகழ்த்திக் கொண்டது. தா அந்த இயற்கைச் சக்தியின் இரண்டாவது தன்மையான “இயற்கைப்பிரிநிலை” எனும் ஒன்றாலேயே இவ்வுலகில் பல அற்புதங்கள் நிகழ ஏதுவாகியது. யாதொன்றுக்கும் ஓர் எல்லை நிர்ணயம் இருப்பதுபோல, இந்த “இயற்கைப் பிரிநிலை” சக்திக்கும் ஓர் எல்லை நிர்ணயம் இரு’கவேண்டும். இந்தச் சக்திக்கு வேறுபாடு இருந்தவரை, அது இவ்வுலகத்தில் எத்தனையெத்தனையோ அதிசயங்களை உண்டுபண்ணி வைத்தது. அதன் மகத்தான சாதனைகள் தான் இன்று நாம் இந்த உலகத்தில் காணும் எண்ணற்ற ஜீவப் பிரகிருதிகளின் கோலக்காட்சி.

 

    நீர்ப்பாசியிலிருந்து மனிதன் ஈறாகத் தோற்றுவாயாகியிருப்பதற்கும், வேறுபல சிருஷ்டி வினோதங்களுக்கும் இந்த “இயற்கைப் பிரிநிலை” எனும் சக்தியே காரணம். ஒன்றிலிருந்து ஒன்று உற்பத்தியாகி அந்த ஒன்றையொன்று வென்று வாழும் தத்துவமே “இயற்கைப் பிரிநிலை” என்று அழைக்கப்படுகிறது. ஒன்றையொன்று வென்று வாழும் சக்தி எதெதற்கு உண்டோ அதையெல்லாம் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான் இந்தச் சக்தியின் வேலை. இப்பேர்ப்பட்ட சக்தி, இவ்வுலகத்தில், என்றும் சிரஞ்சீவியாக நிலை ஊன்றி இருக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஏனென்றால் இவ்வுலகில் இருக்கும் எதுவும் ஏதோ ஓர் அசம்பாவிதத்தால் சக்திபெற்று அந்தச் சக்தியை ஏதோ ஓர் அசம்பாவிதத்தால் இழந்து கொண்டு வருவதுதான் நியதிச்செயலாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு சிறு உதாரணம் வேண்டுமென்றால் மாமரமொன்றை எடுத்துக் கொள்ளலாம். மாங்கொட்டையிலிருந்த கருச்சக்தி, மண்ணின் துணை கொண்டு மரமாக வளர்கிறது. பின்னர் அது பூக்கிறது, காய்க்கிறது, பழுக்கிறது. இப்படிப்பல காலம் விட்டுவிட்டுச் செய்து கொண்டே இருக்கிறது. இறுதியில் என்றாவது ஒருநாள் அதுதன், பூக்கும்-காய்க்கும்-பழுக்கும் சக்தியை இழந்து மலட்டுத்தனம் பெற்று விடுகிறது.

 

    இந்த மலட்டுத்தனத்துடன் சில காலம் இருந்து விட்டு சிறிது சிறிதாக இலை உதிர்ந்து, பட்டை உரிந்து, கிளைகள் இற்று, வேர்கள் காய்ந்து இறுதியில் ஒருநாள் திடீரென கீழே சாய்ந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம்? ஆரம்ப காலத்தில் அதனிடமிருந்த வளரும் சக்தி, சிறிது சிறிதாக வளர்ந்து ஒரு நிலையை அடைந்தவுடன் மீண்டும் அந்தச் சக்தி, கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்தே போகிறது என்பதுதான் காரணம். இதுதான் இந்த உலகில் தோன்றிய அனைத்துப் பொருள்களினுடையவும் நீக்கமற இயக்கச் சூத்திரம். இதை இந்த உல’கத்திற்கு லீலா வினோதங்களுக்கெல்லாம் மூல காரணமாய் விளங்கும் அந்த இயற்கைச் சக்தி மட்டும் கட்டுப்படாமல் இருந்துவிட முடியுமா? அல்லது விதி விலக்குத்தான் அது பெற்றுவிடுமா? பலகோடி ஆண்டுகளாக இந்த உலகில், தன் பலத்தால் ஆயிரமாயிர விநோதச் சதுராட்டங்களெல்லாம் ஆடிவந்த அந்தச் சக்தி, இப்போது தன்னிலிருந்து சிறிது சிறிதாக தாழவும் குறையவும் ஆரம்பித்திருக்கிறது. இது அதிசயமல்ல. நிகழ வேண்டிய நியதி. இந்நியதி, இப்போது ஆரம்பமாகி இருப்பதால், இனி இந்த உலகத்தில், பரிணாம வினோதங்கள் நடைபெற மார்க்கம் இல்லை. இதற்கு இன்றைய உலக நடப்பில் ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.

