LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- சார்லஸ் டார்வின் (Charles Darwin )

சார்லஸ் டார்வின்-பகுதி 5

 

சார்லஸ் டார்வின்-பகுதி 5  
-சூர்யா சரவணன் 

சார்லஸ் டார்வின்-பகுதி 5  

-சூர்யா சரவணன் 

 

 

மண்புழு ஆராய்ச்சி

         

 

       கடவுள் நம்பிக்கை, படைப்பின்போதே மனிதனின் நெஞ்சில் இயற்கை உணர்ச்சியாக உள்ளதென்று சொல்ல முடியாது. இந்த நம்பிக்கையானது, மனிதனின் அரிவு வளரவளர உண்டானதாகும். இன்னும் சொல்லப் போனால் மனிதனின் வியப்பும், மர்மத்தை அரிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆவலும், கற்பனைத் திறனும் அதிகாரிக்க அதிகாரிக்க உண்டானதாகும். 

 ------*------ 

      ண்புழுக்கள். ஈரப்பசையுள்ள எல்லா நாடுகளிலும் இருக்கும். இங்கிலாந்தில் ஆண்டுதோறும் சில பகுதிகளில் ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் டன் காய்ந்த மண் வீதம் அதன் உடலுக்குள் சென்று மேற்பரப்புக்கு வந்து சேருகின்றன. இதன்மூலம் செடி, கொடிகளுக்கான மண்வளம் சில வருடங்களுக்கொருமுறை இந்த மண்புழுக்களின் உடலுக்குள் சென்று வருகின்றன. அவை மட்டுமல்லாமல் குடைந்திருக்கும் துவாரங்கள் வழியாக மேலிருக்கும் மண் உள்ளே செல்வதும் ஒன்றுடன் ஒன்று கலப்பதுமாக மண்ணின் வளம் பெருகிக்கொண்டே இருக்கிறது. மண்ணிலுள்ள காரியமிலத்திரவம் வெளிவரவும் மண்புழு துணை செய்கிறது.

 

மண்ணோடு புதைந்த இலை தழைகளை உண்டு வெளிக்கொணர்ந்து அவைகளை அருமையான உரமாக்கிவிடுகின்றன. இம்முறையால், மண்ணின் வளம் அதிகமாகிறது. மேலேயுள்ள மண் கீழே செல்வதற்கும் மக்கிப்போய், வளமாய் இருக்கும் அடிமண் மேலே வருவதற்கும் மண்புழு காரணமாயிருக்கிறது. இலகுத் தன்மை வாய்ந்த பாறைகளின் கற்பொடிகளெல்லாம் இந்தப் புழுக்களின் வயிற்றுக்குள் சென்று வெளியேறும்போது நல்ல மண்ணாகி விடுகிறது. மண்புழுவின் இந்த சேவையினால், பல இடங்களில் ஆண்டுக்கு 2 அங்குல நிலம் உயருகிறது. புதைப்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் மண் புழுக்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் மண்ணில் மக்கிப்போகாத ஒவ்வொரு பொருளையும் அது பாதுகாத்து வருகிறது. பழங்காலப் புதைப்பொருள்கள், அவ்வப்போது எவ்வளவு பெரிய அளவில் கிடைக்கின்றன. தலைமுடி போன்ற மெல்லியவேர்கள் பலவற்றைக் கொண்ட செடி, கொடிகள் நன்கு வளர்வதற்கு மண்புழு நிறைய உதவிகள் செய்கின்றன. இலேசான வேர்கள் சிரமம் இல்லாமல் மண்ணில் வளர்ந்து ஆழத்தில் சென்று சத்துக்களைச் சேகரிக உகந்த முறையில் மண்ணை லேசாக்குகிறது மண்புழு. இறுகிய மண்ணைவிட பொடியாக இருக்கும் மண்ணில்தானே மெல்லிய வேர் சாதாரணமாகச் செல்லும்.

 

கீழே உள்ள மண்ணை அடிக்கடி மேல் தளத்துக்குக்கொண்டு சென்று காற்றுப்படவைக்கிறது. தன்னால் விழுங்க முடிந்த அளவு கற்களை மட்டும் பெரிய கற்களிடமிருந்து பிரித்துவிடுகின்றது. மண்ணை ஈரப்படுத்தவும் உண்டு துப்பவுமான வேலையில் அது தொடர்ந்து ஈடுபடுகிறது. மண்ணில் புதைந்து இறந்துபோன மிருகங்களின் எலும்பு, பூச்சிகளின் உடல் உறுப்புகள், நிலத்தில் வளரும் நத்தைக் கூடுகள், இலைகள் ஆகியவைகளையும் பதம் பார்த்துவிடுகிறது. செடியிலிருந்து விழுந்த இலைகளை உணவுக்காகவும் பழக்கம் காரணமாகவும் இழுத்துச் சென்று விடுகிறது.

