LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

நல்ல தமிழில் எழுதுவோம்

ஆரூர் பாஸ்கர், ப்ளோரிடா,அமெரிக்கா

நாட்டு மருந்து கடையா அல்லது மருந்து(க்) கடையா ?

சென்ற கட்டுரையில் அல்லன், அல்லள், அல்ல,அல்லை போன்ற சொற்களின் வேறுபாட்டைத் தெரிந்து கொண்டோம். இந்தக் கட்டுரையில் “நாட்டு மருந்து கடையா அல்லது மருந்துக்கடையா? “இதில் எது சரி என்னும் பட்டிமன்றத்துக்குத் தீர்ப்பு சொல்லும் முன்…

கடந்த ஆறு மாதங்களாக நாம் நல்ல தமிழில் எழுதுவோம் எனும் தலைப்பில் நல்ல தமிழில் பிழையின்றி எழுதுவது பேசுவது குறித்துப் பார்க்கிறோம். அந்தக் கட்டுரைகளில் ஒற்று மிகுதல்,மிகாமை போன்ற இலக்கண விதிகள் எதையும் நாம் பார்க்கவில்லை. ஆனால், நாம் நல்ல தமிழில் எழுத அவற்றைத் தெரிந்து கொள்வது மிக அவசியம். ஒற்றெழுத்து என்றதும் பலர் நமக்கு எதுக்கு இந்த வம்பு ? ”க்,ச், த்,ப்” போன்ற ஒற்றெழுத்துகள் எதுவும் போடாமல் இரண்டு சொற்களை அப்படியே எழுதினால் என்ன? எனக் கேட்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே மேலே சொன்ன எடுத்துக்காட்டு. 

அதாவது நாட்டு மருந்து கடை என்றால் நாட்டு மருந்து என்னும் பாரம்பரிய மருந்தைக் கடை (கடையும் செயல்-ஏவல்) என்று பொருள். மாறாக நாட்டு மருந்துக்கடை என்றால் பாரம்பரிய மருந்து விற்கும் கடை என்று பொருள். அதாவது தமிழில் ஒற்றெழுத்துகள் மிகுவதாலும், மிகாமையாலும் பெரிய பொருள் வேறுபாடு உண்டு. அதைத் அறிந்து கொண்டு பயன்படுத்துவதே சரியாக இருக்கும். 

ஒற்று அவசியம் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. மதுரை(ப்) பையன் என்றால்,மதுரைக்காரப் பையன் எனப் பொருள்; மதுரை பையன் என்றால், மதுரை என்ற பெயருடைய பையன் என்றும் பேச்சு வழக்கில், மதுரையின் பையன் என்றும் பொருள் பெறும். அதுபோல வேலை தேடு என்றால் ஒரு வேலையைத் தேடிக் கொள் என்றும் வேலைத் தேடு என்றால் 'வேல்' என்னும் ஆயுதத்தைத் தேடு எனப் பொருள்படும். 

இதையொட்டி இன்னொரு கேள்வி - உடல் நலம்பெற நாட்டு மருந்து கடை(ப்)பிடிக்கவேண்டுமா? இல்லை நாட்டு மருந்துக்கடை பிடிக்கவேண்டுமா? கொஞ்சம் யோசியுங்களேன்.

by Swathi   on 20 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
செம்மாந்து செயல்படும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மாந்து செயல்படும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்
நாவல்கள், சிறுகதைகளின் வளர்ச்சி- 19ம் நூற்றாண்டு இறுதி 20ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு நாவல்கள், சிறுகதைகளின் வளர்ச்சி- 19ம் நூற்றாண்டு இறுதி 20ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு
சுவாரசிய தகவல்கள் சுவாரசிய தகவல்கள்
சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள் சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.