LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

கால்கள் - கவிஞர் மகுடேசுவரன்

கால்களை
ஆராய்ந்தேன்

வலிமையுடன்
உள்ளன

உதைத்தால்
கனமான எடையுள்ள
தாக்குதலாக இருக்கும்

நல்ல வேளை
நான் தாள்பணிய மட்டுமே
கற்றவன்

முகத்தை விரும்பிப் பார்த்ததுபோல்
நம் கால்களைக் கண்டுகொள்ள
மறந்துவிட்டோம்

பாசத்துடன்
கால்களைப் பிடித்துவிட்டேன்

என்னைத் தாங்குதலைத் தவிர
வேறொன்றும் அறியாத
உடலின் பேருறுப்புகள்

நடக்கவும்
விரைந்து ஓடவும்
தம்மால் முடிந்தவரை
முயன்றவை

என் தாமதங்கள்
என் தவறான பயணங்கள்
என்னால் நேர்ந்தனவேயன்றி
இவற்றால் அல்ல

மெலிதான முடியிழைகள்
மேவியுள்ளதைக் கவனித்தேன்

கால்களுக்கும்
அழகு தேவையென்று
அவை தோன்றியிருக்கவேண்டும்.

முடியுள்ள இடங்களில்
உயிர்த்தரம் மிகுதி

இறுக்கிப் பிடித்தால்
எலும்புகள் தட்டுப்படுகின்றன

கால் எலும்புகளைத்
தொட்டுணர்ந்தேன்

உடலின் அடித்தளம் அவை
கால்களின் உட்தூண்கள்.

மிருகங்களின் வாழ்வே
கால்கள்தாம்
பிறந்ததும் நிற்பவை அவை

குதிரைகள்
நின்றே வாழ்பவை

சிங்கம் புலிக்கு உணவு
கால்தாவும் வரைதான்

மானின் உயிர்
ஓடும்வரை ஒட்டியிருக்கும்

என் பாதங்களைப்
பார்த்தேன்

அவை அளந்த நிலங்களைத்தாம்
கண்களால் கண்டேன்

அவை உணர்ந்த மண்ணில்தான்
விளைவித்து உண்டேன்

கால்களால்
தாங்கி நிற்க முடியும்வரைதான்
எல்லாம்.

கால்கள்
முடியாமல் சரிந்ததும்
முடிகிறது கணக்கு.

கால்களை
அன்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன் !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 19 Dec 2014  0 Comments
Tags: Kaalkal   கால்கள்                 
 தொடர்புடையவை-Related Articles
குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. - வித்யாசாகர்! குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. - வித்யாசாகர்!
கால்கள் - கவிஞர் மகுடேசுவரன் கால்கள் - கவிஞர் மகுடேசுவரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.