 

மண்ணில் குடியிருப்பு இடமான சிறு சிறு துவாரங்கள் வழியாக அந்த இலைகளை இழுத்துச் சென்று அவைகளை உண்டு ஜீரணிக்கச் செய்துகிறது. அதனால் ஏற்படும் கழிவுப் பொருட்கள் உரமாக கரிய நிறத்தில் நிலம் முழுவதும் பரவியிருப்பதைக் காணலாம். மண் புழுக்களுக்கு உணர்ச்சி உறுப்புக்கள் வெகு அற்பமாக வாய்த்திருக்கின்றன. இருளையும், ஒளியையும் அவற்றால் பிரித்துணர முடியும் என்றாலும் அதற்கு பார்க்கும் புலன்கிடையாது. முழுச்செவிடாகவும் இலேசான மோப்ப சக்தியுடன் விளங்கக்கூடியது. ஆனால் உடலை தொட்டவுடன் உணர்ந்து கொள்ளும். இந்த ஸ்பரிச உணர்வே இதன் சிறப்பான குணம். அது இழுத்துச் செல்லும் இலைகளில் தங்கள் வீடுகளை, துவாரங்களை வரிசையாக அமைத்துக் கொள்வதைப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கும். சிலவகைப் புழுக்கள், இலைகளால் தங்கள் கூடுகளை கோபுரம்போல் கட்டும். இதைவிட ஆச்சரியமானது என்னவெனில் காட்சி சாலையைப்போல அழகாகத் தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்ள அது எடுத்துக் கொள்ளும் சிரமங்களும், வீட்டு வாயிலை உருவாக்க அவை உழைக்கும் உழைப்பும் அற்புதமானது. அந்த நேரத்தில் அதைப் பார்வையற்ற ஓர் உயிரினம் என்று சொல்ல முடியாது.

 

  அழகிய ஒரு பசும்புல் தரை, அதன் அழகிய தோற்றத்துக்கு மூலகாரணம் மண்புழுதான். ஒவ்வொரு ஆண்டும் அந்த மண், புழுவின் உடலுக்குள் சென்று வெளிவந்து. மெதுவாகி, சமதளமாகி வளத்துடனிருக்கிறது. நிலத்தை உழுவதை மனிதன் பழங்காலத்திலிருந்தே செய்து வருகிறான். ஆனால், நிலத்தை உழுது பயிரிடவேண்டும் என்பதை மனிதன் கண்டு பிடிகும்கு முன்பே மண்புழுக்கள் நிலத்தை உழுது கொண்டிருக்கின்றன. இன்னும் உழுது கொண்டிருக்கின்றன. இச்சிறிய உயிரினத்தைப்போல வேறு எந்த உயிரினமாவது உலகை வளமாக்கி உலக சாரித்திரத்தில் இடம் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். ஒரு வினாடியைக்கூட வீணாக்காமல் பல ஆண்டுகளாக விடாது செய்து வரும் மண்புழுவின் சேவை மகத்தானது. மண்புழுவை விடச் சற்று தரத்தில் குறைந்த ஓர் உயிரினம் இருக்கிறது. அது சமுத்திரத்தில் செய்து வரும் மகத்தான வேலைகள் நம்மைப் பிரமிக்க செய்கின்றன. அவைதான் பவழப்பூச்சிகள். எண்ணற்ற மணல் மேடுகளும் தீவுகளும் சமுத்திரத்தில் உருவாக முக்கிய காரணம் இந்தப் பவழப்பூச்சிகள் தான்.

 

    கடவுளும் டார்வினிஸம்

 

சார்லஸ் டார்வின் ஒருவருடைய கண்டுபிடிப்புக்கு மட்டும் டார்வினிஸம்என்று சொல்வதல்ல, அவருக்கு முன்னாலும் பின்னாலும் இந்தத் துறைபற்றி எழுந்த சகலவிதமான கருத்துக்களின் ஒரு கூட்டுத் தொகுப்பைத்தான் டார்வினிஸம்”           சார்லஸ் டார்வினின் ஜீவராசிகளின் பரிணாமத் தத்துவத்தை கிரிஸ்துவ மதச் சாமியார்கள் தாம் சாரியாகப் புரிந்துக் கொள்ளாமல் முதலில் எதிர்த்தார்கள் என்பதில்லை. உலகிலுள்ள எல்லா மதங்களும் இந்தத் தத்துவத்தை எதிர்த்தன.

 

          “ஐந்து நாட்களில் அண்ட பிண்ட சராசரங்களையும் படைத்த பரமபிதா, ஆறாவது நாள், களிமண்ணை உருட்டி ஆதாமையும், அவனின் விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்துவிட்டு ஏழாவது நாள் ஹாய்யாக ஓய்வு எடுத்துக் கொண்டார்

 

இந்து மதமும், “பிரமனின் நான்கு ஏற்ற இறக்கமான உறுப்புகளிலிருந்து நான்கு ஜாதி மக்கள் பிறந்தனஎன்றும், இதேவகையில் சிறுசிறு மாற்றங்களுடன் சிருஷ்டித் தத்துவத்தை விளக்கும் வேறு பல மதங்களும் இந்தப் புதிய தத்துவத்தை எதிர்க்கவே செய்தன. ஆனால் அவர்களால் இந்தத் தத்துவத்தை மறுக்காமல் இருக்க முடியாது. காரணம், உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தும், தத்தமது மதத்தின் தலைவனான கடவுளால் அப்பட்டமாக, அப்படியப்படியே சிருஷ்டியாயின எனும் ஒரேவிதச் சம்பிரதாய நம்பிக்கையை உடும்புப் பிடியாகப் பிடித்துவந்த கால கட்டத்தில் சார்லஸ் டார்வினின் இந்தப் பரிணாமத் தத்துவத்தை அவை எப்படிப் பூரணமாக ஏற்க முடியுமா? அப்படி இந்தப் புதிய தத்துவத்தை அவை ஏற்றுக் கொண்டால், அவற்ரின் சம்பிரதாயப்பிடிகள் என்னாகுமென்பது தெரிந்த விஷயம்தானே! மதத்தத்துவங்கள் முதல் பகுத்தறிவு கொள்ளைகை வரை எந்த வித சிந்தனையும் கொள்ளாமல்  அப்படியே ஏற்கும் முட்டாள் தனத்தை பழகிப்போன மனிதனுகு இந்த பரிமாணன் கொள்கையை ஏற்பது கடினமாகவே இருந்தது.