 

   ஒரு காலத்தில் நாற்பது ஐம்பது அடி உயர அகலமுள்ள பறவைகளும், எண்பது நூறு அடி நீள உயரமுள்ள மிருகங்களும் இவ்வுலகில் வாழ்ந்திருக்கின்றன என்பதற்கு ஆதாரமாக, அதன் எலும்புக்கூடுகளும், “கல்மாரிகளும்” பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ராட்ஷச தாவர இனங்களும் இவ்வுலகில் இருந்திருக்கின்றன என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அதெல்லாம் இன்றைய உலகில் குலமற்றுப் போயிருப்பதேன்? நிலத்தின் சக்தியும், நீரின் சக்தியும், வாயுவின் சக்தியும் குறைவு காண ஆரம்பித்தவுடன்தான் அந்த ராட்ஷச மிருக பறவை இனங்களும், தாவரங்களும், குலமற்று மறைந்து போய்விட்டன என்பதைத் தவிர வேறென்ன காரணம்  இரு’க முடியும்? நிலம், நீர், வாயு இம்மூன்றின் ஒன்றுபட்ட சக்திகளிலிருந்து திரண்டெழும் இயற்கைச்சக்தி தோய்வுபட ஆரம்பித்ததும் இயற்கைத் தேர்ந்தெடுப்புத் தன்மை கட்டுக்குலைந்து விட்டிருக்கிறது. இதுதான் அந்தத் தாவர மிருக பறவையினங்களின் மறைவுக்குக் காரணம். இந்தக் காரண நியதி நிகழ்ச்சி, தொடர்ந்து நடைபெற்று வருவதால், இனியும் இதுபோன்று இவ்வுலகிலுள்ள விநோதங்கள் (படைப்புகள்) ஒவ்வொன்றாய் அழிந்து கொண்டு வரவேண்டியதுதான். ஆனால் அந்தக் குறைவியக்கத்தின் இறுதி முடிவுக்கு எத்தனை கோடி வருடங்கள் பிடிக்குமோ, அதை மட்டும் யாராலும் எளிதில் கணித்துக் கூற முடியாது. இந்த நிலையிலிருக்கும் இன்றைய மனிதர்களையும், பிற ஜீவராசிகளையும் பார்த்து அவற்ரின் எதிர்காலப் பாரிணாமம் என்ன என்று கேட்டால் அதற்கு எப்படி விடை கிடைக்கும்? விடைதான் இதுதான் “டார்வினிஸம்” என்னும் உலக ஜீவப்பாரிணாமத் தத்துவம்.

 

          முதல் மனிதன் ஆதியில் அவன் ஏதோ ஓர் உயிரினத்துக்குள் ஒளிந்திருந்தான். காலப்போக்கில் எத்தனையோ நூற்றாண்டுகளை ஏப்பம் விட்டுக் கொண்டு அந்த உயிரினம் படிப்படியாக மாற்றம் அடைந்து, பரிணாம வளர்ச்சியின் மூலம் இறுதியில் மனித உருவில் வந்து நின்றுவிட்டடான் என்பதை தம்முடைய “மனிதனின் உதயம்” என்ற புத்தகத்தில் சார்லஸ் டார்வின் விளக்குகிறார். தம்முடைய வாதத்தை நிலை நிறுத்த ஆண், பெண் ஆகிய இரு இனங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளின் மூலத்தை ஆராய்கிறார். ஆண், பெண் இனத்தேர்வு அல்லது பால் பிரிநிலைபற்றி பல நுட்பமான ஆராய்சிகளை விளக்குகிறார் சார்லஸ் டார்வின். அடுத்தாற்போல அவர் அபூர்வமான ஒரு விஷயத்தையும் வலியுறுத்துகிறார். ஆரோக்கியமான ஒரு ஆண், கவர்ச்சியான துணையைத் தேர்ந்தெடுக்கிறது. அவை இரண்டின்மூலம் பலம் மிக்க சந்ததிகள் உருவாகின்றன என்று வலியுறுத்துகிறார். அதற்கு பல மேற்கோள்கள் காட்டியுள்ளார். மிருகங்களை ஆண், பெண் என இனவாரியாக பிரித்தால் அதன் இனவிருத்தி அங்கங்களின் மூலம் வேறுபாடு தெரிந்து விடுகிறது. இந்த உறுப்புகளையே ஆண், பெண் இனத்தின் அடிப்படை தன்மையாக கொள்ளலாம். குட்டிகளுக்கு உணவு தருவதிலும் அதைப் பாதுகாப்பதிலும் ஆணிலிருந்து பெண் வேறுபட்டிருக்கும்.

