|
|||||
தீவிரவாத ஊடுருவல்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர் !! |
|||||
இந்திய எல்லை பகுதியில் நடைபெறும் ஊடுருவல்கள், அத்துமீறல்களை கண்காணிக்க 49 ஆளில்லா உளவு விமானங்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர் விடுத்துள்ளது. இந்திய எல்லை பகுதியில், பாகிஸ்தான், சீன ராணுவத்தின் ஊடுருவல்கள் மற்றும் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதை முன்கூட்டியே அறிந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட, ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்காக 49 உளவு விமானங்களை வாங்க ராணுவத்தின் கொள்முதல் பிரிவு சர்வதேச டெண்டர் விடுத்துள்ளது. |
|||||
by Swathi on 15 Oct 2013 0 Comments | |||||
Tags: இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் 49 எல்லை பகுதி அத்துமீறல் Indian Army Unmanned Aircraft | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|