 

ஜீவராசிகளின் பரிணாம வளர்ச்சியில் உற்பத்தி செய்யும் இயற்கைச் சக்தியை சார்லஸ் டார்வின் விஞ்ஞான ரீதியாக வர்ணிப்பதெல்லாம் கடவுளின் மாபெரும் சக்திகளை மதநூல்கள் வர்ணிப்பது போலவே உள்ளன. பரிணாம வளர்ச்கான ஆராய்ச்சி வித்துக்கள், கிரிஸ்து பிறப்பதற்கு முன்னுள்ள கிரேக்க நூல்களில் மட்டுமல்ல, மதங்களின் புராணக் கதைகளிலும் ஆத்மதத்துவ நூல்களிலும் கூடச் சூட்சுமமாக இக்கருத்துக்கள் உள்ளன என்பதை ஆராய்ந்து அறிந்தால் புலப்படும்.

 

இந்து மதத்தில் தசாவதாரக் கதை, விஞ்ஞானிகளின் உலகப் பரிணாம ஆராய்ச்சிகளையும், டார்வினின் ஜீவவர்க்கப் பரிணாமத் தத்துவத்தையும் எதிரொலிகிறது.  சார்லஸ் டார்வினின் தத்துவம் தான் ஆதிகால இந்து மதத் தோற்றத்தின் ஆணிவேர். இந்த உண்மையை அறிய முதலில் உலகப் படைப்பு பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சியையும், இந்துமதக் கருத்துக்களையும் ஒப்பிட்டுப்பார்ப்போம்.

         

 “சூரியனின் சுழற்சிக் கிரமத்தில் ஏற்பட்ட ஒரு சிறு அசம்பாவிதத்தால்அதிலிருந்து விண்டு வெளிப்பட்ட அக்கினிப் பிண்டம் சூரியனின் எல்லையை விட்டுச் சரிந்து வரும்போது, துரிய வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு காந்த சக்தி அந்த அக்கினிப் பிண்டத்தை அப்படியே தாங்கிக்கொள்ள அந்தப் பிண்டம் எண்ணற்ற கோடி ஆண்டுகளுக்குப் பின் சிறிது சிறிதாக ஆறிக் குளிர்ந்து நிலத்தன்மையைப் பெற்றதுஎன்பதாக, மேலை நாட்டு விஞ்ஞானிகள் இப்பூவுலகச் சிருஷ்டிச் சாரித்திரத்தை கணித்துக் கூறுகின்றனர்.    ஆனால், இந்துமதம், உலகம் உற்பத்தியானதற்கு வகுத்து வைத்திருக்கும் தத்துவம், மேலை நாட்டு வல்லுநர்கள் கனித்துச் சொல்லும் தத்துவத்தையும் மிஞ்சியதாக உள்ளது. அதாவது ரூபாரூப குணம் உடைய அக்கினியும், ரூப குணம் உடைய தண்ணீரும் சலன உறவுபெற்ற, அதன் சுழற்சியால் திரட்சியுற்றுப் பரவெளியில் ஆங்காங்கு சிதறி நின்ற நிலையில் அக்கினிக் கோளங்கள் சூரியர்களாகவும், ஜலகோளங்கள் அதன் கிரகங்களாகவும் அமைந்து நின்று இயங்கின. இவ்விருவகைக் கோள்களும் முறையே ஆண், பெண் இன நிலையுடையவைகளாய், அதாவது நெகடிவ் பாசிடிவ் என்ற விகற்பமுடையவைகளாய், பிரிந்து நின்று இயங்கின.

 