 

    பாலூட்டி வளர்க்கும் பிராணிகளுக்கு பால் கொடுக்கும் உறுப்பு வெளிப்படையாக இருக்கும். ஆணின் பெரிய உருவம், சக்தி, போரிடும் வன்மை, எதிரியிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் வீழ்த்தவும் இயற்கையாகவே அதற்கு அமைந்த ஆயுதங்கள், “பளிச்”சென்ற அதன் நிறம், இயற்கையாக அமைந்த காரணங்கள், அது எழுப்பும் சங்கீதம் இம்மாதிரியான இன்னும் பலவிதமான தன்மைகளை கொண்டு பெண்ணிலிருந்து ஆண் வேறுபட்டிருக்கும். கவர்ச்சியால் பெண்ணைத் தன் வயப்படுத்துவது, ஆடல், பாடல் மூலம் பெண்ணை கவர்வது, எதிரிகளுடன் வீரத்துடன் போரிட்டு வீழ்த்துவது போன்ற தண்மையை ஆண், இன்றும் தொடர்கிறான். ஆணுக்கே உரிய தனித் தன்மைகள். இதற்கு “இரண்டாந்தர இன அடிப்படைத் தன்மைகள்” என்று பெயர். கவர்ச்சியளிக்கும் எதிர் இனத்துடன் (ஆண் பெண்ணுடன், பெண் ஆணுடன்) எந்த மிருகமும் சண்டையிடுவதில்லை. துணையைத் தேர்ந்தெடுக்கும் நிலை வரும்போதுதான் ஓர் இனத்துக்குள்ளேயே பெரும்பாலும் சண்டை நிகழுகிறது. ஒரே இனம் (ஆண் அல்லது பெண்) தங்களுக்குள்ளாகவே போரிட்டு தங்கள் எதிர் இனத்துக்கு (பெரும்பாலும் பெண் இனத்துக்கு) தங்கள் கவர்ச்சியையும் உடல் வலிமையையும் உணர்த்துகின்றன. ஆண் இனமே பெரும்பாலும் இவ்விதப் போராட்டங்களில் ஈடுபடும். மற்றோர் வகை மிருகங்களோ, தன் பெண் துணையை அடைய வேண்டும் என்ற ஆவலும் பொறாமையும் கிளர்ந்தெழ தன் இனத்து (ஆண்) எதிரியை “கொன்று” வெற்றியடையும். இங்கே வெற்றி வீரன்தான் தன் துணை என்று அது நினைப்பதில்லை. தன் மனதுக்குப் பிடித்த இரண்டில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இம்முறைத்தேர்வை, அதாவது துணையைத் தேர்ந்தெடுக்கும் முறையையே மனிதன் கடைப்பிடிக்கிறான். இன விருத்தி’கு மட்டும் துணை தேடும் பிராணிகளும் உண்டு.

 

