LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

புரவலர் நண்பர் மணி பெரியகருப்பனுக்கு நன்றி..

கடந்தவாரம் தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களின் புதல்வர் அமெரிக்காவின் ஓகாயோ மாகாணத்தில் வசிப்பவர் நண்பர் மணி பெரியகருப்பன் நம் சென்னை அலுவலத்திற்கு வந்திருந்தார். உரையாடலுக்குப்பின் செம்மொழி ஆய்வு நிறுவனத்தை பார்வையிட்டு திரும்பினோம்.
 
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் செயல்பாடு குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தார். தொடர்ந்து திருக்குறளை தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு கொண்டுசெல்ல எடுக்கப்படும் முயற்சிகளை பார்த்துவருவதாகத் தெரிவித்தார். மண்டலப் பொறுப்பாளர்கள் 10 மாவட்டத்திற்கு ஒருவர் என்று நான்கு பேர் பொறுப்பேற்று, அடுத்து மாவட்டத்திற்கு ஒரு முற்றோதல் முடித்து, நடத்தி அனுபவம் கொண்டவரை அடையாளம் கண்டு மாவட்ட திருக்குறள் பயிற்சியாளராக நியமித்து வருகிறோம் என்று குறிப்பிட்டேன்.
 
இலவச முன்னெடுப்புகள் நிலைத்து நிற்பதில்லை என்பதையும், தன்னார்வலர்களை தேடுவதிலேயும், தாயார்படுத்துதல், பங்களிப்பு செய்யவைத்தல் என அதிகநேரம் நேரம் விரயமாகிறது என்பதை பட்டுணர்ந்து , பயிற்சியாளர்களுக்கு மாதம் 5000 ஊக்கத்தொகை வழங்கியும் , அதை அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அறம்சார்ந்த தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் அன்பர்கள், ஆர்வமுள்ள திருக்குறள் ஆர்வலர்கள் , இத்திட்டம் ஆண்டுமுழுதும் தொய்வில்லாமல் தொடர்வது நற்பயனை உண்டாக்கும் என்று நம்புபவர்கள் புரவலர்களாகப் பொறுப்பேற்று நேரடியாக ஆசிரியர்களுக்கு வழங்கும்வகையில் முயற்சித்துவருகிறோம் என்றேன்.
 
மேலும் திருக்குறள் முற்றோதல் மாவட்ட பயிற்சியாளர்கள் அரசுப்பள்ளிகளுக்கு இலவசமாகவும்,தனியார் பள்ளி மாணவர்கள் , மாவட்டம் சார்ந்த வெளிநாடு வாழ் தமிழர்களின் பிள்ளைகளிடம் சிறு கட்டணம் பெற்றும் மாவட்ட பயிற்சியாளர்கள் முழுநேரப் பணியாக இதை முன்னெடுக்க வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சிக்கிறோம் என்றும் தெரிவித்தேன். இதனால் திருக்குறள் படித்த, தமிழ்ப்படித்த 40-50 பேருக்கு வேலைவாய்ப்பை திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஏற்படுத்தமுடியும் என்று குறிப்பிட்டேன்.
 
ஒரு மாவட்டத்திற்கு ,ஒரு ஆசிரியருக்கு மாதம் 5000 , ஆண்டுக்கு 60000 ரூபாயை தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சார்பில் நண்பர் மணி பெரியகருப்பன் அவர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
உங்கள் ஊருக்கு , மாவட்டத்திற்கு திருக்குறள் முழுமையாக கற்பதை கொண்டுசெல்ல விருப்பமா? உங்கள் நிறுவனத்தின் பெயரில் உங்க மாவட்டத்தில் இந்த அறப்பணி தொடர்வதை பெருமையாக, பெரும் பங்களிப்பாக , நிறைவாக உணரவேண்டுமா? உங்கள் மாவட்டத்தின் திருக்குறள் முற்றோதல் முடித்த ஒருவருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முன்வாருங்கள்.
 
உங்களுக்குத் தெரிந்த திருக்குறள் முற்றோதல் முடித்தவர்கள் , பயிற்சி கொடுக்க ஆர்வம் உள்ளவர்கள் உலகத்த திருக்குறள் முற்றோதல் இயக்கத்தை தொடர்புகொள்ளவும். செங்கல்பட்டு , அரியலூர் தவிர்த்து இன்னும் 36 மாவட்டங்களுக்கு பயிற்சியாளர்கள் தேவை.
 
இந்தத் தொடர் முயற்சியில் இதுவரை முன்வந்துள்ள புரவலர்கள்:
1. மலர்ச்செல்வன் , டெக்ஸாஸ் ,அமெரிக்கா
2. ரவிச்சந்திரன் சோமு, சிங்கப்பூர்
3. மணி பெரியகருப்பன், ஓகாயோ, அமெரிக்கா
 
 
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்.
E-Mail: Kural.Mutrothal@gmail.com
by Swathi   on 28 Nov 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.