          இப்பூதபேத விருத்திக்கு முதல் நிலையாகிற ஆகாயம் இவைகள் எல்லாவற்றையும் தோற்றுவிக்க காரணமாகவும் அப்படித் தோன்றியவைகளைத் தன்னகத்தே நிலைக்க செய்யும் சக்தியாகவும் அமைந்தது. இதனால், முதல்பூதமாகிய ஆகாயம் சத்வகுணம் ஒன்றை மட்டும் கொண்டதாயும், இரண்டாவது பூதமாகிய வாயு சத்வகுணத்தோடு ஸ்பரிச குணமும் சலித்துத் திரட்டும் தன்மையும் கொண்டதாயும் மூன்றாவதாகிய அக்கினி சத்வ ஸ்பரிச குணங்களோடு ரூப குணமும், ஒன்றுவிக்கும் தன்மையும் கொண்டதாயும் விளங்கின. ரூப குணமுள்ள அக்கினியில் ஒளியும் உஷ்ணமும், சத்வ ஸ்பரிச குணங்கள் கொண்ட வாயுவில் குளிர்ச்சியும் நெகிழ்ச்சியும் உள்ளன. மேலும் அதனிடத்தில் திடப்பொருள்களின் மூலப்பொருளான உப்புச்சத்து உள்ளது. அண்ட வெளியில் அக்கினிக் கோளங்களாய் அமைந்திருந்த சூரியர்களைத் தலைமையாகக் கொண்டு ஜலக்கோளங்கள் அவற்றைச் சுற்றிவரும்போது, அதனிடையே இருக்கும் குளிர்ச்சி நெகிழ்ச்சியாலும், திடப்பொருள்களின் மூல வஸ்துவான உப்புச்சத்தாலும் சூரியனுடைய ஒளி உஷ்ணங்களின் தாக்குதலாலும், வாயுவின் ஸ்பரிசத்தாலும் பிராணவாயுவின் சேர்க்கையாலும் உழற்சி கொண்டு, ஜலகோளங்களின் புறப்பாகத்தில் மண்ணின் அம்சமான மலினப்பிண்டம், அதாவது உப்புச்சத்தான மண்துகள்கள் காலக்கிரமத்தில் ஒன்று சேர்ந்து, ஜலமட்டத்திற்கு மேலே எழும்புவதாயிற்று. இந்த மலினப்பிண்டம்தான் இன்றுள்ள இப்பூகண்டமாகும்.

 

          பூதபேதசெயல்களின் ஒரு முழு மூல தத்துவத்திற்குதான் அருவம்எனப் பொருள்படும்படியாகப் பிரம்மம்”, என்று ஆதிகால இந்து மதப்பொரியோர்கள் பெயர் சூட்டினர். பிறகு பிரம்மத்தால் தோன்றிய (திடீரென்று இல்லை, கிரக கோள்களின் பல லட்ச வருடகால உழற்சியால்) பூமியில் பிரகிருதிகள் உற்பத்தியாயின. இந்தப் பிரகிருதிகள் உற்பத்தியான (விஞ்ஞான) தத்துவத்திற்கு, அதாவது உருவத் தோற்றுவாய்க்கு உருவம்அல்லது பிண்டம்எனப் பொருள்படும்படியாக விஷ்ணுஎன்று பெயர் வைத்தனர். இந்த உருவத் தோற்றங்களின் மூலம் அவ்வுருவத்தை அதாவது ஜீவாணுக்களை உண்டு பண்ணிய (விஞ்ஞான) தத்துவத்திற்கு உருவுருவம் எனப்பொருள்படும்படியாக சிவம்அல்லது ஜீவன்என்று பெயர் வைத்தனர்.

 

          சூரிய கோளங்களுடையவும், ஜலகோளங்களுடையவும் உழற்சியால் உண்டான பிண்டத்தையும், பிரகிருதியையும், ஜீவனையும் குறிப்பதற்காகவே சிவா, பிரம்மா, விஷ்ணுஆகிய சொற்களை அந்நாட்டின் அக் காலப் பேரறிஞர்கள் ஆக்கினர். அத்தகைய அறிவுமயமான விஞ்ஞான வார்த்தைகளே இப்போது முப்பெரும் கடவுளர்களாக இந்துமதக் கோட்டையை நிர்மாணித்து வைத்திருக்கின்றன.  

 

உலகம் தோன்றிய விதத்தை, மேல்நாட்டு அறிஞர்களும், கீழ்நாட்டு அறிஞர்களும் கூறிய இருபெரும் உண்மைகளை இதுவரை கவனித்தோம். இவ்விரு சாராரின் முடிவுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவும் சிலவற்றில் ஒற்றுமை உடையனவாயும் இருப்பினும் அடிப்படையில் அவை ஒரே வித நோக்கம் கொண்டிருக்கின்றன என்பது மட்டும் தௌளத் தெளிவாகின்றது.

 

 “உலகம் பரம்பொருளாலோ பகவானாலோ ஒரே நாளில் தோன்ரியவை அல்ல. அது நெபுலாஎன்னும் பிரபஞ்ச பரிணாம முகிற்படலா கிரகங்களின் காலக்கிரம உற்பவிப்புஎன்பதே அவ்விருசாராரின் அடிப்படைக் கொள்கையா இருக்கிறது.      இனி, அவ்விரு சாராரின் ஒரே விதக் கொள்கையில் கட்டுப்பட்ட இவ்வுலகத்தில், தோன்ரித் திரிந்து அழிவதான ஜீவராசிகள் எப்படி உற்பத்தியாயின என்பது குறித்து, இந்து மதம் என்ன சொல்கிறதென்று ஆராய்ந்தால், நமக்கு வியப்பும் திகைப்பும் ஏற்படாமல் இராது.