   இம்மாதிரிப் பிராணிகள் இன விருத்திக்காக தங்கள் எதிர் இனங்களுடன் சேரும் காலங்களிலேயே அதற்குகந்த வகையில் முழு வளர்ச்சியடைகின்றன. இவைகளுக்கு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இந்த இனவிருத்தி பருவம் அமைகின்றது. இனவிருத்திப் பருவ காலத்தில் மட்டும்தான்.“பொதுவாக” நாலுகால் மிருகங்களும், பறவைகளும் தங்கள் எதிர் இனங்களுடன் சேர்வதற்கு இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபடுகின்றன. குறிப்பிட்ட ஒரு பகுதியிலுள்ள பறவைகளை எடுத்துக் கொள்ளுவோம். அவைகளிலுள்ள பெண் பறவைகளில் புஷ்டியும் சக்தியுமுள்ள பறவைகளையும் மெலிந்த சக்தியற்ற பறவைகளையும் தனித்தனியே பிரித்து விட வேண்டும். அதன் மூலம் இனவிருத்திக் காலத்தில் முதல் இனப் பறவைகள் தாம் முதலில் ஆண்களுடன் சேருவதற்கு உகந்தவையாயிருக்கின்றன என்பதைத் தொரிந்துக் கொள்ளலாம். இதைப் போன்றே கவர்ச்சியும் உடல் வலிமையும் கொண்ட ஆண் பறவைகள் தங்கள் எதிரிகளுடன் போரிட்டு, அவைகளை வீழ்த்தி தங்கள் பேடைகளை அடைகின்றன. ஆணும் பெண்ணும் ஆரோக்கியமாகவும் உடல் வலுவானதாகவும் இருப்பதால் அதன் சந்ததிகள் பலம்மிக்கதும் புஷ்டியும் மிக்கதாக உள்ளன. ஆனால் சக்தியற்ற பெண் பறவைகளோ, எதிரியினால் தோற்கடிக்கப்பட்ட ஆண்களுடன் துணை சேரும்படியான நிலைக்கு வந்துவிடுகின்றன. “இனவிருத்திக்காக ஆணும் பெண்ணும் இணைவது சாதாரணமான நிகழ்ச்சியல்ல. தன் எதிரியை வீழ்த்தியதும், பெண்ணை அடைந்துவிட முடியும் என்று ஆண் எதிர்பார்க்காது. இணைப்புக்கு முன்னுள்ள கேளிக்கைகளையும் விளையாட்டுகளையும்தாம் அவை முக்கியமாக கருதுகின்றன. பெண்ணின் மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு ஆண் எத்தனைவிதமான முயற்சிகளில் ஈடுபடுகின்றது.

 

    இந்தியக் காடுகளிலுள்ள காட்டுக் கோழிகளின் கவர்ச்சிமுறை கண்கொள்ளாக் காட்சி. திடீரென்று இருபது அல்லது முப்பது கோழிகள் ஒன்றாகக்கூடும். ஆண், பெண்ணுக்குத் தன் கவர்ச்சியைக் காட்டுவது மிகமிக அழகாயும் தனித்தன்மையுடையதாக இருக்கும். தன் அழகிய இறக்கைகளை உயர்த்தி, பெண்ணை திருப்தியடையச்செய்ய அது மிகவும் சிரமப்படும், இவ்வாறு ஆண் வான் கோழியும், பெண்ணைக் கவர இறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு இறக்கைகளை விரித்து அழகாக நடனமாடுகின்றன. குட்டிப் போட்டுப் பாலூட்டும் மிருக இனங்கள், இம்மாதிரியான கவர்ச்சியை விடப் பலப் பரிசோதனைகளைத் தான் பெரிதும் விரும்புகின்றன. மிருக இனத்தைச் சேர்ந்த ஆண் பலத்தை முதலாக வைத்து தன் துணையைத் தேடிக் கொள்கிறது. அது கவர்ச்சியை அதிகமாக விரும்புவதில்லை. ஆண் மானின் துணிவையும், அதன் பயங்கரமான போராட்ட முறையையும் இதற்கு உதாரணம். இதெல்லாம் அல்லாமல் வண்ணக் கலவையுடன் கூடிய உடல் அமைப்பும் துணையைத் தேர்வு செய்ய உறுதுணையாக இருக்கின்றன. வண்ணாத்திப் பூச்சி போன்றவை, துணையைத் தேர்ந்தெடுப்பதற்காக எழில் நிறைந்த தங்கள் மேனி வண்ணங்களைப் பயன்படுதுகின்றன. “ஆண் வண்ணாத்திப் பூச்சி தன் எதிரியைத் தோற்கடிப்பதில் மிகக் கவனமாயிருக்கிறது. ஒரு பெண், பூச்சியைக் கண்டால் இருபது அல்லது முப்பது ஆண் பூச்சிகள் அதை மொய்த்துக் கொள்ளும். அதன்பிறகு கேட்க வேண்டுமா? அங்கே ஒரு பெரிய போர்க்களமே உருவாகும்”.

