டெல்லி சட்ட சபை தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்துள்ளது.
இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு டெல்லி போலீசார் பாதுகாப்பு வழங்க முடிவு செய்தனர். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் வசிக்கும் வீட்டை வெள்ளிக்கிழமை மாலை பார்வையிட்ட போலீஸ் உயரதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். ஆனால் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள கெஜ்ரிவால் மறுத்து விட்டார்.
|