LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறார் செய்திகள் - தகவல்கள் Print Friendly and PDF
- செய்திகள்-News

ஐன்ஸ்டீனை விட அதிக IQ திறன்கொண்ட இந்திய வம்சாவளி சிறுவன்

குழந்தைகள் கேள்வி கேட்டாலே பெரியவர்களுக்குப் பிடிக்காது. 'பேசாமல் இருடா' என்று அடக்கி விடுவோம். கேள்வி கேட்பதுதான் குழந்தைகளின் இயல்பு. கேள்விகள் உதிக்கும்போதுதான் பதில் தேடும் ஆர்வம் தொடங்கும். 

10 வயது க்ரிஷ் அரோரா அதற்கு நல்லதொரு உதாரணம். இந்தச் சிறுவனின் IQ அளவு 162 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை விடவும், நவீனக்கால விஞ்ஞானியான  ஸ்டீபன் ஹாக்கிங்கை விடவும் இது அதிகம்.  மேலும் அதீத அறிவுடையவர்களின் IQ நிலையாகக் கணிக்கப்படும் 130 குறியீடுகளை விட அதிகமான நிலையுடன், க்ரிஷ் அரோரா காணப்படுகிறார்.

யார் இந்த க்ரிஷ் அரோரா? 

மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன். இவருடைய பெற்றோர் மௌலி மற்றும் நிச்சால். கணிதம் முதல் இசை வரை பல  திறன்களைப் பெற்றுள்ள கிரிஷ், உயர்ந்த IQ திறனுடைய நபர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் மென்சா சமூகத்தில் உறுப்பினராக்கப்பட்டுள்ளார். 

க்ரிஷ், 4 வயதில் வெறும் மூன்று மணி நேரத்தில் கணிதப் புத்தகத்தை முடித்ததுடன், 8 வயதில் ஒரே நாளில் தனது வகுப்புப் பாடங்களில் தேர்ச்சியும் பெற்று அசத்தியுள்ளார். தன்னுடைய ஓய்வு நேரத்தில், க்ரிஷ் தனது நண்பர்களின் படிப்பிற்கு உதவிசெய்கிறார். பியானோ வாசிப்பதில் அதிகத் திறமை வாய்ந்தவராக இருக்கும் க்ரிஷ், 10 வயதில் அதிகபட்ச தரமான 8 கார்டில் வாசிக்கக்கூடியவராக இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் 'ஹால் ஆஃப் ஃபேம்'-ல் இடம்பெற்றுள்ளார்,  பல இசைப் போட்டிகளில் வென்றுள்ளார். செஸ் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் க்ரிஷ்  காண்போரை வியக்க வைக்கிறார். 
by   on 02 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
எழுத்தாளர் உதயசங்கர்  அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வானம் பதிப்பகத்தின்
முனைவர் மு. இளங்கோவனின்  மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள்  ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா! முனைவர் மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள் ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா!
கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன்  இரண்டாம் நாள். கல்வியில் நாடகம் By Mr.சந்திரமோகன் இரண்டாம் நாள்.
கல்வியில் நாடகம் கல்வியில் நாடகம்
சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சேற்றில் இறங்கி நாட்டு நற்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான "கதைசொல்லி" பயிலரங்கம் - 2
கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் /  5) கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் / 5)
கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது.. கதைசொல்லி முதல் பயிலரங்கம் திரு.விழியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பாக நடந்தேறியது..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.