 

ஐக்கிய அமெரிக்காவில் பைக் என்றொரு மீன்வகை உள்ளது. இதில் ஆண் இனம், இனவிருத்திக் காலங்களில் புத்திக்கூர்மையுடனும் திறமையுடனும் நடந்துக் கொள்கிறன்றன. அந்நேரங்களில் அதன் அழகு விவரிக்க இயலாத அளவுக்கு அற்புதமாக இருக்கும். அதன் கண்கள் நீல நிறத்தில் அழகாக தோற்றமளிக்கும். தொண்டையும் வயிறும் பளபளப்புடன் கூடிய கருப்பு நிறமாயிருக்கும். முதுகுப் பகுதி பசுமையான சாம்பல் நிறம். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் அற்புதமான நிறத்தூள், இனவிருத்திக் காலம் முடிந்ததும் தானாகவே மாறிவிடும். தொண்டையும் வயிறும் சிவப்பு நிறமாகும். முதுகு அதிகப் பச்சையாக மாறிவிடும். அதன் பளபளப்பும் மறைந்துவிடும். தவளைகளில் ஆண்கள், இனிய குரலெழுப்பி பெண்ணைக் கவரும் முயற்சியில் ஈடுபடுகின்றன. இவை இசைக்கும் கானங்கள் நமக்கு அருவருப்பாயிருக்கலாம். ஆனால் ஆணின் இசைக்கு மயங்கும் பெண் தவளைகள் விரைவிலேயே இனவிருத்திக்குத் தங்களைத் தயார்செய்து கொள்ளுகின்றன. துணையைத் தேர்வு செய்வதில் முதலைகள் மிகக் கொடுமையாக சண்டையிட்டுக் கொள்ளுகின்றன. தென் அமெரிக்காவிலுள்ள முதலைகள் இவ்விஷயத்தில் படுமோசமாக நடந்துக் கொள்ளுகின்றன. இனவிருத்திக் காலங்களில் தற்செயலாக இரண்டு ஆண் முதலைகள் சந்தித்துவிட்டால் கூட அங்கே ஒரு பெரும் போராட்டமே நடந்துவிடும். ஒன்றை ஒன்று பார்த்த உடனே போர் ஆரம்பமாகும். கண்கள் கனலாகும். கொடூரமாக வாயைத் திறந்து மூடும். வாலைப் படபடவென்று அடித்துக் கொள்ளும். சண்டை உக்கிரமாக நடந்து முடிந்ததற்கு அடையாளமாக, தோற்றுப்போன முதலை தன் வாலை இழந்து காட்சி அளிக்கும்.

 

   மனிதன் முரட்டுத்தோற்றம், பலம், உள்ளத் துணிவு, எதிர்க்கும் திறன், உழைப்புச் சக்தி, இவையெல்லாம் தான் விரும்பிய பெண்ணை அடைவதற்குக் குறுக்கே நிற்கும் எதிரியை வீழ்த்துவதற்குத் துணையாயிருந்தன. தனக்குய துணையைத் தேடுவதற்குரிய மனத்துணிவும் உடல் வலிவும் மனிதனுக்கு இயற்கையாகவே அமைந்துவிட்டன. தகுதிவாய்ந்த மனிதன் எதிர்ப்பை சமாளித்துக் கொள்வதோடு நல்ல மனைவியையும் மக்கட்செல்வத்தையும் அடைகிறான். மனிதக் குரங்கைப்போல தோற்றம் உடைய அக்காலத்து மனிதன், தன் தாடியின் அழகைக்காட்டி பெண்ணைக் கவர்ச்சி செய்தான். பெண்ணோ தன் உடல் முழுதும் காடாக மண்டி வளர்ந்திருந்த ரோமத்தால் தன் நிர்வாணமான மேனியை மறைத்து அதை இனக்கவர்ச்சியின் ஆபரணமாக விளங்க செய்தாள். காலப்போக்கில், அதே முறையை வேறு வழிகளில் அதாவது நவீன முறைகளில் செய்து வருகிறாள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில்தான் அவள் குரல் ஆணைவிட மிக இனிமையாகவும் உடல் வாகு அழகாகவும் உள்ளது. ஒரு கட்டத்தில் பலம் மிக்க மனிதன் பல மனைவிகளை மணந்துகொண்டு கணக்கற்ற குழந்தைகளுக்குத் தந்தையானான். மிக அழகான பெண்களையெல்லாம் மனைவிகளாக்கிக் கொண்டான். தன் இனம் வாழ வேண்டும் என்ற இயற்கையான சித்தாந்தம்தான் இயற்கையாகவே துணையைத் தேடத் தூண்டுகிறது. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து அது பெருகிய விதம் மிகவும் வருந்தத் தக்க பயங்கரமானது. இந்த அபரிமிதமான இனப்பெருக்கத்தை அவ்வப்போது வெவ்வேறான முறைகளினால் தடுப்பதற்கு முயற்சி செய்து வந்திருக்கிறது. அந்தக்கால மக்கள் இனப்பெருக்கத்தைக் கண்டு கலங்கினர். சந்ததியைக் காப்பாற்ற முடியாதோ என்ற கலக்கத்தில் குழந்தைகள் பிறந்தவுடனேயே கொன்றுவிடுவது போன்ற கொடிய பழக்கங்களைக் கையாண்டு இனப்பெருக்கத்தைத் தடுத்து வந்தார்கள்.

