டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க, துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அர்விந்த் கெஜ்ரிவால் டில்லி முதல்வராக நாளை மறுநாள்(டிசம்பர் 28ம் தேதி) டில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், பதவியேற்க உள்ளார். ஆட்சி அமைப்பதில், ஆம் ஆத்மிக்கு, காங்கிரஸ் ஆதரவு மற்றும் ஆதரவு இல்லை என்ற இருவேறு கருத்துகள் வெளிவரும் நிலையில், தங்களுக்கு எக்கட்சியின் ஆதரவும் தேவையில்லை, அறுதிப்பெரும்பான்மையை நாங்கள் நிரூபிக்கத் தயார் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார். இந்நிலையில், ஜனவரி 03ம் தேதி, டில்லி சட்டசபையில், பெரும்பான்மையை நிருபிக்குமாறு, கெஜ்ரிவாலுக்கு துணைநிலை ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
|