|
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன் |
||||||||
கற்றனைத் தூறும் அறிவு – தேவி நாச்சியப்பன் குழந்தை இலக்கியம்: தேவி நாச்சியப்பன் அவர்கள் அழ வள்ளியப்பா அவர்களின் மகள் ஆவார். தான் எழுதுவது குழந்தை இலக்கியம் என்றே தெரியாமல் எழுதத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார். குழந்தைகளுக்காக இலக்கியம் எழுதும் போது> அதை அக்குழந்தைகள் படித்து இன்புறுவதைப் பார்ப்பது கூட ஒரு மகிழ்ச்சி என்கிறார். குழந்தை இலக்கியம் என்று கூறும் போது பெண்கள் அதில் குறைவாகக் காணப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகளுடன் எப்போதும் நெருங்கிப் பழகுவதும், அதிகமாக உடன் இருப்பதும் பெண்கள் தான். குழந்தை இலக்கிய பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறும் இவர் பெண்கள் குழந்தை இலக்கியம் எழுத அதிகம் முன்வர வேண்டும் என்கிறார். அழ வள்ளியப்பா: குழந்தை இலக்கியக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்கள் ஆவார். அழ வள்ளியப்பாவின் பாடல்களில் ஒலியும் இருக்கும்> அதற்குத் தகுந்த பொருளும் இருக்கும். இவரின் மானசீக குரு ‘கவிமணி’ ஆவார். பல இடங்களில் கவிமணி அழ வள்ளியப்பாவிற்கு குருவாகத் திகழ்ந்துள்ளார். கவிமணி அவர்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்டதே ‘கவிமணி குழந்தைகள் சங்கம்’ ஆகும். மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை இக்கூட்டம் நடைபெறும். இதுவரை 196 கூட்டம் நடைபெற்றிருக்கிறது. குழந்தைகளின் திறமைகளை வளர்க்க இது ஒரு களமாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கான ஆண்டு விழா கொண்டாடப்படும். கதை, கவிதை, கட்டுரை போன்றவை எழுதக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, போட்டிகளும் வைக்கப்படுகின்றன. இதில் குழந்தைகள் ஆர்வமாகக் கலந்து கொள்வதால் அவர்களின் திறமை வெளிப்படுகிறது. தேவ நாச்சியப்பன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வு: தேவி நாச்சியப்பன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு ‘குழந்தை இலக்கிய பாடல்களில் உத்திகள்’ ஆகும். இதற்காக 450 நூல்களையும்> அதில் உள்ள 300 குழந்தைப் பாடல்களையும் எடுத்துக் கொண்டார். மேலும் குழந்தைகளுக்காக எழுதும் சிறுகதைகளுக்குச் சிறிய தொடர்கள் மற்றும் எளிமையான சொற்களே அவசியம் எனக் கூறும் இவர் பல சிறுகதை நூல்களையும் எழுதியுள்ளார். இவரின் குழந்தை இலக்கிய நூல்கள் மற்றும் குழந்தை இலக்கிய பங்களிப்பிற்காகச் சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது. வள்ளியப்பா இலக்கிய வட்டம்: குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களின் நினைவாக வள்ளியப்பா இலக்கிய வட்டம் கோவையில் தொடங்கப்பட்டது. 25 ஆண்டுகளைக் கடந்து அவ்விலக்கிய வட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு மாவட்டங்களில் இந்த இலக்கிய வட்டம் நடைபெறும். இவ்விழாவில் பல போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு வள்ளியப்பா இலக்கிய விருது> பதிப்பாளர் விருது போன்ற விருதுகள் வழங்கப்படும். பெண்களின் பங்கு: குழந்தை இலக்கியப் படைப்புகளைப் படைக்கப் பெண்கள் அதிகம் முன்வர வேண்டும். தன்னால் முடியாது என நினைக்காமல் தன்னம்பிக்கையுடன் முன்வர வேண்டும். ‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்று கூறுவார்கள். அதன்படி பெண்கள் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம். குழந்தைகளுடன் அதிகம் நேரத்தைச் செலவிடுவது பெண்களே என்பதால் குழந்தைகளின் உளவியலைக் குறித்து பெண்களுக்கு அதிகம் தெரியும். எனவே பெண்கள் குழந்தை இலக்கியப் படைப்புகளை அதிகம் படைக்க வேண்டும். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பெற்றோர் பதில் சொல்லிப் பழக வேண்டும். குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே பெற்றோர் வாசிப்பு பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். |
||||||||
ar |
||||||||
by Lakshmi G on 24 Aug 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|