 

1859ஆ-ம் வருடம் நவம்பர், மாதம் 24ஆ-ம் தேதி சார்லஸ் டார்வின், உலகிலுள்ள இயற்கைராசிகளும் ஜீவராசிகளும் உற்பத்தியான விதத்ம் பற்றி என்ன முடிவை வெளியிடடாரோ அதே முடிவைத்தான், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பாரத தேசதத்தில் வாழ்ந்த பேரறிஞர்கள் கூறிஉள்ளனர். இந்துமதக் கடவுள் கொள்கை என, எந்த ஒரு தத்துவம் ஏற்றிப் போற்றப்படுகிறதோ அதே தத்துவம்தான், அன்றைய டார்வினிஸமாய் நம்மவர்களால் வெளியிடப்பட்டது என்று கூடச் சொல்லலாம். அந்த டார்வினிஸத்தின் பெயர் என்ன தெரியுமா? அதுதான் மகாவிஷ்ணுவின் தசாவதாரம்அதாவது நீர்ப்பாசியிலிருந்து புழு, பூச்சி, நத்தை, மீன், தவளை, ஆமை, பாம்பு, எலி, பெருச்சாளி, பன்ரி, கரடி, எருமை, யானை, நாய், ஓநாய், புலி, சிங்கம் முதலிய ஜீவப்பிராணிகள் எல்லாம் பரிணாம ரிதியில் தோன்றியது. இறுதியில் குரங்கு என்ற ஒரு பிராணி தோன்ரியது. அந்தக் குரங்கின் மூல மூதாதையான ஒரு பிரிவின் காலக்கிரம வளர்ச்சியே மனிதன் என்பதாகப் பரிணாமவாதிகளின் தத்துவம் கூறுகிறது.

 

  மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமாக மச்ச (மீன்) அவதாரம் குரிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டாவது அவதாரம் கூர்மம், அதாவது ஆமை மூன்றாவது அவதாரம் வராகம், அதாவது பன்ரி. நான்காவது அவதாரம் வாமனம் (வாமனம் என்றால், குறள் வடிவு அல்லது குள்ளமான குறுகலான என்பது பொருள். ஆக, இந்தச் சொல்லுக்குக் கரடி அல்லது யானை என்று வைத்துக் கொள்ளலாம்.) ஐந்தாவது அவதாரம் நரசிம்மம், அதாவது நர (மனித) உருவில் இருக்கும் சிங்கம். இவ்வாறு ஐந்து அவதார உருவங்களும், டார்வினின் பரிணாமத் தத்துவப்படி, ஒன்றிலிருந்து ஒன்று திரிந்தும் சிதைந்தும் வளர்ச்சி பெற்றவை. அதாவது, நீர்ப்பாசியிலிருந்து தோன்றிய ஜீவத் தசைப்பிண்டங்களின் ஒவ்வொரு முக்கிய வளர்ச்சிப் பருவத்தையும் மூலாதாரமாகக் கொண்டு, இந்த ஐந்து அவதாரங்களின் உருவ லட்சணங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. மீனின் பல வளர்ச்சி உருவங்களுக்குப் பின் அது ஆமையாகவும், ஆமையின் பல வளர்ச்சி உருவங்களுக்குப் பின் அது பன்ரியாகவும், பன்ரியின் பல வளர்ச்சி உருவங்களுக்குப் பின் அது கரடியாகவும் (குறள் வடிவம் - வாமனம்) கரடியின் பல வளர்ச்சி உருவங்களுக்குப் பின் அது சிங்கமாகவும் தோன்ரின என்பதே அந்த ஐந்து அவதாரக் கதையின் தத்துவம்.

 

 ஜல கோளங்களின் திரட்சியால் மலினப் பிண்டம் தோன்றியதை, மச்சாவதாரமென்றும், அந்த மலினப் பிண்டம் ஒன்று சேர்ந்து திரண்டு ஜல கர்ப்பத்திலிருந்து கூர்ம வடிவாய் வெளிப்பட்டதை கூர்மாவதாரம் என்றும், அந்தக் கூர்மம் பருத்து ஜலத்திற்கு மேல் பூமியாக வெளிப்பட்டதை வராகவதாரம் என்றும், அதன் பின்னர், பூமியில் தோன்ரிய நீர்ப்பாசியின் தோற்றந்தொடங்கி யானை ஈறாகவுள்ள பிராணி வகைகளை வாமனாவதாரம் என்றும், அதற்கு மேல் தோன்றிய மனிதத்திருத்தத்தை நரசிம்மாவதாரமென்றும் கொள்ளலாம். பின்னருள்ள ஐந்து அவதாரத் தத்துவங்களும் மனிதவர்க்கம் பலபல திருத்தங்கள் பெற்று நாகரீகமடைந்ததை விளக்குவதாகும்.

 

பரசுராம அவதாரத்தில் பரசுராமர் ஏர்க்கலப்பையுடனும் கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் மாடு மேய்ப்பவனாகவும் ராமாவதாரத்தில் ராமர் மக்களைக் போர் முறைகள் கையாளத்தெரிந்த வீரனாகவும் இருப்பதை பார்க்கும்போது, ஆதிகால மனிதர் முதலில் நிலத்தை உழுது பயிரிடத் தெரிந்துக் கொண்டு, பின்னர் ஆடு, மாடுகளைத் தங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கற்றுக்கொண்டு, இறுதியில் சமுதாய ஆட்சி முறையையும், அதைப் பலப்படுத்த போர் செய்யப் பயிற்சி பெற்றார்கள் என்ற மனித பரம்பரையின் வளர்ச்சிச் சரித்திரமே, முதற்கூறிய ஐந்து அவதாரங்களுக்குப் பிற்பட்ட அவதாரங்களின் விளக்கமாக இருக்கிறது. ராமாவதாரத்தின் துணைப்பாத்திரமாக அனுமனை, குரங்கை அந்த அவதாரக் கதையில் இணைத்திருப்பது சார்லஸ் டார்வின் தத்துவத்தை வலுப்படுத்தத்தான்.