 

   இந்த நாகரிக உலகிலோ அதையே வேறுவிதமாகக் கையாண்டு வருகிறார்கள். மனிதனுக்கும் வாழ வேண்டும் என்ற சித்தாந்தத்தால் துணையைத் தேர்ந்தெடுக்கும் எண்ணமும் முயற்சிகளும் இருக்கின்றன. இயற்கையாகவே, நல்ல துணையுடன் சேர்ந்து நல்ல மக்களைப் பெறும் முறை, சாரித்திர காலத்துக்கு முந்திய மனிதர்களிடமிருந்து ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் மனிதன் இப்போதைய நிலையில் வளர்ச்சியும் மாற்றமும் அடைந்திருப்பானா என்பது கேள்வி’குறியே.

 

குரங்குகளுக்கு இருப்பதைப் போன்று வாலும் இதர அமைப்புகளும் மனிதனிடம் கிடையாது. இதன் மூலம் பழங்காலத்து மனிதக் குரங்கில் ஏற்பட்ட துணைப்பிரிவு மனிதனை ஈன்றெடுத்தது என்ற முடிவுக்கு வரவேண்டும். இந்த நிலையை அதாவது மனிதனை ஈன்றெடுக்கும் நிலையை அடைவதற்கு மனிதக்குரங்கின் மூல இனம் பரிணாம வளர்ச்சியில் பலவகையான முறையில் அவ்வப்போது மாறிக்கொண்டு வரவேண்டும். மனிதர்களின் பூர்வ சரித்திரத்தையே எடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தால்கூட, காலப்போக்கில் அவன் தோற்றத்தில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஆதிமனிதனின் முகத்துக்கும் இப்போதைய மனிதனுடைய முகத்துக்கும் எவ்வளவோ பொரிய வித்தியாசங்கள். அந்தக் காலத்து மனிதனைப் போல கூனல் முதுகனாயில்லாமல் தற்கால மனிதன் நிமிர்ந்து நிற்கின்றான்.

 

ஆதிமனிதர்கள் உடலில் மயிர் அடர்ந்து வளர்ந்திருந்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் தாடி வளர்ந்திருந்தது. உடல் தசைகள் அளவோடிருந்தாலும் அவர்களுக்கு வாலுமிருந்தது. ஆதிமனிதனின் கால்கள் சப்பையாக மயிர் அடர்ந்திருந்தது. கை மிகவும் கரடு முரடாகவும் சூடாயுமிருக்கும். ஆண்களுக்கு தற்காப்பு ஆயுதம் போல, பற்கள் மிக நீண்டதாயிருக்கும். மிகவும் முந்திய காலத்தில் கண்களில் மூன்றாவது இமை இருந்தது. தாழ்ந்த ஒரு மனிதனுக்கும் உயர்வான ஒரு மிருகத்துக்குமுள்ள அறிவாற்றல் மிகவும் வேறுபட்டது. மனிதத் தோற்றமுடைய ஒரு குரங்கை எடுத்துக் கொள்ளுவோம். அது ஒரு தோட்டத்தை அழிக்க முயலுகிறது. அதனால் அங்கேயுள்ள விதைகளைக் கல்லால் உடைக்க முடியும். ஆனால் கல்லை ஒரு கருவியாக உருவாக்க இயலும் என்ற யோசனை ஏற்படுவது அதன் அறிவுக்கு அப்பாற்பட்டது. மனிதனைப் போன்று அதற்கு கணிதம் தெரியாது.

