LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறார் செய்திகள் - தகவல்கள் Print Friendly and PDF
- நிகழ்வுகள்-events

கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன் இரண்டாம் நாள்.

பயிற்றுனர் ஒரு புத்தர் சிலையுடன் Dramatic effect கொடுத்தவாறு திரையில் வந்து பயிற்சியை ஆரம்பித்தார். ஒரு விளையாட்டுடன் வகுப்பு துவங்கியது. எந்த வகையிலும் தொடர்பில்லாத இரண்டு பொருட்களைக் கொண்டு வரவேண்டும் என்று விளையாட்டு ஆரம்பமானது. அந்த பொருட்களைக் கொண்டு இரண்டு நாள் வகுப்பில் என்ன நடந்தது என்று நாடகமாக உருவாக்கி காட்ட வேண்டும் என்று வீட்டுப் பாடம்.(இப்படின்னு தெரிஞ்சிருந்தா, அப்போவே நல்லா படிச்சி இருக்கலாம் இல்ல.....)
அதோடு ஒரு நாடகம் உருவாக்குவதற்கான சூழ்நிலை, சொல்லப் பட்டது. அதிலிருந்து நாங்கள் கதாபாத்திரங்களையும், அவர்களின் செயல் பாடுகள் என்னவாக இருக்கும் என்பதையும் கற்பனை செய்துகொண்டிருந்தோம். பின்னர் ஒரு கலந்துரையாடலுடன் இனிதே வகுப்பு முடிந்தது.

 

கல்வியில் நாடகம் -மூன்றாம் நாள்.

வீட்டுப் பாடம் அசாதாரணமாக எனக்கு தோன்றியது. ஆனால் நல்லவேளை எனக்கு இந்திய நேரப்படி மாலை வகுப்புதான் என்பதால், காலை வகுப்பில் உள்ள ஆசிரியர்கள் ஏற்கனவே வீட்டுப் பாடங்களை ஒருநிமிட காணொளியாக ஆக்கி குழுவில் பகிர்ந்திருந்தார்கள். அப்படி இப்படி நானும் என் வீட்டுப் பாடத்தை ஒரு பொம்மலாட்டம் வடிவில் காணொளியாக்கி ஒருவழியாக அனுப்பி விட்டேன். எனக்கு அப்பாடா என்று இருந்தது.அது நல்லா இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒரு வழியாக வீட்டுப் பாடம் செய்துவிட்டோம் என்ற உணர்வே எனக்கு ஒரு திருப்தியைத் தந்தது.
வகுப்பு துவங்கியது. மீண்டும் முந்தைய நாள் கதைமாந்தர் உலாவர நாடக பயிற்சி நடந்தது. எங்கள் கண்முன்னே நாங்கள் ஒவ்வொருவரும் நாடகத்தை நடத்துகிறோம் என்பதை அறியாமலே ஒரு நாடகம் செய்துகொண்டிருந்தோம். இதுவல்லவா உண்மையான பொம்மலாட்டம். நம்மை இயக்கும் ஒருவர் (இயக்குனர்) எப்படி நம் கண்களைக் கட்டி, கதாபாத்திரத்தை வெளிக் கொணர்கிறார் என்னும் மாயாஜாலம் எங்களை வைத்தே அரங்கேறிக் கொண்டிருந்தது. இப்போது Drama என்பதும் Theatre என்பதும் என்னென்ன என்று ஒருவழியாக மூளைக்குள் இறங்கி கொண்டிருந்தது.

அன்றுதான் புதிதாக இணைந்திருந்த ராணி ராஜேந்திரன், ஒவ்வொருவர் பற்றிய அறிமுகம் வேண்டும் என்று கேட்டு இருந்தார். நாடகத்தின் சுவாரசியத்தில் நேரம் போவது உணராமல் பேசிக் கொண்டிருந்தோம் என்பதால் அடுத்தநாள் அறிமுகப் படலத்தை வைத்துக் கொள்ளலாம் என்று வகுப்பு முடிந்தது.

(அப்படி என்ன நாடகம் செய்தீர்கள் என்று நீங்கள் நாற்காலி முனையில் வந்து அமருவது புரிகிறது..... சொல்கிறேன், அதைச் சொல்லாமலா?)

ஒரு அழகான கிராமம்.திரு. சந்திரமோகன் “என் இனிய தமிழ் மக்களே!” போட்டு துவங்கி வைத்தார். அங்கே உள்ள சூழ்நிலைகள் மனதில் ஓட, அங்கே என்னென்ன வேலை செய்பவர்கள் இருப்பார்கள்? என்று ஒரு கேள்வி வைத்தார். அனைவரும் ஒவ்வொன்று சொன்னார்கள். உழவு, பானை வனைதல், வண்ணார் என்று பலவிதமான பதில்கள்.(எனக்கு ஒன்றும் சொல்ல தெரியவில்லை..... எப்போதாவது கிராமத்தைப் பார்த்திருந்தால்தானே!)