 

  பிராணிகளின் தோற்றத்தையும், மனித இன மூலத்தையும் ஆராய்ந்த முன்னோர்கள், “மீனிலிருந்து ஆமையும், ஆமையிலிருந்து பன்றியும், பன்றியிலிருந்து கரடியும் கரடியிலிருந்து சிங்கமும், சிங்கத்திலிருந்து மனிதனும் தோன்றினான்என்ற முடிவு செய்து அதன் போரில் இந்த ஐந்து அவதார ஆராய்ச்சி தத்துவங்களையும் வெளியிட்ட பின்னர் மீண்டும் மனித இனத் தோற்றத்தை ஆராய்ந்து பார்த்ததில், “சிங்கத்திலிருந்து மனிதன் தோன்றி இருக்கமாட்டான், குரங்கிலிருந்தே மனிதன் தோன்றியிருப்பான்என்ற உண்மை புலப்படும், மறுபடியும் அவதாரத் தத்துவக் கதைகளை வெளியிட்டு, அதில் மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சிகளையும் (குரங்கையும்) சேர்த்திருக்கிறார்கள் என்றே கொள்ள வேண்டும். மனிதன் குரங்கிலிருந்து திருத்தமுற்றுத் தோன்றினான் என்பதை, மனிதர்கள் எந்தக் காலத்திலும் மறகக்கூடாது என்பதற்காகவே ராமாவதாரத் தத்துவக் கதையில் குரங்குக்கு அதிகமான இடம் கொடுத்துள்ளனர்.

 

   நமது நாட்டு ஆதிகால விஞ்ஞானிகள். மேலும் அவர்களின் இந்த விஞ்ஞானத் தத்துவ வரையறையில் மற்றொரு மாபெரும் சூட்சுமமும் அடங்கியிருப்பது புலப்படுகிறது. அதாவது, மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம் என்ற ஐந்து அவதாரங்களுக்குத் தாய் தந்தையர் இன்னார் என்று கூறாமல் விட்டு விட்டதோடு, அந்த அவதார உருவங்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு கைகள் இருந்ததாகக் கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அவதாரங்களுக்குப் பிற்பட்ட ஐந்து அவதாரங்களுக்கும் பெற்றோர் உண்டு. சாதாரண மனிதருக்கு இருப்பது போல் இரண்டு கைகள் மட்டுமே உள்ளன.

 

          இந்த வேறுபாட்டுக்குக் காரணம், நாலு கால் பிராணிகள், பரிணாம ரீதியாக திருத்தமுற்று வளர்ந்து மனிதத் தோற்றத்தின் முதல்படியை அடைந்ததுவரை ஒரு பகுதியாகவும், அந்த முதல் திருத்த மனிதர் காலக்கிரமத்தில் உடலாலும் உள்ளத்தாலும் வளர்ந்து நாகரீகமடைந்ததைப் பிரிதொரு பகுதியாகவும் பிரித்து விளக்குவதற்காகவே, தசாவதாரக் கதையில் இந்த அமைப்பு வேறுபாட்டை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.

 

          பத்து அவதாரங்களை இரண்டாகப் பிரித்து, முதல் ஐந்து அவதாரங்களுக்கு நான்கு கைகளும் பெற்றோர் இல்லாமலும் கற்பிதம் செய்து, பின்னுள்ள ஐந்து அவதாரங்களுக்குப் பெற்றோரும் இரண்டு கைகளும் இருப்பதாக நிர்ணயம் செய்திருப்பதில் எத்தனையெத்தனையோ விஞ்ஞான உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. நான்கு கால்களையும் நான்கு கைகளாக உபயோகப்படுத்தும் பிராணிகள், தங்கள் பெற்றோரைப்பற்றி எவ்வித பிரக்ஞையும் கொள்வதில்லை. அவற்றுக்குத் தாய் தந்தை உறவு முறை என்ற பாச பந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆகையால், அதன் பரிணாம வளர்ச்சியை விளக்குவதற்காகக் கற்பிதம் செய்யப்பட்ட அவதார உருவங்களுக்குப் பெற்றோரை உண்டுபண்ணாமலும் நான்கு கைகளையும் நிர்ணயம் செய்தார்கள் அந்த நல்லறிஞர்களான விஞ்ஞான வல்லுநர்கள். முதுகெலும்பு நிமிரும்படியான திருத்தம்பெற்ற மனித இனம், நான்கு கால்களுள் இரண்டை நடப்பதற்கும், இரண்டைத் தொழில் புரிவதற்குமாக ஏற்படுத்திக்கொண்டு, பெற்றோர் என்றும், பிள்ளையென்றும், வேறு பல உறவு முறைகள் என்று பாகுபடுத்தி வகுத்துக்கொண்டிருப்பதால், அதை விளக்குவதற்காகக் கற்பிதம் செய்யப்பட்ட ராமர், பரசுராமர், கிருஷ்ணர் ஆகிய அவதார உருவங்களுக்கு, இரண்டு கைகளும், பெற்றோரும் ஏற்படுத்தினார்கள் அந்த ஆதிகால இந்திய டார்வினிஸ்டுகள். ஆனால், இன்றைய இந்து மதம், அந்தத் தசாவதாரத் தத்துவக் கதைகளுக்கு என்ன விளக்கங்கள் கூறி உள்ளனர்.