 

 இறைவனைத் தொழத் தெரியாது. இயற்கைக் காட்சிகளை ரசிக்கத் தெரியாது. இருந்தாலும் அது தன் துணையின் உடலிலுள்ள அழகிய ரோமத்தைக் கண்டு ரசிக்கிறது. தங்கள் கூட்டத்தை சேர்ந்த மற்ற விலங்குகளுக்கு அதனால் உதவி செய்ய முடியும். ஆனால் மிருகங்களுக்கே உரிய விருப்பமில்லாத அன்பு குறுக்கிட்டுவிடும். இந்த மாதிரியான இயலாமையெல்லாம் மனிதனிடம் இல்லாததுதான் அவனுடைய உயர்வுக்கு காரணம். மனிதனுக்கும் உயர் மிருகங்களுக்கும் உரிய குணாதிசயங்கள் தரத்தில் வேண்டுமானால் வேறுபடலாமே தவிர பிரிவில் எல்லாம் ஒன்றுதாம். பலவித உணர்ச்சிகளும் ஆற்றல்களும் அதாவது, காதல், நினைவாற்றல், கவனிப்பு, ஆர்வம், நகல் செய்தல் இவையெல்லாம் தனக்கே உரிய சொத்துக்கள் என்று மனிதன் பெருமையடிப்பது மிகவும் தவறு. ஏனென்றால் கீழ்த்தரமான மிருகங்களிடம் கூட இந்தக் குணாதிசயங்கள் இருக்கின்றன. ஆனால் கற்பனை, சுய உணர்வு போன்ற உயர்வான தன்மைகள் மனிதனிடம் மட்டுமேயல்லாமல் வேறு எந்த உயிரினிடத்திலும் காணமுடியாது.

 

 “நாம் ஏதோ கீழ்த்தரமான பிராணியிலிருந்து மனிதனாக மாரியிருக்கிறோம் என்பது சிலருக்கு ஆத்திரத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தலாம். ஆனால் நாமெல்லோரும் நாகரிகமடையாத ஆதிமனிதர்களின் சந்ததிகள் என்பதை ஒப்புக்கொண்டாகவேண்டும். ஒரு சமயம் சில ப்யூஜிக்காரர்களைக் கண்டதும் நான் அடைந்த ஆச்சாரியத்திற்கு அளவே இல்லை. அவர்களுடைய காட்டுமிராண்டித்தனமான தோற்றத்தைக் கண்டதும், நம்முடைய முன்னோர்களும் இப்படித்தானே இருந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இந்த மனிதர்கள் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருந்தார்கள். உடல் முழுவதும் வர்ணங்களைத் தீட்டியிருந்தார்கள். அவர்களுடைய நீண்ட ரோமங்கள் திரிந்து கிடந்தன. ஆச்சாரியமடைந்தாற் போல அவர்களுடைய உதடுகள் தொங்கிக் கொண்டிருந்தன. காட்டு மிருகங்கள் எதிரிகளை அடித்துத் தின்னக் கையாளும் முறைகள்தாம் அவர்களிடமிருந்தனவே தவிர, அவர்களுக்கென ஒரு தனித் திறன் இல்லை. அவர்களுக்கு அரசாங்கம், ரேஷன் கார்டு, ஜாதி’கட்சி, மத வேறுபாடு என எதுவும் கிடையாது. தங்கள் சிறு கூட்டத்துக்குள்ளேயே ஒருவருக்கொருவர் இரக்கமில்லாமல் நடந்துக்கொண்டனர்.

 

மனிதன் தன் உயர்வைப் பற்றி பெருமையடைகிறான். ஆனால் இந்த நிலை அவன் முயற்சியால் ஏற்பட்டதல்ல. அவன் இன்னும் பல மாறுதல்களுக்குள்ளாகி மிகவும் உயர்ந்த நிலையிலிருப்பான். இதைக் கண்டுபிடித்து உண்மையறிய நாம் பயமோ நம்பிக்கையோ கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனக்குத் தெரிந்தவரை தான் சொல்லுகிறேன். மனிதன் தன் உயர்ந்த அறிவாலும், ஆற்றலாலும் சூரிய மண்டலத்தில் புகுந்துகூட வெளிவந்து விடுவான். 

 

 

-தொடரும்..............

by Swathi   on 30 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.