டீச்சர் பாடம்நடத்தும் போது , புரியாத குழந்தை எப்படி முழிக்குமோ அப்படித்தான் நானும், எச்சில் முழுங்கி கொண்டே ரொம்ப புரிந்த மாதிரி நடித்துக் கொண்டிருந்தேன். (இது நடிப்புக்குள்ளே ஒரு மகா நடிப்பு). ஆஹா, நமக்கு கூட நடிக்க வருகிறதே என்று நான் உணர்ந்த தருணம் அதுதான்.
அப்போது எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அறிவிப்பு வருகிறது. அரசாங்கம் நான்கு வழிச்சாலை போட திட்டம் இட்டிருப்பதால், வீடுகளை எல்லாம் காலிசெய்து வேறு இடம் பாத்துப் போக வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஏதோ செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்த ஒரு சூழ்நிலை நமக்கு வந்தது போல ஒரு உணர்வு

அதன் பிறகு ஒரு ஒரு உணர்வு பிரவாகத்தை ஏற்படுத்திக் காட்டினார் நம் பயிற்றுனர். ஒரு மாவட்ட ஆட்சியாளரிடம் இத்திட்டத்தை மாற்ற மனு கொடுக்க செல்வதாக ஊருக்குள் தலைவருடன் பேசி முடிவெடுக்கப் பட்டது. பிரம்மாண்டமாக ஆட்சியாளராக வந்து அமர்ந்தார் நம்ம அழகு வெங்கடேசன் சார். அடேங்கப்பா. நம் மனதுக்குள் போன சூழ்நிலை, ஒரு சாதாரண நிகழ்வை எவ்வளவு பிரம்மாண்டமாக்கி காட்டுகிறது. நம்ம அழகு வெங்கடேசன் சார், சந்திரமுகியாகவே மாறியிருந்த கங்காவைப் போல, கலெக்டராவே மாறியிருந்தார்.
மனு கொடுக்க சென்றிருந்த கிராம மக்கள் எல்லாரும் தங்கள் குறைகளை சொல்லி ஆட்சியாளரிடம் பேசுவதாக ஒரு காட்சி. அந்த காட்சியில் திரு.பிரபாகரன் தனது குறை சொல்லி அழுது நடித்த காட்சி மனதை மிகவும் பாதித்தது.

கிராமம் என்றால் எப்போதோ சிறுவயதில் அப்பாவின் ஊருக்கு போனதும் அங்கே உள்ள அமராவதி என்னும் ஆற்றங்கரையில், நாள்-மணி என்ற கணக்குகளை மறந்து என் சித்தப்பா மகன்களோடும், என் அக்காளோடும் ஆடிக் கொண்டும், படித்துறையில் ஆடும் மீன்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும், துவைக்கப் பட்ட துணிகள், காய போடும் நேரத்துக்குள் காய்ந்து விடும் விந்தையையும் மட்டுமே நான் அறிந்தவை. எப்போதும் மாநகரங்களில் வாடகை வீடுகளில் வசித்த நான், எல்லோரும் வீடுகளை காலி செய்யுங்கள் என்று அறிவிப்பினைக் கேட்டால், " ஹை, ஜாலி! நாம் புது வீட்டுக்கும் போகப் போறோம் " என்ற சந்தோச குரல் மட்டுமே கேட்டுப் பழகியவள்.
எப்போதும் என் வாழ்நாளில் கிராம வாழ்க்கையைப் பார்த்திராத நான் கூட, என்னை ஒருகிராமத்து பெண்ணாகவே உணர வைத்தது, அந்த நாடக சூழ்நிலை. ஊர்ப்புறத்தில் உள்ள மக்கள் எவ்வளவு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை உணர முடிந்தது. அப்படியென்றால், தெரியாத ஒரு செய்தியை, தெரிந்து கொள்ள நாடகம் என்னும் கலை எவ்வளவு தூரம் உதவும் என்பதை என் அனுபவம் கொண்டு நான் அறிந்து கொண்ட தருணம் அது. மிக அற்புதமான, என்றும் பசுமை மாறாத, நிமிடங்கள் அவை. உறக்கம் கலைந்த, எண்ணங்களின் ஆளுமையில் கட்டுப்பட்டிருந்த தொடர் இரவுகளின் துவக்கம் அன்று.

From The Known To Unknown என்று ஒரு வரியில் திரு. சந்திரமோகன்அவர்கள் இந்த உயிரோட்டமுள்ள வகுப்பினை முடித்தார்

by Swathi   on 12 Aug 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எழுத்தாளர் உதயசங்கர்  அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின்
முனைவர் மு. இளங்கோவனின்  மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள்  ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா! முனைவர் மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள் ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா!
கல்வியில் நாடகம் கல்வியில் நாடகம்
சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான "கதைசொல்லி" பயிலரங்கம் - 2
கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் /  5) கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் / 5)
கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது.. கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது..
தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது? தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் எது?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.