 

 மச்சாவதாரத்திற்குப் பதினாறாயிரம் சுலோகங்களுடைய ஒரு புராணக்கதையையும், கூர்மாவதாரத்திற்கு ஆறாயிரம் சுலோகங்களுடைய ஒரு புராணக் கதையையும், வராகவதாரத்திற்கு இருபத்தி நாலாயிரம் சுலோகங்களுடைய ஒரு புராணக்கதையையும், வாமனாவதாரத்திற்கு ஏழாயிரம சுலோகங்களுடைய ஒரு புராணக் கதையையும், நரசிம்ம அவதாரத்திற்கு இரண்ய கசிபு - பிரகலாதன் என்ற ஒரு புராணக்கதையையும், இதுபோன்ற பிற அவதாரங்களுக்கு ஒவ்வொரு வேடிக்கையான, அரிவுக்குப் பொருந்தாத வெறும் கற்பனை நம்பிக்கைமயமான புராணக் கதைகளையும் உண்டு பண்ணி, அவற்றைக் கண்ணை மூடிக்கொண்டு மக்களை நம்பும்படித்தான் இன்றைய இந்து மதவாதிகள் கூறுகிறார்கள். அந்தக் காலத்தில் எந்த நோக்கத்தோடு இந்த விஞ்ஞானத் தத்துவத்தை நம் பொரியோர்கள் வெளியிட்டார்களோ அது இப்போது வெறும் அமானுஷ்யக் கற்பனைக் கதை வடிவம் பெற்று, ஒரு மதமாக உருவெடுத்திருப்பது விசித்திரமான ஒரு விஷயம்தான்.

 

 உலகமும் அதிலுள்ள ஜீவராசிகளும் மட்டும்தான் பரிணாம வளர்ச்சி பெற்றன என்றால் விஞ்ஞான தத்துவங்கள் கூடக் காலக்கிரமத்தில் வெவ்வேறு வடிவமும் வளர்ச்சியும் பெற்றுவிட்டிருக்கின்றன என்பதை நினைக்கும்போது ஒரு வேதனைச் சிரிப்புத்தான் வருகிறது.    எந்த ஒரு மாபெரும் உண்மைத் தத்துவத்தின் அஸ்திவாரத்திலே இந்து மதம் தோற்றுவாயாகியதோ, அந்த மதம், இன்று அதன் அடிப்படைத் தத்துவத்தை மறந்து அந்த அடிப்படைத் தத்துவத்தை மீண்டும் ஒருவர் இப்போது நினைவுப்படுத்தியதை ஏற்க முடியாமல் அதை எதிர்க்கக்கூடிய கொள்கையுடன் அந்த மதம் இன்று ஆகிவிட்டிருப்பதை நினைத்து அனுதாபமே ஏற்படுகிறது.

 

          இந்த மதத்திலுள்ள மச்சாவதார (மீன் வடிவ)க் கதை கிரிஸ்துவ மதத்தின் பழைய ஏற்பாடான”  விவிலிய நூலிலும் நோவா கால ஜலப் பிரளயக் கதைரூபத்தில் அப்படியே சென்று, அமைந்து இருக்கிறது. இதுவன்ரி, ரோமானியர் வணங்கும் நீரஸ் என்ற கடவுளும், மச்சாவதார உருவம் போன்றே மீனுடலும், மனிதத் தலையுமாகச் சித்திரித்திருப்பதை இங்கு சிந்தித்துப் பார்க்கும்போது, அந்தக் கடவுளும் இந்த நாட்டிலிருந்து குடியேரியவர் என்று தெரிகிறது. உலக மக்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒவ்வொரு மதமும் ஒன்றையொன்று பார்த்து, அதனதன் கொள்கைகளைப் பரிமாறிக் கொண்டு, அவசர அவசரமாகத் தனக்குத்தானே ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொண்டாலும், ஆதிகால சிருஷ்டித் தத்துவத்தை மட்டும் அவை அறவே ஒதுக்கிவிட்டு உலகமும் அதிலுள்ள இயற்கை ஜீவராசிகளும் ஜீவராசிகளும் கடவுளால் படைக்கப்பட்டவைஎன்ற ஒரு கோட்பாட்டை மஒருமுகமாக ஏற்றுபது வேடிக்கையான விஷயம். டார்வினிசத்துடன் கடவுள் கொள்கையை ஒப்பிட்டிப் பார்த்தால் கடவுள் கொள்கைகும் டார்வினிசத்துகும் ஒரு நெருகம் இருப்பது புரியும். இத்தையை டார்வினிசம் இன்றும் என்றும் மனித இனத்தை வழி நடத்தும்.

 

  பெட்டி செய்திகள்:  

 ------*------ 

 2009-ல் அவருடைய இருநூறாவது ஆண்டு விழாவும், அவருடைய புகழ்பெற்ற புத்தகமான ஜீவராசிகளின் மூலம்வெளிவந்த 150-வது ஆண்டுவிழாவும் சேர்த்து உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் நடத்தப்பட்டன. டார்வின் 200” என்ற இந்த நிகழ்ச்சிக்கு இங்கிலாந்தில் பல இடங்களில் டார்வினைப் பற்றிய காட்சிசாலைகள் அமைக்கப்பட்டன.

 

 ஜூலை 2009-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. டார்வின் பிறந்த இடமான ஷ்ரூஸ்பொரியிலும் டார்வின்-ஷ்ரூஸ்பொரி திருவிழா 2009” என்ற பெயரில் அந்த வருடம் முழுவதும் விழாக்கோலம் காணப்பட்டது. சார்லஸ் டார்வின் தாடியுடன் எதிரில் சிம்பன்சி குரங்கு இருப்பது போல் இங்கிலாந்தில் இரண்டு பௌண்ட் நாணயம் வெளியிடப்பட்டது.

 

டார்வினின் இறப்பிற்கு பின் கண்டுபிடித்த பல பிரிவுகளுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2009-ல் அவருடைய இருநூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவம் ஒன்றிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டது. காலப்பாகஸ் தீவுகளில் டார்வின் கண்டுபிடித்த சிறிய வகைப் பறவையினங்களுக்கு டார்வினின் பெயர் சூட்டப்பட்டுள்ளன. டேவிட் லேக் என்பவர் 1947-ல் இந்தத் தீவில் டார்வின் கண்டுபிடித்த உயிரினங்களை வகைப்படுத்தி ஒரு நூல் எழுதியுள்ளார்.

 

          வரலாற்றில் செல்வாக்கு பெற்றவர்களை டாக்டர் மைக்கேல் எச்.ஹார்ட் என்பவர் வகைப்படுத்தியுள்ளார். அதில் டார்வின் 16-வது இடத்தைப் பிடித்துள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்டு பி.பி.சி. தயாரித்த பிரிட்டனை சேர்ந்த 100 சாதனையாளர்கள் பட்டியலில் டார்வின் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். 2000-ம் ஆண்டு, இங்கிலாந்து வங்கியின் 10 பௌண்ட் நோட்டில் டார்வினின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

 

சார்லஸ் டார்வின் 1849 ஆம் ஆண்டு தீராத நோயால் பாதிகப்பட்டார். டாக்டர் ஜேம்ஸ் குல்லி என்பவரிடம் நீர் மருத்துவம் எடுத்துக் கொண்டார், இதன்மூலம் அவருடைய உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. 1851ஆம்- ஆண்டு  அவரது அன்புமகள் ஆனி நோய்வாய்பட்டார். அப்பொழுது அவருடைய இந்த நோய் பரம்பரையாய் தொடர்கிறதோ என்று அவர் அஞ்சினார். ஜேம்ஸ் குல்லி முதற்கொண்டு எவ்வளவோ மருத்துவத்தை மேற்கொண்டாலும், எதுவுமே பலனில்லாமல் ஆனி இறந்தாள். எண்ணற்ற ஆண்டுகளாய், சிருஷ்டித் தத்துவத்திற்கு ஏதேதோ குருட்டுத்தனமான முடிவுகளையெல்லாம் கொண்டு குமைந்து கிடந்த இந்த உலக மக்களுக்கு, காலவெள்ளத்தால் அழித்தெறிய முடியாத ஒரு கருத்து விளக்கத்தை அளித்தார். 

 

சார்லஸ் டார்வினின் மகன்கள் பிரான்சிஸ், ஜார்ஜ், ஹோரேஸ் ஆகியவர்கள், ராயல் சொசைட்டியின் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் முறையே தாவரவியல், வானியல் மற்றும் கட்டிட பொரியாளர்கள். Êசார்லஸ் டார்வினின் மற்றொரு மகன் லியானார்டு என்பவர் போர்வீரராகவும், அரசியல், பொருளாதாரம், மனிதவளம் போன்ற துறைகளிலும் வல்லுநராக இருந்தார்.

 

 

 ------*------ 

    சார்லஸ் டார்வின் புத்தகங்கள்   

 

 

ஜீவராசிகளின் மூலம் 

 

மனிதப் பரம்பரை  

 

மனிதனும் மிருகமும் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம்

 

பவழப்பாறையின் அமைப்புகளும் வகைகளும்

 

முதல் பென்சில் வரைபடம்

 

கலைவர்க விதைகளின் கருவூலம்

 

படரும் செடி கொடிகளின் இயகமும் காலப்போகும்

வீட்டில் வளரும் மிருக தாவர இனங்களின் பாகுபாடு

 

மனிதனின் உதயம்

 

உயிரினங்களின் தோற்றம் இயற்கை பிரிநிலை தத்துவம்

 

 

சார்லஸ் டார்வின் வாழ்கை வரலாறு

 

 

 ------*------ 

 

 

 


-தொடரும்..............

by Swathi   on 30 Sep 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
20-Jan-2019 05:00:48 velmurugan said : Report Abuse
super.i like this
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.